search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Pliskova"

    விம்பிள்டன் கிராண்ட் ஸ்லாம் டென்னிஸ் தொடரில் முன்னணி வீராங்கனைகள் 8 பேர் 3-வது சுற்றுக்குக் கூட முன்னேறாமல் வெளியேறியுள்ளனர். #Wimbledon2018
    விம்பிள்டன் கிராண்ட் ஸ்லாம் டென்னிஸ் தொடர் லண்டனில் நடைபெற்று வருகிறது. இந்த தொடரில் முன்னணி வீரர்கள் மற்றும் வீராங்கனைகள் முதல் சுற்று, 2-வது சுற்று என தொடக்க நிலையிலேயே அதிர்ச்சிகரமாக தோல்வியடைந்து வெளியேறி வருகிறார்கள்.

    உச்சக்கட்டமாக வீராங்கனைகளில் விம்பிள்டன் டென்னிஸ் தொடருக்கான தரவரிசையில் முதல் 10 இடங்களை பிடித்துள்ள வீராங்கனைகளுக்கு பெரும் சோதனை ஏற்பட்டுள்ளது.

    ஏனென்றால் முதல் 10 வீராங்கனைகளில் 8 பேர் 2-வது மற்றும் 3-வது சுற்றோடு வெளியேறிவிட்டனர். முதல் நிலை வீராங்கனையான ஹாலெப், 7-ம் நிலை வீராங்கனையான பிலிஸ்கோவா ஆகியோர் மட்டுமே தொடரில் நீடிக்கின்றனர்.


    3-ம் நிலை வீராங்கனை முகுருசா

    2-ம் நிலை வீராங்கனை வோஸ்னியாக்கி, 3-ம் நிலை வீராங்கனையான முகுருசா, 4-ம் நிலை வீராங்கனை ஸ்டீபன்ஸ், 5-ம் நிலை வீராங்கனையான ஸ்விடோலினா, 6-ம் நிலை வீராங்கனையான கார்சியாக 8-ம் நிலை வீராங்கனையான கிவிட்டோவா, 9-ம் நிலை வீராங்கனையான வீனஸ் வில்லியம்ஸ், 10-ம் நிலை வீராங்கனையான கெய்ஸ் ஆகியோர் தொல்வியடைந்து வெளியேறியுள்ளனர்.
    தோல்விக்கான காரணம் குறித்து நடுவருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்ட பிரபல டென்னிஸ் வீராங்கனை கரோலினா பிளிஸ்கோவா டென்னிஸ் பேட் மூலம் நடுவரின் இருக்கையை சேதப்படுத்தியுள்ளார். #Pliskovalostcool #italianopentennis #blacklistforever
    உலகின் முதல் 5 டென்னிஸ் வீராங்கனைகளில் ஒருவராக வலம் வருபவர் கரோலினா பிளிஸ்கோவா. இவர் நேற்று நடைபெற்ற இத்தாலியன் ஓபன் டென்னிஸ் தொடரில் 3-6, 6-3, 7-5 என்ற நேர்செட் கணக்கில் மரியா சக்காரி என்பவரிடம் தோல்வியை தழுவினார்.

    மூன்றாவது செட்டில் பிளிஸ்கோவா அடித்த பந்து சரியான கோட்டிற்குள் விழுந்துள்ளது. ஆனால், கோட்டிற்கு வெளியே விழுந்ததாக கூறி நடுவர் தனது முடிவை அறிவித்ததால், பிளிஸ்கோவா தோல்வியடைந்ததாக கூறப்படுகிறது.

    இதுதொடர்பாக நடுவர் மார்தாவுடன் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்ட பிளிஸ்கோவா, போட்டி முடிந்தபிறகு தனது பேட் மூலம் நடுவரது நாற்காலியை தாக்கி சேதப்படுத்தினார்.

    பிளிஸ்கோவாவின் சகோதரியும் டென்னிஸ் வீராங்கணையுமான கிரிஸ்டினா தனது டுவிட்டர் பக்கத்தில், நடுவர் மார்தா குறித்த கருத்துக்களை பதிவிட்டிருந்தார். அந்த டுவிட்டர் பதிவில், ‘நான் பார்த்த நடுவர்களில் மிகவும் மோசமான நடுவர் மார்தா. எனக்கும் எனது சகோதரிக்கும் இனி வரும் போட்டிகளில் மார்தா நடுவராக வரமாட்டார் என நம்புகிறேன்’ என குறிப்பிட்டிருந்தார். இந்த பதிவில், ‘மார்தாவை முழுவதுமாக தடை செய்ய வேண்டும்’ என்ற ஹேஷ்டேக்கையும் இணைத்திருந்தார். #Pliskovalostcool #italianopentennis #blacklistforever
    ×