search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Muguruza"

    • நடால் 4-வது சுற்றில் அமெரிக்காவை சேர்ந்த 22-ம் நிலை வீரரான பிரான்செஸ் டியாபோவை சந்திக்கிறார்.
    • 14-வது வரிசையில் உள்ள டியாகோ சுவார்ட்ஸ மேன் ( அர்ஜென்டினா ) 3-வது சுற்றில் அதிர்ச்சிகரமாக தோற்றார்.

    நியூயார்க்:

    கிராண்ட்சிலாம் போட்டிகளில் ஒன்றான அமெரிக்க ஓபன் டென்னிஸ் போட்டி நியூயார்க் நகரில் நடைபெற்று வருகிறது.

    22 கிராண்ட்சிலாம் பட்டம் வென்ற சாதனனயாளரும் , உலகின் இரண்டாம் நிலை வீரருமான ரபெல் நடால் ( ஸ்பெயின் ) 3-வது சுற்று ஆட்டத்தில் பிரான்சை சேர்ந்த ரிச்சர்ட் கேஸ்குயிட்டை எதிர் கொண்டார்.

    இதில் நடால் 6-0 , 6-1, 7-5 என்ற நேர் செட் கணக்கில் எளிதில் வென்று 4-வது சுற்றுக்கு முன்னேறினார்.கேஸ்குயிட்டுக்கு எதிரான 18 ஆட்டத்திலும் அவர் வெற்றி பெற்றுள்ளார்.

    நடால் 4-வது சுற்றில் அமெரிக்காவை சேர்ந்த 22-ம் நிலை வீரரான பிரான்செஸ் டியாபோவை சந்திக்கிறார்.

    3-ம் நிலை வீரரான கார்லோஸ் அல்காரஸ் (ஸ்பெயின்) 6-3 , 6-3, 6-3 என்ற செட் கணக்கில் அமெரிக்க வீரர் ஜென்சனை வீழ்த்தினார். மற்ற ஆட்டங்களில் 7-வது வரிசையில் உள்ள கேமரூன் நோரி (இங்கிலாந்து), 9-ம் நிலை வீரரான ரூபலேவ் (ரஷியா) ஆகியோர் வெற்றி பெற்று 4-வது சுற்றுக்கு தகுதி பெற்றனர்.

    14-வது வரிசையில் உள்ள டியாகோ சுவார்ட்ஸ மேன் ( அர்ஜென்டினா ) 3-வது சுற்றில் அதிர்ச்சிகரமாக தோற்றார்.

    பெண்கள் ஒற்றையர் பிரிவில் நம்பர் ஒன் வீராங்கனையான இகா ஸ்வியாடெக் (போலந்து) 3-வது சுற்றில் அமெரிக்காவை சேர்ந்த லாரன் டோவிசை எதிர்கொண்டார். இதில் இகா 6-3, 6-4 என்ற நேர் செட் கணக்கில் எளிதில் வென்று 3-வது சுற்றுக்கு முன்னேறினார்.

    இன்னொரு ஆட்டத்தில் 9-வது இடத்தில் உள்ள அமெரிக்க வீராங்கனை ஜெசிகா பெகுலா 6-2 , 6-7 (6-8), 6-0 என்ற நேர் செட் கணக்கில் யூவானை (சீனா) வீழ்த்தினார்.

    மற்ற ஆட்டங்களில் முன்னணி வீராங்கனைகளான ஷபலென்கா, அசரென்கா (பெலாரஸ்), கரோலினா பிளிஸ்கோவா (செக்குடியரசு) ஆகியோர் வெற்றி பெற்று 4-வது சுற்றுக்கு முன்னேறினார்கள்.

    9-வது வரிசையில் உள்ள கார்பன் முகுருஜா (ஸ்பெயின்) 7-5, 3-6, 6-7 (10-12) என்ற கணக்கில் பெட்ரோ கிவிட்டோவிடம் (செக்குடியரசு) தோற்றார்.

    இதேபோல் 13-வது வரிசையில் உள்ள பெலிண்டா பென்சிக்கும் (கனடா) அதிர்ச்சிகரமாக தோற்றார்.

    உலக பெண்கள் டென்னிஸ் போட்டியில் ஸ்பெயின் வீராங்கனை கார்பின் முகுருஜா முதல்முறையாக ‘சாம்பியன்’ பட்டத்தை கைப்பற்றினார்.
    குவாடலஜரா:

    ‘டாப்-8’ வீராங்கனைகள் பங்கேற்ற டபிள்யூ.டி.ஏ. இறுதி சுற்று எனப்படும் உலக பெண்கள் டென்னிஸ் சாம்பியன்ஷிப் போட்டி மெக்சிகோவில் உள்ள குவாடலஜரா நகரில் நடந்தது. இதில் நேற்று முன்தினம் இரவு நடந்த இறுதிஆட்டத்தில் 2 கிராண்ட்ஸ்லாம் வென்றவரும், முன்னாள் நம்பர் ஒன் வீராங்கனையுயான ஸ்பெயினின் கார்பின் முகுருஜா, 8-ம் நிலை வீராங்கனையான அனெட் கோன்டாவெய்ட்டை (எஸ்தோனியா) எதிர்கொண்டார்.

    1 மணி 38 நிமிடம் நடந்த இந்த ஆட்டத்தில் முகுருஜா 6-3, 7-5 என்ற நேர்செட்டில் கோன்டாவெய்ட்டை சாய்த்து சாம்பியன் பட்டத்தை வசப்படுத்தினார். இதன் மூலம் 49 ஆண்டு கால பெண்கள் டென்னிஸ் சாம்பியன்ஷிப்பில் வரலாற்றில் மகுடம் சூடிய முதல் ஸ்பெயின் வீராங்கனை என்ற பெருமையை பெற்றார். ஒட்டுமொத்தத்தில் அவரது 10-வது சர்வதேச பட்டம் இதுவாகும்.

    வாகை சூடிய முகுருஜா மொத்தம் ரூ.11½ கோடியை பரிசாக அள்ளினார். 2-வது இடம் பிடித்த கோன்டாவெய்டுக்கு ரூ.5½ கோடி கிடைத்தது. வெற்றிக்கு பிறகு 28 வயதான முகுருஜா கூறுகையில் ‘என்னால் சிறப்பாக செயல்பட முடியும் என்பதை மீண்டும் ஒரு முறை நிரூபித்து இருப்பது மிகவும் மகிழ்ச்சி அளிக்கிறது. இந்த வெற்றியின் மூலம் தரவரிசையில் நல்ல நிலைக்கு வந்து இருக்கிறேன்’ என்றார்.

    வெற்றியின் மூலம் முகுருஜா தரவரிசையில் 5-வது இடத்தில் இருந்து 3-வது இடத்துக்கு முன்னேறினார். ஆஷ்லி பார்ட்டி (ஆஸ்திரேலியா) முதலிடத்திலும், சபலென்கா (பெலாரஸ்) 2-வது இடத்திலும், கரோலினா பிளிஸ்கோவா (செக்குடியரசு) 4-வது இடத்திலும் தொடருகின்றனர். கோன்டாவெய்ட் ஒரு இடம் ஏற்றம் கண்டு 7-வது இடத்தை பெற்றுள்ளார்.

    இதன் இரட்டையர் பிரிவு இறுதிசுற்றில் செக்குடியரசின் பார்போரா கிரெஜ்சிகோவா-காத்ரினா சினியகோவா இணை 6-3, 6-4 என்ற நேர் செட்டில் சூ வெய்ஸ் சீக் (சீன தைபே)-எலிசி மெர்டென்ஸ் (பெல்ஜியம்) ஜோடியை வீழ்த்தி முதல்முறையாக சாம்பியன் பட்டத்தை வென்றது.

    உலக தரவரிசையில் முதல் 8 இடங்களில் இருக்கும் வீரர்கள் மட்டும் கலந்து கொண்டுள்ள உலக ஆண்கள் டென்னிஸ் சாம்பியன்ஷிப் போட்டி இத்தாலியின் துரின் நகரில் நடந்து வருகிறது. இதில் ‘கிரீன்’ பிரிவில் நேற்று முன்தினம் இரவு நடந்த ஆட்டம் ஒன்றில் காயம் அடைந்த சிட்சிபாசுக்கு (கிரீஸ்) பதிலாக இடம் பெற்ற இங்கிலாந்து வீரர் கேமரூன் நோரி 6-1, 3-6, 4-6 என்ற செட் கணக்கில் நார்வே வீரர் கேஸ்பர் ரூட்டிடம் தோல்வி அடைந்தார்.

    ‘ரெட்’ பிரிவில் நடந்த கடைசி லீக் ஆட்டத்தில் ஒலிம்பிக் சாம்பியனான அலெக்சாண்டர் ஸ்வெரேவ் (ஜெர்மனி) 6-2, 6-4 என்ற நேர் செட்டில் ஹர்காக்சை (போலந்தை) வீழ்த்தி 2-வது வெற்றியை பதிவு செய்து அரைஇறுதியை உறுதி செய்தார். அவர் அரை இறுதியில் ‘நம்பர்ஒன்’ வீரர் ஜோகோவிச்சை (செர்பியா) சந்திக்கிறார்.
    விம்பிள்டன் கிராண்ட் ஸ்லாம் டென்னிஸ் தொடரில் முன்னணி வீராங்கனைகள் 8 பேர் 3-வது சுற்றுக்குக் கூட முன்னேறாமல் வெளியேறியுள்ளனர். #Wimbledon2018
    விம்பிள்டன் கிராண்ட் ஸ்லாம் டென்னிஸ் தொடர் லண்டனில் நடைபெற்று வருகிறது. இந்த தொடரில் முன்னணி வீரர்கள் மற்றும் வீராங்கனைகள் முதல் சுற்று, 2-வது சுற்று என தொடக்க நிலையிலேயே அதிர்ச்சிகரமாக தோல்வியடைந்து வெளியேறி வருகிறார்கள்.

    உச்சக்கட்டமாக வீராங்கனைகளில் விம்பிள்டன் டென்னிஸ் தொடருக்கான தரவரிசையில் முதல் 10 இடங்களை பிடித்துள்ள வீராங்கனைகளுக்கு பெரும் சோதனை ஏற்பட்டுள்ளது.

    ஏனென்றால் முதல் 10 வீராங்கனைகளில் 8 பேர் 2-வது மற்றும் 3-வது சுற்றோடு வெளியேறிவிட்டனர். முதல் நிலை வீராங்கனையான ஹாலெப், 7-ம் நிலை வீராங்கனையான பிலிஸ்கோவா ஆகியோர் மட்டுமே தொடரில் நீடிக்கின்றனர்.


    3-ம் நிலை வீராங்கனை முகுருசா

    2-ம் நிலை வீராங்கனை வோஸ்னியாக்கி, 3-ம் நிலை வீராங்கனையான முகுருசா, 4-ம் நிலை வீராங்கனை ஸ்டீபன்ஸ், 5-ம் நிலை வீராங்கனையான ஸ்விடோலினா, 6-ம் நிலை வீராங்கனையான கார்சியாக 8-ம் நிலை வீராங்கனையான கிவிட்டோவா, 9-ம் நிலை வீராங்கனையான வீனஸ் வில்லியம்ஸ், 10-ம் நிலை வீராங்கனையான கெய்ஸ் ஆகியோர் தொல்வியடைந்து வெளியேறியுள்ளனர்.
    விம்பிள்டன் கிராண்ட் ஸ்லாம் டென்னிஸ் போட்டியில் நடால், முகுருஜா தங்களது முதல் சுற்று ஆட்டங்களில் வெற்றி பெற்றனர். #Wimbledon2018 #Muguruza #Nadal
    லண்டன்:

    கிராண்ட்ஸ்லாம் அந்தஸ்து பெற்ற விம்பிள்டன் டென்னிஸ் போட்டி லண்டனில் நடந்து வருகிறது. 2-வது நாளான நேற்று ஆண்கள் ஒற்றையர் பிரிவில் நம்பர் ஒன் வீரர் ஸ்பெயினின் ரபெல் நடால் தனது முதல் சுற்றில் 6-3, 6-3, 6-2 என்ற நேர் செட் கணக்கில் துடிசெலாவை (இஸ்ரேல்) எளிதில் வீழ்த்தி 2-வது சுற்றுக்கு முன்னேறினார். 7-ம் நிலை வீரர் ஆஸ்திரியாவின் டொமினிக் திம் 4-6, 5-7, 0-2 என்ற செட் கணக்கில் பாக்தாதிசுக்கு எதிராக (சைப்ரஸ்) பின்தங்கி இருந்த போது முதுகு வலி காரணமாக விலகினார். இதனால் பாக்தாதிஸ் 2-வது சுற்றை எட்டினார்.

    ஒற்றையர் பிரிவில் களம் இறங்கிய ஒரே இந்தியரான யுகி பாம்ப்ரி முதல் சுற்றில் 6-2, 3-6, 3-6, 2-6 என்ற செட் கணக்கில் இத்தாலியின் தாமஸ் பாபியானோவுடன் வீழ்ந்தார். கிராண்ட்ஸ்லாம் போட்டிகளில் எந்த வெற்றியும் பெறாத யுகி பாம்ப்ரி 5-வது முறையாக முதல் சுற்றுடன் வெளியேறியிருக்கிறார்.

    அதே சமயம் அலெக்சாண்டர் ஸ்வெரேவ் (ஜெர்மனி), டெல் போட்ரோ (அர்ஜென்டினா), கைல் எட்மன்ட் (இங்கிலாந்து) உள்ளிட்டோர் முதல் தடையை எளிதில் கடந்தனர்.

    பெண்கள் ஒற்றையர் பிரிவில் நடப்பு சாம்பியன் கார்பின் முகுருஜா (ஸ்பெயின்) 6-2, 7-5 என்ற நேர் செட்டில் நவோமி பிராடியை (இங்கிலாந்து) விரட்டியடித்து 2-வது சுற்றுக்கு முன்னேறினார். ஏஞ்சலிக் கெர்பர் (ஜெர்மனி), சிபுல்கோவா (சுலோவக்கியா), ஜோஹன்னா கோன்டா (இங்கிலாந்து), சிமோனா ஹாலெப் (ருமேனியா) ஆகியோரும் தங்களது முதல் சுற்றில் வெற்றி கண்டனர்.

    2011, 2014-ம் ஆண்டு சாம்பியனான கிவிடோவா (செக்குடியரசு) 4-6, 6-4, 0-6 என்ற செட் கணக்கில் சாஸ்னோவிச்சிடம் (பெலாரஸ்) அதிர்ச்சிகரமாக வீழ்ந்தார். #Wimbledon2018 #Muguruza #Nadal
    பிரெஞ்சு ஓபன் டென்னிஸ் போட்டியின் மகளிர் பிரிவில் ஆஸ்திரேலியாவின் ஸ்டோசரை வீழ்த்தி ஸ்பெயின் வீராங்கனை முகுருஜா 4-வது சுற்றுக்கு முன்னேறினார். #Muguruza
    பாரீஸ்:

    பிரெஞ்சு ஓபன் டென்னிஸ் போட்டியின் இன்றைய மகளிர் பிரிவு ஆட்டத்தில் ஆஸ்திரேலியாவின் சமந்தா ஸ்டோசர் மற்றும் ஸ்பெயின் நாட்டின் கார்பைன் முகுருஜா ஆகியோர் விளையாடினர்.

    கடந்த 2016ம் ஆண்டு நடந்த பிரெஞ்சு ஓபன் டென்னிஸ் போட்டியில் நடப்பு சாம்பியன் மற்றும் உலக தர வரிசையில் முதல் இடத்தில் இருந்த செரீனா வில்லியம்சை வீழ்த்தி பட்டம் வென்றவரான முகுருஜா, முதல் செட்டை 6-க்கு பூஜ்யம் என்ற கணக்கில் தன்வசப்படுத்தினார்.

    தொடர்ந்து 2வது செட்டிலும் தொடக்கத்தில் 2க்கு பூஜ்யம் என்ற கணக்கில் முகுருஜா முன்னிலை பெற்றார்.  ஸ்டோசர் 2-2 என அதனை சமன்படுத்தினார்.

    ஆனால் அடுத்தடுத்த புள்ளிகளை கைப்பற்றி 6-2 என்ற கணக்கில் 2வது செட்டையும் தன்வசப்படுத்தி ஸ்டோசருக்கு அதிர்ச்சியளித்த முகுருஜா 4வது சுற்றுக்கு முன்னேறியுள்ளார்.

    இந்த போட்டியில் பெற்ற வெற்றி பற்றி முகுருஜா கூறும்பொழுது, கிராண்ட் ஸ்லாம் சாம்பியனான ஸ்டோசர் கடும் போட்டியாளராக இன்று விளையாடினார்.  எனது சிறந்த ஆட்டத்தினை வெளிப்படுத்தவில்லை எனில் வெற்றி பெறுவது கடினம் என எனக்கு தெரியும் என கூறியுள்ளார்.

    அடுத்து அவர் உக்ரைன் நாட்டின் லெசியா டிசூரென்கோவுடன் 4-வது சுற்றில் விளையாட உள்ளார். #Muguruza
    பிரெஞ்ச் ஓபன் பெண்கள் ஒற்றையர் பிரிவில் ஹாலெப், பிளிஸ்கோவா, முகுருசா, ஷரபோவா 3-வது சுற்றுக்கு முன்னேறியுள்ளனர். #FrenchOpen
    பிரெஞ்ச் கிராண்ட் ஸ்லாம் டென்னிஸ் தொடர் பாரிஸில் நடைபெற்று வருகிறது. இன்று பெண்களுக்கான ஒற்றையர் பிரிவின் 2-வது சுற்று ஆடங்கள் நடைபெற்றது. இதில் முதல் நிலை வீராங்கனையான சிமோனா ஹாலெப் அமெரிக்காவின் டெய்லர் டவுன்சென்ட்-ஐ எதிர்கொண்டார். இதில் ருமெனியா வீராங்கனை ஹாலெப் 6-3, 6-1 என நேர்செட் கணக்கில் வெற்றி பெற்றார்.

    மற்றொரு ஆட்டத்தில் ரஷியாவின் மரியா ஷரபோவா குரோஷியாவின் டொன்னா வெகிக்கை எதிர்கொண்டார். இதில் ஷரபோவா 7-5, 6-4 என நேர்செட் கணக்கில் வெற்றி பெற்றார்.



    3-ம் நிலை வீராங்கனையான ஸ்பெயின் நாட்டைச் சேர்ந்த முகுருசா 7(7) - 6(0) நேர்செட் கணக்கில் வெற்றி பெற்றார். பெல்ஜியத்தை எலிசே மெர்டென்ஸ் 6-3, 6-4 என நேர்செட் கணக்கில் வெற்றி பெற்றார்.
    ×