என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
பெண்கள் டென்னிஸ் சாம்பியன்ஷிப் - வோஸ்னியாக்கியை வெளியேற்றினார், ஸ்விடோலினா
Byமாலை மலர்25 Oct 2018 9:12 PM GMT (Updated: 25 Oct 2018 9:12 PM GMT)
எட்டு முன்னணி வீராங்கனைகள் பங்கேற்று விளையாடும் உலக பைனல்ஸ் டென்னிஸ் தொடரில் ஸ்விடோலினா அரையிறுதிக்கு முன்னேறியுள்ளார். #WTAFinals #CarolineWozniacki #ElinaSvitolina
சிங்கப்பூர்:
டாப்-8 வீராங்கனைகள் மட்டுமே பங்கேற்றுள்ள பெண்கள் டென்னிஸ் சாம்பியன்ஷிப் போட்டி சிங்கப்பூரில் நடந்து வருகிறது. இதில் ‘ஒயிட்’ பிரிவில் நேற்று கடைசி கட்ட லீக் ஆட்டங்கள் நடந்தன. ஒரு ஆட்டத்தில் தரவரிசையில் 8-வது இடம் வகிக்கும் கரோலினா பிளிஸ்கோவா (செக்குடியரசு), சக நாட்டவர் பெட்ரா கிவிடோவாவை 6-3, 6-4 என்ற நேர் செட்டில் விரட்டியடித்தார்.
மற்றொரு ஆட்டத்தில் நடப்பு சாம்பியனான கரோலின் வோஸ்னியாக்கி (டென்மார்க்), 7-ம் நிலை வீராங்கனையான எலினா ஸ்விடோலினாவுடன் (உக்ரைன்) பலப்பரீட்சை நடத்தினார். இதில் நேர் செட்டில் வெற்றி பெற்றால் மட்டுமே அரைஇறுதி வாய்ப்பை பெற முடியும் என்ற நெருக்கடியுடன் களம் புகுந்த வோஸ்னியாக்கி முதலாவது செட்டை வசப்படுத்தினார். 2-வது செட்டில் 5-5 என்று வரை சமநிலை வந்தது. அதன் பிறகு அடுத்த இரு கேம்களை ஸ்விடோலினா தனதாக்கி, வோஸ்னியாக்கியின் கனவை சிதைத்தார். 2 மணி 35 நிமிடங்கள் நீடித்த இந்த ஆட்டத்தில் ஸ்விடோலினா 5-7, 7-5, 6-3 என்ற செட் கணக்கில் வோஸ்னியாக்கியை சாய்த்து 3-வது வெற்றியோடு அரைஇறுதிக்கு முன்னேறினார். இந்த பிரிவில் பிளிஸ்கோவாவும் (2 வெற்றி, ஒரு தோல்வி) அரைஇறுதியை உறுதி செய்தார். வோஸ்னியாக்கி (ஒரு வெற்றி, 2 தோல்வி), கிவிடோவா (3 தோல்வி) வெளியேறினர்.
‘ரெட்’ பிரிவில் இன்று நடக்கும் லீக் ஆட்டங்களில் ஒசாகா (ஜப்பான்)-கிகி பெர்டென்ஸ் (நெதர்லாந்து), ஏஞ்சலிக் கெர்பர் (ஜெர்மனி)- ஸ்லோனே ஸ்டீபன்ஸ் (அமெரிக்கா) ஆகியோர் மோதுகிறார்கள்.
டாப்-8 வீராங்கனைகள் மட்டுமே பங்கேற்றுள்ள பெண்கள் டென்னிஸ் சாம்பியன்ஷிப் போட்டி சிங்கப்பூரில் நடந்து வருகிறது. இதில் ‘ஒயிட்’ பிரிவில் நேற்று கடைசி கட்ட லீக் ஆட்டங்கள் நடந்தன. ஒரு ஆட்டத்தில் தரவரிசையில் 8-வது இடம் வகிக்கும் கரோலினா பிளிஸ்கோவா (செக்குடியரசு), சக நாட்டவர் பெட்ரா கிவிடோவாவை 6-3, 6-4 என்ற நேர் செட்டில் விரட்டியடித்தார்.
மற்றொரு ஆட்டத்தில் நடப்பு சாம்பியனான கரோலின் வோஸ்னியாக்கி (டென்மார்க்), 7-ம் நிலை வீராங்கனையான எலினா ஸ்விடோலினாவுடன் (உக்ரைன்) பலப்பரீட்சை நடத்தினார். இதில் நேர் செட்டில் வெற்றி பெற்றால் மட்டுமே அரைஇறுதி வாய்ப்பை பெற முடியும் என்ற நெருக்கடியுடன் களம் புகுந்த வோஸ்னியாக்கி முதலாவது செட்டை வசப்படுத்தினார். 2-வது செட்டில் 5-5 என்று வரை சமநிலை வந்தது. அதன் பிறகு அடுத்த இரு கேம்களை ஸ்விடோலினா தனதாக்கி, வோஸ்னியாக்கியின் கனவை சிதைத்தார். 2 மணி 35 நிமிடங்கள் நீடித்த இந்த ஆட்டத்தில் ஸ்விடோலினா 5-7, 7-5, 6-3 என்ற செட் கணக்கில் வோஸ்னியாக்கியை சாய்த்து 3-வது வெற்றியோடு அரைஇறுதிக்கு முன்னேறினார். இந்த பிரிவில் பிளிஸ்கோவாவும் (2 வெற்றி, ஒரு தோல்வி) அரைஇறுதியை உறுதி செய்தார். வோஸ்னியாக்கி (ஒரு வெற்றி, 2 தோல்வி), கிவிடோவா (3 தோல்வி) வெளியேறினர்.
‘ரெட்’ பிரிவில் இன்று நடக்கும் லீக் ஆட்டங்களில் ஒசாகா (ஜப்பான்)-கிகி பெர்டென்ஸ் (நெதர்லாந்து), ஏஞ்சலிக் கெர்பர் (ஜெர்மனி)- ஸ்லோனே ஸ்டீபன்ஸ் (அமெரிக்கா) ஆகியோர் மோதுகிறார்கள்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X