search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Airport"

    • விமான நிலையத்திற்கு வெளியே கூடுதல் செக்போஸ்ட்கள் வைத்து பாதுகாப்பை பலப்படுத்தினர்.
    • நாசவேலை தடுப்பு சோதனை மற்றும் வெடிகுண்டு கண்டறிதல் மற்றும் செயலிழப்பு படை சோதனையும் நடத்தப்பட்டது.

    கர்நாடக மாநிலம் மங்களூரு விமான நிலையத்துக்கு வந்த மின்னஞ்சலில் இங்குள்ள ஒரு விமானத்தில் மற்றும் விமான நிலையத்தின் உள்ளே வெடிபொருட்கள் உள்ளது. அவை சில மணி நேரங்களில் வெடித்துவிடும். நான் உங்கள் அனைவரையும் கொன்றுவிடுவேன் என்றும், நாங்கள் பன்னிங் (வேடிக்கை) என்ற பயங்கரவாத குழுவை சேர்ந்தவர்கள் என்றும் குறிப்பிடப்பட்டு இருந்தது.

    இந்த மின்னஞ்சலை கவனித்த விமான நிலைய அதிகாரிகள் உடனடியாக நகர போலீசாருக்கு தகவல் அளித்தனர். இதைதொடர்ந்து மங்களூரு நகர போலீசார் மங்களூரு சர்வதேச விமான நிலையத்தில் பாதுகாப்பு சோதனையில் ஈடுபட்டனர். விமான நிலையத்திற்கு வெளியே கூடுதல் செக்போஸ்ட்கள் வைத்து பாதுகாப்பை பலப்படுத்தினர்.

    நாசவேலை தடுப்பு சோதனை மற்றும் வெடிகுண்டு கண்டறிதல் மற்றும் செயலிழப்பு படை சோதனையும் நடத்தப்பட்டது. மேலும் இன்ஸ்பெக்டர் பாஜ்பே தலைமையில் விமான நிலைய அதிகாரிகளுடனான ஒருங்கிணைப்பு கூட்டமும் நடைபெற்றது. மேலும் விமான நிலைய அதிகாரிகளின் புகாரின் பேரில் உள்ளூர் நீதிமன்றத்தின் அனுமதியைப் பெற்ற பிறகு இந்த சம்பவம் குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து மின்னஞ்சல் அனுப்பியவர் குறித்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • மறுசீரமைக்கப்பட்ட புதிய ரெயில் நிலையத்தையும் பிரதமர் மோடி திறந்து வைக்கிறார்.
    • ரோடுஷோ நிகழ்ச்சியையொட்டி பிரதமர் மோடியை பார்ப்பதற்காக ஏராளமான மக்கள் வர உள்ளனர்.

    உத்தரபிரதேச மாநிலம் அயோத்தியில், புதிய விமான நிலையம் கட்டப்பட்டுள்ளது. ராமர் கோவில் கும்பாபிஷேகம் நடைபெற இருப்பதையொட்டி அதற்கு முன்பு வருகிற 30-ந் தேதி, அயோத்தி விமான நிலையம் திறக்கப்படுகிறது. இதனை பிரதமர் மோடி திறந்து வைக்கிறார். விமான நிலையத்தில் இருந்து 15 கி.மீ. தூரத்தில் ரெயில் நிலையம் அமைந்துள்ளது. மறுசீரமைக்கப்பட்ட புதிய ரெயில் நிலையத்தையும் பிரதமர் மோடி திறந்து வைக்கிறார்.

    இதற்காக பிரதமர் மோடி 15 கி.மீ. தூரம் ரோடுஷோ நடத்தி ரெயில் நிலையத்துக்கு செல்கிறார். என்.எச்.27, தரம் பாதை, லதா மங்கேஷ்கர் சவுக், ராம் பாதை, டெதி பஜார், மொகாப்ரா சந்திப்பு வழியாக அவர் ரோடுஷோ நடத்துகிறார். ரோடுஷோ நிகழ்ச்சியையொட்டி பிரதமர் மோடியை பார்ப்பதற்காக ஏராளமான மக்கள் வர உள்ளனர்.

    • வாரத்தில் திங்கள், வியாழன், சனி, ஆகிய 3 தினங்களில் இந்த விமான சேவைகள் இயக்கப்பட உள்ளன.
    • தினசரி விமான சேவையாக மாற்றப்பட வாய்ப்பு உள்ளது என்று சென்னை விமான நிலைய அதிகாரிகள் தெரிவித்தனர்.

    ஆலந்தூர்:

    சென்னையில் இருந்து வங்காளதேச தலைநகர் டாக்காவுக்கு ஏற்கனவே, இண்டிகோ ஏர்லைன்ஸ் விமான நிறுவனமும், யூ.எஸ். பங்களா விமான நிறுவனமும், தினசரி நேரடி விமான சேவையை இயக்கி வருகின்றன. இந்நிலையில் சென்னை- டாக்கா இடையே பயணிகள் போக்குவரத்து தொடர்ந்து அதிகரித்து வருகிறது.

    இதையடுத்து பீமன் பங்களாதேஷ் ஏர்லைன்ஸ் என்ற விமான நிறுவனம், டாக்கா- சென்னை இடையே, புதிதாக நேரடி விமான சேவையை, இன்று முதல் தொடங்கியது. வாரத்தில் திங்கள், வியாழன், சனி, ஆகிய 3 தினங்களில் இந்த விமான சேவைகள் இயக்கப்பட உள்ளன.

    இந்த விமானம் வாரத்தின் 3 நாட்களிலும், பகல் 12.50 மணிக்கு டாக்காவில் புறப்பட்டு, மாலை 3.20 மணிக்கு, சென்னை விமான நிலையம் வருகிறது. அதே விமானம் மீண்டும், மாலை 4.15 மணிக்கு, சென்னை சர்வதேச விமான நிலையத்தில் இருந்து புறப்பட்டு,

    இரவு 7.30 மணிக்கு டாக்கா விமான நிலையம் சென்றடைகிறது.

    இப்போது வாரத்தில் 3 நாட்கள் மட்டும் இயக்கப்படும் இந்த விமான சேவை, பயணிகளின் வரவேற்பை பொறுத்து, தினசரி விமான சேவையாக மாற்றப்பட வாய்ப்பு உள்ளது என்று சென்னை விமான நிலைய அதிகாரிகள் தெரிவித்தனர்.

    • விமான நிலையத்துக்குப் பதிலாக திருமலை கோகுலம் தங்கும் விடுதியில் டிக்கெட் வழங்கப்படுகிறது.
    • வைகுண்ட ஏகாதசியை முன்னிட்டு வருகிற 23-ந் தேதி முதல் 2024-ம் ஆண்டு ஜனவரி 1-ந் தேதி வரை பரமபதவாசல் திறக்கப்படுகிறது.

    திருப்பதி:

    திருப்பதி ஏழுமலை யானை தரிசிக்க வரும் வெளிநாட்டு பக்தர்களின் வசதிக்காக திருப்பதி விமான நிலையத்தில் தினமும் 100 நேரடி (ஆப்லைன்) தரிசன ஸ்ரீவாணி டிக்கெட்டுகளை தேவஸ்தானம் வழங்கி வருகிறது.

    ஆனால், ஸ்ரீவாணி டிக்கெட்டுகளுக்கு விமான நிலையத்தில் அனுமதி வழங்கப்படாததால், இன்று முதல் விமான நிலையத்துக்குப் பதிலாக திருமலை கோகுலம் தங்கும் விடுதியில் டிக்கெட் வழங்கப்படுகிறது.

    ஸ்ரீவாணி தரிசனம் நேரடி(ஆப்லைன்)தரிசன டிக்கெட்டுகளுக்கு வழக்கம் போல் அனுமதி சீட்டு சமர்ப்பித்த பக்தர்களுக்கு தினமும் 100 டிக்கெட்டுகள் வழங்கப்படும் என தெரிவித்துள்ளனர்.

    வைகுண்ட ஏகாதசியை முன்னிட்டு வருகிற 23-ந் தேதி முதல் 2024-ம் ஆண்டு ஜனவரி 1-ந் தேதி வரை பரமபதவாசல் திறக்கப்படுகிறது.

    இதையொட்டி வருகிற 19-ந் தேதி கோவில் சுத்தம் செய்யும் பணி நடைபெற உள்ளது. எனவே அன்று தேவஸ்தானம் வி.ஐ.பி. பிரேக் தரிசனத்தை ரத்து செய்துள்ளது.

    வருகிற 18-ந் தேதி முக்கிய பிரமுகர்களின் பரிந்துரை கடிதங்கள் ஏற்றுக்கொள்ளப்படாது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

    • பயணிகள் விமான நிறுவன கவுண்டரை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
    • மதியம் ஒரு மணிக்கு விமானம் புறப்பட்டு செல்லும் என்று அறிவித்துள்ளனர்.

    ஆலந்தூர்:

    சென்னையில் இருந்து சிங்கப்பூர் செல்லும் விமானம் இன்று அதிகாலை 1.40 மணிக்கு புறப்பட தயாராக இருந்தது. 168 பயணிகள் அனைத்து சோதனைகளையும் முடித்துவிட்டு, விமானத்தில் ஏற தயாராக இருந்தனர். விமானி பரிசோதித்தபோது விமானத்தில் எந்திர கோளாறு இருப்பதை கண்டுபிடித்தார்.

    இதைத்தொடர்ந்து விமானம் தாமதமாக புறப்படும் என்று அறிவிக்கப்பட்டது. ஆனால் விமானம் புறப்பட தொடர்ந்து தாமதம் ஏற்பட்டதால் ஆத்திரமடைந்த பயணிகள் விமான நிறுவன கவுண்டரை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். அவர்களை அதிகாரிகள் சமாதானம் செய்தனர்.

    இன்று மதியம் ஒரு மணிக்கு விமானம் புறப்பட்டு செல்லும் என்று அறிவித்துள்ளனர். சென்னை விமான நிலையத்தில் சுமார் 12 மணி நேரத்திற்கு மேலாக பயணிகள் தவித்தபடி இருந்தனர்.

    • விமான நிலையத்தின் முதல் கட்டம் டிசம்பர் 15ம் தேதிக்குள் தயாராகிவிடும் என்று அறிவிப்பு.
    • விமான நிலையம் மர்யதா புருஷோத்தம் ஸ்ரீ ராம் சர்வதேச விமான நிலையம் என்று அழைக்கப்படும்.

    உத்தரப் பிரதேசம் மாநிலத்தில் உள்ள அயோத்தியில் பிரமாண்டமாக கட்டப்பட்டுள்ள ராமர் கோயில் கும்பாபிஷேகம் வருகிற ஜனவரி மாதம் 22-ந்தேதி நடக்கிறது.

    நாடு தழுவிய அளவில் கும்பாபிஷேக விழாவை வெகு விமரிசையாக கொண்டாட பல்வேறு ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகின்றன.

    இதனையொட்டி, அயோத்தி விமான நிலையமும் தயார் நிலையில் உள்ளது.

    அயோத்தியில் ராமர் கோயில் திறப்பு விழாவுக்கு ஒரு மாதத்திற்கு முன்னதாக, உத்தரப் பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத், நகரில் உள்ள சர்வதேச விமான நிலையத்தின் முதல் கட்டம் டிசம்பர் 15ம் தேதிக்குள் தயாராகிவிடும் என்று அறிவித்துள்ளார்.

    இந்த விமான நிலையம் மர்யதா புருஷோத்தம் ஸ்ரீ ராம் சர்வதேச விமான நிலையம் என்று அழைக்கப்படும் என்றும் விமான நிலையத்தில் போயிங் 737, ஏர்பஸ் 319 மற்றும் ஏர்பஸ் 320 விமானங்கள் பயன்பாட்டில் இருக்கும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    • இப்பூங்காவில் வெகு விரைவில் மிகப்பெரும் நிறுவனங்கள் வரவுள்ளன.
    • தென் மாவட்டங்களில் விமான நிலையம் கொண்டு வருவதற்கான நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

    தஞ்சாவூர்:

    தஞ்சாவூர் மேலவஸ்தாசாவடியில் கட்டப்பட்டு வரும் டைடல் பூங்கா கட்டுமானப் பணியை இன்று தொழில்துறை அமைச்சர் டி.ஆர்.பி.ராஜா பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

    பின்னர் அவர் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியிருப்பதாவது;-

    மூன்று மாதங்களுக்கு முன்பு தொடங்கப்பட்ட இந்த டைடல் பூங்கா கட்டுமான பணி இப்போது முடிவடையும் தருவாயில் உள்ளது.

    எனவே, இப்பூங்காவில் வெகு விரைவில் மிகப்பெரும் நிறுவனங்கள் வரவுள்ளன.

    டெல்டா பகுதியில் படித்த இளைஞர்கள், தொழில் முனைவோர்கள் இங்கேயே தொழில் தொடங்குவதற்கு ஸ்டார்ட் அப் மையமாக இப்பூங்கா அமையும்.

    குறிப்பாக, இப்பூங்கா தஞ்சாவூர் மாவட்ட மக்களுக்கு மிகப்பெரிய வரப்பிரசாதமாக அமையும்.

    டெல்டா மாவட்டங்களில் எந்த காலத்தி லும் விவசாயிகளுக்கும், சுற்றுச்சூழலுக்கும் பாதிப்பு ஏற்படுத்தும் விதமாக தொழில்கள் வராது.

    அதே சமயம், இங்கு விவசாயம் சார்ந்த தொழில்பேட்டைகள் நிச்சயமாக கொண்டு வரப்படும்.

    படித்த இளைஞர்க ளுக்கு அடுத்த கட்ட வேலைவாய்ப்பு ஏற்படுத்தி தருவதில், தமிழக முதல்-அமைச்சர் முக்கிய நோக்க மாகக் கொண்டு செயல்பட்டு வருகிறார்.

    எனவே, டெல்டா பகுதியில் எந்தவித சுற்றுச்சூழல் பாதிப்பும் ஏற்படுத்தாத தொழில்பேட்டைகளைக் கொண்டு வரும் பணி நடைபெறுகிறது.

    தமிழகம் முழுவதும் வளர்ச்சி பரவ வேண்டும் என்ற அடிப்படையில் முதல்வர் நடவடிக்கை மேற்கொண்டு வருகிறார்.

    இதன் அடிப்படையில் ஓசூர், தென் மாவட்டங்களில் விமான நிலையம் கொண்டு வருவதற்கான நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

    இதே போல தஞ்சாவூரிலும் விமான நிலையம் அமைப்பதற்கான முதல் கட்டப் பணிகள் நடைபெற்று வருகின்றன.

    இவ்வாறு அவர் கூறினார்.

    இந்த ஆய்வின்போது மாவட்ட கலெக்டர் தீபக் ஜேக்கப், எம்.எல்.ஏ.க்கள் துரை. சந்திரசேகரன், டி.கே.ஜி

    நீலமேகம், துணை மேயர் அஞ்சுகம் பூபதி மற்றும் பலர் உடன் இருந்தனர்.

    • திருச்சியில் இருந்து பெங்களூருக்கு புதிய விமான சேவை தொடங்கப்பட்டுள்ளது
    • ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் நிறுவனம் இந்த விமான சேவையை தொடங்கி உள்ளது

    கே.கே. நகர்,

    திருச்சி விமான நிலையத்தில் இருந்து உள்நாட்டு விமான சேவைகளாக ஹைதராபாத், சென்னை, பெங்களூர், உள்ளிட்ட நகரங்களுக்கு இண்டிகோ நிறுவனத்தின் சார்பில் விமானங்கள் இயக்கப்பட்டு வருகிறது இதை தவிர வெளிநாட்டு விமான சேவைகளாக துபாய் மலேசியா சிங்கப்பூர் மஸ்கட் ஓமன் இலங்கை போன்ற நாடுகளுக்கும் இயக்கப்பட்டு வருகிறது. இதில் உள்நாட்டு விமான சேவைகள் நிறுவனத்தின் சார்பில் மட்டுமே இயக்கப்பட்டு வந்த நிலையில் தற்போது திருச்சியில் இருந்து பெங்களூருக்கு புதிய விமான சேவை  ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் நிறுவனம் துவங்கி இருக்கிறது. இந்த விமானம் ஆனது பெங்களூரில் நள்ளிரவு 12:15 மணிக்கு புறப்பட்டு இரவு 1.28 மணிக்கு திருச்சி விமான விமான நிலையத்திற்கு வந்தடைந்தது இந்த விமானத்தில் பெங்களூருவில் இருந்து திருச்சிக்கு 30 பயணிகள் பயணம் செய்தனர் மீண்டும் இந்த விமானம் திருச்சி விமான நிலையத்தில் இருந்து அதிகாலை 3:30 மணிக்கு புறப்பட்டு காலை 4.40 மணிக்கு பெங்களூர் விமான நிலையத்தை சென்றடைந்தது இந்த விமானத்தில் 78 பயணிகள் திருச்சியில் இருந்து பெங்களூர் நோக்கி பயணம் செய்தனர்.

    • அடிக்கடி வெளிநாடுகளில் இருந்து தங்கம் கடத்தப்பட்டு வருகிறது
    • விசாரணையில் முன்னுக்குப்பின் முரணாக பேசினார். இதனைத்தொடர்ந்து அவரது உடமைகள் சோதனை செய்யப்பட்டன.

    திருவனந்தபுரம்:

    கேரள மாநிலத்தில் உள்ள விமான நிலையங்கள் மூலம் அடிக்கடி வெளிநாடுகளில் இருந்து தங்கம் கடத்தப்பட்டு வருகிறது. இதனை சுங்கத்துறையினர் அதிரடியாக பறிமுதல் செய்து வருகின்றனர்.

    இந்தநிலையில் கொச்சி சர்வதேச விமான நிலையம் வந்த மொய்தீன் என்பவரது நடத்தை சந்தேகப்படும் வகையில் இருந்தது. அவரிடம் சுங்கத்துறையினர் விசாரணை நடத்தினர். அப்போது அவர் முன்னுக்குப்பின் முரணாக பேசினார். இதனைத்தொடர்ந்து அவரது உடமைகள் சோதனை செய்யப்பட்டன.

    சிறுவர்கள் விளையாடும் பொம்மைகள், கார்கள் போன்றவற்றை அவர் வைத்திருந்தார். அவற்றை தீவிர பரிசோதனைக்கு உட்படுத்தியதில், சுருள் வடிவில் தங்கத்தை மறைத்து வைத்து கடத்தியது தெரிய வந்தது. ரூ.18.79 லட்சம் மதிப்பிலான 352.40 கிராம் தங்கம் பறிமுதல் செய்யப்பட்டது.

    • மதுரை விமான நிலையத்திற்கு பசும்பொன் தேவர் பெயரை சூட்ட வேண்டும்.
    • பார்வர்ட் பிளாக் கோரிக்கை வைத்துள்ளனர்.

    பசும்பொன்

    கமுதி அருகே உள்ள பசும்பொன்னில் முத்துராம லிங்கத்தேவர் சிலைக்கு பார்வர்ட் பிளாக் கட்சியின் சார்பில் மாநில தலைவர் கதிரவன் மாலை அணி வித்து மரி யாதை செலுத்தப்பட்டது.

    பின்னர் அவர் செய்தியாளரிடம் கூறியதாவது:-

    வருகிற பாராளுமன்ற தேர்தலில் அகில இந்திய பார்வர்ட் பிளாக் கட்சிக்கு தொகுதி கேட்டு பெறப் படும். சுதந்திரப் போராட்ட தலைவர்களின் குருபூஜை, பிறந்தநாள் விழா நிகழ்ச்சி களின்போது 144 தடை உத்தரவு விதிப்பதை ஏற்க முடியாது. ஆனால் தடை களையும் மீறி லட்சக் கணக்கில் மக்கள் திரளுகின்றனர்.

    அதனால் 144 தடை விதிக்கப்பட கூடாது. மக்கள் தொகை கணக் கெடுப்புடன், சாதி வாரி கணக் கெடுப்பு நடத்த வேண்டும். அதுவரை 20 சதவீத இட ஒதுக்கீட்டில் மாற்றம் செய்யக் கூடாது. கமுதி பகுதியில் குண்டாறு, மலட் டாறுகளை தூர்வாரி விவசாயிகளை காக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    இதில் மத்தியக் கட்டுப்பாட்டு குழு தலைவர் மாநிலத்தலைவர் முத்துராம லிங்கம், மாநிலச் செயலாளர் இளங்கோ, ராமநாதபுரம் மாவட்ட அமைப்பு செய லாளர் பி.கீரந்தை வீரப் பெருமாள், சிவகங்கை மாவட்ட செயலாளர் கே.பி.யோகநாதன், மதுரை மாவட்ட நிர்வாகிகள் ஆசைகுமார், ஆதிசேசன், மாணவர் அணி மத்தியக் குழு உறுப்பினர் மு.வெள்ளைப்பாண்டியன், தேவர் நேதாஜி ஆராய்ச்சியாளர் மற்றும் ஆப்பநாடு ஆய்வு குழு தலைவர் மாயகிருஷ்ணன் ஆகியோர் உடனிருந்தனர்.

    • நாள்தோறும் 34 விமான சேவைகள் உள்ளதால் ஆயிரக்கணக்கான வெளிநாட்டு மற்றும் உள்நாட்டு பயணிகளும் வந்து செல்கிறார்கள்.
    • மனநலம் பாதிக்கப்பட்ட வாலிபர் விமான நிலையத்துக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுத்திருந்தார்.

    கே.கே. நகர்:

    திருச்சி விமான நிலையத்திலிருந்து இலங்கை, மலேசியா, மஸ்கட் ஓமன் துபாய், சிங்கப்பூர், உள்ளிட்ட பல்வேறு வெளி நாடுகளுக்கும் அதே போன்று பெங்களூர் சென்னை புதுடெல்லி உள்ளிட்ட பெரு நகரங்களுக்கும் விமானங்கள் இயக்கப்பட்டு வருகிறது.

    நாள்தோறும் 34 விமான சேவைகள் உள்ளதால் ஆயிரக்கணக்கான வெளிநாட்டு மற்றும் உள்நாட்டு பயணிகளும் வந்து செல்கிறார்கள். இந்நிலையில் இன்று அதிகாலை 2.32 மணிக்கு திருச்சி விமான நிலைய முனைய மேலாளர் தொலைபேசி எண்ணுக்கு வாட்ஸ்அப் மெசேஜ் வந்தது.

    சென்னை மடிப்பாக்கத்தைச் சேர்ந்த சங்கீதா வேலப்பன் என்ற பெண் அந்த மெசேஜை அனுப்பியிருந்தார். அதில் அவர் திருச்சி விமான நிலையத்திற்கு வரும் 34 விமானங்களில் அரிவாள் உள்ளிட்ட பயங்கர ஆயுதங்களும், வெடிகுண்டுகளும் இருப்பதாகவும் உடனடியாக சோதனை மேற்கொள்ளுங்கள் என மிரட்டல் விடுக்கும் வகையில் குறிப்பிட்டிருந்தார்.

    இதனையடுத்து மத்திய தொழில் பாதுகாப்பு படையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. தொடர்ந்து அவர்கள் வெடிகுண்டு நிபுணர்களுடன் விமான நிலையம் முழுவதும் சோதனை மேற்கொண்டனர்.

    ஆயினும் வெடிகுண்டு ஏதும் கண்டறியப்படவில்லை. இதை தொடர்ந்து வாட்சப் மெசேஜ் அனுப்பிய சங்கீதா வேலப்பனிடம் விசாரணை மேற்கொண்டதில் அவர் சற்று மனநலம் பாதிக்கப்பட்டவர் என தெரிய வந்தது.

    இதையடுத்து அவர் மீது வழக்கு ஏதும் பதிவு செய்யாமல் இதுபோன்ற நடவடிக்கையில் ஈடுபடக்கூடாது என எச்சரிக்கை விடுக்கப்பட்டதாக தெரிய வருகிறது. ஏற்கனவே கடந்த சில மாதங்களுக்கு முன்பு இதுபோன்று மனநலம் பாதிக்கப்பட்ட வாலிபர் விமான நிலையத்துக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுத்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

    • உள்நாட்டு விமான பயணிகளில், விமானங்கள் மாறி செல்லும் டிரான்சிட் பயணிகளுக்கு பல்வேறு சிரமங்கள் ஏற்பட்டன.
    • பயணிகள் மிகவும் குறுகிய நேரத்தில், ஒரு உள்நாட்டு விமானத்தில் வந்து விட்டு, மற்றொரு உள்நாட்டு விமானத்தில், புறப்பட்டு சென்று, பயணம் செய்ய முடியும்.

    ஆலந்தூர்:

    சென்னை உள்நாட்டு விமான நிலையத்திற்கு வருகை தரும் பயணிகள் ஒரு விமானத்தில் வந்துவிட்டு, உடனடியாக மற்றொரு உள்நாட்டு விமானத்தில் பயணம் செய்வதை "டிரான்சிட்" பயணம் என்று சொல்லப்படுகிறது. இந்த பயணத்தில் வரும் பயணிகள் இதுவரை வருகை பகுதி வழியாக வெளியில் வந்து, பின்னர் புறப்பாடு பகுதிக்கு சென்று தான், பயணிக்க வேண்டும். மிக முக்கிய வி.வி.ஐ.பி. பயணிகள் தவிர, மற்றஅனைவருக்கும் இந்த விதிமுறைதான் இருந்தது.

    இதனால் உள்நாட்டு விமான பயணிகளில், விமானங்கள் மாறி செல்லும் டிரான்சிட் பயணிகளுக்கு பல்வேறு சிரமங்கள் ஏற்பட்டன. இதன்காரணமாக பல்வேறு நேரங்களில், தங்கள் பயணம் செய்ய வேண்டிய விமானங்களை தவறவிடும் சூழ்நிலை ஏற்பட்டு வந்தது. இதைத்தொடர்ந்து டிரான்சிட் பயணிகள் வெளியில் செல்லாமல், உள்ளிருந்தே புறப்பாடு பகுதிக்கு செல்வதற்கு வசதிகளை ஏற்படுத்தித் தர வேண்டும் என்று கோரிக்கை விடுத்து வந்தனர். இதையடுத்து தற்போது சென்னை உள்நாட்டு விமான முனையத்தில் டிரான்சிட் பயணிகள், வெளியே செல்லாமல், வருகை பகுதியில் இருந்து, நேரடியாக புறப்பாடு பகுதியின், பாதுகாப்பு சோதனை பகுதிக்கு செல்வதற்காக, புதிய வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது. அதற்கான புதிய பாதையும் அமைக்கப்பட்டுள்ளது.

    சென்னை உள்நாட்டு விமான நிலையத்தில், இந்த புதிய வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளதால், டெல்லி விமானத்தில் வரும் ஒரு பயணி, தூத்துக்குடி விமானத்தில் பயணிக்க வேண்டும் என்றால், வெளியில் செல்லாமல், உள்ளிருந்தே டிரான்சிட் பயணிகள் செல்வதற்கான வழியாக சென்று, தூத்துக்குடி விமானத்தில் பயணிக்க முடியும். இதுபோல் அனைத்து உள்நாட்டு விமானங்களில் வரும் டிரான்சிட் பயணிகள், வெளியே செல்லாமல் உள்ளிருந்தே புறப்பாடு விமானத்தில் பயணம் செய்ய முடியும். இதனால் பயணிகள் மிகவும் குறுகிய நேரத்தில், ஒரு உள்நாட்டு விமானத்தில் வந்து விட்டு, மற்றொரு உள்நாட்டு விமானத்தில், புறப்பட்டு சென்று, பயணம் செய்ய முடியும்.

    ×