search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "தேவர் பெயர்"

    • மதுரை விமான நிலையத்திற்கு பசும்பொன் தேவர் பெயரை சூட்ட வேண்டும்.
    • பார்வர்ட் பிளாக் கோரிக்கை வைத்துள்ளனர்.

    பசும்பொன்

    கமுதி அருகே உள்ள பசும்பொன்னில் முத்துராம லிங்கத்தேவர் சிலைக்கு பார்வர்ட் பிளாக் கட்சியின் சார்பில் மாநில தலைவர் கதிரவன் மாலை அணி வித்து மரி யாதை செலுத்தப்பட்டது.

    பின்னர் அவர் செய்தியாளரிடம் கூறியதாவது:-

    வருகிற பாராளுமன்ற தேர்தலில் அகில இந்திய பார்வர்ட் பிளாக் கட்சிக்கு தொகுதி கேட்டு பெறப் படும். சுதந்திரப் போராட்ட தலைவர்களின் குருபூஜை, பிறந்தநாள் விழா நிகழ்ச்சி களின்போது 144 தடை உத்தரவு விதிப்பதை ஏற்க முடியாது. ஆனால் தடை களையும் மீறி லட்சக் கணக்கில் மக்கள் திரளுகின்றனர்.

    அதனால் 144 தடை விதிக்கப்பட கூடாது. மக்கள் தொகை கணக் கெடுப்புடன், சாதி வாரி கணக் கெடுப்பு நடத்த வேண்டும். அதுவரை 20 சதவீத இட ஒதுக்கீட்டில் மாற்றம் செய்யக் கூடாது. கமுதி பகுதியில் குண்டாறு, மலட் டாறுகளை தூர்வாரி விவசாயிகளை காக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    இதில் மத்தியக் கட்டுப்பாட்டு குழு தலைவர் மாநிலத்தலைவர் முத்துராம லிங்கம், மாநிலச் செயலாளர் இளங்கோ, ராமநாதபுரம் மாவட்ட அமைப்பு செய லாளர் பி.கீரந்தை வீரப் பெருமாள், சிவகங்கை மாவட்ட செயலாளர் கே.பி.யோகநாதன், மதுரை மாவட்ட நிர்வாகிகள் ஆசைகுமார், ஆதிசேசன், மாணவர் அணி மத்தியக் குழு உறுப்பினர் மு.வெள்ளைப்பாண்டியன், தேவர் நேதாஜி ஆராய்ச்சியாளர் மற்றும் ஆப்பநாடு ஆய்வு குழு தலைவர் மாயகிருஷ்ணன் ஆகியோர் உடனிருந்தனர்.

    • ராமநாதபுரத்தில் பசும்பொன் தேவர் பெயரில் பல்கலைக்கழகம் தொடங்க வேண்டும்.
    • அனைத்து மறவர் நல கூட்டமைப்பு சார்பில் வலியுறுத்தப்பட்டது.

    பரமக்குடி

    பசும்பொன் முத்துராம லிங்க தேவர் குருபூஜை விழா மற்றும் ஜெயந்தி விழாவை முன்னிட்டு அனைத்து மறவர் நல கூட்டமைப்பு மற்றும் செம்பிய நாடு மறவர் சங்கம் சார்பில் பசும்பொன்னில் அன்னதானம் வழங்கும் விழா நடைபெற்றது. அனைத்து மறவர் நல கூட்டமைப்பின் பொதுச்செயலாளரும், ஓய்வு பெற்ற காவல் துறை ஐ.ஜி.யுமான விஜயகுமார் தலைமை தாங்கி அன்னதானத்தை தொடங்கி வைத்தார். ஓய்வு பெற்ற டி.ஐ.ஜி. துரைச்சாமி, செம்பிய நாடு மறவர் சங்கத் தலைவர் சி. எம். டி. ராஜாஸ் சேதுபதி, மலேசியா முக்குலத்தோர் சங்கத்தலைவர்-தொழில் அதிபர் குணாத்தேவர் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

    விழாவையொட்டி ஆயிரக்கணக்கானோருக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. இந்த விழாவில் பசும்பொன் முத்துராமலிங்கத்தேவர் புகைப்படம் பொறித்த ரூபாய் நோட்டுகளை வெளியிட வேண்டும் என்றும், பசும்பொன் முத்துராமலிங்கத் தேவருக்கு பாரத ரத்னா விருது வழங்க வேண்டும் என்றும், அவரின் நினைவாக ராமநாதபுரத்தில் பசும்பொன் தேவர் பல்கலைக்கழகம் தொடங்க வேண்டும் என்றும், மதுரை விமான நிலையத்திற்கு முத்துராமலிங்கத் தேவர் பெயர் சூட்ட வேண்டும் என்றும் மத்திய-மாநில அரசுகளுக்கு வேண்டுகோள் விடுத்து தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இதில் அனைத்து மறவர் நல கூட்டமைப்பு நிர்வாகிகள் மற்றும் செம்பிய நாடு மறவர் சங்க நிர்வாகிகள் திரளாக கலந்து கொண்டனர்.

    ×