search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "இண்டிகோ ஏர்லைன்ஸ்"

    • வாரத்தில் திங்கள், வியாழன், சனி, ஆகிய 3 தினங்களில் இந்த விமான சேவைகள் இயக்கப்பட உள்ளன.
    • தினசரி விமான சேவையாக மாற்றப்பட வாய்ப்பு உள்ளது என்று சென்னை விமான நிலைய அதிகாரிகள் தெரிவித்தனர்.

    ஆலந்தூர்:

    சென்னையில் இருந்து வங்காளதேச தலைநகர் டாக்காவுக்கு ஏற்கனவே, இண்டிகோ ஏர்லைன்ஸ் விமான நிறுவனமும், யூ.எஸ். பங்களா விமான நிறுவனமும், தினசரி நேரடி விமான சேவையை இயக்கி வருகின்றன. இந்நிலையில் சென்னை- டாக்கா இடையே பயணிகள் போக்குவரத்து தொடர்ந்து அதிகரித்து வருகிறது.

    இதையடுத்து பீமன் பங்களாதேஷ் ஏர்லைன்ஸ் என்ற விமான நிறுவனம், டாக்கா- சென்னை இடையே, புதிதாக நேரடி விமான சேவையை, இன்று முதல் தொடங்கியது. வாரத்தில் திங்கள், வியாழன், சனி, ஆகிய 3 தினங்களில் இந்த விமான சேவைகள் இயக்கப்பட உள்ளன.

    இந்த விமானம் வாரத்தின் 3 நாட்களிலும், பகல் 12.50 மணிக்கு டாக்காவில் புறப்பட்டு, மாலை 3.20 மணிக்கு, சென்னை விமான நிலையம் வருகிறது. அதே விமானம் மீண்டும், மாலை 4.15 மணிக்கு, சென்னை சர்வதேச விமான நிலையத்தில் இருந்து புறப்பட்டு,

    இரவு 7.30 மணிக்கு டாக்கா விமான நிலையம் சென்றடைகிறது.

    இப்போது வாரத்தில் 3 நாட்கள் மட்டும் இயக்கப்படும் இந்த விமான சேவை, பயணிகளின் வரவேற்பை பொறுத்து, தினசரி விமான சேவையாக மாற்றப்பட வாய்ப்பு உள்ளது என்று சென்னை விமான நிலைய அதிகாரிகள் தெரிவித்தனர்.

    ×