search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "passenger"

    • எர்ணாகுளம் ரெயில் நிலையத்தை கடந்து சென்ற பின்னர், கார்த்திக்கை பாம்பு கடித்ததாக கூறப்படுகிறது.
    • யணியை கடித்தது பாம்பா அல்லது எலியா என்ற சந்தேகம் உள்ளது என்று ரெயில்வே போலீசார் தெரிவித்தனர்.

    பெரும்பாவூர்:

    கேரள மாநிலம் திருச்சூர் மாவட்டம் குருவாயூரில் இருந்து நேற்று காலை 9.30 மணியளவில் விரைவு ரெயில் (ரெயில் எண்.16329) மதுரை நோக்கி புறப்பட்டது. 6-வது பெட்டியில் மதுரை சின்ன கோவிலாங்குளம் பகுதியை சேர்ந்த கார்த்திக்(வயது 23) என்பவர் பயணம் செய்தார். தொடர்ந்து எர்ணாகுளம் ரெயில் நிலையத்தை கடந்து சென்ற பின்னர், கார்த்திக்கை பாம்பு கடித்ததாக கூறப்படுகிறது.

    இதனால் அவர் வலி தாங்க முடியாமல் துடித்தார். பின்னர் கோட்டயம் மாவட்டம் ஏட்டுமானூர் ரெயில் நிலையத்துக்கு ரெயில் வந்தது. உடனே கார்த்திக் மீட்கப்பட்டு அங்கு தயாராக இருந்த ஆம்புலன்சு மூலம் கோட்டயம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. பயணியை கடித்தது பாம்பா அல்லது எலியா என்ற சந்தேகம் உள்ளது என்று ரெயில்வே போலீசார் தெரிவித்தனர்.

    இதையடுத்து அந்த ரெயில் பெட்டியில் இருந்த அனைத்து பயணிகளும் கீழே இறக்கப்பட்டு, ரெயில்வே ஊழியர்கள், போலீசார் சோதனை நடத்தினர். இந்த சம்பவத்தால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. 

    • ஆதார் கார்டு இல்லாவிட்டால் 10 ரூபாய்க்கு டிக்கெட் எடுக்க வேண்டும் என்றார்.
    • அவரையும் தலைமுடியை கெட்டியாக பிடித்து இழுத்து, பஸ் கம்பியில் அடித்தார்.

    திருப்பதி:

    தெலுங்கானா மாநிலம் எல்.பி. நகரில், அரசு பஸ் ஒன்று சென்று கொண்டிருந்தது. கண்டக்டர் கங்காதரன் பயணிகளிடம் டிக்கெட் கொடுத்து கொண்டிருந்தார்.

    தில்சுக் நகர் செல்வதற்காக, அந்த பஸ்சில் இளம் பெண் ஒருவர் ஏறினார்.

    கண்டக்டர் கங்காதரனிடம், அந்த பெண் இலவச பயண டிக்கெட் கேட்டார்.

    உடனே கண்டக்டர், ஆதார் அட்டையை காண்பிக்கும்படி கேட்டார்.

    இதைக் கேட்டதுமே அந்த பெண்ணுக்கு கோபம் வந்துவிட்டது. யாரை பார்த்து ஆதார் அட்டை கேட்கிறாய்? என்று கேள்வி கேட்டு, கண்டக்டரை சரமாரியாக திட்டினார்.

    இதனால், திடுக்கிட்ட கண்டக்டர், அடையாள அட்டை இல்லாமல், பஸ்சில் பயணிக்க முடியாது, ஆதார் கார்டு இல்லாவிட்டால் 10 ரூபாய்க்கு டிக்கெட் எடுக்க வேண்டும் என்றார். இதனால் ஆத்திரமடைந்த இளம்பெண் கண்டக்டரை எட்டி உதைத்து தாக்க தொடங்கினார். அப்போதுதான் அந்த பெண், குடிபோதையில் இருந்தது தெரியவந்தது.

    பிறகு, அந்த பெண், திடீரென ரூ.500 நோட்டை கண்டக்டரிடம் தந்து டிக்கெட் கேட்டார்.

    500 ரூபாய்க்கு சில்லறை இல்லை என்று கண்டக்டர் கூறினார்.

    இதைக் கேட்டதும், அந்த பெண்ணுக்கு மீண்டும் கோபம் அதிகமாகிவிட்டது. அதனால், கண்டக்டரை எட்டி காலால் உதைத்தார். பிறகு, அவரது முகத்திலேயே எச்சிலை துப்பினார்.

    சினிமாவில் வரும் சண்டை காட்சி போல கண்டக்டரை காலால் உதைத்து புரட்டி எடுத்தார்.

    இதனை பார்த்து, பஸ்சில் இருந்த பயணிகள் அதிர்ந்து போனார்கள் யாருமே அந்த பெண்ணிடம் நெருங்கவில்லை. ஒரு பெண் இதனை தடுக்க அருகில் வந்தார்.

    அவரையும் தலைமுடியை கெட்டியாக பிடித்து இழுத்து, பஸ் கம்பியில் அடித்தார்.

    பஸ்சை அருகில் உள்ள போலீஸ் நிலையம் கொண்டு சென்றனர். இது குறித்து கண்டக்டர் போலீசில் புகார் அளித்தார். போலீசார் போதையில் கண்டக்டர் மற்றும் பெண்ணை தாக்கியது தொடர்பாக இளம்பெண்ணிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    பேண்ட் சட்டை அணிந்து இளம்பெண் பஸ்சில் கண்டக்டரை தாக்கும் காட்சிகளை பயணிகள் வீடியோ எடுத்துள்ளனர் .

    அது தெலுங்கானாவில் தற்போது வேகமாக பரவி பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. 

    • இருக்கையின் கீழ் வெடிகுண்டு இருப்பதாக தெரிவித்தார்.
    • விமானம் முழுக்க தீவிர சோதனை நடத்தப்பட்டது.

    மும்பையில் இருந்து லக்னோ நோக்கி புறப்பட வேண்டிய இன்டிகோ விமானம் பயணி ஒருவரால் தாமதமாக கிளம்பி சென்ற சம்பவம் அரங்கேறி இருக்கிறது. பயணம் செய்வதற்காக இன்டிகோ விமானத்தில் ஏறிய பயணி ஒருவர், தனது இருக்கையின் கீழ் வெடிகுண்டு வைக்கப்பட்டு இருப்பதாக தெரிவித்து இருக்கிறார்.

    குடியரசு தினமான ஜனவரி 26-ம் தேதி மாலை வேளையில் இந்த சம்பவம் அரங்கேறி இருக்கிறது. விமானத்தில் வெடிகுண்டு இருப்பதாக பயணி தெரிவித்ததை அடுத்து, அந்த பகுதியில் பரபரப்பான சூழல் நிலவியது. வெடிகுண்டு புகாரை அடுத்து விமானம் முழுக்க தீவிர சோதனை நடத்தப்பட்டது.

     

    கோப்புப்படம் 

    கோப்புப்படம் 


    விமானத்தில் வெடிகுண்டு இருப்பதாக தகவல் கிடைத்ததும், மும்பை காவல் துறை மற்றும் விமான நிலைய அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து விசாரணையை மேற்கொண்டனர். விமானத்தில் நடத்தப்பட்ட தீவிர சோதனையில், சந்தேகத்திற்குரிய வகையில் எந்த பொருளும் கிடைக்கப்பெறவில்லை.

    இதைத் தொடர்ந்து வெடிகுண்டு இருப்பதாக குற்றம்சாட்டிய 27 வயதான பயணி மீது காவல்துறையினர் இரண்டு பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்துள்ளனர். மேலும் இந்த சம்பவம் தொடர்பாக விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். 

    • பல்வேறு தடங்கல்களை தாண்டி கடந்த 4 ஆண்டுகளுக்கு முன்புதான் பாலம் கட்டுமான பணிகள் தொடங்கப்பட்டன.
    • பாலத்தின் பாதி பகுதிகள் கட்டப்பட்டு அப்படியே நிற்பதால் போக்குவரத்துக்கு இடையூறாக உள்ளது.

    சென்னை:

    சென்னை பட்டாபிராமில் இருந்து பட்டாபிராம் மிலிட்டரி சைடிங் பகுதிக்கு செல்லும் தண்டவாளத்தின் குறுக்கே உள்ள லெவல் கிராசிங்கில் சென்னை - திருவள்ளூர் நெடுஞ்சாலையில் மேம்பாலம் கட்ட 10 ஆண்டுகளுக்கு முன்பு திட்டமிடப்பட்டது. இந்த வழியாக தினமும் லட்சக்கணக்கான வாகனங்கள் சென்னை- திருவள்ளூர் இடையே செல்கின்றன.

    ஆனால் பல்வேறு தடங்கல்களை தாண்டி கடந்த 4 ஆண்டுகளுக்கு முன்புதான் பாலம் கட்டுமான பணிகள் தொடங்கப்பட்டன. ஆனாலும் இந்த பாலம் கட்டுமான பணியில் தொடர்ந்து முட்டுக்கட்டை ஏற்படுகிறது. இதனால் பாலம் கட்டுமான பணி தொடர்ந்து தாமதமாகிக்கொண்டே வருகிறது. இதன் காரணமாக இந்த பகுதி வழியாக செல்லும் லட்சக்கணக்கான பயணிகள் 5 கிலோ மீட்டர் சுற்றி செல்லும் நிலை ஏற்படுகிறது. எனவே இந்த பாலத்தை எப்போது கட்டி முடிப்பார்கள் என்று வாகன ஓட்டிகள் கேள்வி எழுப்புகிறார்கள்.

    இது தொடர்பாக அந்த பகுதியை சேர்ந்த வாகன ஓட்டிகள் கூறியதாவது:-

    பட்டாபிராம் பாலம் கட்டுமான திட்டம் இன்னும் கனவு திட்டமாகவே உள்ளது. பாலம் கட்டுமான பணிகள் தொடர்ந்து தாமதமாகிக் கொண்டே செல்கிறது. மேம்பாலத்தின் இருபுறமும் 7.25 மீட்டர் அகலத்துக்கு சர்வீஸ் சாலை அமைக்க திட்டமிட்டுள்ளதாக எங்களிடம் கூறப்பட்டது. ஆனால் சர்வீஸ் சாலைக்கு 3.5 மீட்டர் அகலமே விடப்பட்டுள்ளது. இதனால் இந்த வழியாக செல்லும் வாகன ஓட்டிகள் மிகவும் சிரமப்படுகிறார்கள்.

    இந்த வழியாக ஆவடி மற்றும் திருவள்ளூர் நோக்கி தினமும் லட்சக்கணக்காணவர்கள் பயணிக்கிறார்கள். இந்த திட்டம் தொடங்கப்பட்டு 10 வருடங்கள் ஆகியும் 4 வருடங்களுக்கு முன்புதான் மேம்பாலம் கட்டுமான பணிகள் தொடங்கின. ஆனாலும் நிலம் கையகப்படுத்துவதில் ஏற்பட்ட பிரச்சினையால் மேம்பாலம் கட்டுமான பணிகள் காலதாமதம் ஆனது.

    பின்னர் வருவாய் துறையினர் தலையிட்டு 5 ஆயிரம் சதுர அடி நிலத்தை கையகப்படுத்தினார்கள். ஆனாலும் இந்த திட்டம் இன்னும் முழுமையடையாமல் உள்ளது. பாலத்தின் பாதி பகுதிகள் கட்டுப்பட்டு அப்படியே நிற்பதால் போக்குவரத்துக்கு இடையூறாக உள்ளது. இதனால் காலை மற்றும் மாலை நேரங்களில் கடுமையான போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது.

    வாகன போக்குவரத்தை சீர் செய்யும் வகையில் சர்வீஸ் சாலையை பராமரிக்க வேண்டும் என்று நாங்கள் கோரிக்கை விடுத்து வருகிறோம். ஆனால் சர்வீஸ் சாலையை பராமரிப்பதில் அதிகாரிகள் ஆர்வம் காட்டவில்லை. இதனால் இந்த வழியாக ஆம்புலன்சு செல்வதில் கூட சிரமமாக உள்ளது. அவசர காலங்களில் அருகில் உள்ள மருத்துவமனைக்கு கூட செல்ல முடியாமல் பொது மக்கள் அவதிப்படுகிறார்கள்.

    இந்த பாலம் கட்டுமான பணிகளில் தாமதம் ஏற்பட்டுள்ளதால் பட்டாபிராம் செல்லும் வாகன ஓட்டிகள் போலீஸ் நிலையத்தில் யூ வளைவில் திரும்பி தற்போதுள்ள சாலையில் ஏறி திருநின்றவூர் நோக்கி சென்று சென்னை - திருவள்ளூர் நெடுஞ்சாலையுடன் இணைக்கும் வெளிவட்ட சாலையை அடைய வேண்டிய நிலை உள்ளது. இந்த பாலம் கட்டுமான பணிகள் எப்போது முடியும் என்று தெரியவில்லை. அதிகாரிகள் இதற்கு விரைந்து தீர்வு காண வேண்டும். இவ்வாறு அவர்கள் கூறினார்கள்.

    இதுகுறித்து நெடுஞ்சாலைத்துறை அதிகாரி ஒருவர் கூறுகையில், 'நிலம் கையகப்படுத்துவதில் ஏற்பட்ட தொழில்நுட்ப பிரச்சினை இந்த திட்டத்துக்கு முட்டுக்கட்டையாக அமைந்தது. இந்த பிரச்சினைக்கு விரைவில் தீர்வு காணப்படும். பாலம் கட்டுமான பணிகள் விரைவில் முடிவடையும் என்று நம்புகிறோம்' என்றார்.

    • கோயம்பேட்டில் இருந்து ஆம்னி பேருந்துகள் புறப்படாது என அதிகாரிகள் அறிவுறுத்தி உள்ளனர்.
    • ஆம்னி பேருந்துகள் நுழையா வண்ணம் ஆங்காங்கே போலீசார் தடுப்பு.

    தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்களுக்கு சென்றுவிட்டு சென்னை கோயம்பேடுக்கு திரும்பும் ஆம்னி பேருந்துகளை திருப்பி அனுப்பப்படுவதால் அங்கு பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

    கோயம்பேட்டில் இருந்து ஆம்னி பேருந்துகள் புறப்படாது என அதிகாரிகள் அறிவுறுத்தி உள்ளனர்.

    மேலும், கோயம்பேட்டிற்கு வரும் ஆம்னி பேருந்து பயணிகளை கிளாம்பாக்கம் செல்லுமாறு அறிவுறுத்தி வருகின்றனர்.

    கோயம்பேட்டிற்குள் ஆம்னி பேருந்துகள் நுழையா வண்ணம் ஆங்காங்கே போலீசார் தடுப்புகளை அமைத்துள்ளனர்.

    இதனால் பயணிகள் கடும் அவதிக்குள்ளாகியுள்ளனர். ஆம்னி பேருந்து தரப்பில் கோயம்பேட்டிற்கு வர கூறியதாகவும், பின்னர் கிளாம்பாக்கத்திற்கு செல்லுமாறு அதிகாரிகள் அறிவுறுத்துவதாலும், ஆம்னி பேருந்துகள் தொடர்பாக சரியான தகவல் இல்லாததால், எங்கு செல்வது என தெரியவில்லை என பயணிகள் புலம்பி வருகின்றனர்.

    • ரெயில் நிலையம் அமைக்க பயணிகள் தரப்பில் கோரிக்கை வைக்கப்பட்டது.
    • 12 பெட்டிகளை கொண்ட மின்சார ரெயில்கள் நிற்கும் வகையில் நடைமேடை இருக்கும்.

    சென்னை:

    சென்னை நகரின் போக்குவரத்து நெரிசலை குறைக்கும் வகையில், வண்டலூரை அடுத்த கிளாம்பாக்கத்தில் புதிய பஸ் நிலையம் திறக்கப்பட்டுள்ளது. இந்த பஸ் நிலையத்தில் இருந்து தினமும் 2,310 பஸ்கள் இயக்கப்பட உள்ளன.

    தினமும் சுமார் 1.5 லட்சம் பயணிகள் வந்து செல்லும் வகையில் இந்த பஸ் நிலையத்தில் வசதிகள் செய்யப்பட்டுள்ளன. கிளாம்பாக்கம் பஸ் நிலையத்துக்கு பயணிகள் எளிதாக வந்து செல்வதற்கு வசதியாக பஸ் நிலையத்துடன் மின்சார ரெயில் இணைப்பை ஏற்படுத்தும் வகையில், தாம்பரம் - செங்கல்பட்டு வழித்தடத்தில் கிளாம்பாக்கம் பஸ் நிலையம் அருகே ரெயில் நிலையம் அமைக்க பயணிகள் தரப்பில் கோரிக்கை வைக்கப்பட்டது.

    இதையடுத்து, வண்டலூர் - ஊரப்பாக்கம் இடையே கிளாம்பாக்கத்தில் ரூ.20 கோடி செலவில் புதிய ரெயில் நிலையம் அமைக்க முடிவு செய்யப்பட்டது. அதன்படி கிளாம்பாக்கத்தில் பஸ் நிலையம் அருகே புதிய ரெயில் நிலையம் அமைக்கும் பணிகள் தொடங்கியுள்ளன.

    இது தொடர்பாக ரெயில்வே அதிகாரிகள் கூறியதாவது:-

    கிளாம்பாக்கம் புதிய ரெயில் நிலையத்துக்கு ஒப்பந்தம் வழங்கப்பட்டு, ரெயில் நிலையத்தின் கட்டுமான பணிகள் தொடங்கியுள்ளன. கிளாம்பாக்கத்தில் புதிய ரெயில் நிலைய கட்டுமான பணிகளை வருகிற ஆகஸ்டு மாதத்துக்குள் முடித்து மக்கள் பயன்பாட்டுக்கு கொண்டு வர திட்டமிட்டு உள்ளோம்.

    ரெயில் நிலையம் அமைக்கும் பணி விறுவிறுப்பாக நடைபெறுகிறது. இந்த ரெயில் நிலையம் புறநகர் மின்சார ரெயில்கள் நின்று செல்லும் வகையில், 3 நடைமேடைகளுடன் அமைய உள்ளது. 12 பெட்டிகளை கொண்ட மின்சார ரெயில்கள் நிற்கும் வகையில் நடைமேடை இருக்கும். கிளாம்பாக்கத்தில் இருந்து தாம்பரம் ரெயில் நிலையம் சில கிலோ மீட்டர் தொலைவிலேயே இருப்பதால் கிளாம்பாக்கம் ரெயில் நிலையத்தில் விரைவு ரெயில்கள் நிற்கும் வகையில் நீண்ட நடைமேடை அமைக்கவேண்டிய அவசியமில்லை. இந்த ரெயில் நிலையத்தை மேம்படுத்துவது குறித்து ஆய்வு நடத்தி முடிவு செய்யப்படும்.

    மின் தூக்கி, நகரும் படிக்கட்டுடன் கூடிய நடை மேம்பாலம், ரெயில் நிலைய கட்டிடம், நடைமேடையின் மேற்கூரைகள் போன்ற உள்கட்டமைப்பு பணிகள் மேற்கொள்ளப்படுகின்றன. மேலும் கிளாம்பாக்கம் பஸ் நிலையத்தை, ரெயில் நிலையத்துடன் இணைக்க 450 மீட்டர் நீளத்துக்கு ஆகாய நடை பாலமும் அமைக்கப்படுகிறது.

    இவ்வாறு அவர்கள் கூறினார்கள்.

    • இதுவரை இல்லாத அளவிற்கு 2023-ம் ஆண்டில் மட்டும் 9.11 கோடி பேர் மெட்ரோ ரெயிலில் பயணித்துள்ளார்கள்.
    • வாட்ஸ்அப் டிக்கெட் மூலமாக மற்றும் பேடிஎம் ஆப் மூலமாகவும் பயணிகள் தங்கள் பயணச்சீட்டுகளை முன்பதிவு செய்யலாம்.

    சென்னை மெட்ரோ ரெயில் நிறுவனம் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறி இருப்பதாவது:-

    சென்னை மெட்ரோ ரெயிலில் நாள் ஒன்றுக்கு சராசரியாக 3 லட்சம் பேர் பயணிக்கின்றனர். சென்னை மெட்ரோ ரெயில் சேவை தொடங்கப்பட்ட எட்டு ஆண்டுகளில் இதுவரை இல்லாத அளவிற்கு 2023-ம் ஆண்டில் மட்டும் 9.11 கோடி பேர் மெட்ரோ ரெயிலில் பயணித்துள்ளார்கள்.

    கடந்த 2022-ம் ஆண்டில் 6.09 கோடி பேர் பயணித்துள்ளார்கள். 2022-ம் ஆண்டை விட 2023-ம் ஆண்டில் 3.01 கோடி பேர் அதிகமாக பயணித்துள்ளார்கள். சென்னை மெட்ரோ ரெயில் நிறுவனம் க்யுஆர் குறியீடு பயணச்சீட்டு, பயண அட்டைகள், வாட்ஸ்அப் டிக்கெட், மற்றும் போன்பே போன்ற அனைத்து வகையான பயணச்சீட்டுகளுக்கும் 20 சதவீத கட்டணத் தள்ளுபடி வழங்குகிறது.

    சென்னை மெட்ரோ ரெயில் நிறுவனத்தின் வாட்ஸ்அப் டிக்கெட் (+91 83000 86000) மூலமாக மற்றும் பேடிஎம் ஆப் மூலமாகவும் பயணிகள் தங்கள் பயணச்சீட்டுகளை முன்பதிவு செய்யலாம்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    • வாரத்தில் திங்கள், வியாழன், சனி, ஆகிய 3 தினங்களில் இந்த விமான சேவைகள் இயக்கப்பட உள்ளன.
    • தினசரி விமான சேவையாக மாற்றப்பட வாய்ப்பு உள்ளது என்று சென்னை விமான நிலைய அதிகாரிகள் தெரிவித்தனர்.

    ஆலந்தூர்:

    சென்னையில் இருந்து வங்காளதேச தலைநகர் டாக்காவுக்கு ஏற்கனவே, இண்டிகோ ஏர்லைன்ஸ் விமான நிறுவனமும், யூ.எஸ். பங்களா விமான நிறுவனமும், தினசரி நேரடி விமான சேவையை இயக்கி வருகின்றன. இந்நிலையில் சென்னை- டாக்கா இடையே பயணிகள் போக்குவரத்து தொடர்ந்து அதிகரித்து வருகிறது.

    இதையடுத்து பீமன் பங்களாதேஷ் ஏர்லைன்ஸ் என்ற விமான நிறுவனம், டாக்கா- சென்னை இடையே, புதிதாக நேரடி விமான சேவையை, இன்று முதல் தொடங்கியது. வாரத்தில் திங்கள், வியாழன், சனி, ஆகிய 3 தினங்களில் இந்த விமான சேவைகள் இயக்கப்பட உள்ளன.

    இந்த விமானம் வாரத்தின் 3 நாட்களிலும், பகல் 12.50 மணிக்கு டாக்காவில் புறப்பட்டு, மாலை 3.20 மணிக்கு, சென்னை விமான நிலையம் வருகிறது. அதே விமானம் மீண்டும், மாலை 4.15 மணிக்கு, சென்னை சர்வதேச விமான நிலையத்தில் இருந்து புறப்பட்டு,

    இரவு 7.30 மணிக்கு டாக்கா விமான நிலையம் சென்றடைகிறது.

    இப்போது வாரத்தில் 3 நாட்கள் மட்டும் இயக்கப்படும் இந்த விமான சேவை, பயணிகளின் வரவேற்பை பொறுத்து, தினசரி விமான சேவையாக மாற்றப்பட வாய்ப்பு உள்ளது என்று சென்னை விமான நிலைய அதிகாரிகள் தெரிவித்தனர்.

    • பயணிகள் விமான நிறுவன கவுண்டரை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
    • மதியம் ஒரு மணிக்கு விமானம் புறப்பட்டு செல்லும் என்று அறிவித்துள்ளனர்.

    ஆலந்தூர்:

    சென்னையில் இருந்து சிங்கப்பூர் செல்லும் விமானம் இன்று அதிகாலை 1.40 மணிக்கு புறப்பட தயாராக இருந்தது. 168 பயணிகள் அனைத்து சோதனைகளையும் முடித்துவிட்டு, விமானத்தில் ஏற தயாராக இருந்தனர். விமானி பரிசோதித்தபோது விமானத்தில் எந்திர கோளாறு இருப்பதை கண்டுபிடித்தார்.

    இதைத்தொடர்ந்து விமானம் தாமதமாக புறப்படும் என்று அறிவிக்கப்பட்டது. ஆனால் விமானம் புறப்பட தொடர்ந்து தாமதம் ஏற்பட்டதால் ஆத்திரமடைந்த பயணிகள் விமான நிறுவன கவுண்டரை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். அவர்களை அதிகாரிகள் சமாதானம் செய்தனர்.

    இன்று மதியம் ஒரு மணிக்கு விமானம் புறப்பட்டு செல்லும் என்று அறிவித்துள்ளனர். சென்னை விமான நிலையத்தில் சுமார் 12 மணி நேரத்திற்கு மேலாக பயணிகள் தவித்தபடி இருந்தனர்.

    • சாலையின் நடுவே டிரைவர்கள் பஸ்களை நிறுத்தி திடீரென வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.
    • அங்கிருந்த சில பயணிகள் தங்களது செல்போன்களில் வீடியோவாக பதிவு செய்தனர்.

    வந்தவாசி:

    திருவண்ணாமலை மாவட்டம், வந்தவாசியில் இருந்து காலை 6.30 மணி அளவில் புறப்பட்ட தனியார் பஸ்சும், திண்டிவனத்தில் இருந்து ஆரணிக்கு புறப்பட்ட தனியார் பஸ்சும், வந்தவாசி அடுத்த சடத்தாங்கல் கூட்ரோட்டில் சந்தித்து கொண்டன.

    அப்போது 2 பஸ்களும் நேர வித்தியாசம் காரணமாக ஒருவரை ஒருவர் முந்தி செல்ல முயன்றன. அப்போது பஸ்கள் ஒன்றோடு ஒன்று உரசுவது போன்று இருந்தது.

    இதனால் பஸ்களில் பயணம் செய்த பயணிகள் அச்சம் அடைந்து பீதியில் உறைந்தனர்.

    பின்னர் சாலையின் நடுவே டிரைவர்கள் பஸ்களை நிறுத்தி திடீரென வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.

    இதனை அங்கிருந்த சில பயணிகள் தங்களது செல்போன்களில் வீடியோவாக பதிவு செய்தனர். செல்போன்களில் பதிவான வீடியோக்களை சமூக வலைதளங்களில் தற்போது வீடியோ பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது.

    மேலும் இது போன்ற செயல்களில் பஸ் டிரைவர்கள், பயணிகளை அச்சுறுத்த வேண்டாம் எனக் கூறி சமூக ஆர்வலர்களும், பொதுமக்களும் வலியுறுத்தியுள்ளனர்.

    • பண்டிகை காலகட்டங்களிலும், சீசன் காலங்களிலும் சிறப்பு ரெயில்கள் இயக்கப்படுவது வழக்கம்.
    • பண்டிகை கால கூட்ட நெரிசலை சமாளிக்க தற்போது இந்த ரெயில்களின் சேவை ஜனவரி மாதம் வரை நீட்டிப்பு செய்யப்பட்டுள்ளது.

    நெல்லை:

    தென்மாவட்டங்களில் இருந்து சென்னை உள்ளிட்ட பிற பகுதிகளுக்கு செல்லும் பயணிகளின் வசதிக்காக தென்னக ரெயில்வேயின் மதுரை கோட்டம் சார்பில் பண்டிகை காலகட்டங்களிலும், சீசன் காலங்களிலும் சிறப்பு ரெயில்கள் இயக்கப்படுவது வழக்கம்.

    அதன் ஒரு பகுதியாக நாகர்கோவிலில் இருந்து நெல்லை வழியாக சென்னை தாம்பரத்திற்கு (நாகர்கோவில்-தாம்பரம்) சிறப்பு ரெயில் அறிவிக்கப்பட்டு அந்த ரெயில் இந்த மாதம் இறுதி வரை இயக்கப்படும் என ஏற்கனவே அறிவிக்கப்பட்டு இருந்தது.

    இந்த ரெயிலுக்கு பயணிகள் மத்தியில் நல்ல வரவேற்பு இருந்த நிலையில், வார இறுதி நாள் மற்றும் பண்டிகை கால கூட்ட நெரிசலை சமாளிக்க தற்போது இந்த ரெயில்களின் சேவை ஜனவரி மாதம் வரை நீட்டிப்பு செய்யப்பட்டுள்ளது.

    அதன்படி நாகர்கோவிலில் இருந்து மாலை 4.35 மணிக்கு புறப்படும் தாம்பரம் சிறப்பு ரெயில்(06012) அடுத்த மாதம் 3, 10, 17, 24, 31, அடுத்த ஆண்டு ஜனவரி 7, 14, 21, 28 ஆகிய ஞாயிற்றுக்கிழமைகளில் மாலை நேரத்தில் சென்னை புறப்படுகிறது. இந்த ரெயில் மறுநாள் அதிகாலை 4.10 மணிக்கு தாம்பரம் சென்றடையும். மறு மார்க்கத்தில் தாம்பரத்தில் இருந்து காலை 8.05 மணிக்கு புறப்படும் இந்த சிறப்பு ரெயில்(06011) இன்று, அடுத்த மாதம் 4, 11, 18, 25, வருகிற ஜனவரி மாதம் 1, 8, 15, 22, 29 ஆகிய திங்கட்கிழமைகளில் இரவு 8.45 மணிக்கு நாகர்கோவில் சென்றடையும்.

    • சேலம் அருகே ரெயில் வந்தபோது கான்பட் மயங்கி விழுந்தார். அவரை மீட்டு ரெயில்வே டாக்டர்கள் பரிசோதனை செய்தனர். அப்போது அவர் இறந்து விட்டதாக டாக்டர்கள் கூறினர்.
    • உடல் சேலம் அரசு ஆஸ்பத்திரி பிணவறையில் வைக்கப்பட்டுள்ளது. ஆனால் அவர் யார்? எந்த ஊரை சேர்ந்தவர்? என்ற விவரம் தெரியவில்லை. இதுகுறித்து ரெயில்வே போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    சேலம்:

    மகாராஷ்டிரா மாநிலம் நாசிக்கை சேர்ந்தவர் கான்பட் (68). இவர் மனைவியுடன் மதுரையில் இருந்து தாதர் எக்ஸ்பிரஸ் ரெயிலில் நேற்று புனேக்கு புறப்பட்டார். நேற்று நள்ளிரவு 12 மணியளவில் சேலம் அருகே ரெயில் வந்தபோது கான்பட் மயங்கி விழுந்தார். அவரை மீட்டு ரெயில்வே டாக்டர்கள் பரிசோதனை செய்தனர். அப்போது அவர் இறந்து விட்டதாக டாக்டர்கள் கூறினர். இது தொடர்பாக அவரது மனைவி கொடுத்த புகாரின் பேரில் ரெயில்வே போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    இதேபோல் சேலம் ஜங்ஷன் ரெயில் நிலைய 1-வது பிளாட்பாமில் 55 வயது மதிக்கத்தக்க ஆண் ஒருவர் நேற்று இரவு மயங்கிய நிலையில் கிடந்தார். இதனை பார்த்த போலீசார் அவரை மீட்டு ரெயில்வே டாக்டர்கள் மூலம் பரிசோதித்தனர். அப்போது அவர் இறந்து விட்டது தெரிய வந்தது. அவரது உடல் சேலம் அரசு ஆஸ்பத்திரி பிணவறையில் வைக்கப்பட்டுள்ளது. ஆனால் அவர் யார்? எந்த ஊரை சேர்ந்தவர்? என்ற விவரம் தெரியவில்லை. இதுகுறித்து ரெயில்வே போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    ×