search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "domestic terminal"

    • உள்நாட்டு விமான பயணிகளில், விமானங்கள் மாறி செல்லும் டிரான்சிட் பயணிகளுக்கு பல்வேறு சிரமங்கள் ஏற்பட்டன.
    • பயணிகள் மிகவும் குறுகிய நேரத்தில், ஒரு உள்நாட்டு விமானத்தில் வந்து விட்டு, மற்றொரு உள்நாட்டு விமானத்தில், புறப்பட்டு சென்று, பயணம் செய்ய முடியும்.

    ஆலந்தூர்:

    சென்னை உள்நாட்டு விமான நிலையத்திற்கு வருகை தரும் பயணிகள் ஒரு விமானத்தில் வந்துவிட்டு, உடனடியாக மற்றொரு உள்நாட்டு விமானத்தில் பயணம் செய்வதை "டிரான்சிட்" பயணம் என்று சொல்லப்படுகிறது. இந்த பயணத்தில் வரும் பயணிகள் இதுவரை வருகை பகுதி வழியாக வெளியில் வந்து, பின்னர் புறப்பாடு பகுதிக்கு சென்று தான், பயணிக்க வேண்டும். மிக முக்கிய வி.வி.ஐ.பி. பயணிகள் தவிர, மற்றஅனைவருக்கும் இந்த விதிமுறைதான் இருந்தது.

    இதனால் உள்நாட்டு விமான பயணிகளில், விமானங்கள் மாறி செல்லும் டிரான்சிட் பயணிகளுக்கு பல்வேறு சிரமங்கள் ஏற்பட்டன. இதன்காரணமாக பல்வேறு நேரங்களில், தங்கள் பயணம் செய்ய வேண்டிய விமானங்களை தவறவிடும் சூழ்நிலை ஏற்பட்டு வந்தது. இதைத்தொடர்ந்து டிரான்சிட் பயணிகள் வெளியில் செல்லாமல், உள்ளிருந்தே புறப்பாடு பகுதிக்கு செல்வதற்கு வசதிகளை ஏற்படுத்தித் தர வேண்டும் என்று கோரிக்கை விடுத்து வந்தனர். இதையடுத்து தற்போது சென்னை உள்நாட்டு விமான முனையத்தில் டிரான்சிட் பயணிகள், வெளியே செல்லாமல், வருகை பகுதியில் இருந்து, நேரடியாக புறப்பாடு பகுதியின், பாதுகாப்பு சோதனை பகுதிக்கு செல்வதற்காக, புதிய வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது. அதற்கான புதிய பாதையும் அமைக்கப்பட்டுள்ளது.

    சென்னை உள்நாட்டு விமான நிலையத்தில், இந்த புதிய வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளதால், டெல்லி விமானத்தில் வரும் ஒரு பயணி, தூத்துக்குடி விமானத்தில் பயணிக்க வேண்டும் என்றால், வெளியில் செல்லாமல், உள்ளிருந்தே டிரான்சிட் பயணிகள் செல்வதற்கான வழியாக சென்று, தூத்துக்குடி விமானத்தில் பயணிக்க முடியும். இதுபோல் அனைத்து உள்நாட்டு விமானங்களில் வரும் டிரான்சிட் பயணிகள், வெளியே செல்லாமல் உள்ளிருந்தே புறப்பாடு விமானத்தில் பயணம் செய்ய முடியும். இதனால் பயணிகள் மிகவும் குறுகிய நேரத்தில், ஒரு உள்நாட்டு விமானத்தில் வந்து விட்டு, மற்றொரு உள்நாட்டு விமானத்தில், புறப்பட்டு சென்று, பயணம் செய்ய முடியும்.

    சென்னை விமான நிலையத்தில் பன்னாட்டு, உள்நாட்டு முனையங்களுக்கு வாகனங்கள் வந்து செல்ல தனித்தனி வழிகள் இன்று முதல் அமல்படுத்தப்படுகிறது. #ChennaiAirport
    ஆலந்தூர்:

    சென்னை மீனம்பாக்கம் விமான நிலையத்தில் பன்னாட்டு மற்றும் உள்நாட்டு முனையத்துக்கு வரும் வாகனங்கள் தற்போது உள்நாட்டு முனையம் வழியாக வந்து பன்னாட்டு முனையம் வழியாக வெளியேற வேண்டும். விரைவாக சென்றால்தான் சுங்க கட்டணம் இல்லாமல் இலவசமாக செல்ல முடியும் என்பதால் போக்குவரத்து நெரிசல் மற்றும் சில பிரச்சனைகள் ஏற்பட்டது.

    இதையடுத்து சென்னை மீனம்பாக்கம் விமான நிலைய ஆணையகம், பன்னாட்டு மற்றும் உள்நாட்டு முனையத்துக்கு தனித்தனி நுழைவு வாயில்கள் அமைத்து சோதனை அடிப்படையில் வாகனங்களை இயக்கியதில் பெரும் வரவேற்பு கிடைத்தது.

    இந்த நிலையில் பன்னாட்டு முனையம் மற்றும் உள்நாட்டு முனையங்களுக்கு தனித்தனி நுழைவு வாயில்கள் இன்று காலை 11 மணி முதல் அமல்படுத்தப்படுகிறது.

    அதன்படி, பன்னாட்டு முனையத்துக்கு வரும் வாகனங்கள் திரிசூலம் ரெயில் நிலையம் எதிரே உள்ள தற்போதைய வெளியேறும் பாதை வழியாக உள்ளே வந்து, விமான நிலைய மெட்ரோ ரெயில் நிலையம் அருகே உள்ள பாதை வழியாக வெளியேற வேண்டும்.


    உள்நாட்டு முனையத்துக்கு வரும் வாகனங்கள் மெட்ரோ ரெயில் நிலையம் அருகே உள்ள பாதை வழியாக உள்ளே வந்து, தற்போது உள்ள நுழைவு வாயில் வழியாக வெளியேற வேண்டும்.

    உள்நாட்டு மற்றும் பன்னாட்டு முனையங்களின் புறப்பாடு பகுதியில் பயணிகளை இறக்கிவிட்டு வாகனங்கள் உடனடியாக சென்றுவிடவேண்டும். உள்நாட்டு மற்றும் பன்னாட்டு முனையங்களின் வருகை பகுதியில் இருந்து பயணிகளை ஏற்றிச்செல்ல வரும் வாகனங்கள் அதற்கான வாகன நிறுத்தும் இடத்தில் நிறுத்தி, ஏற்றிச்செல்ல வேண்டும்.

    உள்நாட்டு மற்றும் பன்னாட்டு முனையங்களின் நுழைவு பகுதி முகப்புகளில் வாகனங்களை நிறுத்தினால் அபராதம் விதிக்கப்படும். வாகனங்கள் வந்து செல்ல 10 நிமிட இலவச நேரம் தொடர்ந்து அமலில் இருக்கும்.

    இந்த புதிய நடைமுறைக்கு பயணிகள், வாகன ஓட்டிகள் முழு ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என சென்னை விமான நிலைய ஆணையகம் கேட்டுக்கொண்டு உள்ளது. #ChennaiAirport
    ×