search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "புதிய வசதி"

    • மு.க.ஸ்டாலின் வீடியோ பதிவு மூலம் மக்களிடம் தெரிவிக்கும் வகையில் புதிய வசதி அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.
    • மக்களிடம் திட்டங்கள் குறித்து இந்த தொழில்நுட்பத்தில் தெரிவிப்பது கூடுதல் சிறப்பு அம்சமாகும்.

    சென்னை:

    தமிழ்நாடு அரசு செயல்படுத்தும் மக்கள் நலன் சார்ந்த மகத்தான திட்டங்களை, முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வீடியோ பதிவு மூலம் மக்களிடம் தெரிவிக்கும் வகையில் புதிய வசதி அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

    தி.மு.க. அரசு பொறுப்பேற்ற நாளில் இருந்து மக்கள் நலன் சார்ந்த பல திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. குறிப்பாக பெண்கள், இளைஞர், மாணவர்கள் முன்னேற்றத்தில் அரசின் திட்டங்கள் பெரும்பங்கு வகிக்கிறது,

    இந்த திட்டங்களை மக்கள் அறிந்துக் கொண்டு பயன்பெறும் வகையில் தமிழ் மற்றும் ஆங்கில நாளிதழ்கள் வழியாக இந்த திட்டங்கள் மக்களிடம் கொண்டு செல்லப்படுகிறது.

    இதில் புதிய வியூகமாக, நாளிதழில் வரும் விளம்பரத்துடன் இடம் பெறும் கியூ.ஆர்.கோடை செல்போன் மூலம் ஸ்கேன் செய்து பார்த்தால் அரசின் திட்டங்கள் குறித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேசும் வீடியோ பதிவை பார்க்க முடியும். 'ஆகு மென்டட் ரியாலிட்டி தொழில்நுட்பம்' மூலம் இந்த வீடியோ பதிவு வெளியிடப்படுகிறது.

    இன்று தமிழ்நாட்டின் பெண்கள் வாழ்வில் முன்னேற்றத்தை தந்த விடியல் பயணத் திட்டம் குறித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேசும் வீடியோவை அதில் காணலாம்.

    நாட்டிலேயே முதன் முறையாக, ஒரு அரசியல் கட்சி இது போன்று முதலமைச்சரே, மக்களிடம் திட்டங்கள் குறித்து இந்த தொழில்நுட்பத்தில் தெரிவிப்பது கூடுதல் சிறப்பு அம்சமாகும்.

    • உள்நாட்டு விமான பயணிகளில், விமானங்கள் மாறி செல்லும் டிரான்சிட் பயணிகளுக்கு பல்வேறு சிரமங்கள் ஏற்பட்டன.
    • பயணிகள் மிகவும் குறுகிய நேரத்தில், ஒரு உள்நாட்டு விமானத்தில் வந்து விட்டு, மற்றொரு உள்நாட்டு விமானத்தில், புறப்பட்டு சென்று, பயணம் செய்ய முடியும்.

    ஆலந்தூர்:

    சென்னை உள்நாட்டு விமான நிலையத்திற்கு வருகை தரும் பயணிகள் ஒரு விமானத்தில் வந்துவிட்டு, உடனடியாக மற்றொரு உள்நாட்டு விமானத்தில் பயணம் செய்வதை "டிரான்சிட்" பயணம் என்று சொல்லப்படுகிறது. இந்த பயணத்தில் வரும் பயணிகள் இதுவரை வருகை பகுதி வழியாக வெளியில் வந்து, பின்னர் புறப்பாடு பகுதிக்கு சென்று தான், பயணிக்க வேண்டும். மிக முக்கிய வி.வி.ஐ.பி. பயணிகள் தவிர, மற்றஅனைவருக்கும் இந்த விதிமுறைதான் இருந்தது.

    இதனால் உள்நாட்டு விமான பயணிகளில், விமானங்கள் மாறி செல்லும் டிரான்சிட் பயணிகளுக்கு பல்வேறு சிரமங்கள் ஏற்பட்டன. இதன்காரணமாக பல்வேறு நேரங்களில், தங்கள் பயணம் செய்ய வேண்டிய விமானங்களை தவறவிடும் சூழ்நிலை ஏற்பட்டு வந்தது. இதைத்தொடர்ந்து டிரான்சிட் பயணிகள் வெளியில் செல்லாமல், உள்ளிருந்தே புறப்பாடு பகுதிக்கு செல்வதற்கு வசதிகளை ஏற்படுத்தித் தர வேண்டும் என்று கோரிக்கை விடுத்து வந்தனர். இதையடுத்து தற்போது சென்னை உள்நாட்டு விமான முனையத்தில் டிரான்சிட் பயணிகள், வெளியே செல்லாமல், வருகை பகுதியில் இருந்து, நேரடியாக புறப்பாடு பகுதியின், பாதுகாப்பு சோதனை பகுதிக்கு செல்வதற்காக, புதிய வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது. அதற்கான புதிய பாதையும் அமைக்கப்பட்டுள்ளது.

    சென்னை உள்நாட்டு விமான நிலையத்தில், இந்த புதிய வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளதால், டெல்லி விமானத்தில் வரும் ஒரு பயணி, தூத்துக்குடி விமானத்தில் பயணிக்க வேண்டும் என்றால், வெளியில் செல்லாமல், உள்ளிருந்தே டிரான்சிட் பயணிகள் செல்வதற்கான வழியாக சென்று, தூத்துக்குடி விமானத்தில் பயணிக்க முடியும். இதுபோல் அனைத்து உள்நாட்டு விமானங்களில் வரும் டிரான்சிட் பயணிகள், வெளியே செல்லாமல் உள்ளிருந்தே புறப்பாடு விமானத்தில் பயணம் செய்ய முடியும். இதனால் பயணிகள் மிகவும் குறுகிய நேரத்தில், ஒரு உள்நாட்டு விமானத்தில் வந்து விட்டு, மற்றொரு உள்நாட்டு விமானத்தில், புறப்பட்டு சென்று, பயணம் செய்ய முடியும்.

    • விவசாய நிலங்களின் பரப்பளவை அதிகரிக்க அரசு பல்வேறு திட்டங்கள் வகுத்துள்ளது.
    • தரிசு நிலங்களை முழுமையாகக் கண்டறிந்து மேம்படுத்த வாய்ப்பு உருவாகும்.

    திருப்பூர்

    தரிசு நிலங்களை மேம்படுத்தும் வகையில் உழவன் செயலியில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ள புதிய வசதியின் மூலம், தங்களிடமுள்ள தரிசு நிலங்கள் குறித்து விவசாயிகளே பதிவு செய்ய முடியும். வீட்டு மனைகள் இடுபொருட்களின் விலை உயர்வு, விளை பொருட்களுக்கு உரிய விலையின்மை, கூலி ஆட்கள் பற்றாக்குறை, மாறி வரும் பருவநிலை உள்ளிட்ட பல்வேறு காரணங்களால் விவசாயிகள் மாற்றுத்தொழிலுக்கு மாறும் நிலை ஏற்பட்டுள்ளது. இதனால் பல விளை நிலங்கள் தரிசாக மாறி வருகிறது.காலப்போக்கில் இவை வீட்டு மனைகளாக மாறும் அபாயம் உள்ளது.

    இந்தநிலையில் விவசாய நிலங்களின் பரப்பளவை அதிகரிக்க அரசு பல்வேறு திட்டங்கள் வகுத்துள்ளது.அதன் ஒருபகுதியாக தரிசு நிலங்களைக் கண்டறிந்து அவற்றை மேம்படுத்தும் பணிகள் நடைபெற்று வருகிறது. அதன்படி வேளாண்மைத்துறையினர் மற்றும் வருவாய்த்துறையினர் இணைந்து ஒவ்வொரு பகுதியிலும் உள்ள தரிசு நிலங்களைக் கணக்கெடுக்கின்றனர்.மேலும் அவ்வாறு கண்டுபிடிக்கப்பட்ட தரிசு நிலங்களை, தரிசு நில மேம்பாட்டுத்திட்டம், தொகுப்பு தரிசு நில மேம்பாடு உள்ளிட்ட திட்டங்களின் மூலம் விளை நிலங்களாக மாற்றும் முயற்சியில் ஈடுபடுகின்றனர். இவ்வாறு கிராமங்கள் தோறும் சென்று தரிசு நிலங்களைக் கண்டறிவதில் பல்வேறு சிரமங்கள் ஏற்படுகிறது.

    இதனால் சில நிலங்கள் விடுபட்டு விடுவதால் தரிசு நிலங்களை முழுமையாக கண்டறிய முடியாத நிலை ஏற்படுகிறது. எனவே தற்போது தங்களிடமுள்ள தரிசு நிலங்கள் குறித்த விபரங்களை உழவன் செயலி மூலம் விவசாயிகளே நேரடியாக பதிவு செய்யும் வசதி விரைவில் அறிமுகப்படுத்தப்படவுள்ளது. இதன்மூலம் தரிசு நிலங்களை முழுமையாகக் கண்டறிந்து மேம்படுத்த வாய்ப்பு உருவாகும்.

    எனவே உழவன் செயலி மூலம் தரிசு நிலம் குறித்த விபரங்களை பதிவு செய்து அதனை விளை நிலமாக மாற்றும் அரசின் முயற்சியில் இணைந்து விவசாயிகள் பயனடைய வேண்டும் என்று வேளாண்மைத்துறை அதிகாரிகள் கூறினர்.

    ×