search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "new facility"

    • மு.க.ஸ்டாலின் வீடியோ பதிவு மூலம் மக்களிடம் தெரிவிக்கும் வகையில் புதிய வசதி அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.
    • மக்களிடம் திட்டங்கள் குறித்து இந்த தொழில்நுட்பத்தில் தெரிவிப்பது கூடுதல் சிறப்பு அம்சமாகும்.

    சென்னை:

    தமிழ்நாடு அரசு செயல்படுத்தும் மக்கள் நலன் சார்ந்த மகத்தான திட்டங்களை, முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வீடியோ பதிவு மூலம் மக்களிடம் தெரிவிக்கும் வகையில் புதிய வசதி அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

    தி.மு.க. அரசு பொறுப்பேற்ற நாளில் இருந்து மக்கள் நலன் சார்ந்த பல திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. குறிப்பாக பெண்கள், இளைஞர், மாணவர்கள் முன்னேற்றத்தில் அரசின் திட்டங்கள் பெரும்பங்கு வகிக்கிறது,

    இந்த திட்டங்களை மக்கள் அறிந்துக் கொண்டு பயன்பெறும் வகையில் தமிழ் மற்றும் ஆங்கில நாளிதழ்கள் வழியாக இந்த திட்டங்கள் மக்களிடம் கொண்டு செல்லப்படுகிறது.

    இதில் புதிய வியூகமாக, நாளிதழில் வரும் விளம்பரத்துடன் இடம் பெறும் கியூ.ஆர்.கோடை செல்போன் மூலம் ஸ்கேன் செய்து பார்த்தால் அரசின் திட்டங்கள் குறித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேசும் வீடியோ பதிவை பார்க்க முடியும். 'ஆகு மென்டட் ரியாலிட்டி தொழில்நுட்பம்' மூலம் இந்த வீடியோ பதிவு வெளியிடப்படுகிறது.

    இன்று தமிழ்நாட்டின் பெண்கள் வாழ்வில் முன்னேற்றத்தை தந்த விடியல் பயணத் திட்டம் குறித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேசும் வீடியோவை அதில் காணலாம்.

    நாட்டிலேயே முதன் முறையாக, ஒரு அரசியல் கட்சி இது போன்று முதலமைச்சரே, மக்களிடம் திட்டங்கள் குறித்து இந்த தொழில்நுட்பத்தில் தெரிவிப்பது கூடுதல் சிறப்பு அம்சமாகும்.

    • உள்நாட்டு விமான பயணிகளில், விமானங்கள் மாறி செல்லும் டிரான்சிட் பயணிகளுக்கு பல்வேறு சிரமங்கள் ஏற்பட்டன.
    • பயணிகள் மிகவும் குறுகிய நேரத்தில், ஒரு உள்நாட்டு விமானத்தில் வந்து விட்டு, மற்றொரு உள்நாட்டு விமானத்தில், புறப்பட்டு சென்று, பயணம் செய்ய முடியும்.

    ஆலந்தூர்:

    சென்னை உள்நாட்டு விமான நிலையத்திற்கு வருகை தரும் பயணிகள் ஒரு விமானத்தில் வந்துவிட்டு, உடனடியாக மற்றொரு உள்நாட்டு விமானத்தில் பயணம் செய்வதை "டிரான்சிட்" பயணம் என்று சொல்லப்படுகிறது. இந்த பயணத்தில் வரும் பயணிகள் இதுவரை வருகை பகுதி வழியாக வெளியில் வந்து, பின்னர் புறப்பாடு பகுதிக்கு சென்று தான், பயணிக்க வேண்டும். மிக முக்கிய வி.வி.ஐ.பி. பயணிகள் தவிர, மற்றஅனைவருக்கும் இந்த விதிமுறைதான் இருந்தது.

    இதனால் உள்நாட்டு விமான பயணிகளில், விமானங்கள் மாறி செல்லும் டிரான்சிட் பயணிகளுக்கு பல்வேறு சிரமங்கள் ஏற்பட்டன. இதன்காரணமாக பல்வேறு நேரங்களில், தங்கள் பயணம் செய்ய வேண்டிய விமானங்களை தவறவிடும் சூழ்நிலை ஏற்பட்டு வந்தது. இதைத்தொடர்ந்து டிரான்சிட் பயணிகள் வெளியில் செல்லாமல், உள்ளிருந்தே புறப்பாடு பகுதிக்கு செல்வதற்கு வசதிகளை ஏற்படுத்தித் தர வேண்டும் என்று கோரிக்கை விடுத்து வந்தனர். இதையடுத்து தற்போது சென்னை உள்நாட்டு விமான முனையத்தில் டிரான்சிட் பயணிகள், வெளியே செல்லாமல், வருகை பகுதியில் இருந்து, நேரடியாக புறப்பாடு பகுதியின், பாதுகாப்பு சோதனை பகுதிக்கு செல்வதற்காக, புதிய வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது. அதற்கான புதிய பாதையும் அமைக்கப்பட்டுள்ளது.

    சென்னை உள்நாட்டு விமான நிலையத்தில், இந்த புதிய வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளதால், டெல்லி விமானத்தில் வரும் ஒரு பயணி, தூத்துக்குடி விமானத்தில் பயணிக்க வேண்டும் என்றால், வெளியில் செல்லாமல், உள்ளிருந்தே டிரான்சிட் பயணிகள் செல்வதற்கான வழியாக சென்று, தூத்துக்குடி விமானத்தில் பயணிக்க முடியும். இதுபோல் அனைத்து உள்நாட்டு விமானங்களில் வரும் டிரான்சிட் பயணிகள், வெளியே செல்லாமல் உள்ளிருந்தே புறப்பாடு விமானத்தில் பயணம் செய்ய முடியும். இதனால் பயணிகள் மிகவும் குறுகிய நேரத்தில், ஒரு உள்நாட்டு விமானத்தில் வந்து விட்டு, மற்றொரு உள்நாட்டு விமானத்தில், புறப்பட்டு சென்று, பயணம் செய்ய முடியும்.

    குழந்தைகளுக்கு எதிரான பாலியல் துன்புறுத்தல் குறித்து புகார் அளிக்க புதிய வசதி செய்யப்பட்டுள்ளதாக கலெக்டர் இன்சென்ட் திவ்யா கூறி உள்ளார்.
    ஊட்டி:

    குழந்தைகளுக்கு எதிரான பாலியல் துன்புறுத்தல் குறித்து புகார் அளிக்க புதிய வசதி செய்யப்பட்டுள்ளதாக கலெக்டர் இன்சென்ட் திவ்யா கூறி உள்ளார்.

    நீலகிரி மாவட்ட கலெக்டர் இன்னசென்ட் திவ்யா வெளியிட்டு உள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டு உள்ளதாவது:-

    குழந்தை உரிமைகள் மற்றும் பாதுகாப்பு தொடர்பாக மத்திய பெண்கள் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டு அமைச்சகம் மூலம் பல்வேறு பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. ஒருங்கிணைந்த குழந்தைகள் பாதுகாப்பு திட்டத்தின் கீழ், நீலகிரி மாவட்டத்தில் மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு பிரிவு, குழந்தைகள் நலக்குழு, இளைஞர் நீதிக்குழுமம் ஏற்படுத்தப்பட்டு செயல்பட்டு வருகின்றன. அதன் தொடர்ச்சியாக குழந்தைகளுக்கு எதிரான பாலியல் துன்புறுத்தல்கள், பாதுகாப்பற்ற தொடுதல் குறித்து குழந்தைகள் மற்றும் பொதுமக்கள் புகார் அளிக்க பெண்கள் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டு அமைச்சகம் சார்பில் www.nc-p-cr.gov.in என்ற தேசிய இணையதள முகப்பு பக்கத்தில் மின்னணு புகார் பெட்டி என்ற புதிய வசதி ஏற்படுத்தப்பட்டு உள்ளது.

    இந்த புகார் பெட்டியில் குழந்தைகளுக்கு எதிராக பாலியல் குற்றம் தொடர்பான சம்பவம் நடைபெற்ற இடம், குற்றம் செய்த நபர், தொடர்பு எண், மின்னஞ்சல் போன்ற விவரங்களை பதிவு செய்யலாம். மேலும் குழந்தைகளுக்கு எதிரான பாலியல் துன்புறுத்தல்கள் நடைபெற்றால், அதுகுறித்த புகார்கள் காவல்துறையிடம் அளிக்க வேண்டும். குழந்தைகளுக்கு எதிரான பாலியல் குற்றங்கள் குறித்து புகார் அளிக்க தவறும் நபர்கள் மற்றும் புகாரினை பதிவு செய்ய தவறும் அலுவலர்களுக்கு, பாலியல் குற்றங்களில் இருந்து குழந்தைகளை பாதுகாக்கும் சட்டத்தின் கீழ் 6 மாதம் முதல் ஓராண்டு வரை சிறை தண்டனை அல்லது அபராதம் அல்லது இரண்டுமே விதித்து தண்டனை வழங்கப்படும். இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.

    ரெயில்களில் இணையதளம் மூலம் முன்பதிவு செய்யப்படும் டிக்கெட்டுகள் உறுதியாக கிடைக்குமா என்பதை உடனடியாக தெரிந்து கொள்ள ரெயில்வே அமைச்சகம் புதிய வசதியை அறிமுகப்படுத்தியுள்ளது. #IRCTC #WaitlistedTrainTicket
    புதுடெல்லி:
     
    ரெயிலில் பயணம் செய்வதற்கான டிக்கெட்கள் ஐ.ஆர்.சி.டி.சி. இணையதளம் மற்றும் ஆப் மூலம் முன்பதிவு செய்யப்படுகின்றன. அவ்வாறு முன்பதிவு செய்யும் போது பெரும்பாலும் வெயிட்டிங் லிஸ்ட்டில் தான் இருக்கும். இதனால் டிக்கெட் உறுதியாக கிடைக்குமா? கிடைக்காதா? என்ற சந்தேகம் இருக்கும். டிக்கெட் உறுதியாவது குறித்து ரெயில் புறப்படும் அன்றுதான் பெரும்பாலும் தெரியவரும்.
    இந்த முறை பயணிகளுக்கு பெரும் சிரமாம இருந்து வருகிறது. 

    இந்நிலையில், இந்த பிரச்சனைக்கு ஒரு தீர்வு கொண்டுவர ரெயில்வே அமைச்சகம் முடிவு செய்துள்ளது. அதன்படி புதிதாக அறிமுகப்படுத்தப்பட்டுள்ள வசதியின் மூலம், முன்பதிவு செய்யும் போதே டிக்கெட்டுகள் உறுதியாக கிடைக்குமா என்பதை இணையதளமே யூகித்து சொல்லிவிடும். 

    இந்த புதிய வசதி குறித்து ரெயில்வே அதிகாரி ஒருவர் கூறியதாவது, ஐ.ஆர்.சி.டி.சி இணையதளத்தில் புதிதாக மாற்றம் ஒன்று செய்யப்பட்டுள்ளது. இந்த புதிய சேவையின் மூலம் காத்திருப்பு பட்டியலில் உள்ள தங்களது டிக்கெட் உறுதி செய்யப்பட வாய்ப்பு உள்ளதா என்பதை பயணிகள் உடனே தெரிந்துக்கொள்ள முடியும் என தெரிவித்துள்ளார்.
     
    இந்த புதிய வசதி நேற்று முன்தினம் நள்ளிரவு முதல் செயல்பாட்டுக்கு வந்துள்ளது. #IRCTC #WaitlistedTrainTicket
    ×