search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "child molested"

    • சந்தேகம் அடைந்த தாய் தனது குழந்தையை அரவணைத்துக் கொண்டு ஏன் அழுகிறாய்? என்று கேட்டார்.
    • சிறுமியின் தாய் அளித்த புகாரின் அடிப்படையில் போலீசார் சிறுமியின் தந்தையான மருத்துவ பிரதிநிதி மீது போக்சோவில் வழக்குப்பதிவு செய்து கைது செய்தனர்.

    கோவை:

    கோவையை சேர்ந்த 29 வயது மருத்துவ பிரதிநிதிக்கு திருமணமாகி மனைவி மற்றும் 2 வயதில் ஒரு மகள் உள்ளார். இந்தநிலையில் நேற்று முன்தினம் மாலையில் 2 வயது சிறுமி நீண்டநேரமாக அழுதுகொண்டே இருந்து உள்ளது. இதை பார்த்த தாய் அந்த குழந்தையிடம் பசிக்கிறதா? சாப்பிட ஏதாவது வேண்டுமா? என்று கேட்டு உள்ளார். ஆனால் அதற்கு அந்த குழந்தை இல்லை என்று தலையை ஆட்டியுள்ளது. ஆனாலும் தொடர்ந்து அழுதுகொண்டே இருந்தது. இதனால் சந்தேகம் அடைந்த தாய் தனது குழந்தையை அரவணைத்துக் கொண்டு ஏன் அழுகிறாய்? என்று கேட்டார். இதையடுத்து அந்த தாய், குழந்தையை பரிசோதனை செய்த போது காயம் இருந்து உள்ளது. இதனால் அதிர்ச்சியடைந்த அவர் உடனே குழந்தையை கோவை அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றார்.

    அங்கு குழந்தையை பரிசோதித்த டாக்டர்கள் குழந்தை பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு உள்ளதாகவும், இதனால் அந்த குழந்தை வலிதாங்க முடியாமல் தொடர்ந்து அழுதுகொண்டே இருந்ததாகவும் டாக்டர்கள் தெரிவித்தனர். இதைத்தொடர்ந்து அந்த குழந்தைக்கு அரசு ஆஸ்பத்திரியில் டாக்டர்கள் சிகிச்சை அளித்து வருகிறார்கள். இது குறித்த புகாரின் பேரில் கோவை தெற்கு அனைத்து மகளிர் போலீசார் கோவை அரசு ஆஸ்பத்திரிக்கு விரைந்து வந்து சிறுமி மற்றும் சிறுமியின் தாயிடம் விசாரணை நடத்தினர்.

    அப்போது தந்தையே தனது 2 வயது மகளை பாலியல் பலாத்காரம் செய்தது தெரியவந்தது. இது குறித்து சிறுமியின் தாய் அளித்த புகாரின் அடிப்படையில் போலீசார் சிறுமியின் தந்தையான மருத்துவ பிரதிநிதி மீது போக்சோவில் வழக்குப்பதிவு செய்து கைது செய்தனர்.

    பின்னர் அவரை நேற்று மாலை கோவை அரசு ஆஸ்பத்திரிக்கு அழைத்து சென்று மருத்துவ பரிசோதனை செய்தனர். கோவையில் 2 வயது சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்த கொடூர தந்தை கைது செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    • சிறுமி வீட்டில் தனியாக இருந்த போது சில்மிஷம் செய்ததார்.
    • போக்சோ சட்டத்தில் வழக்கு பதிவு செய்து கண்ணனை கைது செய்தனர்.

    கள்ளக்குறிச்சி: 

    கள்ளக்குறிச்சி மாவட்டம் எலவனாசூர் கோட்டை அருகே ஒரு கிராமத்தைச் சேர்ந்தவர் கண்ணன் (வயது 75) இவர் நேற்று மாலை அதே பகுதியை சேர்ந்த 4 வயது சிறுமி வீட்டில் தனியாக இருந்த போது சில்மிஷம் செய்ததார். இதைப் பார்த்த அக்கம் பக்கத்தில் உள்ள வர்கள் அதிர்ச்சடைந்து இது குறித்து எலவனுசூர் போலீசில் புகார் தெரிவித்தனர். புகாரின்பேரில் எலவனாசூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் தமிழ்வாணன் தலைமையிலான போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று எதுவும் அறியாத சிறுமியிடம் சில்மிஷத்தில் ஈடுபட்ட முதியவரான கண்ணனை மடக்கி பிடித்தனர். பின்னர் போலீசார் போக்சோ சட்டத்தில் வழக்கு பதிவு செய்து கண்ணனை கைது செய்தனர்.

    அமெரிக்காவில் உள்ள தேவாலயத்தில் இந்திய பாதிரியார் ஒருவர் 13 வயது சிறுமிக்கு செக்ஸ் தொல்லை கொடுத்ததாக எழுந்த குற்றச்சாட்டுக்கு 6 ஆண்டு சிறை தண்டனை விதித்து நீதிபதி உத்தரவிட்டார்.
    நியூயார்க்:

    அமெரிக்காவில் தெற்கு டகோட்டா மாகாணத்தில் ரேபிட் நகர தேவாலயத்தில் ரோமன் கத்தோலிக்க பாதிரியாராக பணியாற்றி வந்தவர் ஜான் பிரவீன் (வயது 38). இந்தியரான இவரது சொந்த ஊர் ஐதராபாத்.

    இவர் கடந்த ஆண்டு தனது தேவாலயத்தில் 13 வயது சிறுமிக்கு செக்ஸ் தொல்லை கொடுத்ததாக குற்றச்சாட்டு எழுந்தது.

    இது தொடர்பாக ஜான் பிரவீன் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது. அவர் கைது செய்யப்பட்டார்.

    கடந்த பிப்ரவரி மாதம் கோர்ட்டில் விசாரணை நடைபெற்றபோது அவர் தன்மீதான குற்றச்சாட்டை ஒப்புக்கொண்டார். அதைத் தொடர்ந்து அவர் குற்றவாளி என அறிவிக்கப்பட்டார். இந்த நிலையில் தண்டனைக்காக அவர் நேற்று முன்தினம் கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டார். அவருக்கு அதிகபட்சம் ஓராண்டு காலம் சிறைத்தண்டனை விதிக்க வேண்டும் என்று அரசு தரப்பில் வாதிடப்பட்டது.

    ஆனால் நீதிபதி ஸ்டீவன் மாண்டெல் அவருக்கு 6 ஆண்டு சிறைத்தண்டனை விதித்து தீர்ப்பு கூறினார். அவர் ஏற்கனவே சிறையில் இருந்த 178 நாட்கள் தண்டனையில் கழிக்கப்படும். அவர் 3 ஆண்டு சிறைத்தண்டனை அனுபவித்த பின்னர் பரோலில் விடுதலை செய்யப்படலாம். அப்படி அவர் பரோலில் விடுவிக்கப்பட்டால், அவரை உள்நாட்டு பாதுகாப்புத்துறை உடனடியாக இந்தியாவுக்கு நாடு கடத்துவதற்கு வாய்ப்புகள் உள்ளன. கோர்ட்டில் தனது குற்றத்துக்காக பாதிக்கப்பட்ட சிறுமியின் பெற்றோரிடம் அவர் மன்னிப்பு கேட்டார்.
    7 வயது சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்த வழக்கில் தொழிலாளிக்கு ஆயுள் தண்டனை விதித்து திருப்பூர் மகளிர் நீதிமன்றம் தீர்ப்பளித்தது.
    திருப்பூர்:

    திருப்பூர் வீரபாண்டி அருகே உள்ள பலவஞ்சிபாளையத்தை சேர்ந்தவர் சுப்பிரமணியம் (வயது 48), கூலிதொழிலாளி. இவரது உறவினர் வீடு அதே பகுதியில் உள்ளது.

    இந்த நிலையில் கடந்த 26-11-2017 அன்று சுப்பிரமணியம் தனது உறவினர் வீட்டிற்கு சென்றார். அப்போது உறவினர் வீட்டின் அருகே 7 வயது சிறுமி விளையாடிக்கொண்டிருந்தாள்.

    சுப்பிரமணியம் அந்த சிறுமியிடம் நைசாக பேச்சுக்கொடுத்துள்ளார். பின்னர் அந்த சிறுமியை அருகில் உள்ள ஒரு பாழடைந்த கட்டிடத்திற்கு அழைத்து சென்று பலமுறை பாலியல் பலாத்காரம் செய்துள்ளார். இதனால் சிறுமி அழுதுகொண்டே வீட்டிற்கு வந்தாள். இது குறித்து அவரது பெற்றோர் விசாரித்துள்ளனர். அப்போது நடந்த விவரத்தை பெற்றோரிடம் அந்த சிறுமி தெரிவித்துள்ளார்.

    இதனால் அதிர்ச்சியடைந்த பெற்றோர் இது குறித்து திருப்பூர் தெற்கு மகளிர் போலீசில் புகார் கொடுத்தனர். அதன் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து, சுப்பிரமணியத்தை கைது செய்தனர். இந்த வழக்கு திருப்பூரில் உள்ள மாவட்ட மகளிர் நீதிமன்றத்தில் நடந்து வந்தது.

    வழக்கு நீதிபதி ஜெயந்தி முன்னிலையில் விசாரணைக்கு வந்தது. சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்ததற்காக சுப்பிரமணியத்திற்கு ஆயுள் தண்டனை வழங்கி தீர்ப்பளிக்கப்பட்டது.
    12 வயதுக்கு உட்பட்ட சிறுமிகளை பாலியல் பலாத்காரம் செய்தால், மரண தண்டனை விதிக்க வகைசெய்யும் மசோதா, நாடாளுமன்ற மக்களவையில் நிறைவேறியது. #LokSabha #CriminalLaw
    புதுடெல்லி:

    காஷ்மீர் மாநிலம் கதுவாவில் ஒரு சிறுமி கற்பழித்து கொல்லப்பட்ட செயல், நாடு முழுவதும் கொந்தளிப்பை ஏற்படுத்தியது. உத்தரபிரதேச மாநிலம் உன்னா நகரில் நடந்த கற்பழிப்பும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது.

    இதையடுத்து, 12 வயதுக்கு உட்பட்ட சிறுமிகளை பாலியல் பலாத்காரம் செய்தால் மரண தண்டனை விதிக்க வகைசெய்யும் அவசர சட்டத்தை கடந்த ஏப்ரல் 21-ந் தேதி மத்திய அரசு பிறப்பித்தது.

    இந்நிலையில், அவசர சட்டத்துக்கு மாற்றாக, குற்றவியல் சட்டத்தில் திருத்தம் செய்வதற்கான மசோதா, நாடாளுமன்ற மக்களவையில் தாக்கல் செய்யப்பட்டது. உறுப்பினர் களின் விவாதத்துக்கு பிறகு, நேற்று அம்மசோதா நிறைவேற்றப்பட்டது.



    இந்த மசோதாவின்படி, 12 வயதுக்கு உட்பட்ட சிறுமிகளை பாலியல் பலாத்காரம் செய்பவர்களுக்கு குறைந்தபட்ச தண்டனை 20 ஆண்டுகளாகவும், அதிகபட்ச தண்டனை ஆயுட்கால சிறை அல்லது மரண தண்டனையாகவும் இருக்கும்.

    12 முதல் 16 வயதுக்கு உட்பட்ட சிறுமிகளை பலாத் காரம் செய்தால், 20 ஆண்டு சிறை அல்லது ஆயுட்கால சிறை தண்டனை விதிக்கப் படும். பெண்களை பாலியல் பலாத்காரம் செய்பவர் களுக்கான குறைந்தபட்ச தண்டனை 7 ஆண்டுகளில் இருந்து 10 ஆண்டுகளாக உயர்த்தப் படுகிறது. அதிகபட்சமாக, ஆயுள் தண்டனை விதிக்கப்படும்.

    16 வயதுக்கு உட்பட்ட சிறுமிகளை பலாத்காரம் செய்ததாக குற்றம் சாட்டப்பட்டவர்கள், எவ்வளவு பெரிய செல்வாக்கு உடையவர்களாக இருந்தாலும், அவர்களுக்கு முன்ஜாமீன் கிடையாது என்று மசோதாவில் கூறப்பட்டுள்ளது.

    மேலும், பாலியல் பலாத்கார வழக்குகளை, முதல் தகவல் அறிக்கை பதிவு செய்த நாளில் இருந்து 2 மாதங்களுக்குள் முடிக்க வேண்டும் என்றும், கோர்ட்டு விசாரணையை 2 மாதங்களுக்குள் முடிக்க வேண்டும் என்றும் காலக்கெடு நிர்ணயிக்கப் பட்டுள்ளது. மேல்முறையீட்டு மனுக்களை, 6 மாதங்களுக்குள் முடிவு செய்ய வேண்டும்.

    16 வயதுக்கு உட்பட்ட சிறுமிகள் பலாத்கார வழக்கில், குற்றம் சாட்டப்பட்டவர்களுக்கு ஜாமீன் வழங்குவதற்கு முடிவு செய்யும் முன்பு, அரசு வக்கீல் மற்றும் பாதிக்கப்பட்ட சிறுமியின் பிரதிநிதியின் கருத்தை கேட்க வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது.

    முன்னதாக, இந்த மசோதா மீது நடைபெற்ற விவாதத்துக்கு மத்திய உள்துறை இணை மந்திரி கிரன் ரிஜிஜு பதில் அளித்தார். அவர் கூறியதாவது:-

    சிறுமிகளுக்கு பாதுகாப்பு அளிப்பதே மசோதாவின் நோக்கம். தற்போது இருக்கும் இந்திய தண்டனை சட்டத்தில், 16 வயதுக்கு உட்பட்ட சிறுமிகள் பலாத்காரம் தொடர்பாக விசேஷ ஷரத்துகள் இல்லை. எனவே, இந்த கடுமையான மசோதாவை கொண்டு வந்துள்ளோம்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    அப்போது, சபையை நடத்திக் கொண்டிருந்த துணை சபாநாயகர் தம்பிதுரை, “இந்த மசோதாவின் ஷரத்துகளை நன்றாக விளம்பரப்படுத்த வேண்டும். அதன்மூலம், கற்பழிப்பை தடுக்க வாய்ப்பாக அமையும்” என்று யோசனை தெரிவித்தார். அதனை கிரன் ரிஜிஜு ஏற்றுக்கொண்டார்.  #LokSabha #CriminalLaw #Tamilnadu 
    குழந்தைகளுக்கு எதிரான பாலியல் துன்புறுத்தல் குறித்து புகார் அளிக்க புதிய வசதி செய்யப்பட்டுள்ளதாக கலெக்டர் இன்சென்ட் திவ்யா கூறி உள்ளார்.
    ஊட்டி:

    குழந்தைகளுக்கு எதிரான பாலியல் துன்புறுத்தல் குறித்து புகார் அளிக்க புதிய வசதி செய்யப்பட்டுள்ளதாக கலெக்டர் இன்சென்ட் திவ்யா கூறி உள்ளார்.

    நீலகிரி மாவட்ட கலெக்டர் இன்னசென்ட் திவ்யா வெளியிட்டு உள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டு உள்ளதாவது:-

    குழந்தை உரிமைகள் மற்றும் பாதுகாப்பு தொடர்பாக மத்திய பெண்கள் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டு அமைச்சகம் மூலம் பல்வேறு பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. ஒருங்கிணைந்த குழந்தைகள் பாதுகாப்பு திட்டத்தின் கீழ், நீலகிரி மாவட்டத்தில் மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு பிரிவு, குழந்தைகள் நலக்குழு, இளைஞர் நீதிக்குழுமம் ஏற்படுத்தப்பட்டு செயல்பட்டு வருகின்றன. அதன் தொடர்ச்சியாக குழந்தைகளுக்கு எதிரான பாலியல் துன்புறுத்தல்கள், பாதுகாப்பற்ற தொடுதல் குறித்து குழந்தைகள் மற்றும் பொதுமக்கள் புகார் அளிக்க பெண்கள் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டு அமைச்சகம் சார்பில் www.nc-p-cr.gov.in என்ற தேசிய இணையதள முகப்பு பக்கத்தில் மின்னணு புகார் பெட்டி என்ற புதிய வசதி ஏற்படுத்தப்பட்டு உள்ளது.

    இந்த புகார் பெட்டியில் குழந்தைகளுக்கு எதிராக பாலியல் குற்றம் தொடர்பான சம்பவம் நடைபெற்ற இடம், குற்றம் செய்த நபர், தொடர்பு எண், மின்னஞ்சல் போன்ற விவரங்களை பதிவு செய்யலாம். மேலும் குழந்தைகளுக்கு எதிரான பாலியல் துன்புறுத்தல்கள் நடைபெற்றால், அதுகுறித்த புகார்கள் காவல்துறையிடம் அளிக்க வேண்டும். குழந்தைகளுக்கு எதிரான பாலியல் குற்றங்கள் குறித்து புகார் அளிக்க தவறும் நபர்கள் மற்றும் புகாரினை பதிவு செய்ய தவறும் அலுவலர்களுக்கு, பாலியல் குற்றங்களில் இருந்து குழந்தைகளை பாதுகாக்கும் சட்டத்தின் கீழ் 6 மாதம் முதல் ஓராண்டு வரை சிறை தண்டனை அல்லது அபராதம் அல்லது இரண்டுமே விதித்து தண்டனை வழங்கப்படும். இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.

    மதுரை அருகே சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த தாத்தா மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
    மதுரை:

    மதுரை மாவட்டம், சிறுவாலையை அடுத்துள்ளது செல்லகவுண்டன்பட்டி. இந்த ஊரைச் சேர்ந்தவர் சங்கிலிமுருகன். இவரது மனைவி முத்து காமாட்சி (வயது 27). இவர்களுக்கு 6 வயதில் ஒரு பெண் குழந்தை உள்ளது.

    சம்பவத்தன்று அந்த சிறுமியின் தாத்தா முருகேசன் (50) அங்கு வந்து சிறுமியிடம் பிஸ்கட் வாங்குவதற்கு பணம் கொடுத்துள்ளார். அந்த சிறுமியும் அருகே உள்ள கடைக்கு சென்று பிஸ்கட் வாங்கி வந்துள்ளது.

    முருகேசன் அந்த சிறுமியை தனது வீட்டிற்கு அழைத்துச் சென்றுள்ளார். சிறிது நேரம் கழித்து அந்த வீட்டில் இருந்து குழந்தை அழும் சத்தம் கேட்டது.

    இதனால் முத்துகாமாட்சி மற்றும் உறவினர்கள் அங்கு சென்று பார்த்தபோது சிறுமியை, முருகேசன் பாலியல் வன்கொடுமை செய்தது தெரியவந்தது.

    இது குறித்து சிறுமியின் தாயார் முத்துகாமாட்சி சமயநல்லூர் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் செய்தார். இன்ஸ்பெக்டர் கிரேஸ் சோபியா பாய், சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த முருகேசன் மீது (போக்ஸோ) சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து கைது செய்தார்.
    நாட்டின் தலைநகரான டெல்லியில் நாள்தோறும் இரு சிறார்கள் பாலியல் வன்முறைக்கு இரையாகும் நிலையில் பாதிக்கப்பட்ட குழந்தைகளின் மறுவாழ்வுக்கான கொள்கை வகுக்கப்படவேண்டும் என குரல் எழும்பியுள்ளது. #policyforrehabilitation
    புதுடெல்லி:

    தலைநகர் டெல்லியில் கடந்த ஜனவரி மாதம் 8 மாத குழந்தை அவரது உறவினரால் பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளாக்கப்பட்டாள். அதைத்தொடர்ந்து 10 வயது சிறுமி, மதரஸாவில் வைத்து பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட சம்பவம் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது.

    இதுதொடர்பாக 10 வயது சிறுமியின் தந்தை கூறுகையில், ‘சம்பவம் நடந்து 1 மாதம் ஆகியும், இன்னும் அவள் வீட்டை விட்டு வெளியேறவே பயப்படுகிறாள். அவளுக்கு மருத்துவர்கள் மூலம் அறிவுரைகளும் வழங்கப்பட்டன. ஆனால், அவளால் அந்த சம்பவத்திலிருந்து மீள முடியவில்லை’ என தெரிவித்துள்ளார்.

    டெல்லி போலீசாரின் அறிக்கையின் படி, கடந்த 4 மாதங்களுக்குள் தினசரி 2 சிறார்கள் பாலியல் இச்சைக்கு இரையாக்கப்படுகிறார்கள்.

    இதுதொடர்பாக டெல்லி பெண்கள் ஆணைய தலைவர் சுவாதி மலிவால் கூறுகையில், ‘பெற்றோர்களுக்கும் இதுபோன்ற சூழ்நிலைகளை கையாள்வது குறித்து தெரியவில்லை, அவர்கள் குழந்தைகள் மீது குற்றம் சுமத்துகிறார்கள், இதன்மூலம் சிறுகுழந்தைகள் குழப்பம் அடைகின்றனர்’ என தெரிவித்துள்ளார்.

    மேலும் ‘காவல்துறையினரும் அவர்களது வேலைப்பளு காரணமாக இந்த விஷயத்தில் முழு கவனம் செலுத்த முடியவில்லை, பெற்றோர்கள் பாதிக்கப்பட்ட குழந்தைகளுக்கான மறுவாழ்வுக்கான கொள்கைகள் வகுக்கப்படவேண்டும்’ என கோரிக்கை விடுத்துள்ளனர்.

    இதுதொடர்பாக கருத்து தெரிவித்துள்ள வழக்கறிஞரும் குழந்தைகள் உரிமை தொடர்பான ஆர்வலருமான அனந்த் குமார் கூறுகையில், ‘பாதிக்கப்பட்ட குழந்தைகளுக்கு நிச்சயம் மறுவாழ்வு கொள்கை வகுக்கப்பட வேண்டும், ஆலோசகர் அமைக்கப்பட வேண்டும் ஆனால் ஒரு சில வழக்குகளில் வெறும் ஆலோசகர் மட்டுமே அந்த குழந்தைக்கு போதுமானதாக இருக்காது’ என தெரிவித்தார்.

    மேலும் அவர் கூறுகையில், ‘பாதிக்கப்பட்டவர்களின் தேவைக்கேற்ப உதவும் வகையில் மறுவாழ்வுக்கான ஆலோசனை சட்டம் அல்லது திட்டம் அமைய வேண்டும்’ எனவும் தெரிவித்தார்.

    இதன்மூலம், தினந்தோறும் பாலியல் கொடுமைக்கு ஆளாக்கப்படும் குழந்தைகளின் வாழ்வை சீரமைக்க மறுவாழ்வு கொள்கை அமைக்கப்பட வேண்டும் என்ற குரல் எழும்பியுள்ளது.

    12 வயதுக்கு உள்பட்ட குழந்தைகளை பாலியல் வன்கொடுமை செய்பவர்களுக்கு மரண தண்டனை அளிக்கும் வகையில் சட்டத்திருத்தம் கடந்த மாதம் மேற்கொள்ளப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது. #policyforrehabilitation
    கேரளாவில் தியேட்டரில் சினிமா பார்க்கும் போது இருட்டில் சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுக்கப்பட்ட வழக்கில் பாதிக்கப்பட்ட சிறுமியின் தாயாரையும் போலீசார் கைது செய்துள்ளனர்.

    திருவனந்தபுரம்:

    கேரளாவில் உள்ள பெரும்பாலான சினிமா தியேட்டர்களில் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளது. தியேட்டர்களில் புதிய படங்கள் திரையிடும் போது யாரும் திருட்டுத்தனமாக செல்போனில் படம் பிடிப்பதை தடுக்கவும், சினிமா தியேட்டரில் சமூக விரோத செயல்களில் ஈடுபடுபவர்களை கண்காணிக்கவும் இந்த ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளது.

    இந்த கண்காணிப்பு கேமராக்களில் பதிவாகும் காட்சிகளை தியேட்டர் ஊழியர்கள் கண்காணிப்பார்கள். கேரள மாநிலம் மலப்புரம் பகுதியில் உள்ள ஒரு சினிமா தியேட்டரின் கண்காணிப்பு கேமராவில் பதிவான காட்சிகளை தியேட்டர் நிர்வாகிகள் போட்டுப்பார்த்தனர். அப்போது அவர்களுக்கு அதிர்ச்சி அளிக்கும் வகையில் ஒரு காட்சி பதிவாகி இருந்தது தெரியவந்தது.

    சுமார் 10 வயது மதிக்கத்தக்க ஒரு சிறுமியிடம் 60 வயதுக்காரர் ஒருவர் செக்ஸ் சில்மி‌ஷத்தில் ஈடுபட்டு கொண்டிருந்த காட்சி அதில் பதிவாகி இருந்தது. படம் தொடங்கியதில் இருந்து அவர் அந்த சிறுமிக்கு தொந்தரவு கொடுத்துக்கொண்டு இருந்தார். அந்த சிறுமி இதுபற்றி தனது அருகில் அமர்ந்திருந்த பெண்ணிடம் கூறினார். ஆனால் அந்த பெண் அதை கண்டுகொள்ளாமல் படம் பார்ப்பதில் தனது கவனத்தை செலுத்திக் கொண்டிருந்தார்.

    சினிமா தியேட்டரில் சிறுமிக்கு நடந்த கொடுமை பற்றி சைல்டுலைன் அமைப்பு மூலம் சங்கரன்குளம் போலீசில் தியேட்டர் நிர்வாகம் சார்பில் புகார் செய்யப்பட்டது. ஆனால் போலீசார் அந்த புகாரின் பேரில் வழக்கு பதிவு செய்து எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. இதற்கிடையில் சிறுமியிடம் தியேட்டரில் செக்ஸ் சில்மி‌ஷம் செய்யும் காட்சி கேரளாவில் உள்ள டி.வி.யில் வெளியானதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. இதுபற்றி உயர் போலீஸ் அதிகாரிகள் கவனத்திற்கு கொண்டு செல்லப்பட்டது.



    மலப்புரம் போலீஸ் சூப்பிரண்டு உத்தரவின் பேரில் இந்த சம்பவம் பற்றி சொர்ணூர் டி.எஸ்.பி. முரளிதரன் விசாரணை நடத்தினார். கண்காணிப்பு கேமரா காட்சியை போலீசார் முழுமையாக போட்டுப் பார்த்த போது சிறுமியிடம் சில்மி‌ஷம் செய்தவர் தியேட்டரில் இருந்து சொகுசு காரில் செல்லும் காட்சியும் பதிவாகி இருந்தது தெரியவந்தது. அதைவைத்து  தொழில் அதிபரான மைதீன்குட்டியை போலீசார் கைது செய்தனர்.

    கைதான தொழில் அதிபரிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள். மேலும் சிறுமிக்கு நடந்த கொடுமை பற்றி புகார் செய்தும் அதுபற்றி போலீசார் நடவடிக்கை எடுக்காதது பற்றியும் விசாரணை நடத்தப்பட்டது. இதை தொடர்ந்து சங்கரன்குளம் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் பேபி சஸ்பெண்ட் செய்யப்பட்டார். இச்சம்பவம் தொடர்பாக போலீஸ் போஸ்கோ சட்டத்தின் பல்வேறு பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகிறது. 

    இதற்கிடையில் சிறுமிக்கு தியேட்டரில் பாலியல் கொடுமை நடந்தது பற்றி உரிய விசாரணை நடத்தாத போலீசார் மீதும், அதனை தடுக்காத அந்த சிறுமியுடன் வந்த பெண் மீதும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மாநில மனித உரிமை ஆணைய தலைவர் (பொறுப்பு) மோகன்தாஸ் உத்தரவிட்டு உள்ளார்.  

    இந்நிலையில், இவ்வழக்கில் சிறுமியின் தாயாரையும் போலீசார் கைது செய்துள்ளனர். சிறுமியின் தாயாரும் தொழில் அதிபர் அருகே இருந்து உள்ளார். ஆனால் முதியவர் சிறுமியிடம் தவறாக நடந்தபோது அதனை அவர் தட்டிக்கேட்கவில்லை. இதையடுத்து சிறுமியின் தாயாரின் மீதும் பல்வேறு பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்யப்பட்டு விசாரிக்கப்பட்டு வருகிறது. 
    ×