search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Amendment"

    • தேசிய தொழிற் சான்றிதழ்களில் (நேஷனல் டிரேட் சர்டிபிகேட்) திருத்தங்கள் ஏதும் இருப்பின், முன்னாள் பயிற்சியாளர்கள் நேரடியாக விண்ணப்பிக்க வாய்ப்பு வழங்கப்பட்டு உள்ளது.
    • 10-ம் வகுப்பு அல்லது 8-ம் வகுப்பு அசல் மதிப்பெண் சான்றிதழ், ஐ.டி.ஐ மாற்று சான்றிதழ், தேசிய தொழிற்சான்றிதழ், ஐ.டி.ஐ மதிப்பெண் சான்றிதழ், ஆதார் அட்டை, ரேசன் கார்டு, 2 புகைப்படம் மற்றும் பிறப்பு சான்றிதழ் ஆகியவற்றை எடுத்துச்செல்ல வேண்டும்.

    நாமக்கல்:

    நாமக்கல் மாவட்ட கலெக்டர் ஸ்ரேயாசிங் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

    2014-ம் ஆண்டு முதல் 2021-ம் ஆண்டு வரை அரசு மற்றும் தனியார் தொழிற்பயிற்சி நிலை யங்களில் (ஐ.டி.ஐ) சேர்க்கை பெற்று, தேர்ச்சி பெற்ற பயிற்சியாளர்களின், தேசிய தொழிற் சான்றிதழ்களில் (நேஷனல் டிரேட் சர்டிபிகேட்) திருத்தங்கள் ஏதும் இருப்பின், முன்னாள் பயிற்சியாளர்கள் நேரடியாக விண்ணப்பிக்க வாய்ப்பு வழங்கப்பட்டு உள்ளது.

    தேர்ச்சி பெற்ற முன்னாள் பயிற்சியா ளர்கள், தங்களது தேசிய தொழிற்சான்றிதழ்களில் பயிற்சியாளர்களின் பெயர், தந்தை பெயர், தாயின் பெயர், போட்டோ, பிறந்த தேதி போன்றவற்றில் திருத்தம் ஏதும் இருப்பின், பின்வரும் அசல் கல்வி ஆவணங்கள் மற்றும் இதர ஆவணங்களுடன், நாமக்கல் கீரம்பூர், தட்டாங்குட்டை, அரசினர் தொழிற்பயிற்சி நிலையத்திற்கு நேரில் சென்று விண்ணப்பித்து பயன் பெறலாம்.

    தேசிய தொழிற்சான்றி தழ்களில் திருத்தம் செய்ய விரும்புவோர், 10-ம் வகுப்பு அல்லது 8-ம் வகுப்பு அசல் மதிப்பெண் சான்றிதழ், ஐ.டி.ஐ மாற்று சான்றிதழ், தேசிய தொழிற்சான்றிதழ், ஐ.டி.ஐ மதிப்பெண் சான்றிதழ், ஆதார் அட்டை, ரேசன் கார்டு, 2 புகைப்படம் மற்றும் பிறப்பு சான்றிதழ் ஆகியவற்றை எடுத்துச்செல்ல வேண்டும்.

    மேலும், இது தொடர்பான விபரங்க ளுக்கு, கொண்டி செட்டிப்பட்டியில் உள்ள, மாவட்ட திறன் பயற்சி அலு வலக உதவி இயக்குனரை அணுகி கூடுதல் தகவல் பெறலாம். இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

    • தமிழ்நாடு அரசு பள்ளிக்கல்வித்துறை சார்பில் ஆசிரியர் தகுதித் தேர்வு அறிவிப்பு கடந்த மார்ச் மாதம் அறிவிக்கப்பட்டது.
    • ஆகஸ்ட் 25-ந்தேதி முதல் 31-ந்தேதி வரை கணினி வழியில் நடத்தப்பட உள்ளது.

    சேலம்:

    தமிழ்நாடு அரசு பள்ளிக்கல்வித்துறை சார்பில் ஆசிரியர் தகுதித் தேர்வு அறிவிப்பு கடந்த மார்ச் மாதம் அறிவிக்கப்பட்டது. இதில் தொடக்கப்பள்ளி ஆசிரியர் பணியில் சேருவதற்கான முதல் தாள் தேர்வு ஆகஸ்ட் 25-ந்தேதி முதல் 31-ந்தேதி வரை கணினி வழியில் நடத்தப்பட உள்ளது.

    பட்டதாரி ஆசிரியர் பணிக்கான தாள் -2 தேர்வு தேதி விரைவில் அறிவிக்கப்படும். இந்த தேர்வுகளில் பங்கேற்க விரும்புவோரிடம் கடந்த ஏப்ரல் மாதம் 26-ந்தேதி வரை ஆன்லைனில் விண்ணப்பங்கள் பெறப்பட்டன. குறிப்பாக கல்வியல் கல்வி பட்டய, பட்டப்படிப்பு படித்தவர்கள் சேலம், நாமக்கல் மாவட்டங்களில் இருந்து ஏராளமானோர் விண்ணப்பித்துள்ளனர்.

    இந்த நிலையில் விண்ணப்பத்தில் உள்ள விபரங்களில் தவறுகள் உள்ளதாகவும், அவற்றை திருத்தம் செய்ய கால அவகாசம் வேண்டும் என விண்ணப்பதாரர்கள் கோரிக்கை வைத்தனர். அதை பரிசீலித்து விண்ணப்ப விபரங்களை திருத்த வசதி கடந்த 24-ந்தேதி முதல் வழங்கப்பட்டது. இந்த அவகாசம் இன்றுடன் முடிகிறது.

    சமூக வலைத்தளங்களை தவறாக பயன்படுத்துவதை தடுக்கும்வகையில் தகவல் தொழில்நுட்ப சட்ட விதிகளில் திருத்தம் செய்ய மத்திய தகவல் தொழில்நுட்ப அமைச்சகம் திட்டமிட்டுள்ளது. #SocialNetworks
    புதுடெல்லி:

    பசுவதை தொடர்பாக சமூக வலைத்தளங்கள் மூலம் தவறான தகவல்கள் பரப்பப்பட்டதால், ஆங்காங்கே வன்முறை சம்பவங்கள் நடந்தன. இதை கருத்தில் கொண்டு, சமூக வலைத்தளங்களை தவறாக பயன்படுத்துவதை தடுக்கும்வகையில் தகவல் தொழில்நுட்ப சட்ட விதிகளில் திருத்தம் செய்ய மத்திய தகவல் தொழில்நுட்ப அமைச்சகம் திட்டமிட்டுள்ளது.

    இந்த வரைவு திருத்தங்களை இணையதளத்தில் வெளியிட்டு, ஜனவரி 15-ந்தேதிக்குள் பொதுமக்களின் கருத்தை கேட்டுள்ளது. அதன் அடிப்படையில், இறுதி முடிவு எடுக்க உள்ளது.



    வரைவு திருத்தங்களின்படி, பேஸ்புக், டுவிட்டர், வாட்ஸ்அப் போன்ற சமூக வலைத்தளங்களில் ஆட்சேபகரமான, சட்ட விரோத, பொய்யான தகவல்களை அடையாளம் கண்டறிந்து செயலிழக்க செய்ய தொழில்நுட்ப ‘டூல்’களை பயன்படுத்த வேண்டும். ஆட்சேபகரமான தகவல்களை பகிர வேண்டாம் என்று பயனாளர்களிடம் சமூக வலைத்தளங்கள் கேட்டுக்கொள்ள வேண்டும். 50 லட்சத்துக்கு மேற்பட்ட பயனாளர்களை கொண்ட சமூக வலைத்தளங்கள், இந்தியாவில் நிரந்தர அலுவலகத்தை திறக்க வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது. #SocialNetworks
    12 வயதுக்கு உட்பட்ட சிறுமிகளை பாலியல் பலாத்காரம் செய்தால், மரண தண்டனை விதிக்க வகைசெய்யும் மசோதா, நாடாளுமன்ற மக்களவையில் நிறைவேறியது. #LokSabha #CriminalLaw
    புதுடெல்லி:

    காஷ்மீர் மாநிலம் கதுவாவில் ஒரு சிறுமி கற்பழித்து கொல்லப்பட்ட செயல், நாடு முழுவதும் கொந்தளிப்பை ஏற்படுத்தியது. உத்தரபிரதேச மாநிலம் உன்னா நகரில் நடந்த கற்பழிப்பும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது.

    இதையடுத்து, 12 வயதுக்கு உட்பட்ட சிறுமிகளை பாலியல் பலாத்காரம் செய்தால் மரண தண்டனை விதிக்க வகைசெய்யும் அவசர சட்டத்தை கடந்த ஏப்ரல் 21-ந் தேதி மத்திய அரசு பிறப்பித்தது.

    இந்நிலையில், அவசர சட்டத்துக்கு மாற்றாக, குற்றவியல் சட்டத்தில் திருத்தம் செய்வதற்கான மசோதா, நாடாளுமன்ற மக்களவையில் தாக்கல் செய்யப்பட்டது. உறுப்பினர் களின் விவாதத்துக்கு பிறகு, நேற்று அம்மசோதா நிறைவேற்றப்பட்டது.



    இந்த மசோதாவின்படி, 12 வயதுக்கு உட்பட்ட சிறுமிகளை பாலியல் பலாத்காரம் செய்பவர்களுக்கு குறைந்தபட்ச தண்டனை 20 ஆண்டுகளாகவும், அதிகபட்ச தண்டனை ஆயுட்கால சிறை அல்லது மரண தண்டனையாகவும் இருக்கும்.

    12 முதல் 16 வயதுக்கு உட்பட்ட சிறுமிகளை பலாத் காரம் செய்தால், 20 ஆண்டு சிறை அல்லது ஆயுட்கால சிறை தண்டனை விதிக்கப் படும். பெண்களை பாலியல் பலாத்காரம் செய்பவர் களுக்கான குறைந்தபட்ச தண்டனை 7 ஆண்டுகளில் இருந்து 10 ஆண்டுகளாக உயர்த்தப் படுகிறது. அதிகபட்சமாக, ஆயுள் தண்டனை விதிக்கப்படும்.

    16 வயதுக்கு உட்பட்ட சிறுமிகளை பலாத்காரம் செய்ததாக குற்றம் சாட்டப்பட்டவர்கள், எவ்வளவு பெரிய செல்வாக்கு உடையவர்களாக இருந்தாலும், அவர்களுக்கு முன்ஜாமீன் கிடையாது என்று மசோதாவில் கூறப்பட்டுள்ளது.

    மேலும், பாலியல் பலாத்கார வழக்குகளை, முதல் தகவல் அறிக்கை பதிவு செய்த நாளில் இருந்து 2 மாதங்களுக்குள் முடிக்க வேண்டும் என்றும், கோர்ட்டு விசாரணையை 2 மாதங்களுக்குள் முடிக்க வேண்டும் என்றும் காலக்கெடு நிர்ணயிக்கப் பட்டுள்ளது. மேல்முறையீட்டு மனுக்களை, 6 மாதங்களுக்குள் முடிவு செய்ய வேண்டும்.

    16 வயதுக்கு உட்பட்ட சிறுமிகள் பலாத்கார வழக்கில், குற்றம் சாட்டப்பட்டவர்களுக்கு ஜாமீன் வழங்குவதற்கு முடிவு செய்யும் முன்பு, அரசு வக்கீல் மற்றும் பாதிக்கப்பட்ட சிறுமியின் பிரதிநிதியின் கருத்தை கேட்க வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது.

    முன்னதாக, இந்த மசோதா மீது நடைபெற்ற விவாதத்துக்கு மத்திய உள்துறை இணை மந்திரி கிரன் ரிஜிஜு பதில் அளித்தார். அவர் கூறியதாவது:-

    சிறுமிகளுக்கு பாதுகாப்பு அளிப்பதே மசோதாவின் நோக்கம். தற்போது இருக்கும் இந்திய தண்டனை சட்டத்தில், 16 வயதுக்கு உட்பட்ட சிறுமிகள் பலாத்காரம் தொடர்பாக விசேஷ ஷரத்துகள் இல்லை. எனவே, இந்த கடுமையான மசோதாவை கொண்டு வந்துள்ளோம்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    அப்போது, சபையை நடத்திக் கொண்டிருந்த துணை சபாநாயகர் தம்பிதுரை, “இந்த மசோதாவின் ஷரத்துகளை நன்றாக விளம்பரப்படுத்த வேண்டும். அதன்மூலம், கற்பழிப்பை தடுக்க வாய்ப்பாக அமையும்” என்று யோசனை தெரிவித்தார். அதனை கிரன் ரிஜிஜு ஏற்றுக்கொண்டார்.  #LokSabha #CriminalLaw #Tamilnadu 
    வன்கொடுமை தடுப்புச் சட்டத்தில் திருத்தம் செய்வது, 9-வது அட்டவணையில் இந்த சட்டத்தை சேர்ப்பது போன்ற தவறான முடிவுகளை மத்திய அரசு உடனடியாக கைவிட வேண்டும் என்று டாக்டர் ராமதாஸ் தெரிவித்துள்ளார்.#ramadoss
    சென்னை:

    வன்கொடுமை தடுப்புச் சட்டத்தில் திருத்தம் செய்வது, 9-வது அட்டவணையில் இந்த சட்டத்தை சேர்ப்பது போன்ற தவறான முடிவுகளை மத்திய அரசு உடனடியாக கைவிட வேண்டும் என்று டாக்டர் ராமதாஸ் தெரிவித்துள்ளார்.

    பா.ம.க. நிறுவனர் ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

    வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் தவறான பயன்பாட்டால், தேசிய அளவில் தலித் அல்லாத 77.5 சதவீத மக்களும், மாநில அளவில் தலித் அல்லாத 81 சதவீத மக்களும் பழி வாங்கப்படுகின்றனர். இந்த உண்மை மத்திய ஆட்சியாளர்களுக்கு நன்றாக தெரிந்திருந்தும், சில சக்திகள் நடத்திய போராட்டத்திற்கு பணிந்து சட்டத்தை திருத்த முயல்வதும், அதை அரசியலமைப்பு சட்டத்தின் 9-வது அட்டவணையில் சேர்க்கத் துடிப்பதும் திருத்த முடியாத தவறுகளாக மாறி விடும்.

    எந்த ஒரு சட்டமும் தவறாக பயன்படுத்தப்படக்கூடாது; அவ்வாறு பயன்படுத்தப்பட்டால் அதை தடுக்கும் கடமை உச்சநீதிமன்றத்திற்கு உண்டு. அந்தக்கடமையைத் தான் உச்சநீதிமன்றம் நிறைவேற்றியிருக்கிறது. அதற்கு மத்திய அரசு துணை நின்றிருக்க வேண்டும்; மாறாக உச்சநீதிமன்றத்தின் தீர்ப்புக்கு தடை ஏற்படுத்தக் கூடாது. பா.ம.க.வை பொறுத்தவரை வன்கொடுமை தடுப்புச்சட்டத்தை ஒரு காலத்திலும் எதிர்த்ததில்லை.

    கைவிட வேண்டும்

    மாறாக, தாழ்த்தப்பட்ட மற்றும் பழங்குடியின மக்களின் பாதுகாப்புக்கு அத்தகைய சட்டம் தேவை என்பது தான் பா.ம.க.வின் நிலைப்பாடு. அதேநேரத்தில் எந்தவொரு சட்டமும் தவறாக பயன்படுத்தப்படக்கூடாது என்ற அடிப்படையில் தான் வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் தவறான பயன்பாட்டை கடுமையாக எதிர்த்து வருகிறது.

    இதை புரிந்து கொள்ளாத சில அரைகுறைகளும், அவர்களை ஆதரிக்கும் சில சக்திகளும் வன்கொடுமை தடுப்புச்சட்டத்தையே பா.ம.க. எதிர்ப்பதாக அவதூறு பரப்புகின்றன. அந்த அரைகுறைகளுக்கும், அவற்றை ஆதரிப்பவர்களுக்கும் தமிழ்நாட்டு மக்கள் சரியான நேரத்தில், சரியான பாடம் புகட்டப்போவது உறுதி.

    எனவே, வன்கொடுமை சட்டத்தில் அளிக்கப்படும் புகார் மனுக்கள் மீது விசாரணை நடத்திய பிறகு தான் யாரையும் கைது செய்ய வேண்டும். வன்கொடுமை தடுப்புச் சட்டத்தில் திருத்தம் செய்வது, ஒன்பதாவது அட்டவணையில் இந்த சட்டத்தை சேர்ப்பது போன்ற தவறான முடிவுகளை மத்திய அரசு உடனடியாக கைவிட வேண்டும்.

    இவ்வாறு அறிக்கையில் அவர் கூறியுள்ளார். #ramadoss
    ×