search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "government of tamilnadu"

    • மு.க.ஸ்டாலின் வீடியோ பதிவு மூலம் மக்களிடம் தெரிவிக்கும் வகையில் புதிய வசதி அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.
    • மக்களிடம் திட்டங்கள் குறித்து இந்த தொழில்நுட்பத்தில் தெரிவிப்பது கூடுதல் சிறப்பு அம்சமாகும்.

    சென்னை:

    தமிழ்நாடு அரசு செயல்படுத்தும் மக்கள் நலன் சார்ந்த மகத்தான திட்டங்களை, முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வீடியோ பதிவு மூலம் மக்களிடம் தெரிவிக்கும் வகையில் புதிய வசதி அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

    தி.மு.க. அரசு பொறுப்பேற்ற நாளில் இருந்து மக்கள் நலன் சார்ந்த பல திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. குறிப்பாக பெண்கள், இளைஞர், மாணவர்கள் முன்னேற்றத்தில் அரசின் திட்டங்கள் பெரும்பங்கு வகிக்கிறது,

    இந்த திட்டங்களை மக்கள் அறிந்துக் கொண்டு பயன்பெறும் வகையில் தமிழ் மற்றும் ஆங்கில நாளிதழ்கள் வழியாக இந்த திட்டங்கள் மக்களிடம் கொண்டு செல்லப்படுகிறது.

    இதில் புதிய வியூகமாக, நாளிதழில் வரும் விளம்பரத்துடன் இடம் பெறும் கியூ.ஆர்.கோடை செல்போன் மூலம் ஸ்கேன் செய்து பார்த்தால் அரசின் திட்டங்கள் குறித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேசும் வீடியோ பதிவை பார்க்க முடியும். 'ஆகு மென்டட் ரியாலிட்டி தொழில்நுட்பம்' மூலம் இந்த வீடியோ பதிவு வெளியிடப்படுகிறது.

    இன்று தமிழ்நாட்டின் பெண்கள் வாழ்வில் முன்னேற்றத்தை தந்த விடியல் பயணத் திட்டம் குறித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேசும் வீடியோவை அதில் காணலாம்.

    நாட்டிலேயே முதன் முறையாக, ஒரு அரசியல் கட்சி இது போன்று முதலமைச்சரே, மக்களிடம் திட்டங்கள் குறித்து இந்த தொழில்நுட்பத்தில் தெரிவிப்பது கூடுதல் சிறப்பு அம்சமாகும்.

    கலப்பு திருமணம் செய்வோருக்கு பாதுகாப்பு வழங்கவும், ஆணவ கொலைகளை ஒழிக்கவும் ஒவ்வொரு மாவட்டத்திலும் போலீஸ் சூப்பிரண்டு தலைமையில் சிறப்பு பிரிவை உருவாக்கியுள்ளதாக தமிழக அரசு ஐகோர்ட்டில் பதில் மனு தாக்கல் செய்துள்ளது.
    சென்னை:

    மதுரை மாவட்டம் உசிலம்பட்டியை சேர்ந்த வீரணன் என்பவரின் மகள் விமலாதேவி தந்தையிடம் டிரைவராக வேலைபார்த்த வேறு சமூகத்தை சேர்ந்த திலீப்குமார் என்பவரை 2014-ம் ஆண்டு காதலித்து திருமணம் செய்துகொண்டார். அதே ஆண்டு அக்டோபர் மாதம் விமலாதேவியை அவரது பெற்றோர் வீட்டுக்கு அழைத்துவந்தனர்.

    பின்னர் அவர் மர்மமான முறையில் இறந்தார். அவரது உடல் யாருக்கும் தெரியாமல் எரிக்கப்பட்டது. இதுகுறித்து திலீப்குமார் சென்னை ஐகோர்ட்டில் தொடர்ந்த வழக்கில் நீதிபதி வி.ராமசுப்பிரமணியன், 2016-ம் ஆண்டு விரிவான தீர்ப்பு ஒன்றை பிறப்பித்தார்.

    அதில், இந்த வழக்கில் சட்டத்தை மீறி கட்டப்பஞ்சாயத்து கும்பலுடன் கைகோர்த்து செயல்பட்ட போலீஸ் அதிகாரிகள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டும். கலப்புத்திருமணம் செய்துகொள்பவர்களை ஆணவக்கொலை செய்யும் சம்பவம் அதிகரித்து வருகிறது.

    இதை தடுக்கும் விதமாகவும், கலப்பு திருமண தம்பதிகளுக்கு பாதுகாப்பு வழங்குவதற்காகவும் ஒவ்வொரு மாவட்டத்திலும் போலீஸ் சூப்பிரண்டு தலைமையில் சமூகநலத்துறை மற்றும் ஆதிதிராவிடர் நலத்துறை அதிகாரிகள் கொண்ட சிறப்பு பிரிவை உருவாக்க வேண்டும். 24 மணி நேரமும் இயங்கும் வகையில் தனி ‘ஹெல்ப் லைன்’ ஏற்படுத்தி புகார்களை உடனுக்குடன் பெற்று வழக்குப்பதிவு செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று நீதிபதி கூறியிருந்தார்.

    இந்த உத்தரவை தமிழக அரசு அமல்படுத்தாததால், தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணி அமைப்பின் மாநில செயலாளர் கே.சாமுவேல்ராஜ் ஐகோர்ட்டில் உள்துறை செயலாளர் மீது கோர்ட்டு அவமதிப்பு வழக்கை தொடர்ந்தார். இந்த வழக்கு நீதிபதி எம்.சத்தியநாராயணன் முன்பு விசாரணைக்கு வந்தது.

    அப்போது ஐகோர்ட்டில் தமிழக அரசு சார்பில் பதில் மனு தாக்கல் செய்யப்பட்டது. அதில் கூறியிருப்பதாவது:-



    விமலாதேவி வழக்கில் சட்டத்தை மீறி செயல்பட்ட செக்கானூரணி போலீஸ் இன்ஸ்பெக்டர் சுகுமார், வத்தலகுண்டு இன்ஸ்பெக்டர் வினோஜ், சப்-இன்ஸ்பெக்டர் ஆனந்தி, உசிலம்பட்டி சப்-இன்ஸ்பெக்டர் ராணி ஆகியோர் மீது துறைரீதியான நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. அவர்களுக்கு 3 ஆண்டுகளுக்கு ஊதிய உயர்வு ரத்து செய்யப்பட்டுள்ளது.

    அதேபோல, மாவட்டந்தோறும் டி.ஐ.ஜி. அல்லது போலீஸ் சூப்பிரண்டு தலைமையில் சிறப்பு பிரிவு உருவாக்கப்பட்டுள்ளது. ‘ஹெல்ப் லைன்’ தொலைபேசி எண்களும் வெளியிடப்பட்டுள்ளது. இந்த சிறப்பு பிரிவு மற்றும் தொலைபேசி எண்கள் குறித்த விவரங்களை தமிழக காவல்துறையின் இணையதளத்தில் வெளியிட கடந்த ஏப்ரல் 10-ந் தேதி உத்தரவிடப்பட்டது.

    கலப்புத்திருமணம் செய்யும் காதல் ஜோடிகள் இந்த தொலைபேசி வழியாகவும், இணையதளம் மூலமாகவும் புகாரும், பாதுகாப்பு கேட்டு மனுவும் செய்யலாம். அந்த புகாருக்கான ரசீது அவர்களுக்கு வழங்கப்படும்.

    இதன் அடிப்படையில் சம்பந்தப்பட்ட போலீசார் வழக்குப்பதிவு செய்து, தினந்தோறும் கண்காணிப்பு பணியில் ஈடுபடுவார்கள். அந்த ஜோடிகளுக்கு தகுந்த பாதுகாப்பை சம்பந்தப்பட்ட போலீஸ் நிலையத்தின் இன்ஸ்பெக்டர் வழங்கவேண்டும். உறவினர்கள் இவர்களை விரட்டிச்சென்றால், அதை தடுத்து அந்த ஜோடிகளுக்கு பாதுகாப்பு வழங்கப்படும். முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் அனைத்தும் எடுக்கப்படும்.

    ஆணவக்கொலை முற்றிலும் ஒழிக்க தமிழக அரசு நிதி ஒதுக்கியுள்ளது. கலப்புத்திருமணம் செய்வோருக்கு தற்காலிகமாக வசிக்கும் இடம், பாதுகாப்பு வழங்குதல், இருதரப்பினரிடமும் சமரச பேச்சுவார்த்தை நடத்த நிபுணர்களை நியமித்தல் உள்ளிட்டவைகளுக்கும் நிதி ஒதுக்கப்பட்டுள்ளது.

    கலப்புத்திருமணம் செய்துகொள்பவர்களுக்கு உரிய பாதுகாப்பு மற்றும் உதவிகளை வழங்காத அதிகாரிகள் கடுமையான குற்றம் செய்ததாக கருதப்பட்டு, அவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும். எனவே இந்த கோர்ட்டு அவமதிப்பு வழக்கை தள்ளுபடி செய்யவேண்டும்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    இந்த வழக்கு ஆகஸ்டு 9-ந்தேதிக்கு தள்ளிவைக்கப்பட்டுள்ளது. #tamilnews
    ×