என் மலர்
நீங்கள் தேடியது "Traffic Police"
- கிருமாம்பாக்கத்தில் தெற்கு பகுதி போக்குவரத்து போலீஸ் நிலையம் இருந்து வருகிறது.
- அரியாங்குப்பத்திலிருந்து கரையாம்புத்தூர், நெட்டப்பாக்கம், மடுகரை வரை எல்லையாக இருந்து வருகிறது.
புதுச்சேரி:
கிருமாம்பாக்கத்தில் தெற்கு பகுதி போக்குவரத்து போலீஸ் நிலையம் இருந்து வருகிறது. இந்த போலீஸ் நிலையத்திற்கு அரியாங்குப்பத்திலிருந்து கரையாம்புத்தூர், நெட்டப்பாக்கம், மடுகரை வரை எல்லையாக இருந்து வருகிறது.
இந்த போலீஸ் நிலையத்திற்கு உட்பட்ட பகுதியில் 8 இடங்களை விபத்து அதிக விபத்து ஏற்படும் பகுதியாக கண்டறியப்பட்டுள்ளது. அதன்படி கடலூர்-புதுவை ரோடு அரியாங்குப்பம், நோணாங்குப்பம், இடையார்பாளையம், பூரணாங்குப்பம், தவளக்குப்பம், கிருமாம்பாக்கம், காட்டுக்குப்பம் - புதுநகர் கன்னியாகோயில்- முள்ளோடை ஆகிய இடங்களில் அதிக விபத்து ஏற்படும் பகுதியாக இருக்கிறது.
புதுவை அரசு தேசிய நெடுஞ்சாலை பொதுப்பணித் துறைக்கு கடலூர்- புதுவை சாலையை இரு வழி சாலையாக மாற்ற வேண்டுமென நீண்ட நாள் கோரிக்கை இருந்து வருகிறது. ஆனால் இதுவரை ஏற்பாடு செய்யாமல், நிதி காரணம் என அதிகாரிகள் பொதுமக்களிடம், சமூக ஆர்வலர்களிடமும் தெரிவித்து வருகின்றனர்.
இந்த நிலையில் தெற்கு பகுதி போக்குவரத்து போலீஸ் சூப்பிரண்டு மோகன்குமார் தலைமையில் இன்ஸ்பெக்டர் கணேசன் மற்றும் போலீசார் விபத்தை ஏற்படும் பகுதியை தடுக்க மாற்று ஏற்பாடுகளை செய்து வருகின்றனர்.
விபத்து ஏற்படும் பகுதிகளில் தடுப்பு கட்டை மற்றும் இருவழி சாலைக்கு நடு கட்டைகள் அமைத்து வருகின்றனர்.
கடந்த சில தினங்களாக இடையார்பாளை யத்திலிருந்து - தவளக்கு ப்பம் வரை விபத்து அதிகரித்து வந்ததால் தன்னார்வு நிறுவனங்களின் உதவியுடன் சுமார் 300 மீட்டருக்கு இருவழிச் சாலைக்கான நடுகட்டைகள் அமைத்துள்ளனர்.
மேலும் விபத்தை குறைக்க பல்வேறு ஏற்பாடுகளை போக்குவரத்து போலீசார் செய்து வருகின்றனர். வாகன ஓட்டிகள் மோட்டார் வாகன சட்டத்தை மீறாமல் ஹெல்மெட் அணிதல், செல்போன் பேசுவதை தவிர்த்தல், அதிக பாரத்துடன் செல்வதை தவிர்த்தல் போன்றவைகளை கடைபிடிக்க வேண்டும் என போக்குவரத்து போலீசார் வாகன ஓட்டிகளை கேட்டுக் கொண்டுள்ளனர்.
சென்னை மாதவரம், மஞ்சம்பாக்கம், மணலி மற்றும் எண்ணூர் விரைவு சாலை வழியாக சென்னை துறைமுகம் செல்லும் கன்டெய்னர் லாரிகள் முன்னேறி செல்வதற்காக ஒரு லாரிக்கு ரூ.100-ம், ஹெல்மெட் அணியாமல் மோட்டார் சைக்கிளில் செல்பவர்களிடம் தலா ரூ.200-ம் போக்குவரத்து போலீசார் லஞ்சமாக பெறுவதாக குற்றச்சாட்டு எழுந்தது.
இந்த நிலையில் கடந்த சில தினங்களுக்கு முன்பு திருவொற்றியூர் எல்லையம்மன் கோவில் அருகே மோட்டார் சைக்கிளில் ஹெல்மெட் அணியாமல் சென்றவரை போலீசார் தடுத்து நிறுத்தி ரூ.200 அபராதமாக வசூலித்தனர்.
ஆனால் அதற்குரிய ரசீதை போலீசார் வழங்கவில்லை. இதனை அங்கிருந்த நபர் ஒருவர் வீடியோவாக பதிவு செய்து ‘பேஸ்புக்’ உள்ளிட்ட சமூக வலைத்தளங்களில் பதிவிட்டார். அந்த வீடியோ வைரலாக பரவியது.
இதையடுத்து இந்த விவகாரம் போக்குவரத்து கூடுதல் கமிஷனர் அருண்குமார் கவனத்துக்கு கொண்டு செல்லப்பட்டது.
அதனை தொடர்ந்து அவர் சம்பவத்தன்று பணியில் இருந்த போக்குவரத்து சப்-இன்ஸ்பெக்டர் தென்னரசு, சிறப்பு பயிற்சி சப்-இன்ஸ்பெக்டர் முருகானந்தம் மற்றும் ஏட்டு வெங்கடாச்சலம் ஆகிய 3 பேரையும் பணிஇடை நீக்கம் செய்து உத்தரவிட்டார்.


மதுரை நகர் பகுதிகளில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட ஷேர் ஆட்டோக்கள் இயக்கப்பட்டு வருகின்றன. புற்றீசல் போல் முளைத்துள்ள ஷேர் ஆட்டோக்கள் போக்குவரத்து விதிகளை கடைபிடிக்காமல் செல்வதால் அடிக்கடி விபத்துகள் ஏற்படுவதாக வாகன ஓட்டிகள் புகார் கூறி வருகின்றனர்.
ஷேர் ஆட்டோவில் அளவுக்கு அதிகமான ஆட்களை ஏற்றிச் செல்வது, ஆவணங்கள் இல்லாமல் இயக்குவது, ஆங்காங்கே ஆட்டோக்களை நிறுத்தி ஆட்களை ஏற்றுவது போன்ற விதிமீறல்கள் நடந்து வருகின்றன.
இதற்கு போக்குவரத்து போலீசார் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை வைத்திருந்தனர்.
இந்த நிலையில் அவனியாபுரம் போலீஸ் சரகத்திற்கு உட்பட்ட அவனியாபுரம், வில்லாபுரம், மீனாட்சிநகர், திருப்பரங்குன்றம் ரோடு, சிந்தாமணி உள்ளிட்ட பகுதிகளில் போக்குவரத்து போலீஸ் இன்ஸ்பெக்டர் பார்த்தசாரதி தலைமையில் ஏட்டுகள் ஆல்வின், முருகன் மற்றும் போலீசார் அதிரடி வாகன சோதனையில் ஈடுபட்டனர்.
அப்போது விதிமுறைகளை மீறி இயக்கப்பட்ட 45 ஷேர் ஆட்டோக்கள் பறிமுதல் செய்யப்பட்டு வழக்குப்பதிவு செய்யப்பட்டது. #tamilnews
திருப்பதி ஏழுமலையான் கோவிலுக்கு தினமும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் சாமி தரிசனம் செய்ய வருகின்றனர். பக்தர்கள் வந்து செல்ல வசதியாக திருப்பதியில் இருந்து திருமலைக்கும், திருமலையில் இருந்து திருப்பதிக்கும் தனித் தனி மலைப்பாதைகள் உள்ளன. திருப்பதி மலைப்பாதைகளில் தினமும் அரசு பஸ்கள், தனியார் பஸ்கள், பக்தர்களின் சொந்த வாகனங்கள், தேவஸ்தான மற்றும் அரசு வாகனங்கள் வந்து செல்கின்றன. பகல் நேரத்தில் ஒரு மணிநேரத்தில் 250-லிருந்து 300 அரசு பஸ்களும், 200-லிருந்து 250 மோட்டார்சைக்கிள்களும், 10-லிருந்து 20 தேவஸ்தான வாகனங்களும், 100-லிருந்து 150 பக்தர்களின் சொந்த வாகனங்களும் திருப்பதி மலைப்பாதைகளில் இயக்கப்படுகின்றன.
கோவிலில் பக்தர்கள் கூட்டம் அதிகமாக இருக்கும்போது, அதிக வாகனங்கள் இயக்கப்படுகின்றன. அந்த வாகனங்கள் மலைப்பாதைகளில் எங்குப் பள்ளம், மேடு, வளைவு இருக்கிறது என்பது தெரியாமல் ஓடுகின்றன. மலைப்பாதைகளில் வந்து செல்லும்போது எதிர்பாராத விதமாக வாகனங்கள் விபத்துக்குள்ளாகின்றன. அந்த விபத்துகளில் பக்தர்களுக்கு எந்தவித உயிர்சேதமும் ஏற்பட்டதில்லை. எனினும், வாகனங்களுக்கு மட்டுமே சேதம் ஏற்பட்டுள்ளன.
அலிபிரி டோல்கேட்டை கடந்து திருமலையை நோக்கி மலைப்பாதையில் வரும் வாகனங்களுக்கு 28 நிமிடமும், திருமலையில் இருந்து திருப்பதியை நோக்கி செல்லும் வாகனங்களுக்கு 40 நிமிடமும் விதிக்கப்பட்டுள்ளது. இந்த விதிமுறை 4 ஆண்டுகளுக்கு முன்பே நடைமுறைக்கு வந்து விட்டது. கால தாமதமாக வரும் வாகனங்களை எளிதில் அனுமதிப்பதில்லை. அந்த வாகனங்களுக்கு அலிபிரி மற்றும் திருமலையில் உள்ள ஜி.என்.சி. டோல்கேட்டில் அபராதம் விதிக்கப்பட்டு அனுப்பப்படுகிறது.
வெளியூரில் இருந்து வரும் பக்தர்களின் வாகனங்கள் மலைப்பாதைகளில் அதிக வேகத்தில் இயக்கப்படுகின்றன. இதனால் தான் மலைப்பாதைகளில் விபத்துகள் நடக்கின்றன. கடந்த ஏப்ரல், மே மாதத்தில் மட்டும் திருப்பதி மலைப்பாதைகளில் மொத்தம் 41 விபத்துகள் நடந்துள்ளதாக போக்குவரத்துப் போலீசார் தெரிவித்துள்ளனர். டிரைவர்கள் தூங்கி கொண்டே வாகனங்களை ஓட்டுவது, பான் பராக் உள்ளிட்ட போதை பாக்குகளை வாயில் போட்டுக்கொண்டு வாகனங்களை ஓட்டுவது, செல்போன் பேசி கொண்டே வாகனங்களை ஓட்டுதல், முன்னால் செல்லும் வாகனங்களை முந்திச்செல்ல முயலும்போது, சிலர் மலைப்பாதையில் ஆங்காங்கே வாகனங்களை நிறுத்தி வைப்பதாலும் விபத்துகள் ஏற்படுகின்றன.
திருப்பதி மலைப்பாதைகளில் விபத்துகள் நடக்காமல் தடுக்க போக்குவரத்துப் போலீசார் பல்வேறு விழிப்புணர்வு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர். #tamilnews
