search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "போக்குவரத்து காவல் துறையினர்"

    • வெயிலில் நின்று போக்குவரது காவல் துறையிருக்கு இயற்கை குளிர்பானங்கள் வழங்கப்பட்டது.
    • போலீசாருக்கு தர்பூசணி பழச்சாறு நீர்மோர் ஆகியவற்றை வழங்கப்பட்டது.

    தஞ்சாவூர்:

    தமிழகத்தில் கோடை காலம் தொடங்க உள்ள நிலையில் வெயிலில் நின்று போக்குவரத்தை ஒழுங்குபடுத்தும் போக்குவரத்து காவல் துறையினர் கோடை வெப்ப தாக்கத்தில் இருந்து மீள்வதற்காகவும், உடல் சோர்வின்றி பணியாற்றுவதற்காகவும் ஜோதி அறக்கட்டளை சார்பில் தஞ்சாவூர் நகர போக்குவரத்து காவல்துறையினருக்கு கோடை காலம் முழுவதும் இயற்கை குளிர்பானங்கள் வழங்கும் திட்டத்தின் இரண்டாமாண்டு தொடக்க விழா தஞ்சை பழைய பேருந்துநிலையம் அருகே நடைபெற்றது.

    தஞ்சாவூர் நகர துணை போலீஸ் சூப்பிரண்டு ராஜா நிகழ்ச்சிக்கு தலைமை தாங்கி போக்குவரத்து காவலர்கள் அனைவருக்கும் தர்பூசணி பழச்சாறு , கிர்ணி பழச்சாறு , நீர்மோர் ஆகியவற்றை வழங்கி திட்டத்தை தொடங்கி வைத்தார் .

    அப்போது அவர் பேசுகையில், கடும் வெயில் காலங்களில் நகரின் போக்குவரத்தை ஒழுங்கு படுத்தும் போக்குவரத்து காவலர்களுக்கு இந்நிகழ்ச்சி மூலம் தஞ்சாவூர் நகர பொதுமக்கள் சார்பில் நன்றி தெரிவித்துக் கொள்வதாக தெரிவித்தார்.

    போக்குவரத்து இன்ஸ்பெக்டர் ரவிச்சந்திரன் பேசுகையில், நகரின் போக்குவரத்தை ஒழுங்குபடுத்தும் பணியில் உள்ள போக்குவரத்து காவலர்களுக்கு கோடை காலத்தில் தாகம் தீர்க்கவும், நீர்ச்சத்து குறைபாடு ஏற்படாமல் தடுக்கவும் ஜோதி அறக்கட்டளையுடன் இணைந்து கடந்த ஆண்டை போலவே இந்த ஆண்டும் கோடை காலம் முழுவதும் இரசாயன குளிர்பானங்களை தவிர்த்து இயற்கை குளிர்பானங்களான ஆப்பிள் பழச்சாறு, திராட்சை, சாத்துக்குடி, மாதுளை, தர்பூசணி கிர்ணி, எலுமிச்சை, சப்போட்டா, ஆரஞ்சு, மாதுளை, தர்பூசணி பழச்சாறு, கிர்ணி பழச்சாறுகள், இளநீர், நீர்மோர் உள்ளிட்டவை கோடை காலம் முடியும் வரை தினமும் சுழற்சி முறையில் தஞ்சை நகர போக்குவரத்து காவலர்களுக்கு வழங்கப்படும் என்றார் . இந்த நிகழ்ச்சியில் போக்குவரத்து உதவி ஆய்வாளர் பாஸ்கரன், போக்குவரத்து சிறப்பு உதவி ஆய்வாளர்கள் ரமேஷ், ரமேஷ்குமார், ஜோதி அறக்கட்டளை செயலாளர் டாக்டர் பிரபு ராஜ்குமார் ஆகியோர் கலந்துகொண்டனர் .

    நிகழ்ச்சிக்கான ஏற்பாடு களை அறக்கட்டளை மேலாளர் ஞானசுந்தரி, தன்னார்வலர் ஆர்த்தி உள்ளி ட்டோர் செய்திருந்தனர்.  

    ×