search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    கடலூர் திருப்பாதிரிப்புலியூரில் ஓடும் காரின் மேல் அமர்ந்து சென்ற மயில்
    X

    மீட்கப்பட்ட மயில்.

    கடலூர் திருப்பாதிரிப்புலியூரில் ஓடும் காரின் மேல் அமர்ந்து சென்ற மயில்

    • காரின் மேலே மயில் ஒன்று அமர்ந்து கொண்டு இருந்தது.
    • போக்குவரத்து போலீசார் நாகராஜ் ஓட்டி சென்ற காரை வழிமறித்து காரின் மீது இருந்த மயிலை பாதுகாப்பாக மீட்டனர்.

    கடலூர்:

    கடலூர் திருப்பாதிரி ப்புலியூரில் இன்று மதியம் கார் ஒன்று லாரன்ஸ் சாலை வழியாக சென்று கொண்டிருந்தது. அந்த காரை நாகராஜ் என்பவர் ஓட்டி சென்றார். அந்த காரின் மேலே மயில் ஒன்று அமர்ந்து கொண்டு இருந்தது. அப்போது அங்கிருந்த பொதுமக்கள் இதனை பார்த்து அதிர்ச்சி அடைந்தனர்.

    அங்கு பாதுகாப்பு பணியில் இருந்த போக்குவரத்து போலீசார் நாகராஜ் ஓட்டி சென்ற காரை வழிமறித்து காரின் மீது இருந்த மயிலை பாதுகாப்பாக மீட்டனர். பின்னர் வன ஆர்வலர் செல்லாவிற்கு தகவல் கொடுத்தனர். தகவலின் பேரில் செல்லா சம்பவ இடத்திற்கு நேரில் வந்து மயிலை மீட்டார். இதனைத் தொடர்ந்து மயில் அமர்ந்து வந்த கார் எங்கிருந்து வந்தது? எந்த ஊரை சேர்ந்தது? என்பது குறித்து விசாரணை மேற்கொண்டு வந்தனர். மேலும் கார் மீது மயில் அமர்ந்து சென்ற வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருவது குறிப்பிடத்தக்கதாகும்.

    Next Story
    ×