search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Peacock"

    • இவருக்கு சொந்தமான 70 அடி ஆழமுள்ள தண்ணீர் இல்லாத கிணறு ஒன்று அப்பகுதியில் உள்ளது.
    • இந்நிலையில் தேசிய பறவையான மயில் ஒன்று கிணற்றில் தவறி விழுந்து விட்டது.

    கந்தர்வகோட்டை

    புதுக்கோட்டை மாவட்டம் கந்தர்வகோட்டை அடுத்த நரங்கியம்பட்டி கிராமத்தைச் சேர்ந்த சுப்ரமணியன்.

    இவருக்கு சொந்தமான 70 அடி ஆழமுள்ள தண்ணீர் இல்லாத கிணறு ஒன்று அப்பகுதியில் உள்ளது. இந்நிலையில் தேசிய பறவையான மயில் ஒன்று கிணற்றில் தவறி விழுந்து விட்டது.

    இது குறித்து சென்னை தீ தடுப்பு கட்டுப்பாட்டு அறைக்கு சுப்பிரமணியன் தகவல் கொடுத்தார். உயர் அதிகாரிகளின் உத்தரவின் பெயரில் கந்தர்வகோட்டை தீயணைப்பு போலீசார் விரைந்து சென்று கிணற்றில் உயிருக்கு போராடிய மயிலை உயிருடன் மீட்டு வனத்தில் விட்டனர்.

    • பக்தர்கள் மயிலுக்கு முதலுதவி சிகிச்சை அளித்தனர்.
    • ஆனால், சிகிச்சை பலனின்றி மயில் பரிதாபமாக உயிரிழந்தது.

    தரங்கம்பாடி:

    மயிலாடுதுறை காவிரி வடகரையில் வதான்யேஸ்வரர் கோவில் அமைந்துள்ளது.

    புகழ் பெற்ற குரு பரிகாரம் கோவிலில் தினம் தோறும் அப்பகுதியில் வசிக்கும் மயில் ஒன்று வந்து உலாவி விட்டு செல்வது வழக்கம்.

    சம்பவதன்று கோயிலுக்கு வந்துவிட்டு மீண்டும் பறந்து சென்ற பொழுது கோயில் ஆர்ச் அருகே இருந்த மின் கம்பியில் பட்டு உயிருக்கு போராடியது.

    இதை பார்த்த பக்தர்கள் மயிலுக்கு முதல் உதவி சிகிச்சை அளித்தனர்.

    ஆனால் சிகிச்சை பலனின்றி மயில் பரிதாபமாக உயிரிழந்தது.

    மயிலின் உடலை சீர்காழி வனத்துறையினர் கைப்பற்றி கொண்டு சென்றனர் இச்ச சம்பவம் பக்தர்கள் இடையே பெருத்த சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

    • கால்களில் காயம் ஏற்பட்டு அது நடக்க முடியாமல் தவறி விழுந்தது.
    • மயிலை காப்பாற்றிய அந்த குடும்பத்தினருக்கு பாராட்டு தெரிவித்தார்.

    பல்லடம்:

    பல்லடம் அருகே உள்ள ஆறுமுத்தாம்பாளையத்தில் வசிப்பவர் முத்துக்குமாரசாமி(வயது 51). இவர் ஆறு முத்தாம்பாளையம் ஊராட்சி 5வது வார்டு உறுப்பினராக உள்ளார். நேற்று இவரது வீட்டில் தேசிய பறவையான ஆண் மயில் ஒன்று வந்து விழுந்தது. அதன் கால்களில் காயம் ஏற்பட்டு அது நடக்க முடியாமல் தவறி விழுந்தது. இதனைப் பார்த்த முத்துக்குமாரசாமி குடும்பத்தினர் மயிலுக்கு உணவு கொடுத்து தண்ணீர் கொடுத்து பராமரிப்பு செய்தனர்.

    பின்னர் இது குறித்து திருப்பூர் வனச்சரக அலுவலர் சுரேஷ் கிருஷ்ணனுக்கு தகவல் அளிக்கப்பட்டது. இதையடுத்து அவர் வன காவலர் வெங்கடேஸை அனுப்பி காயம்பட்ட அந்த மயிலை கால்நடை மருத்துவமனைக்கு அனுப்பி சிகிச்சை பெற ஏற்பாடு செய்தார்.மேலும் மயிலை காப்பாற்றிய அந்த குடும்பத்தினருக்கு பாராட்டு தெரிவித்தார்.

    தேசிய பறவையான மயிலை காப்பாற்றி உணவு கொடுத்து பராமரித்த முத்துக்குமாரசாமி குடும்பத்தாருக்கும், உடனடி நடவடிக்கை எடுத்து மயிலுக்கு சிகிச்சை அளிக்க ஏற்பாடு செய்த வனத்துறைக்கும் பொதுமக்கள் பாராட்டு தெரிவித்தனர்.

    • பெண் மயில் பேருந்தின் முகப்பு கண்ணாடியில் அடிபட்டு காயமடைந்தது.
    • பேருந்தில் அடிபட்ட காயமடைந்த மயிலை மீட்டு முதலுதவி அளித்த பெரியசாமியை பொதுமக்கள், சமூக ஆா்வலா்கள் பாராட்டினா்.

    அவிநாசி:

    புளிம்பட்டியில் இருந்து அவிநாசி நோக்கி குரும்பபாளையம் அருகே தனியாா் பேருந்து வந்தபோது, அவ்வழியாக பறந்து வந்த பெண் மயில் பேருந்தின் முகப்பு கண்ணாடியில் அடிபட்டு காயமடைந்தது. இதில் பேருந்தின் முகப்பு கண்ணாடி முழுவதும் உடைந்தது.

    மேலும், பலத்த காயமடைந்த மயிலை அப்பகுதியைச் சோ்ந்த விவசாயி பெரியசாமி என்பவா் மீட்டு, சேவூா் கால்நடை மருத்துவமனைக்கு கொண்டுச் சென்று சிகிச்சை அளித்தாா். தகவலறிந்து, சம்பவ இடத்துக்கு வந்த வனத் துறையினா், மயிலை மீட்டு வனப் பகுதியில் விடுவதற்காக எடுத்துச் சென்றாா்.

    இதில் கடந்த பிப்ரவரி மாதம் தனது தோட்டத்துக்குள் நாய்கள் துரத்தி வந்த புள்ளிமானை மீட்டு வனத் துறையினரிடம் பெரியசாமி ஒப்படைத்தாா்.

    அதேபோல தற்போது பேருந்தில் அடிபட்ட காயமடைந்த மயிலை மீட்டு முதலுதவி அளித்த பெரியசாமியை பொதுமக்கள், சமூக ஆா்வலா்கள் பாராட்டினா். 

    • காரின் மேலே மயில் ஒன்று அமர்ந்து கொண்டு இருந்தது.
    • போக்குவரத்து போலீசார் நாகராஜ் ஓட்டி சென்ற காரை வழிமறித்து காரின் மீது இருந்த மயிலை பாதுகாப்பாக மீட்டனர்.

    கடலூர்:

    கடலூர் திருப்பாதிரி ப்புலியூரில் இன்று மதியம் கார் ஒன்று லாரன்ஸ் சாலை வழியாக சென்று கொண்டிருந்தது. அந்த காரை நாகராஜ் என்பவர் ஓட்டி சென்றார். அந்த காரின் மேலே மயில் ஒன்று அமர்ந்து கொண்டு இருந்தது. அப்போது அங்கிருந்த பொதுமக்கள் இதனை பார்த்து அதிர்ச்சி அடைந்தனர்.

    அங்கு பாதுகாப்பு பணியில் இருந்த போக்குவரத்து போலீசார் நாகராஜ் ஓட்டி சென்ற காரை வழிமறித்து காரின் மீது இருந்த மயிலை பாதுகாப்பாக மீட்டனர். பின்னர் வன ஆர்வலர் செல்லாவிற்கு தகவல் கொடுத்தனர். தகவலின் பேரில் செல்லா சம்பவ இடத்திற்கு நேரில் வந்து மயிலை மீட்டார். இதனைத் தொடர்ந்து மயில் அமர்ந்து வந்த கார் எங்கிருந்து வந்தது? எந்த ஊரை சேர்ந்தது? என்பது குறித்து விசாரணை மேற்கொண்டு வந்தனர். மேலும் கார் மீது மயில் அமர்ந்து சென்ற வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருவது குறிப்பிடத்தக்கதாகும்.

    • சோதனை சாவடி பகுதி மிகவும் குளிர்ச்சியாக இருக்கக்கூடிய பகுதியாகும்.
    • ஆண் மயில் ஒன்று தனது தோகையை விரித்து ஆடி கொண்டிருந்தது.

    அந்தியூர், 

    ஈரோடு மாவட்டம் அந்தியூர் அடுத்து வரட்டுப்பள்ளம் அணை உள்ளது.

    இந்த அணையின் அருகே உள்ள ேசாதனை சாவடி பகுதி மிகவும் குளிர்ச்சியாக இருக்கக்கூடிய பகுதியாகும். இந்த பகுதியில் மயில்கள் அதிக அளவில் உள்ளது. அவ்வப்போது மயில்கள் அந்த பகுதியில் உள்ள விலை நிலங்களுக்குள் புகுந்து பயிர்களை தின்றும் சேதப்படுத்தியும் வருகிறது.

    இந்த நிலையில் மாலை நேரத்தில் ஆண் மயில் ஒன்று தனது தோகையை விரித்து ஆடி கொண்டிருந்தது. இதனை அந்தப் பகுதியில் சென்றவர்கள் பார்த்து ரசித்தனர்.

    மேலும் தங்களது செல்போனில் படம் பிடித்து நண்பர்களுக்கும் அனுப்பி வைத்தனர். மயில் தோகை விரித்து ஆடினால் மழை வரும் என்று முன்னோர்கள் கூறுவார்கள். அதே போல் மயில் ேதாகை விரித்து ஆடியதும் அந்தப் பகுதியில் சிறிது நேரம் மழையும் தூறியது.

    • அரசு பஸ் ஒன்று புளியம்பட்டி நோக்கி சென்று கொண்டிருந்தது.
    • மயில் பஸ்ஸில் உள்ளே விழுந்து இறந்தது.

    திருப்பூர் :

    பல்லடம் பஸ் நிலையத்திலிருந்து இன்று காலை அரசு பஸ் ஒன்று புளியம்பட்டி நோக்கி சென்று கொண்டிருந்தது. பஸ்சை டிரைவர் சக்திகுமார் ஓட்டி சென்றார். பஸ் பல்லடம் அடுத்த சின்னிய கவுண்டன் பாளையம் அருகே சென்று கொண்டிருந்தபோது எதிரே மயில் ஒன்று பறந்து வந்து பஸ்ஸின் முன்பக்க கண்ணாடி மீது பயங்கரமாக மோதியது. மோதிய வேகத்தில் பஸ்ஸில் முன்பக்க கண்ணாடி உடைந்து தூள் தூளானது.

    மேலும் மயில் பஸ்ஸில் உள்ளே விழுந்து இறந்தது. இதில் பஸ்ஸில் பயணம் செய்த பெண் ஒருவருக்கு லேசான காயம் ஏற்பட்டது. பின்னர் இது குறித்து டிரைவர் சக்திவேல் பல்லடம் போலீசாருக்கு தகவல் தெரிவித்தார்.போலீசார் வனத்துறையினருடன் இறந்த மயிலை மீட்டு சென்றனர். பின்னர் பயணிகளை வேறொரு பஸ்ஸில் ஏற்றி அனுப்பி வைத்தனர்.

    • 60 அடி ஆழம் கிணறு இருந்ததால், மேலே வர முடியாமல் மயில் தண்ணீரில் தத்தளித்தது.
    • தீயணைப்பு நிலைய வீரா்கள் கயிறு கட்டி கிணற்றில் இறங்கி மயிலை உயிருடன் மீட்டனா்.

    காங்கயம் :

    காங்கயம் அருகே, செம்மங்காளிபாளையம் கிராமத்தில் தனியாருக்குச் சொந்தமான விவசாயக் கிணற்றில் ஆண் மயில் விழுந்துள்ளது. 60 அடி ஆழம் கிணறு இருந்ததால், மேலே வர முடியாமல் மயில் தண்ணீரில் தத்தளித்தது. தகவலின்பேரில் காங்கயம் தீயணைப்பு நிலைய வீரா்கள் சம்பவ இடத்துக்கு சென்று, கயிறு கட்டி கிணற்றில் இறங்கி மயிலை உயிருடன் மீட்டனா்.

    மீட்கப்பட்ட மயில் காங்கயம் வனத்துறையிடம் ஒப்படைக்கப்பட்டு, பின்னா் ஊதியூா் காப்புக்காட்டில் பாதுகாப்பாக விடப்பட்டது. 

    • தியாகதுருகம் அருகே கிணற்றில் விழுந்த மயிலை தீயணைப்பு படை வீரர்கள் மீட்டனர்.
    • கிணற்றுக்கு புதிய மின் இணைப்பு வழங்குவதற்காக மின்சார வாரிய அதிகாரிகள் வேலை பார்த்து கொண்டிருந்தனர்.

    கள்ளக்குறிச்சி:

    தியாகதுருகம் அருகே தியாகை ஊராட்சிக்கு உட்பட்ட சிறுவல் கிராமத்தைச் சேர்ந்தவர் சோலை (வயது 62), விவசாயி, இவருக்கு அதே பகுதியில் உள்ள முனியப்பர் கோவில் அருகே விவசாய கிணறு மற்றும் நிலம் உள்ளது. நேற்று கிணற்றுக்கு புதிய மின் இணைப்பு வழங்குவதற்காக மின்சார வாரிய அதிகாரிகள் வேலை பார்த்து கொண்டிருந்தனர். அப்பொழுது மின்வாரிய அதிகாரி ஒருவர் கிணற்றை எட்டிப் பார்த்தபோது கிணற்றின் சுற்று சுவரில் முட்டைகளை அடைகாத்து க்கொண்டிருந்த மயில் திடீரென பறந்தபோது தவறி கிணற்றில் விழுந்தது. இது குறித்து அங்கிருந்தவர்கள் தியாகதுருகம் தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர். தகவல் அறிந்த தீயணைப்பு நிலைய அலுவலர் கவிதா தலைமையில் கார்த்திகேயன், அருணாச்சலம், சந்தோஷ்குமார், ஜெகன், சங்கர் உள்ளிட்ட வீரர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று சுமார் 50 அடி க கிணற்றில் தண்ணீரில் விழுந்து கிடந்த பெண் மயிலை பத்திரமாக மீட்டனர். தொடர்ந்து மயிலுக்கு முதலுதவி சிகிச்சை அளித்து சிறுவல் காட்டில் பத்திரமாக விட்டு சென்றனர்.

    • மயில்கள் பெருகியதால் சிறுதானியங்கள், நிலக்கடலை, பயறு வகைகள் போன்றவற்றை பயிரிட முடியாத சூழ்நிலை ஏற்பட்டுள்ளது.
    • மான்களிடம் இருந்து தப்ப, அதிக பொருட்செலவில் கம்பி வேலி அமைக்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது.

    திருப்பூர் :

    ஒரு காலத்தில் வனத்தில் மட்டுமே மான்கள் வாழ்ந்தது. வனத்தை சிறிது சிறிதாக மனிதர்கள் ஆக்கிரமிக்க துவங்கிய பின்விலங்குகளின் வாழ்விடம் பறிபோனது. இதனால் மான், யானை, கரடி உட்பட பல விலங்குகள் கூட்டம் உணவு தேடி சமவெளிப் பகுதிக்கு வரத் துவங்கியுள்ளன.குறிப்பாக வனப்பகுதியில் இருந்து வெளியேறிய மான்கள் உணவு தேட வந்த இடத்தையே தங்கள் வாழ்விடமாக மாற்றி விடுகின்றன.

    அவிநாசி அருகே புதுப்பாளையம் குளத்தில் மான்கள் பெருகியதால் விவசாயிகள் போராடும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர்.தற்போது பொங்கலூர் அருகே உப்புக்கரை நதியை சுற்றியுள்ள சின்னாரியபட்டி, தங்காய்புதுார், பெரியாரியபட்டி போன்ற பகுதிகளில் மான்கள் கூட்டம் பெருகி வருகிறது. இவை பயிர்களை தின்று விடுவதால் விவசாயிகள் வேதனை அடைந்துள்ளனர்.இதுகுறித்து அப்பகுதி விவசாயிகள் கூறியதாவது:-

    மயில்கள் பெருகியதால் சிறுதானியங்கள், நிலக்கடலை, பயறு வகைகள் போன்றவற்றை பயிரிட முடியாத சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. தற்போது மான்கள் பெருகி வருவதால் மாட்டுத்தீவனம் பயிர்கள், காய்கறி பயிர்கள் போன்றவற்றை சாப்பிட்டு விடுகின்றன.இரவு நேரத்தில் அவை மேய்ச்சலுக்கு வருவதால் கட்டுப்படுத்துவது சிரமமாக உள்ளது. மழைக்காலங்களில் பெரிய அளவில் பாதிப்பில்லை.வறட்சி காலங்களில் கால் ஏக்கர், அரை ஏக்கர் மட்டுமே விவசாயம் செய்கிறோம். அவற்றையும் மான்கள் முடித்து விடுகின்றன. மான்களிடம் இருந்து தப்ப, அதிக பொருட்செலவில் கம்பி வேலி அமைக்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது. ஆனால் அனைத்து விவசாயிகளாலும் லட்சக்கணக்கில் பணம் செலவழிக்க முடியாது.பெருகிவரும் மான் கூட்டம் விவசாயிகளுக்கு அச்சுறுத்தலை ஏற்படுத்தியுள்ளது.இவ்வாறு அவர்கள் கூறினர்.

    • பெண் மயில் ஒன்று டிரான்ஸ்பார்மரில் மோதி அடிபட்டு இறந்து விட்டது.
    • வெள்ளகோவில் கால்நடை மருத்துவ அலுவலர் மயிலை பிரேதப் பரிசோதனை செய்த அடக்கம் செய்தனர்.

    வெள்ளகோவில் :

    வெள்ளகோவில் கச்சேரி வலசு பகுதியில் நேற்று பெண் மயில் ஒன்று டிரான்ஸ்பார்மரில் மோதி அடிபட்டு இறந்து விட்டது. இதுகுறித்து சமூக ஆர்வலர் நாகராஜ் ,வனத்துறை அலுவலர், கிராம நிர்வாக அலுவலர், நில வருவாய் அலுவலர்களுக்கு தகவல் பகொடுத்தார். பிறகு வெள்ளகோவில் கால்நடை மருத்துவ அலுவலர் பகலவன் மயிலை பிரேதப் பரிசோதனை செய்த பிறகு கச்சேரி வலசு பகுதியிலேயே மயிலை அடக்கம் செய்தனர். 

    வேதாரண்யத்தில் மின்சாரம் தாக்கி மயில் உயிரிழந்துள்ளது.
    வேதாரண்யம்:

    வேதாரண்யம் தாலுகாவில் கோடியக்கரை, கோடியக்காடு, வேதாரண்யம், ஆயக்கரன்புலம், பன்னாள் தென்னடார் வாய்மேடு, தகட்டூர் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் சுமார் 5 ஆயிரத்திற்கும் மேற்பட்ட தேசியப் பறவையான மயில் வசித்து வருகிறது.

    இந்நிலையில் நேற்று தகட்டூர் அரசு மேல்நிலைப் பள்ளி அருகே உயர் அழுத்த மின்கம்பியில் சிக்கிய மயிலை சமூக ஆர்வலர் பிரின்ஸ் கோபால்ராஜா காப்பாற்ற முயற்சி செய்தார். 

    ஆனால் மயில் இறந்துவிட்டது. இது குறித்து கோடியக்கரை வனத்துறை அலுவலர் அயூப்கானுக்கு தகவல் தெரிவித்தனர்.
    கோடியக்கரை வனக்காவலர் ரனில்குமார், வேட்டை தடுப்பு காவலர் பாண்டியன் ஆகியோர் அங்கு வந்தனர். 

    பின்பு வாய்மேடு இன்ஸ்பெக்டர் கன்னிகா மற்றும் போலீசார் முன்னிலையில் இறந்த மயிலை வனத்துறையினரிடம் சமூக ஆர்வலர் பிரின்ஸ் கோபால்ராஜா ஒப்படைத்தார். 

    பின்பு வனத்துறையினர் மயிலை எடுத்து சென்று கோடியக்காடு வனவிலங்கு சரணாலயத்தில் புதைத்தனர்.
    ×