search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    மின்சாரம் தாக்கி இறந்த மயிலை வனத்துறையினரிடம் ஒப்படைத்தனர்.
    X
    மின்சாரம் தாக்கி இறந்த மயிலை வனத்துறையினரிடம் ஒப்படைத்தனர்.

    மின்சாரம் தாக்கி மயில் உயிரிழப்பு

    வேதாரண்யத்தில் மின்சாரம் தாக்கி மயில் உயிரிழந்துள்ளது.
    வேதாரண்யம்:

    வேதாரண்யம் தாலுகாவில் கோடியக்கரை, கோடியக்காடு, வேதாரண்யம், ஆயக்கரன்புலம், பன்னாள் தென்னடார் வாய்மேடு, தகட்டூர் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் சுமார் 5 ஆயிரத்திற்கும் மேற்பட்ட தேசியப் பறவையான மயில் வசித்து வருகிறது.

    இந்நிலையில் நேற்று தகட்டூர் அரசு மேல்நிலைப் பள்ளி அருகே உயர் அழுத்த மின்கம்பியில் சிக்கிய மயிலை சமூக ஆர்வலர் பிரின்ஸ் கோபால்ராஜா காப்பாற்ற முயற்சி செய்தார். 

    ஆனால் மயில் இறந்துவிட்டது. இது குறித்து கோடியக்கரை வனத்துறை அலுவலர் அயூப்கானுக்கு தகவல் தெரிவித்தனர்.
    கோடியக்கரை வனக்காவலர் ரனில்குமார், வேட்டை தடுப்பு காவலர் பாண்டியன் ஆகியோர் அங்கு வந்தனர். 

    பின்பு வாய்மேடு இன்ஸ்பெக்டர் கன்னிகா மற்றும் போலீசார் முன்னிலையில் இறந்த மயிலை வனத்துறையினரிடம் சமூக ஆர்வலர் பிரின்ஸ் கோபால்ராஜா ஒப்படைத்தார். 

    பின்பு வனத்துறையினர் மயிலை எடுத்து சென்று கோடியக்காடு வனவிலங்கு சரணாலயத்தில் புதைத்தனர்.
    Next Story
    ×