search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    ெஹல்மெட் அணிந்து வந்த பெண்களுக்கு ரூ.1000 மதிப்புள்ள வண்ணசேலை
    X

    ஜோதி அறக்கட்டளை சார்பில் ெஹல்மெட் அணிந்து வந்த பெண்களுக்கு ஊக்கப்பரிசாக வண்ணசேலையை போக்குவரத்து பெண்காவலர்கள் வழங்கினர்.

    ெஹல்மெட் அணிந்து வந்த பெண்களுக்கு ரூ.1000 மதிப்புள்ள வண்ணசேலை

    • ஓட்டிகளுக்கு இனிப்புகள், திருக்குறள் புத்தகம், விலையில்லா பெட்ரோல், வெள்ளி நாணயம் ஆகியவற்றை வழங்கி பாராட்டி நூதன முறையில் விழிப்புணர்வு பிரச்சாரம் செய்து வருகிறோம்.
    • விபத்தில்லா தஞ்சை மாநகரத்தை உருவாக்கும் வகையில் பல்வேறு விழிப்புணர்வு பிரச்சாரங்கள், நூதன முயற்சிகள் செய்யப்பட்டு வருகின்றன.

    தஞ்சாவூர்:

    தஞ்சாவூர் ஜோதி அறக்கட்டளை மற்றும் தஞ்சாவூர் மாநகர போக்குவரத்து காவல்பிரிவு சார்பில் வாகன ஓட்டிகளுக்கு சாலை பாதுகாப்பு தொடர்பாகவும் போக்குவரத்து விதிமுறைகள் குறித்தும் தொடர்ந்து விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது.அதன் ஒருபகுதியாக தஞ்சை பழைய பஸ் நிலையம் , அண்ணா சிலை அருகே நடைபெற்ற நிகழ்ச்சியில் தஞ்சை நகர போக்குவரத்துபோலீஸ் இன்ஸ்பெக்டர் ரவிச்சந்திரன் தலைமையில் போக்குவரத்து பிரிவு பெண் காவலர்கள் அந்த வழியாக இருசக்கர வாகனத்தில் தலைகவசம் அணிந்து வந்த பெண்களை தடுத்து நிறுத்தி சாலை விதிகளை மதித்து இருசக்கர வாகனம் இயக்கும்போது தலைக்கவசம் அணிந்து வந்தமைக்காக அவர்களை ஊக்கப்படுத்தும் விதமாக ஒவ்வொருவருக்கும் ஆயிரம் ரூபாய் மதிப்புள்ள வண்ண சேலைகளை வழங்கி பாராட்டினார்கள்.

    அப்போது போக்குவரத்து இன்ஸ்பெக்ர் ரவிச்சந்திரன், பேசும்போது விபத்தில்லா தஞ்சை மாநகரத்தை உருவாக்கும் வகையில் பல்வேறு விழிப்புணர்வு பிரச்சாரங்கள் , நூதன முயற்சிகள் செய்யப்பட்டு வருகின்றன.

    சாலை விதிகளை மதித்து இருசக்கர வாகனம் ஓட்டும்போது தலைகவசம் அணிந்து வருபவர்கள், நான்கு சக்கர வாகனங்கள் இயக்கும்போது சீட்பெல்ட் அணிபவர்களை ஊக்கப்படுத்தும் வகையில் ஜோதி அறக்கட்டளையுடன் இணைந்து வாகன ஓட்டிகளுக்கு இனிப்புகள், திருக்குறள் புத்தகம், விலையில்லா பெட்ரோல், வெள்ளி நாணயம் ஆகியவற்றை வழங்கி பாராட்டி நூதன முறையில் விழிப்புணர்வு பிரச்சாரம் செய்து வருகிறோம். அதன் தொடர்ச்சியாக இம்முறை தலைகவசம் அணிந்து வந்த பெண்கள் ஒவ்வொருவருக்கும் தஞ்சை போக்குவரத்து காவல் பிரிவு பெண் காவலர்கள் தலா ஆயிரம் ரூபாய் மதிப்புள்ள வண்ண சேலைகளை ஊக்கப்பரிசாக வழங்கி பாராட்டியுள்ளோம்.

    இந்த நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை ஜோதி அறக்கட்டளை செயலாளர் டாக்டர் பிரபு ராஜ்குமார் மேற்பார்வையில் மேலாளர் ஞானசுந்தரி உள்ளிட்டோர் செய்திருந்தனர்

    Next Story
    ×