search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "road rules"

    • இந்த பெண் செல்போன் பேசிக்கொண்டே வாகனம் ஒட்டியது, ஹெல்மெட் அணியாமல் சென்றது உள்ளிட்டவை சிசிடிவி கேமராக்களில் பதிவாகி உள்ளன
    • சாலை போக்குவரத்து விதிகளை பின்பற்றுமாறு பொதுமக்களுக்கு பெங்களூரு போக்குவரத்து போலீசார் அறிவுறுத்தியுள்ளனர்

    பெங்களூருவில் 270 முறை சாலை விதிகளை மீறிய பெண்மணிக்கு ₹1.36 லட்சம் அபராதம் விதித்த போக்குவரத்து போலீஸ் அவரது வாகனத்தையும் பறிமுதல் செய்துள்ளது.

    இந்தப் பெண் வழக்கமாக பெங்களூரு, பனஸ்வாடியில் உள்ள காக்ஸ் டவுன் மற்றும் அதைச் சுற்றியுள்ள பகுதிகளில் ஸ்கூட்டரில் பயணித்து வருவது வழக்கம். இவர், தலைக்கவசம் அணியாமல் வாகனம் ஓட்டுவது, தலைக்கவசம் இல்லாமல் பயணியை பின்னால் அமர வைத்துச் சென்றது, தவறான திசையில் வாகனத்தை ஓட்டிச் சென்றது, வாகனம் ஓட்டும்போது மொபைல் போன் பேசியது, போக்குவரத்து சிக்னல்களை மதிக்காமல் கடந்து செல்வது போன்ற பல்வேறு வகையான விதிமீறல்களில் ஈடுபட்டுள்ளார்.

    இந்த பெண் செல்போன் பேசிக்கொண்டே வாகனம் ஒட்டியது, ஹெல்மெட் அணியாமல் சென்றது, டிராஃபிக் சிக்னல்களை கடைப்பிடிக்காதது உள்ளிட்டவை சிசிடிவி கேமராக்களில் பதிவாகி உள்ளன.

    இந்நிலையில் அந்த பெண் அண்மையில் தலைக்கவசம் அணியாமல் தனது ஸ்கூட்டரில் 3 பேரை ஏற்றிக்கொண்டு சென்றார். இதையடுத்து அவருக்கு போக்குவரத்து போலீசார் அபராதம் விதித்து ரசீது வழங்கினர். அதில் அபராதத் தொகை ரூ.1.36 லட்சம் என குறிப்பிடப்பட்டிருந்தது. இதனை பார்த்த அந்த பெண் அதிர்ச்சி அடைந்துள்ளார்.

    அதாவது இதற்கு முன்பு அந்தப் பெண் போக்குவரத்து விதிமீறல்களில் ஈடுபட்டதற்கான அபராதத்தையும் சேர்த்து, இந்த தொகை நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இது அவர் ஓட்டும் ஸ்கூட்டரின் விலையை விட கூடுதலாகும்.

    இந்தக் கணக்குகளை எல்லாம் எடுத்துச் சொல்லி, இதுபோன்ற அபராதங்களில் சிக்காமல் இருக்கவும், பாதுகாப்பு கருதியும் வாகன ஓட்டிகள் சாலை போக்குவரத்து விதிகளை பின்பற்றுமாறு பொதுமக்களுக்கு பெங்களூரு போக்குவரத்து போலீசார் அறிவுறுத்தியுள்ளனர்.

    • மோட்டார் சைக்கிள்களில் வரும் பலர் ஹெல்மெட் அணியாமல் உள்ளனர்.
    • வாகன ஓட்டிகளுக்கு விழிப்புணர்வு துண்டு பிரசுரங்கள் வழங்கபட்டது

    மயிலாடுதுறை:

    மயிலாடுதுறையில் தீபாவளி பண்டிகையையொட்டி அதிக அளவில் பொதுமக்கள் மோட்டார் சைக்கிள்களில் பொருட்கள் வாங்க குவிந்த வண்ணம் உள்ளனர். மோட்டார் சைக்கிள்களில் வரும் பலர் ஹெல்மெட் அணியாமல் சாலை விதிமுறைகளை பின்பற்றாமல் செல்கின்றனர். இதனால் ஹெல்மெட் அணிவதன் அவசியத்தை பொதுமக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும் என்ற நோக்கில் மயிலாடுதுறை போக்குவரத்து போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர்கள் கண்ணன், முருகன் மற்றும் போலீசார் கிட்டப்பா அங்காடி பகுதியில் ஹெல்மெட் விழிப்புணர்வு பிரசாரத்தை மேற்கொண்டனர்.

    அப்போது விளம்பர வாகனத்துடன் விழிப்புணர்வு ஏற்படுத்தியதோடு, வாகன ஓட்டிகளுக்கு விழிப்பு ணர்வு துண்டு பிரசுரங்களையும் போக்குவரத்து போலீசார் வழங்கி கட்டாயம் ஹெல்மெட் அணிந்து வாகனம் ஓட்ட வேண்டும் என வலியுறுத்தினர்.

    • சாலை விதிகளை பின்பற்றி மாணவர்கள் சைக்கிள்களை இயக்க வேண்டும் என்று விழாவில் அமைச்சர் பேசினார்.
    • சிவகங்கையில் இலவச சைக்கிள்கள் வழங்கும் நிகழ்ச்சி நடந்தது.

    சிவகங்கை

    சிவகங்கை அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளியில் மாணவிகளுக்கு விலையில்லா சைக்கிள்கள் வழங்கும் நிகழ்ச்சி நடந்தது. கலெக்டர் ஆஷா அஜீத் தலைமை தாங்கினார். அமைச்சர் பெரியகருப்பன் கலந்து கொண்டு மாணவி களுக்கு சைக்கிள்களை வழங்கினார். பின்னர் அவர் பேசியதாவது:-

    விலையில்லா சைக்கிள் கள் வழங்கும் திட்டத்தின் கீழ் சிவகங்கை மாவட்டத்தில் 2022-23ம் கல்வியாண்டில் 11-ம் வகுப்பு பயின்ற மாணவ-மாணவி களுக்கான விலையில்லா சைக்கிள் வழங்கும் அடிப் படையில் மாவட்டத்திலுள்ள 68 அரசு பள்ளிகள் உள்ளிட்ட 105 அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிக ளில் பயிலும் 4,270 மாண வர்கள் மற்றும் 6,323 மாணவிகள் என 10 ஆயிரத்து 593 மாணவர் ளுகக்கு சைக்கிள்கள் வழங்கப்பட உள்ளன. இதில் மாணவிகளுக்கு தலா ரூ.4 ஆயிரத்து 760 மதிப்பீட்டிலும் மாணவர்களுக்கு தலா ரூ.4 ஆயிரம் 900 மதிப்பீட்டிலும் என சைக்கிள்கள் வழங்கப் பட உள்ளன.

    அதன் தொடக்கமாக இன்றைய தினம் சிவகங்கை அரசு மகளிர் மேல்நிலைப் பள்ளியில் 210 மாணவிகளுக்கு ரூ.9 லட்சத்து 99 ஆயிரத்து 600 மதிப்பீட்டில் விலையில்லா சைக்கிள்கள் வழங்கப்பட்டுள்ளன.

    இதனைத்தொடர்ந்து, அனைத்து பள்ளிகளிலும் விலையில்லா சைக்கிள்கள் வழங்கப்பட உள்ளன.

    சூற்றுச்சூழலை பாது காப்பதற்கும் அடிப்படை யாக சைக்கிள்கள் விளங்கி வருகிறது. இன்றைய தினம் இந்நிகழ்ச்சிகளின் மூலம் விலையில்லா சைக்கிள் களை பெற்றுள்ள மாணவர் கள் அனைவரும் சாலை விதிகளை பின்பற்றி, முறையாக சைக்கிள்களை ஓட்ட வேண்டும்.

    இதுபோன்று மாணவர்களின் நலனை கருத்தில் கொண்டு தமிழக அரசால் செயல்படுத்தப்பட்டு வரும் நலத்திட்டங்கள் மூலம் பயன்பெற்று வரும் மாணவர்கள் திட்டங்களின் வெற்றிக்கு உறுதுணையாக இருந்திட வேண்டும்.

    இவ்வாறு அவர் பேசி னார்.இந்நிகழ்ச்சியில், காரைக் குடி சட்டமன்ற உறுப்பினர் மாங்குடி, மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் அம்பிகாபதி, சிவகங்கை நகர்மன்ற தலைவர் துரை ஆனந்த், சிவகங்கை ஊராட்சி ஒன்றிய குழு தலைவர் மஞ்சுளா பாலசந்தர், காஞ்சிரங்கால் ஊராட்சி மன்ற தலைவர் மணிமுத்து, நகர்மன்ற உறுப்பினர்கள் மகேஷ் குமார், விஜயகுமார், பள்ளி தலைமையாசிரியை சிவமணி, மாணவிகள் மற்றும் ஆசிரியர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர். 

    • சாலை விதிகள் விழிப்புணர்வு கூட்டம் நடந்தது.
    • இதனால் உயிர்பலியும் அந்த குடும்பத்தில் பொருளாதார இழப்பும் ஏற்படுகிறது என்றார்.

    சிவகங்கை

    சிவகங்கை மன்னர் மேல்நிலைப்பள்ளி மாணவ மாணவிகளுக்கு சாலை பாதுகாப்பு விதிகளை பற்றிய விழிப்புணர்வு கூட்டம் பள்ளி அரங்கத்தில் நடந்தது. மாவட்ட போக்கு வரத்து அலுவலர் மூக்கன் தலைமை தாங்கினார்.

    பள்ளி முதல்வர் சுந்தர்ராஜன் முன்னிலை வகித்தார். போக்குவரத்து அலுவலர் மூக்கன் பேசுகையில், சாலை விபத்துகள் எதிர்பாராமல் கண் இமைக்கும் நேரத்தில் நடந்துவிடும்.

    சாலை விதிகளில் விழிப்பு ணர்வு இல்லாமை, கவனச்சிதறல், பொறுப்பு ணர்வு, விதிமுறைகளை கடைப்பிடிக்காதிருத்தல், வாகனங்கள் பற்றி அறியாமை, அவசரம், அலட்சியம், போன்ற வற்றைச் சொல்லலாம்.

    மதுபோதையில் வாகனம் ஓட்டுவதால் விபத்துகள் நடக்கிறது. இதனால் உயிர்பலியும் அந்த குடும்பத்தில் பொருளாதார இழப்பும் ஏற்படுகிறது என்றார். 

    • விபத்துகளின் எண்ணிக்கை ஆண்டு தோறும் அதிகரித்து வருவதை தடுப்பதற்கு மத்திய அரசு புதிய மோட்டார் வாகன சட்டத்தை அமல்படுத்தியது.
    • புதிய மோட்டார் வாகன சட்டத்தின்படி அபராதம் விதிக்க கையடக்க கருவியும், உயர்த்தப்பட்ட கட்டணம் பதிவேற்றம் செய்யப்பட்டது.

    நெல்லை:

    நாடு முழுவதும் சாலை விபத்துகளின் எண்ணிக்கை ஆண்டு தோறும் அதிகரித்து வருகிறது. இதனால் பல உயிரிழப்புகளும் ஏற்பட்டு வருகிறது.

    அபராதம் உயர்வு

    அதனை கட்டுப்படுத்தும் வகையில் மத்திய அரசு புதிய மோட்டார் வாகன சட்டத்தை அமல்படுத்தியது. அதன்படி சாலைவிதிகளை மீறுவோருக்கு விதிக்கப்படும் அபராத தொகை 10 மடங்கு உயர்த்தப்பட்டது.

    இந்நிலையில் புதிய வாகன மோட்டார் சட்டம் தமிழகம் முழுவதும் இன்று அமலுக்கு வந்தது. இதைத்தொடர்ந்து நெல்லை உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் புதிய மோட்டார் வாகன சட்டத்தின்படி அபராதம் விதிக்க கையடக்க கருவியும், உயர்த்தப்பட்ட கட்டணம் பதிவேற்றம் செய்யப்பட்டது.

    அதிரடி சோதனை

    நெல்லை மாவட்டத்திலும் இந்த புதிய சட்டம் இன்று முதல் அமலுக்கு வந்தது. அதன்படி சந்திப்பு மேம்பாலம் பகுதியில் போக்குவரத்து சப்- இன்ஸ்பெக்டர்கள் ஜான் கென்னடி, சப்பாணி தலைமையிலும், வண்ணார்பேட்டை செல்லப்பாண்டியன் சிலை அருகில் சப்- இன்ஸ்பெக்டர் அய்யப்பன் தலைமையிலும் அதிரடி சோதனையில் ஈடுபட்டனர்.

    அப்போது ஹெல்மெட் அணியாமல் சென்றவர்கள், அதிவேகத்தில் சென்றவர்கள் உள்ளிட்ட விதிமுறைகளை மீறி சென்றவர்களை மடக்கி பிடித்து புதிய மோட்டார் வாகன சட்டத்தின்படி10 மடங்கு அபராதம் வசூலிக்கப்பட்டது.

    அதன்படி ஹெல்மெட் அணியாமல் சென்றவர்களிடம் ரூ.1000, ஓட்டுனர் உரிமம் இல்லாமல் சென்றவர்களிடம் ரூ.5,000, மது அருந்திவிட்டு வாகனம் ஓட்டியவர்களுக்கு ரூ.15 ஆயிரம், இன்சூரன்ஸ் இல்லாமல் வாகனம் ஓட்டியவவர்களுக்கு ரூ.5 ஆயிரம், அதிவேகமாக கனரக வாகனங்கள் ஓட்டிய வர்களிடம் ரூ.4 ஆயிரம் என வசூலிக்கப்பட்டது.

    இன்று முதல் நாள் என்பதால் சில இடங்களில் வாகன ஓட்டிகளுககு அறிவுரைகள் வழங்கி விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.

    இதுகுறித்து மேலப்பாளையத்தை சேர்ந்த வியாபாரி இஸ்மாயில் கூறிய தாவது:-

    நான் மேலப்பா ளையத்தில் மளிகை கடை நடத்தி வருகிறேன். தினமும் பொரு ட்கள் மற்றும் காய்கறிகள் வாங்கு வதற்காக டவுன் நயினார் குளம் மார்க்கெட்டுக்கு வந்து செல் கிறேன்.

    இந்த பகுதி எப்போதும் போக்கு வரத்து நிறைந்ததாகும். எனவே ஹெல்மெட் அணிந்து செல்வது வாகன ஓட்டிகளுக்கு பயன் உள்ளதாக அமையும்.

    இதனை கருத்தில் கொண்டே அரசு அபராத தொகையை உயர்த்தி உள்ளது. எனவே இதனை நான் வரவேற்கிறேன் என்றார்.

    பாளையை சேர்ந்த முத்துக் கிருஷ்ணன் கூறிய தாவது:-

    நான் தனியார் இன்சூர ன்ஸ் கம்பெனி யில் வேலை பார்த்து வருகிறேன். இதனால் விபத்து வழக்கு தொடர்பாக அடிக்கடி கோர்ட்டுக்கு சென்று வருகிறேன்.

    விபத்து வழக்கு களில் சிக்கி உயிரிழ ப்பவர்கள் பெரு ம்பாலும் ஹெல்மெட் அணியாமல் சென்றவ ர்களாக இருக்கிறார்கள்.

    இதில் உயிரிழக்கும் பலர் ஏழ்மை குடும்பத்தை சேர்ந்தவர்களாக உள்ளனர். ஆனால் அவர்கள் ஹெல்மெட் அணியாமல் சென்று உயிரிழந்ததால் அவர்களுக்கு கிடைக்க வேண்டிய இன்சூரன்ஸ் பணமும் கிடைக்காமல் போய் விடுகிறது.

    இதனை கருத்தில் கொண்டே வாகன சட்டம் கடுமையாக்கப்பட்டுள்ளது.

    இதன்படி ஹெல்மெட் அணியாமல் செல்வோ ர்களுக்கு ரூ.1000 அபராதம் வசூலிக்கப்படுகிறது. அதனை தவிர்க்க ரூ.400-க்கு ஹெல்மெட் அணிந்து செல்லலாம் என்பது என கருத்து.

    போக்குவரத்து போலீசார் கூறியதாவது:-

    நாளுக்கு நாள் வாகன நெருக்கடி அதிகரித்து வருகிறது. இதனால் விபத்துகளும் அதிகரிக்கிறது. நாங்கள் அபராதம் விதிக்கும் வழக்குகளில் பெரும்பாலும் மது அருந்துவிட்டு வானம் ஓட்டுதல், சீட் பெல்ட் அணியாமல் வாகனம் ஓட்டுதல், ஹெல்மெட் அணியாமல் மோட்டார் சைக்கிள் ஓட்டுதல் உள்ளிட்ட வழக்குகளில் அதிக அளவில் சிக்குகிறார்கள்.

    வாகன ஓட்டிகளின் நலன் கருதியே புதிய வாகன சட்டம் கொண்டுவரப்பட்டுள்ளது. அதன்படியே நாங்கள் அபராதம் விதிக்கிறோம். பொது மக்களிடம் அபராதம் வசூலிக்க வேண்டும் என்பது எங்களது நோக்கமல்ல. எனவே உங்களுக்கும், உங்கள் குடும்பத்தினருக்கும் பாதுகாப்பு கருதி விதிமுறை களை கடைபிடித்து வாகனம் ஓட்ட வேண்டும்.

    இவ்வாறு அவர் கூறினர்.

    சாலை விதிகளை மாணவர்கள் மதிக்க வேண்டும் என்று கரூர் ஆசான் கல்லூரி விழாவில் கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு பாஸ்கரன் பேசினார்.

    கரூர்:

    கரூர் ஆசான் கலை அறிவியல் கல்லூரி, கரூர் மாவட்ட காவல் துறை, வட்டார போக்குவரத்து அலுவலகம் இணைந்து நடத்திய சாலைபாதுகாப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி ஆசான் கல்லூரியில் நடந்தது.

    கல்லூரி செயலாளர்ஆர். ஜெக நாதன் தலைமைதாங்கினார். துணை முதல்வர் சரவண பிரகாஷ் வரவேற்றார். துணை போலீஸ் சூப்பிரண்டு கும்மராஜா, வட்டார போக்குவரத்து அலுவலர் சுப்பிரமணின் ஆகியோர் முன்னிலை வகித்தனர். இதில் மாவட்ட கூடுதல் போலீஸ் சூப்பிரண்டுபாஸ்கரன் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு போட்டியில் வெற்றி பெற்ற மாணவிகளுக்கு பரிசு வழங்கி பேசியதாவது:-

    காவல்துறையினர் உங்கள் நண்பர்கள். நானும் உங்களை போன்று மாணவனாக இருந்து தான் வந்திருக்கிறேன். இளம் கன்று பயமறியாது என்பார்கள். ஆனால் நாம் அஜாக்கிரதையாக இருந்து ஏதாவது அசம்பாவிதம் நடந்து விட்டால் உங்கள் பெற்றோர் மட்டுமல்லாமல் உறவினர்கள், நண்பர்கள் இக்கட்டான நிலைக்கு தள்ளப்படுகிறார்கள். ஒரு நாள் கல்லூரியில் இருந்து வழக்கமாக நேரத்தை தாண்டி அரை மணிநேரம் கழித்து வீட்டுக்கு சென்று பாருங்கள். வழக்கமான நேரத்தை தாண்டி ஒவ்வொரு நிமிடமும் உங்களை பற்றியே பெற்றோருக்கு சிந்தனை ஓடும். பின்னர் உங்களை பார்த்த பின்னரே வேறு வேலையில் கவனம் செலுத்துவார்கள்.

    ஆகவே சாலை விதிகளை மதித்து நடக்க வேண்டும். இருசக்கர வாகனங்களில் செல்லும்போது ஹெல்மெட் அணிந்து செல்லுங்கள் நான் இந்த நிலைக்கு உயர்ந் திருப்பதால் தான் நான் படித்த கல்லூரியிலேயே என்னை சிறப்பு விருந்தினராக அழைத்தார்கள். எனவே நீங்களும் வாழ்வில் உன்னத நிலையை அடைய வாழ்த்துகிறேன்.

    இவ்வாறு அ வர் கூறினார். 

    நிகழ்ச்சியில் கல்லூரி மாணவ-மாணவிகள் திரளாக பங்கேற்றனர்.

    ×