சாலை விதிகள் விழிப்புணர்வு கூட்டம்

சாலை விதிகள் விழிப்புணர்வு கூட்டம் நடந்தது. இதனால் உயிர்பலியும் அந்த குடும்பத்தில் பொருளாதார இழப்பும் ஏற்படுகிறது என்றார்.
சாலை விதிகள் விழிப்புணர்வு கூட்டம்
Published on

சிவகங்கை

சிவகங்கை மன்னர் மேல்நிலைப்பள்ளி மாணவ மாணவிகளுக்கு சாலை பாதுகாப்பு விதிகளை பற்றிய விழிப்புணர்வு கூட்டம் பள்ளி அரங்கத்தில் நடந்தது. மாவட்ட போக்கு வரத்து அலுவலர் மூக்கன் தலைமை தாங்கினார்.

பள்ளி முதல்வர் சுந்தர்ராஜன் முன்னிலை வகித்தார். போக்குவரத்து அலுவலர் மூக்கன் பேசுகையில், சாலை விபத்துகள் எதிர்பாராமல் கண் இமைக்கும் நேரத்தில் நடந்துவிடும்.

சாலை விதிகளில் விழிப்பு ணர்வு இல்லாமை, கவனச்சிதறல், பொறுப்பு ணர்வு, விதிமுறைகளை கடைப்பிடிக்காதிருத்தல், வாகனங்கள் பற்றி அறியாமை, அவசரம், அலட்சியம், போன்ற வற்றைச் சொல்லலாம்.

மதுபோதையில் வாகனம் ஓட்டுவதால் விபத்துகள் நடக்கிறது. இதனால் உயிர்பலியும் அந்த குடும்பத்தில் பொருளாதார இழப்பும் ஏற்படுகிறது என்றார். 

X

Maalai Malar
www.maalaimalar.com