search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "சந்திரசேகர ராவ்"

    • சீலாப்பூர் கிராமத்தில் ஆளும் பி.ஆர்.எஸ். கட்சி தலைவர்கள் வாக்காளர்களிடம் சத்தியம் வாங்கிவிட்டு பணம் வழங்கியுள்ளனர்.
    • வீடியோ காட்சிகள் சமூக வலைதளங்களில் பரவியது.

    தெலுங்கானா மாநில தேர்தலையொட்டி நேற்று மாநிலம் முழுவதும் வாக்காளர்களுக்கு பணம் வினியோகம் செய்யப்பட்டுள்ளன.

    விகாராபாத் மாவட்டத்தில் சீலாப்பூர் கிராமத்தில் ஆளும் பி.ஆர்.எஸ். கட்சி தலைவர்கள் வாக்காளர்களிடம் சத்தியம் வாங்கிவிட்டு பணம் வழங்கியுள்ளனர்.

    இது தொடர்பான வீடியோ வெளியாகி உள்ளது. அதில் பிரமுகர் ஒருவர் ரூ.500 நோட்டுகளை வைத்துக்கொண்டு கார் சின்னத்துக்கு சத்தியமாக ஓட்டு போடுவோம் என பெண் வாக்காளர்களை கூறவைத்து பணம் வினியோகம் செய்துள்ளார்.

    இந்த காட்சிகள் சமூக வலைதளங்களில் பரவியது. இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.

    இது தொடர்பாக காங்கிரஸ் கட்சியினர் புகார் அளித்துள்ளனர். போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • வாக்குப்பதிவு நடைபெறும் இடத்தில் சர்ச்சைக்குரிய வகையில் பேசியதாக பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்கள் கவிதாவுக்கு கண்டனம் தெரிவித்தனர்.
    • கவிதா பேட்டி குறித்து நடவடிக்கை எடுக்கப்படும் என தேர்தல் அதிகாரி விகாஸ் ராஜ் தெரிவித்தார்.

    தெலுங்கானா முதல்- மந்திரி சந்திரசேகர ராவ் மகள் கவிதா இன்று காலை ஐதராபாத் பஞ்சாரா ஹில்சில் உள்ள டி.ஏ.வி. பள்ளியில் வாக்களித்தார்.

    வாக்களித்து விட்டு வந்த பின்னர் பேட்டி அளித்த கவிதா பி.ஆர்.எஸ். கட்சிக்கு பொதுமக்கள் வாக்களிக்க வேண்டும் என வேண்டுகோள் விடுத்தார்.

    வாக்குப்பதிவு நடைபெறும் இடத்தில் சர்ச்சைக்குரிய வகையில் பேசியதாக பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்கள் கவிதாவுக்கு கண்டனம் தெரிவித்தனர்.

    மேலும் கவிதா பேட்டி குறித்து நடவடிக்கை எடுக்கப்படும் என தேர்தல் அதிகாரி விகாஸ் ராஜ் தெரிவித்தார்.

    • தெலுங்கானா தேர்தலில் சந்திரசேகர ராவ் முதலமைச்சராக காங்கிரஸ் ஆதரவு அளிக்கும்.
    • பாராளுமன்ற தேர்தலில் ராகுல் காந்தி பிரதமராக சந்திரசேகர ராவ் ஆதரவு அளிப்பார்.

    தெலுங்கானாவில் வருகிற 30-ந்தேதி (நாளைமறுதினம்) சட்டசபை தேர்தல் வாக்குப்பதிவு நடைபெற இருக்கிறது. 119 இடங்களுக்கும் ஒரே கட்டமாக வாக்குப்பதிவு நடக்க இருக்கிறது. நேற்று மத்திய அமைச்சரும், பா.ஜனதாவின் முக்கிய தலைவர்களில் ஒருவருமான அமித் ஷா நேற்று தேர்தல் பிரசாரம் மேற்கொண்டார்.

    அப்போது அமித் ஷா கூறியதாவது:-

    காங்கிரஸ் கட்சிக்கும், சந்திரசேகர ராவின் பாரதிய ராஷ்டிரிய சமிதி கட்சிக்கும் இடையில் ரகசிய புரிந்துணர்வு உள்ளது. காங்கிரஸ் கட்சிக்கு அளிக்கும் ஒவ்வொரு வாக்கும் பிஆர்எஸ் கட்சிக்கு செல்லும். இதனால் வாக்காளர்கள் பா.ஜனதாவுக்கு வாக்களிக்க வேண்டும்.

     பா.ஜனதா வேட்பாளர் ஈடால ராஜேந்தருக்கு அதிக அளவில் வாக்களிப்பதன் மூலம், அடுத்த தேர்தலில் பிஆர்எஸ் வேட்பாளர்களை பெற முடியாது என்ற தெளிவான தகவலை சந்திரசேகர ராவுக்கு அனுப்ப முடியும்.

     தெலுங்கானா தேர்தலில் சந்திரசேகர ராவ் முதலமைச்சராக காங்கிரஸ் ஆதரவளிக்கும். அதேபோல் பாராளுமன்ற தேர்தலில் ராகுல் காந்தி பிரதமராக சந்திரசேகர ராவ் ஆதரவு அளிப்பார். ஆனால், அந்த பதவிகள் காலியாக இல்லை. காங்கிரஸ், பிஆர்எஸ் கட்சிகள் குடும்ப கட்சிகள். ஊழல் மற்றும் குடும்ப ஆட்சிக்கு உறுதியளிக்கும் கட்சிகள்.

    இவ்வாறு அமித் ஷா தெரிவித்தார்.

    • காங்கிரஸ் வேட்பாளர்களை ஆதரித்து பிரியங்கா காந்தி 2 நாள்களாக பிரசாரம் செய்து வருகிறார்
    • பிரதமர் மோடி, மத்திய மந்திரிகள் உள்ளிட்ட தேசிய தலைவர்கள் வருகையால் தெலுங்கானா முழுவதும் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.

    திருப்பதி:

    தெலுங்கானா மாநிலத்தில் உள்ள 119 சட்டமன்ற தொகுதிகளுக்கு வருகிற 30-ந் தேதி ஒரே கட்டமாக தேர்தல் நடக்கிறது.

    தேர்தல் பிரசாரம் வருகிற 28-ந்தேதி மாலை 5 மணியுடன் நிறைவு பெறுகிறது. இந்நிலையில் நேற்று முதல் தொடர்ந்து 3 நாட்களுக்கு தேசிய தலைவர்கள் தெலுங்கானாவில் தொடர் பிரசாரத்தில் ஈடுபட்டுள்ளனர்.

    இதில் நேற்று மாலை பா.ஜ.க. வேட்பாளர்களுக்கு வாக்கு சேகரிப்பதற்காக கட்சியின் மூத்த தலைவரும் மத்திய உள்துறை மந்திரியுமான அமித்ஷா பிரசாரம் செய்தார். ராணுவ மந்திரி ராஜ்நாத்சிங் இன்று பிரசாரம் செய்கிறார்.

     இதே போன்று காங்கிரஸ் வேட்பாளர்களை ஆதரித்து பிரியங்கா காந்தி 2 நாளாக பிரசாரம் செய்து வருகிறார். இன்று மாலை காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல்காந்தி பிரசாரம் செய்கிறார்.

    இன்று மாலை முதல் அடுத்த 3 நாட்களுக்கு பிரதமர் மோடி தெலுங்கானாவுக்கு வந்து பிரசாரம் செய்கிறார். குறிப்பாக பொதுக்கூட்டம், ரோடுஷோ ஆகியவற்றில் அவர் பங்கேற்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. பா.ஜ.க., காங்கிரஸ் கட்சியினர் போட்டி பிரசாரம் செய்து வருகின்றனர்.

    பிரதமர் மோடி, மத்திய மந்திரிகள் உள்ளிட்ட தேசிய தலைவர்கள் வருகையால் தெலுங்கானா முழுவதும் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.

    இதனிடையே தெலுங்கானாவில் ஆளும் பாரத் ராஷ்டிரிய சமிதி தலைவர் சந்திரசேகரராவ், அவரது மகன் மற்றும் ஜனசேனா கட்சி தலைவர் பவன் கல்யாண் உள்ளிட்ட அனைத்து கட்சிகளை சேர்ந்த மாநில, தேசிய தலைவர்கள் சூறாவளி பிரசாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

    தேர்தலுக்கு இன்னும் 5 நாட்களே உள்ளதால் தெலுங்கானா முழுவதும் தேசிய தலைவர்களின் படையெடுப்பால் களை கட்டியுள்ளது.

    • மாஸ்டர்கள் களத்தில் நிற்கும் போதெல்லாம் அங்கு மாயாஜாலம் நிகழ்கிறது என்று கவிதா பதிவிட்டுள்ளார்.
    • காலேஸ்வரம் ஊழலில் கே.சி.ஆர்.ஐ. மிஞ்ச ஒருவரும் இல்லை என்று கிண்டல் செய்து காங்கிரஸ் பதிவிட்டுள்ளது.

    திருப்பதி:

    தெலுங்கானா முதல்-மந்திரி சந்திரசேகர ராவ் மகள் கவிதா தன்னுடைய தந்தையை கிரிக்கெட் வீரர் விராட் கோலியுடன் ஒப்பிட்டு பாராட்டு தெரிவித்துள்ளார்.

    கவிதா தன்னுடைய எக்ஸ் தளத்தில் முதல்- மந்திரி கே.சி.ஆர்.ஐ. போல் விராட் கோலி தோற்கடிக்க முடியாதவர்.

    மாஸ்டர்கள் களத்தில் நிற்கும் போதெல்லாம் அங்கு மாயாஜாலம் நிகழ்கிறது என்று பதிவிட்டுள்ளார்.

    இதற்கு பதிலடி கொடுத்து எக்ஸ் தள பக்கத்தில் காங்கிரஸ் கட்சி செய்துள்ள பதிவில், நாட்டுக்காக விளையாடுவதற்கும், கமிஷனுக்காக செயல்படுவதற்கும் வித்தியாசம் உள்ளது.

    கிரிக்கெட் வீரர் விராட் கோலிக்கு போட்டியில்லை. காலேஸ்வரம் ஊழலில் கே.சி.ஆர்.ஐ. மிஞ்ச ஒருவரும் இல்லை என்று கிண்டல் செய்து பதிவிட்டுள்ளது.

    • தெலுங்கானாவில் வரும் 30-ம் தேதி தேர்தல் நடைபெற உள்ளது.
    • பி.ஆர்.எஸ்., பா.ஜ.க., காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகளுக்கு இடையே போட்டி நிலவுகிறது.

    ஐதராபாத்:

    தெலுங்கானாவில் உள்ள 119 சட்டசபை தொகுதிகளுக்கு வரும் 30-ம் தேதி தேர்தல் நடைபெற உள்ளது. இதில் பி.ஆர்.எஸ்., பா.ஜ.க., காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகளுக்கு இடையே கடும் போட்டி நிலவுகிறது.

    அனைத்து கட்சிகளின் தலைவர்களும் தெலுங்கானாவில் தீவிர பிரசாரம் செய்து வருகின்றனர்.

    இந்நிலையில், தெலுங்கானா மாநிலத்தில் பூத் தொகுதியில் நடைபெற்ற தேர்தல் பிரசாரக் கூட்டத்தில் முதல் மந்திரியும், பாரத் ராஷ்டிர சமிதி கட்சியின் தலைவருமான கே.சந்திரசேகர ராவ் கலந்துகொண்டார். அப்போது அவர் பேசியதாவது:

    காங்கிரசும், பா.ஜ.க.வும் ஒரே நாணயத்தின் இரு பக்கங்கள்.

    பிரதமர் மோடிக்கு 100 கடிதங்கள் எழுதியும் அவர்கள் எங்களுக்கு ஒரு மருத்துவக் கல்லூரியைக் கூட தரவில்லை.

    பா.ஜ.க.வுக்கு வாக்களிப்பது வீண். காங்கிரசுக்கு வாக்களிப்பது அதைவிட பெரிய வீண் என தெரிவித்தார்.

    • உங்கள் வாக்கை கார் சின்னத்திற்கு செலுத்த வேண்டும் என 2 கைகளையும் கூப்பி வணங்கியபடி கேட்டுக் கொண்டனர்.
    • வேட்பாளர்கள் விதவிதமாக வாக்கு சேகரித்து வருவது பரபரப்பாக பேசப்படுகிறது.

    தெலுங்கானா மாநிலத்தில் சட்டசபை தேர்தல் பிரசாரம் களை கட்டி உள்ளது. அரசியல் கட்சி தலைவர்கள் வேட்பாளர்கள் வாக்காளர்களை கவர பல்வேறு யுக்திகளை பின்பற்றி வாக்கு சேகரித்து வருகிறார்கள்.

    ஆலேரு தொகுதியில் சந்திரசேகர ராவ் கட்சியின் வேட்பாளர் கங்கிடி சுனிதாவை ஆதரித்து அந்த கட்சியினர் தீவிரமாக வாக்கு சேகரித்து வருகின்றனர். அவர்கள் தெருவில் வாக்கு சேகரித்துக் கொண்டிருந்தனர்.

    அப்போது தொழிலாளி ஒருவர் வீட்டின் முன்பு குளித்துக் கொண்டிருந்தார். அவரைப் பார்த்ததும் வாக்கு சேகரித்தவர்கள் அருகில் ஓடி சென்றனர். அவருக்கு சோப்பு போட்டு குளிப்பாட்டினர்.

    பின்னர் உங்கள் வாக்கை கார் சின்னத்திற்கு செலுத்த வேண்டும் என 2 கைகளையும் கூப்பி வணங்கியபடி கேட்டுக் கொண்டனர்.

    இது தவிர புதுசு புதுசாக பிரசாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

    ராகுல் காந்தி பிரசாரத்தின் போது விஜயபேரியில் சாலையோர ஓட்டல் ஒன்றில் மாஸ்டராக மாறி தோசை சுட்டார்.

    ஏ.ஐ.எம்.ஐ. எம் கட்சி தலைவர் ஒவைசி ஓட்டலில் தொண்டர்களுடன் அமர்ந்து இட்லி தோசை சாப்பிடுகிறார். மேலும் மற்றவர்களுக்கும் பகிர்ந்து வாக்கு சேகரித்து வருகிறார்.

    தெலுங்கானா அமைச்சரும் பி.ஆர்.எஸ். வேட்பாளருமான அஜய்குமார் என்பவர் பிரசாரத்தின் போது சவரவ தொழிலாளியாக மாறிவிடுகிறார்.

    அவர் கட்டிங் சேவிங் செய்து வாக்கு சேகரித்தார். அவரிடம் பலர் முடி வெட்டி உள்ளதாக கூறப்படுகிறது.

    மகபூப் நகர் பி.ஆர்.எஸ். கட்சி வேட்பாளர் ஸ்ரீநிவாஸ் கவுட் வயலில் இறங்கி விவசாயிகளுடன் வேலை செய்தார். அவர் வேர்கடலை பறித்து கொடுத்து உதவினார்.

    வேட்பாளர்கள் விதவிதமாக வாக்கு சேகரித்து வருவது பரபரப்பாக பேசப்படுகிறது.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • வேட்புமனுக்கள் மீதான பரிசீலனை முடிவுற்று இறுதிக்கட்ட வேட்பாளர்கள் பட்டியல் வெளியிடப்பட்டது.
    • இறுதி வேட்பாளர் பட்டியல் இன்று மாலை வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

    திருப்பதி:

    தெலுங்கானாவில் வருகிற 30-ந் தேதி 119 தொகுதிகளுக்கும் ஒரே கட்டமாக சட்டப்பேரவை தேர்தல் நடைபெற உள்ளது.

    இதில் 3-வது முறையாக வெற்றி பெற்று சாதனை படைப்போம் என்று பிஆர்எஸ் கட்சி தலைவர் முதல் மந்திரி கே. சந்திரசேகர ராவ் நம்பிக்கையுடன் கூறி வருகிறார். மாதம் 4,000 உதவித் தொகை, ரூ.500-க்கு கியாஸ் சிலிண்டர் என காங்கிரசின் தேர்தல் வாக்குறுதிகளும் மக்களை கவர்ந்துள்ளது.

    டார்கெட் 75 என்ற இலக்குடன் பா.ஜ.க. களமிறங்கி உள்ளது.

    இந்நிலையில், வேட்புமனுக்கள் மீதான பரிசீலனை முடிவுற்று இறுதிக்கட்ட வேட்பாளர்கள் பட்டியல் வெளியிடப்பட்டது.

    அதன்படி, 119 தொகுதிகளுக்கு. மொத்தம் 4,798 பேர் வேட்புமனு தாக்கல் செய்திருந்தனர். இதில் வேட்பு மனு பரிசீலனை செய்ததில் 2,898 வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர்.

    வேட்புமனுக்களை வாபஸ் பெற இன்று கடைசி நாள் என்பதால், இறுதி வேட்பாளர் பட்டியல் இன்று மாலை வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

    தெலுங்கானா முதல் மந்திரி சந்திரசேகர ராவ் போட்டியிடும் கஜ்வேல் தொகுதியில் அவரை எதிர்த்து மொத்தம் 113 பேர் போட்டியிடுகின்றனர்.

    இதேபோன்று அவர் போட்டியிடும் மற்றொரு தொகுதியான காமாரெட்டி தொகுதியில் சந்திரசேகர ராவை எதிர்த்து 57 பேர் போட்டியிடுகின்றனர்.

    • ஆண்டுக்கு விவசாயத்தின் மூலம் ரூ.1.44 கோடி வருமானம் உள்ளது.
    • தனது மனைவி ஷோபா பெயரில் ரூ.7 கோடி அசையும் சொத்துக்கள் உள்ளன.

    தெலுங்கானாவில் சட்டமன்றத் தேர்தல் வருகின்ற 30-ந் தேதி நடைபெற உள்ளது. தெலுங்கானா முதல்-மந்திரி சந்திரசேகர ராவ் நேற்று போட்டியிட மனு தாக்கல் செய்தார்.

    மனு தாக்கலின் போது அவர் அளித்துள்ள பிரமாண பத்திரத்தில் தான் பி.ஏ. பட்டதாரி, நான் ஒரு விவசாயி. ஆண்டுக்கு விவசாயத்தின் மூலம் ரூ.1.44 கோடி வருமானம் உள்ளது. சொந்தமாக ஒரு கார் கூட இல்லை.

    தனது பெயரில் அசையா சொத்துக்கள் ரூ.17.83 கோடியும், தனது மனைவி ஷோபா பெயரில் ரூ.7 கோடி அசையும் சொத்துக்கள் உள்ளன.

    பிரிக்கப்படாத தனது குடும்பத்தின் ஒட்டுமொத்த சொத்து மதிப்பு ரூ.9 கோடி உள்ளதாக கூறியுள்ளார்.

    ரூ.17 கோடிக்கு மேல் கடன் உள்ளதாகவும் கடந்த மார்ச் 31-ந் தேதி வரை ஆண்டு வருமானம் 1.60 கோடி எனவும் பிரமாண பத்திரத்தில் தெரிவித்துள்ளார்.

    • தெலுங்கானா முதல்வர் சந்திரசேகர ராவ் இரண்டு தொகுதிகளில் போட்டியிடுகிறார்.
    • கமரெட்டி தொகுதியில் மாநில தலைவரை அவருக்கு எதிராக நிறுத்தியுள்ளது காங்கிரஸ்.

    119 தொகுதிகளை கொண்ட தெலுங்கானாவில் வருகிற 30-ந்தேதி சட்டசபை தேர்தல் வாக்குப்பதிவு நடைபெற இருக்கிறது. நாளை வேட்புமனு தாக்கல் செய்ய கடைசி நாளாகும்.

    அம்மாநில முதல்வரும் பாரதிய ராஷ்ரிய சமிதி கட்சி தலைவருமான சந்திரசேகராவ் கமரெட்டி மற்றும் கஜ்வெல் ஆகிய இரண்டு தொகுதிகளில் போட்டியிடுகிறார். இந்த நிலையில், இன்று கஜ்வெல் தொகுதியில் போட்டியிடுவதற்கு வேட்புமனு தாக்கல் செய்தார்.

    13-ந்தேதி வேட்புமனு மீதான பரிசீலனை நடைபெறுகிறது. 15-ந்தேதி வேட்புமனு திரும்பப்பெற கடைசி நாளாகும். அன்றைய தினம் ஒவ்வொரு தொகுதிகளிலும் போட்டியிடுபவர்களின் பெயர்கள் அதிகாரப்பூர்வமாக வெளியிடப்படும்.

    வேட்புமனு தாக்கல் செய்த கடைசி நாளான நாளை கமரெட்டியில் வேட்புமனு தாக்கல் செய்யலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. கமரெட்டில் காங்கிரஸ் சார்பில், அக்கட்சியின் மாநில தலைவர் ரேவந்த் ரெட்டி நிறுத்தப்பட்டுள்ளார்.

    • ‘தலித் பந்து’ திட்டம் கடைசி பட்டியலின மக்களுக்கு போய்ச்சேரும் வரை எங்கள் கட்சி அரசு பாடுபடும்.
    • அம்பேத்கர், பட்டியலின மக்களுக்காக பல்வேறு போராட்டங்களை நடத்தினார்.

    திருப்பதி:

    தெலுங்கானா சட்டசபை தேர்தலில் பிரசாரம் சூடு பிடித்துள்ளது. ஆளும் பி.ஆர்.எஸ். கட்சியும், காங்கிரஸ் கட்சியும் ஒன்றின் மீது மற்றொன்று கடுமையாக தாக்கி பேசி வருகின்றனர்.

    சென்னுாரில் முதல் மந்திரி சந்திரசேகர ராவ் பிரச்சாரம் செய்தார். அப்போது அவர் பேசியதாவது:-

    தெலுங்கானா தேர்தலில் நீங்கள் உங்கள் ஓட்டுரிமையை செலுத்துவதற்கு முன்பாக அரசியல் கட்சிகளின் கடந்த கால வரலாற்றைக் கொஞ்சம் பாருங்கள்.

    அதன்பின்னர் அடுத்த 5 ஆண்டுகளுக்கு யார் நம்மை ஆள்வது என்பதை முடிவு செய்யுங்கள்.

    பிற கட்சிகள் பட்டியலின மக்களை ஓட்டு வங்கியாகத் தான் பயன்படுத்துகின்றன. 'தலித் பந்து' திட்டம் கடைசி பட்டியலின மக்களுக்கு போய்ச்சேரும் வரை எங்கள் கட்சி அரசு பாடுபடும்.

    தலித் பந்து என்பது பட்டியலினத்தவருக்கு அதிகாரம் வழங்குவதற்காக உருவாக்கப்பட்டதாகும். அதன்படி தகுதிவாய்ந்த பட்டியலின வகுப்பினர் தொழில் தொடங்குவதற்கு ரூ.10 லட்சம் மானியமாக தரப்படுகிறது.

    அம்பேத்கரை தோற்கடித்தார்கள்.

    அம்பேத்கர், பட்டியலின மக்களுக்காக பல்வேறு போராட்டங்களை நடத்தினார்.

    தேர்தலில் அவரைத் தோற்கடித்தது, காங்கிரஸ் கட்சிதான். பாராளுமன்ற தேர்தலில் அம்பேத்கரைத் தோற்கடித்தது யார்? என்பதை நீங்கள் கட்டாயம் தெரிந்து கொள்ள வேண்டும்.

    காங்கிரஸ் அவரைத் தோற்கடித்தது மட்டுமல்ல அவரது சித்தாந்தத்தை அமல்படுத்தியதும் இல்லை. இவ்வாறு அவர் பேசினார்.

    • 2016 பண மதிப்பிழப்பு மற்றும் கொரோனா ஆகியவற்றால் தெலுங்கானாவின் பொருளாதார வளர்ச்சியில் சரிவு
    • தெலுங்கானா கடுமையான மற்றும் தியாகத்தின் மூலமாக மிகப்பெரிய வளர்ச்சியை எட்டும்

    தெலுங்கானா மாநிலத்தில் 119 தொகுதிகளுக்கு ஒரே கட்டமாக நவம்பர் 30-ந்தேதி தேர்தல் நடைபெற இருக்கிறது. இந்த தேர்தலில் 95 முதல் 105 இடங்களில் வெற்றி பெறுவோம் என பாரதிய ராஷ்டிரிய சமிதி கட்சி தலைவர் சந்திரசேகர ராவ் தெரிவித்துள்ளார்.

    மேலும், காஜ்வெல் தொகுதி மக்கள் தன்மீது அன்பு வைத்திருப்பதாகவும், தொடர்ந்து இரண்டு முறை பிரமாண்ட வெற்றியை வழங்குவார்கள் என்றும் தெரிவித்துள்ளார்.

    தொகுதி அளவிலான கூட்டத்தில் பேசிய சந்திரசேகர ராவ், 2016 பண மதிப்பிழப்பு மற்றும் கொரோனா ஆகியவற்றால் தெலுங்கானாவின் பொருளாதார வளர்ச்சியில் சரிவு ஏற்பட்டதாகவும், இந்தியாவின் இளம் மாநிலமான தெலுங்கானா கடுமையான மற்றும் தியாகத்தின் மூலமாக மிகப்பெரிய வளர்ச்சியை எட்டும் எனவும் தெரிவித்துள்ளார்.

    மேலும், தற்போது வளர்ச்சி மற்றும் சாதனையால் நாம் திருப்தி அடையக் கூடாது. சிறந்து விளங்க பாடுபடுவது ஒரு தொடர்ச்சியான செயல்முறையாகும், நாம் மக்களுக்கு நல்ல வாழ்க்கைத் தரத்தை வழங்க வேண்டும் எனக் குறிப்பிட்டார்.

    2016-ல் இருந்து சந்திரசேகர ராவ் தொடர்ந்து தெலுங்கானாவின் முதல்வராக இருந்து வருகிறார். அவரது பிஆர்எஸ் கட்சிக்கும் காங்கிரஸ்க்கும் இடையில் கடும் போட்டி நிலவி வருகிறது. இதற்கிடையே பா.ஜனதாவும் தெலுங்கானாவில் கால்பதிக்க முயற்சி செய்து வருகிறது.

    ×