என் மலர்
நீங்கள் தேடியது "சட்டசபை தேர்தல்"
- கரூர் துயர சம்பத்திற்கு பிறகு விஜய் காஞ்சிபுரத்தில் மக்கள் சந்திப்பை நடத்தினார்.
- ஏற்கனவே 234 தொகுதிகளுக்கும் உத்தேச பட்டியலை விஜய் தயார் செய்து வைத்துள்ளார்.
சென்னை:
தமிழக சட்டசபை தேர்தலுக்கு இன்னும் 4 மாதங்களே இருக்கிறது. தேர்தலுக்கான நாள் நெருங்க நெருங்க தமிழக அரசியல் கட்சிகள் இடையே பதற்றம் பற்றிக்கொண்டுள்ளது. அதிலும், தமிழக அரசியல் அரங்கில் புதிய வரவான த.வெ.க. சட்டசபை தேர்தலில் எத்தகைய தாக்கத்தை ஏற்படுத்தும் என்பது விவாத பொருளாக மாறி வருகிறது.
பிரதான கட்சிகளான தி.மு.க., அ.தி.மு.க. கட்சிகளுக்கு மத்தியில் த.வெ.க.வின் அரசியல் பயணம் அனைவரையும் உற்று நோக்க வைத்துள்ளது. கரூர் துயர சம்பத்திற்கு பிறகு விஜய் காஞ்சிபுரத்தில் மக்கள் சந்திப்பை நடத்தினார். இந்த சந்திப்பு ஒரு தனியார் கல்லூரியில் உள் அரங்கத்தில் நடந்தது.
இதனை தொடர்ந்து புதுச்சேரியில் பொதுக்கூட்டம் வாயிலாக மக்கள் சந்திப்பை விஜய் நடத்தினார். இனி வரும் நாட்களில் ஈரோடு மற்றும் தமிழகத்தின் முக்கிய பகுதிகளில் அவர் பிரசாரம் மேற்கொள்ள இருக்கிறார். தொடர்ச்சியாக ஜனவரி 2-வது வாரம் வரை அவர் பிரசாரம் மேற்கொள்ள இருக்கிறார்.
இந்தநிலையில், ஜனவரி தை பொங்கலுக்கு பிறகு வேட்பாளர் நேர்காணலை நடத்த விஜய் திட்டமிட்டு இருக்கிறார். ஏற்கனவே 234 தொகுதிகளுக்கும் உத்தேச பட்டியலை விஜய் தயார் செய்து வைத்துள்ளார். தொகுதிக்கு 4 பேர் வீதம் அவர் தேர்வு செய்துள்ளார். அதில் 60 சதவீதம் மாவட்ட செயலாளர்கள், பெண்களுக்கும், 40 சதவீதம் பிரபலங்கள், மாநில நிர்வாகிகளுக்கும் ஒதுக்கீடு செய்ய முடிவு செய்யப்பட்டுள்ளது.
பிரபல தியேட்டர் உரிமையாளர்கள் சிலரும் சென்னை, திருச்சி, நெல்லை, ஆலங்குளம் என குறிப்பிட்ட தொகுதிகளில் த.வெ.க. சார்பில் போட்டியிட இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. மேலும், த.வெ.க.வில் இணையும் முன்னாள் அமைச்சர்களுக்கும் வாய்ப்பு அளிக்கப்பட உள்ளது. தை பொங்கலுக்கு பிறகு வேட்பாளர் தேர்வை விஜய் நடத்தி முடித்து, உடனடியாக அதற்கான அறிவிப்பையும் வெளியிட உள்ளார்.
- சிலர் தற்போதே விரும்பிய கட்சிகளில் இணைந்து வருகின்றனர்.
- தங்கள் வேட்பாளர் பிரமுகர்களை பாதுகாக்க வேண்டிய பணியில் ஒவ்வொரு கட்சியும் முனைப்பு காட்டி வருகிறது.
புதுச்சேரி:
புதுச்சேரியில் அடுத்த ஆண்டு சட்டசபை தேர்தல் நடைபெற உள்ளது.
தேர்தலுக்காக அரசியல் கட்சியினர் தீவிரமாக தயாராகி வருகின்றனர். தேர்தல் கூட்டணி ஜனவரி மாத இறுதியில்தான் முடிவாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
புதுச்சேரியில் தேர்தலை சந்திக்க புதிது, புதிதாக அரசியல் கட்சிகள் களம் இறங்கி வருகிறது. இந்த புதிய அரசியல் கட்சிகளில் தொகுதிதோறும் பிரபலமாக உள்ள வேட்பாளர் பிரமுகர்கள், முன்னாள் எம்.எல்.ஏ.க்களை தங்கள் பக்கம் இழுக்க பேச்சுவார்த்தையும் நடந்து வருகிறது.
சிலர் தற்போதே விரும்பிய கட்சிகளில் இணைந்து வருகின்றனர். தங்கள் வேட்பாளர் பிரமுகர்களை பாதுகாக்க வேண்டிய பணியில் ஒவ்வொரு கட்சியும் முனைப்பு காட்டி வருகிறது.
இதில் காங்கிரசார் புதிய யுக்தியை கையாண்டுள்ளனர். 2026 சட்டமன்ற தேர்தல் மார்ச் மாதம் முதல் வாரத்தில்தான் அறிவிப்பு வெளியாகும். ஏப்ரல் மாதத்தில்தான் தேர்தல் நடைபெறும்.
தேர்தல் அறிவிப்புக்கு இன்னும் 100 நாட்கள் இருக்கும் முன்பாகவே காங்கிரஸ் 30 தொகுதிக்கும் விருப்ப மனுவை பெறும் அறிவிப்பை வெளியிட்டுள்ளது. காங்கிரஸ் கட்சி அலுவலகத்தில் விருப்ப மனு பெறப்படுகிறது.
இதன்மூலம் கூட்டணியில் இருக்கும் கட்சிகளுக்கு எந்த தொகுதி? என்ற கேள்வியும் எழுந்துள்ளது. தனது யுக்தி மூலம் தங்களிடம் உள்ள வேட்பாளர் பிரமுகர்களை தக்க வைக்கலாம் என காங்கிரஸ் கருதுகிறது.
புதுச்சேரியை பொறுத்தவரை இறுதி வேட்பாளர் பட்டியலை தேர்தல் துறை அறிவிக்கும் வரை கட்சி தாவல்கள் சகஜமாகவே இருக்கும். இதனால் காங்கிரசின் புதிய யுக்தி கைகொடுக்குமா? என்ற சந்தேகமும் உள்ளது.
- தைலாபுரம் தோட்டத்தில் பா.ம.க. மாவட்ட செயலாளர்கள், தலைவர்கள் கூட்டம் நடைபெற்றது.
- சாதிவாரி கணக்கெடுப்பை முன்னெடுக்காத தமிழக அரசை கண்டித்து டிச.12-ந்தேதி மாநில முழுவதும் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தப்படும்.
விழுப்புரம் மாவட்டம் தைலாபுரம் தோட்டத்தில் பா.ம.க. மாவட்ட செயலாளர்கள், தலைவர்கள் கூட்டம் நடைபெற்றது. கூட்டத்துக்கு நிறுவனர் ராமதாஸ் தலைமை தாங்கினார்.
கூட்டத்தில் பா.ம.க. கவுரவ தலைவர் ஜி.கே.மணி, முன்னாள் தலைவர் தீரன், பா.ம.க. பொதுச்செயலாளர் முரளி சங்கர், அருள் எம்.எல்.ஏ., தலைமை நிலைய செயலாளர், அன்பழகன், மாநில நிர்வாகிகள், கட்சி அமைப்பு ரீதியாக உள்ள 108 மாவட்ட செயலாளர்கள், மாவட்ட தலைவர்கள் கலந்து கொண்டனர்.
கூட்டத்தில் யாருடன் கூட்டணி அமைப்பது, எந்தெந்த தொகுதிகளில் போட்டியிடுவது என்பது குறித்து ராமதாஸ் கட்சி நிர்வாகிகளுடன் கலந்துரையாடினார்.
இந்நிலையில் பா.ம.க. நிறுவனர் ராமதாஸ் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:
* 2026-ம் ஆண்டு சட்டசபை தேர்தல் கூட்டணி தொடர்பாக அடுத்த மாதம் அறிவிக்கப்படும்.
* அடுத்த மாதம் சேலம் ஆத்தூரில் உள்ள தலைவாசலில் நடைபெற உள்ள கூட்டத்தில் கூட்டணி குறித்து அறிவிக்கப்படும்.
* சாதிவாரி கணக்கெடுப்பை முன்னெடுக்காத தமிழக அரசை கண்டித்து டிச.12-ந்தேதி மாநில முழுவதும் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தப்படும்.
இவ்வாறு அவர் கூறினார்.
- இந்தியாவில் மக்கள் அமைதியாக வாழ்வதற்கு நமது அரசமைப்பு சட்டம் தான் காரணம்.
- வரும் சட்டசபை தேர்தலில் சிதம்பரம் தொகுதியை காங்கிரஸ் கட்சிக்கு ஒதுக்க வலியுறுத்தப்படும்.
சிதம்பரம்:
ஆட்சி அதிகாரத்தில் பங்கேற்க தி.மு.க. கூட்டணியில் வலியுறுத்துவோம் என முன்னாள் காங்கிரஸ் தலைவர் கே.எஸ். அழகிரி கூறினார்.
சிதம்பரம் வந்த முன்னாள் காங்கிரஸ் தலைவர் கே.எஸ். அழகிரி நிருபர்களிடம் கூறியதாவது:-
இந்தியாவில் மக்கள் அமைதியாக வாழ்வதற்கு நமது அரசமைப்பு சட்டம் தான் காரணம். வக்பு சட்ட திருத்தம் மூலமாக அரசமைப்பு சட்டத்திற்கு எதிராக பிரதமர் மோடி ஒரு தீர்மானம் கொண்டு வந்து பரிசோதித்து பார்க்கிறார்.
அதற்கு சுப்ரீம் கோர்ட்டு இடைக்கால தீர்ப்பு வழங்கி உள்ளது. இது மிகவும் வரவேற்க தக்கது. உலகில் சக்தி வாய்ந்த நாடுகள் தங்களுடைய மதத்திற்கு அதிகளவு மரியாைத கொடுப்பதில்லை.
ஆனால் இந்தியாவில் அனைத்து மதங்களுக்கும் சம உரிமை கொடுக்கிறோம. இந்த நிலையில் வக்பு வாரியத்திற்கு மட்டும் சட்ட திருத்தம் செய்வது ஏன்?
சட்ட திருத்தம், அனைதது மதங்களுக்கும் செய்து தீர்மானம் கொண்டு வந்திருக்க வேண்டும். வக்பு வாரியத்திற்கு மட்டும் திருத்தம் கொண்டு வருவதை ஏற்க முடியாது. சுப்ரீம் கோர்ட்டு நமது அரசமைப்பு சட்டத்தை கடைபிடித்து வக்பு வாரிய சட்டத்தின் சில பிரிவுகளுக்கு இடைக்கால தடை விதித்து காப்பாற்றி உள்ளது.
இவ்வாறு அவர் கூறினார்.
அவரிடம் தேர்தல் தொடர்பாக கேட்கப்பட்ட கேள்விகளுக்கு பதில் அளிக்கும் போது, தி.மு.க. கூட்டணியில் தொடர்ந்து பயணிப்போம்.
வரும் சட்டசபை தேர்தலில் சிதம்பரம் தொகுதியை காங்கிரஸ் கட்சிக்கு ஒதுக்க வலியுறுத்தப்படும்.
அத்துடன் தமிழகத்தில் கூடுதல் இடங்களில் போட்டியிடுவோம். மேலும் ஆட்சி அதிகாரத்தில் பங்கேற்க கூட்டணியில் வலியுறுத்தப்படும் என்றார்.
- கூட்டணி குறித்து தேமுதிக மாநாட்டில் அறிவிப்போம் என்று விஜயபிரபாகரன் கூறியிருந்தார்.
- 2006ல் எப்படி கேப்டன் ஆண் சிங்கமாக சட்டசபைக்குள் போனார்.
2026 சட்டமன்ற தேர்தலில் கூட்டணி வைப்பது குறித்து ஜனவரி 9ம் தேதி கடலூரில் நடைபெறும் தேமுதிக மாநாட்டில் அறிவிப்போம் என்று விஜயபிரபாகரன் கூறியிருந்தார்.
இந்நிலையில், தேமுதிக மாநில இளைஞரணி செயலாளர் விஜய பிரபாகரன் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார்.
அப்போது அவர்," 2006ல் எப்படி கேப்டன் ஆண் சிங்கமாக சட்டசபைக்குள் போனாரோ, அதேபோல் 2026-ல் என் அம்மா பிரேமலதா விஜயகாந்த் பெண் சிங்கமாக சட்டசபைக்குள் செல்வார்." என்றார்.
இதற்கிடையே, தேமுதிக பொதுச் செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் கூறுகையில்," 234 தொகுதிகளுக்கு நேரடியாக சென்று வருகிறோம். 2026 தேமுதிகவிற்கான காலம் நீங்கள் விரும்பும் கூட்டணியை அமைப்போம். தேமுதிக இல்லாமல் எந்த கட்சியும் இருக்காது" என்றார்.
- நம்முடைய அரசின் பல்வேறு திட்டங்களால் இன்றைக்கு 11.20 சதவீதம் வளர்ச்சியுடன் இந்தியாவிலேயே தமிழ்நாடு முதலிடத்தில் இருக்கிறது.
- 2026 சட்டசபை தேர்தலில் சென்ற முறை பெற்ற வெற்றியை விட மிகப்பெரிய வெற்றியை நாம் பெற்றாக வேண்டும்.
சென்னை:
துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தனது இல்லத்தில் விழுப்புரம் வடக்கு மாவட்ட துணை அமைப்பாளர் ராம சரவணன் மகள் சாய்ஸ்ரீ-ஜீனத் பிரியன் திருமணத்தை நடத்தி வைத்து பேசியதாவது:-
நம்முடைய முதலமைச்சர் தலைமையிலான திராவிட மாடல் அரசு 4 ஆண்டுகளை கடந்து இன்றைக்கு சிறப்பாக நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. இந்த 4 ஆண்டுகளில் எண்ணற்ற திட்டங்களை முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தமிழ்நாட்டு மக்களுக்காக கொடுத்துக் கொண்டிருக்கிறார்.
நம்முடைய அரசின் பல்வேறு திட்டங்களால் இன்றைக்கு 11.20 சதவீதம் வளர்ச்சியுடன் இந்தியாவிலேயே தமிழ்நாடு முதலிடத்தில் இருக்கிறது என்று மத்திய அரசின் புள்ளி விவரங்களிலேயே தெரிவித்து இருக்கிறார்கள். ஆகவே இந்த திராவிட மாடல் அரசுக்கும், நம் முதலமைச்சருக்கும் நம் அத்தனை பேரும் முழு ஆதரவை தர வேண்டும். நான் உங்களிடம் கேட்ப தெல்லாம் அடுத்த 6 மாதங்களில் சட்டமன்ற தேர்தல் வர இருக்கிறது.
நாம் அனைவரும் ஒரு உறுதியை எடுத்துக் கொள்ள வேண்டும். அடுத்து நம் முதலமைச்சர் 2-வது முறையாக பதவியில் உட்கார வேண்டும் என்றால், நம் திராவிட முன்னேற்றக் கழகம் 7-வது முறையாக ஆட்சியில் அமர வேண்டும் என்றால், நீங்கள் அத்தனை பேரும், உற்றார், உறவினர்கள், நண்பர்கள், பக்கத்து வீட்டார்கள், தேர்தல் பிரசாரத்தை, அரசின் சாதனைகளை, முதலமைச்சரின் பணிகளை, திட்டங்களை மக்களிடம் எடுத்துச் சென்று சேர்க்க வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன்.
2026 சட்டசபை தேர்தலில் சென்ற முறை பெற்ற வெற்றியை விட மிகப்பெரிய வெற்றியை நாம் பெற்றாக வேண்டும். தலைவர் 200 தொகுதிகளில் வெற்றி பெறுவோம் என்று இலக்கு கொடுத்து இருக்கிறார்.
நாம் அனைவரும் களத்தில் இறங்கி, முழுமையாக பணியாற்றினால் 200 இல்லை 200-க்கும் அதிகமான தொகுதிகளில் தி.மு.க. வெற்றி பெறும். அதற்கு நாம் அத்தனை பேரும் இந்த திருமண நிகழ்வில் உறுதி ஏற்போம்.
இவ்வாறு அவர் பேசினார்.
- பா.ஜ.க. தேசிய அமைப்பு செயலாளர் பி.எல்.சந்தோஷ் பங்கேற்க உள்ளார்.
- கூட்டத்தில் சட்டசபை தேர்தலை எதிர்கொள்வதற்கான வியூகம் அமைக்கப்படுகிறது.
சென்னை:
சட்டசபை தேர்தலை அ.தி.மு.க. கூட்டணியில் இணைந்து பா.ஜ.க. சந்திக்க தயாராகி வருகிறது. இதையொட்டி கட்சிக்கு புதிய நிர்வாகிகள் சமீபத்தில் நியமிக்கப்பட்டனர்.
இதற்கிடையே, கட்சியின் சட்டசபை தேர்தல் ஆலோசனை கூட்டம் வரும் 10-ந்தேதி தியாகராயநகரில் உள்ள கட்சியின் தலைமை அலுவலகமான கமலாலயத்தில் நடக்க உள்ளது.
இந்த கூட்டத்தில் பா.ஜ.க. தேசிய அமைப்பு செயலாளர் பி.எல்.சந்தோஷ் பங்கேற்க உள்ளார். மாநிலத்தலைவர் நயினார் நாகேந்திரன், மாநில, மாவட்ட நிர்வாகிகள் இந்த கூட்டத்தில் கலந்து கொள்கின்றனர். கூட்டத்தில் சட்டசபை தேர்தலை எதிர்கொள்வதற்கான வியூகம் அமைக்கப்படுகிறது.
மாநிலத்தலைவரின் தேர்தல் சுற்றுப்பயணம், பொதுக்கூட்டங்கள், தேசிய தலைவர்களின் தமிழக வருகை மற்றும் சுற்றுப்பயண ஏற்பாடுகள் குறித்தும் ஆலோசிக்கப்படுகிறது. மாவட்ட அளவில் அ.தி.மு.க. கூட்டணியில் இடம்பெற்றுள்ள கட்சிகளின் நிர்வாகிகளுடன் இணைந்து தேர்தல் பணி ஆற்றுவது குறித்தும் கலந்து ஆலோசிக்கப்பட உள்ளது.
- தமிழகத்தைக் கலவர பூமியாக மாற்ற முடியுமா என்பதற்காகவே அவர்கள் முருகன் மாநாட்டை நடத்தியுள்ளனர்.
- தமிழகம் முழுவதும் டிஜிட்டல் ஐ.டி கார்டு கொடுக்கப்பட உள்ளது.
நீலாம்பூர்:
கோவை மாவட்டம், சூலூர் சட்டசபை தொகுதிக்கான 2026 தேர்தல் ஆயத்தக் கூட்டம் மற்றும் நிர்வாகிகளுக்கு டிஜிட்டல் அடையாள அட்டை வழங்கும் நிகழ்ச்சி தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி சார்பில் கருமத்தம்பட்டியில் உள்ள ஒரு தனியார் திருமண மண்டபத்தில் நடைபெற்றது.
இந்த நிகழ்ச்சியில் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வப்பெருந்தகை மற்றும் அகில இந்திய காங்கிரஸ் கமிட்டி செயலாளர் சுரஜ் எம்.என்.ஹெக்டே ஆகியோர் கலந்துகொண்டு நிர்வாகிகளுக்கு டிஜிட்டல் அடையாள அட்டைகளை வழங்கினர்.
விழாவில் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வப்பெருந்தகை எம்.எல்.ஏ. பேசியதாவது:-
பாசிச சக்திகளை விரட்டுவதற்கும், பா.ஜ.க.வை ஒருபோதும் தமிழகத்தில் நுழைய விடாமல் இருப்பதற்கான முதல் தேர்தல் பிரகடனத்தை கோவையில் எடுத்திருக்கிறோம்.
தமிழகத்தைக் கலவர பூமியாக மாற்ற முடியுமா என்பதற்காகவே அவர்கள் முருகன் மாநாட்டை நடத்தியுள்ளனர்.
ஆதிகாலத்திலிருந்தே பா.ஜ.க.வின் செயல் அதுவாகத்தான் இருந்துள்ளது. முதலில் ரத யாத்திரை என தொடங்கினார். தற்போது முருகனைக் கொண்டு அரசியல் செய்கிறார்கள்.
கேரளாவில் உள்ள அய்யப்பன் கோவிலில் இஸ்லாமிய கடவுளை வணங்கி கொண்டு தான் பக்தர்கள் அய்யப்பனை தரிசிக்கிறார்கள்.
அமித்ஷா, மற்ற மாநில முதல்வர்கள் மீது வழக்கு தொடுத்தது போல, எடப்பாடி பழனிசாமி மீதும், அவரது குடும்பத்தின் மீதும் வழக்கு தொடுப்போம் என்று கூறிய பிறகே அ.தி.மு.க., பா.ஜ.கவுடன் கூட்டணி வைத்துள்ளது.
அ.தி.மு.க. தொண்டர்களுக்கு இந்தக் கூட்டணி பிடிக்கவில்லை. ஜெயலலிதா இருந்தபோது, பா.ஜ.க.வின் தலைவர், ஊழல் குற்றவாளியுடன் கூட்டணி வைக்க முடியாது என்று தெரிவித்தார். அதற்கு அமித்ஷாவும் மோடியும் ஒன்றும் கூறவில்லை. இப்படிப்பட்டவர்களுடன் தான் அ.தி.மு.க. கூட்டணி வைக்கிறது.
இவ்வாறு அவர் கூறினார்.
பின்னர் அவர் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:-
முருகன் என்பவர் நெருப்பைப் போன்றவர். சக்தி வாய்ந்த தமிழ் கடவுள். அவருடன் பாஜக தேர்தல் விளையாட்டு விளையாடினால், அவர் பா.ஜ.க.வை சூரசம்ஹாரம் செய்வார்.
2026-ம் ஆண்டு நடக்ககூடிய தேர்தலில் பா.ஜ.க.வுக்கு சூரசம்ஹாரம் தான் என்பது காங்கிரஸ் கட்சியின் தேர்தல் பிரகடனம்.
தமிழகம் முழுவதும் டிஜிட்டல் ஐ.டி கார்டு கொடுக்கப்பட உள்ளது. அதற்கான முதற்கட்ட பணிகள் மற்றும் தேர்தலுக்கான ஆயத்த பணிகளை கோவையில் தொடங்கியுள்ளோம்.
பா.ம.க. ஒற்றுமையாக இருக்க வேண்டும் என்பது தான் எங்களுடைய நோக்கம். பாசிச பா.ஜ.க.வின் பக்கம் போகாமல் இருப்பது தான் எங்களுடைய நிலைப்பாடு. மாறி சென்றால், சமூக நீதிக்காக குரல் கொடுத்த பா.ம.க.வின் நிலைப்பாடு அடிபட்டுப் போகும்.
தலைமுறையை பாழாக்குவதற்கு பா.ஜ.க தமிழ்நாட்டுக்குள் வந்துள்ளது. எல்லா மாநிலத்திற்கும் சென்று அங்குள்ள கடவுள்களை தொட்டுக்கொண்டு இருந்துவிட்டு, தற்போது தமிழ்நாட்டிற்கு 'முருகா' என்ற கோஷத்துடன் வந்துள்ளார்கள். முருகன் தமிழ் கடவுள், மிகுந்த சக்தி வாய்ந்தவர். எனவே, அவர்களை முருகர் சூரசம்ஹாரம் செய்வார்.
இவ்வாறு அவர் தெரிவித்தார்.
- ரூ.2,008 கோடியை அரசியல் கட்சிகள் விளம்பரத்துக்காக செலவிட்டுள்ளன.
- தேசிய கட்சிகள் அதிகபட்சமாக ரூ.2,204 கோடி செலவு செய்திருக்கின்றன.
கடந்த ஆண்டு மக்களவை தேர்தல், அத்துடன் ஆந்திரா, அருணாசல பிரதேசம், ஒடிசா மற்றும் சிக்கிம் மாநிலங்களுக்கும் சட்டசபை தேர்தல் நடத்தப்பட்டது.
இந்த தேர்தல்களுக்கு அரசியல் கட்சிகள் செலவு செய்த தொகை குறித்து ஜனநாயக சீர்திருத்தத்துக்கான சங்கம்(ADR) என்ற தன்னார்வ அமைப்பின் ஆய்வறிக்கை வெளியாகி உள்ளது.
தேர்தல் ஆணையத்தில் அரசியல் கட்சிகள் சமர்ப்பித்த செலவின அறிக்கை இந்த ஆய்வுக்கு உட்படுத்தப்பட்டது. மொத்தம் 32 கட்சிகளின் செலவின அறிக்கை ஆய்வில் அடங்கும்.
அதன்படி மேற்கூறிய மக்களவை மற்றும் சட்டசபை தேர்தல்களுக்காக இந்த கட்சிகள் மொத்தம் ரூ.3,352 கோடி செலவு செய்துள்ளன. தேசிய கட்சிகள் அதிகபட்சமாக ரூ.2,204 கோடி செலவு செய்திருக்கின்றன.
அதிகபட்சமாக பாஜக பாராளுமன்றம் மற்றும் 4 சட்டமன்ற தேர்தல்களுக்காக சுமார் ரூ.1,494 கோடியை செலவழித்துள்ளது. இது கட்சிகளின் மொத்த செலவினத்தில் 44.56 சதவீதம் ஆகும்.
அடுத்ததாக காங்கிரஸ் கட்சி ரூ.620 கோடி (18.5%) செலவழித்துள்ளது. இக்கட்சிகள் செலவு செய்த தொகையில் அதிகபட்ச தொகை விளம்பரத்துக்கு செலவிடப்பட்டுள்ளது. அந்தவகையில் ரூ.2,008 கோடியை அரசியல் கட்சிகள் விளம்பரத்துக்காக செலவிட்டுள்ளன.
ரூ.795 கோடி பயணங்களுக்காக செலவிடப்பட்டுள்ளது. மேலும் கட்சிகள் தங்கள் வேட்பாளர்களுக்கு ரூ.402 கோடி வழங்கி உள்ளன.
2024 மக்களவை தேர்தலின் போது 5 தேசிய மற்றும் 27 பிராந்திய அரசியல் கட்சிகள் சேகரித்த மொத்த நிதி ரூ.7445.566 கோடி ஆகும். சேகரிக்கப்பட்ட மொத்த நிதியில், தேசிய கட்சிகள் ரூ.6930 கோடி (93.08%) வசூலித்தன. அதே நேரத்தில் பிராந்திய கட்சிகள் ரூ.515.32 கோடி (6.92%) பெற்றன.
அதிகபட்சமாக பாஜக ரூ.6268 கோடி நிதியைப் பெற்றது, அதைத் தொடர்ந்து காங்கிரஸ் 592 கோடியைப் பெற்றது, சிபிஐ(எம்) ரூ.62.74 கோடி நிதியுடன் மூன்றாவது இடத்தில் உள்ளது.
தேர்தல் ஆணையத்தில், தேசியவாத காங்கிரஸ், இந்திய கம்யூனிஸ்டு, உத்தவ் சிவசேனா, ராஷ்டிரிய ஜனதாதளம், லோக் ஜனசக்தி (ராம்விலாஸ்), கேரளா காங்கிரஸ், ஜார்கண்ட் முக்தி மோர்ச்சா போன்ற கட்சிகள் இன்னும் தங்கள் செலவின அறிக்கையை வழங்கவில்லை.
அரசியல் கட்சிகள், காசோலைகள், DD (டிமாண்ட் டிராப்ட்) அல்லது RTGS வழியாக பரிவர்த்தனைகள் செய்வதன்மூலம் மட்டுமே கருப்புப் பணப் பயன்பாடு மற்றும் செலவினங்களை மட்டுப்படுத்த முடியும் என்று அறிக்கை பரிந்துரைத்துள்ளது.
- என்டிஏவில் ஐக்கியமாயுள்ள ஐக்கிய ஜனதா தள தலைவர் நிதிஷ் குமார் தனது முதல்வர் சிம்மாசனத்தை தக்க வைப்பதில் தீவிரமாக உள்ளார்.
- 1 கோடியே 9 லட்சத்து 69 ஆயிரத்து 255 பேர் பலனடைவார்கள்
பீகாரில் விரைவில் சட்டமன்றத் தேர்தல் வர உள்ள நிலையில் ஆளும் என்டிஏ கூட்டணி மற்றும் ஆர்ஜேடி - காங்கிரசின் இந்தியா கூட்டணி இடையே கடும் போட்டி நிலவுகிறது.
பல முறை கூட்டணி தாவலுக்கு பின் இறுதியில் பாஜகவின் என்டிஏவில் ஐக்கியமாயுள்ள ஐக்கிய ஜனதா தள தலைவர் நிதிஷ் குமார் தனது முதல்வர் சிம்மாசனத்தை தக்க வைக்க வேண்டும் என்பதில் தீவிரமாக உள்ளார்.
அந்த வகையில் மாநிலத்தில் முதியோர் ஓய்வூதியம், மாற்றுத்திறனாளிகள் மற்றும் விதவைகளுக்கு வழங்கப்படும் மாதாந்திர உதவித்தொகை ஆகியவற்றை ரூ.400 இல் இருந்து ரூ.1,100 ஆக முதல்வர் நிதிஷ் குமார் அதிகரித்து அறிவிப்பு வெளியிட்டுள்ளார்.
இந்த ரூ.700 அதிகரிப்பு என்பது மாநிலத்தில் 1 கோடியே 9 லட்சத்து 69 ஆயிரத்து 255 பேர் பலனடைவார்கள் என்று நிதிஷ் குமார் தனது எக்ஸ் பதிவில் தெரிவித்துள்ளார்.
இந்த ஓய்வூதிய உயர்வு ஜூலை மாதம் முதல் அமலுக்கு வரும் என்றும் மாதத்தில் 10 ஆம் தேதியில் அவர்களின் வங்கிக் கணக்கில் வரவு வைக்கப்படும் என்றும் நிதிஷ் குமார் விளக்கியுள்ளார்.
- கடந்த 13-ந்தேதி சிதம்பரம், விழுப்புரம், உசிலம்பட்டி தொகுதி நிர்வாகிகளை சந்தித்து கருத்து கேட்டார்.
- நிர்வாகிகளிடம் சகஜமாக பேசிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள் கூறும் கருத்துக்களை கவனமாக கேட்டறிந்தார்.
சென்னை:
சட்டசபை தேர்தல் அடுத்த ஆண்டு வர இருக்கும் நிலையில் 200 தொகுதிகளில் வெற்றி பெற முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இலக்கு நிர்ணயித்துள்ளார்.
இதற்காக ஒவ்வொரு தொகுதி நிலவரம் பற்றியும் சர்வே எடுத்து வைத்து உள்ளார். இதில் சில தொகுதிகளில் உள்கட்சி பிரச்சனை, இணக்கமான சூழல் கட்சியினரிடம் இல்லாத நிலை இருப்பதாக தலைமைக்கு தெரிய வந்து உள்ளது.
அதன் அடிப்படையில் தொகுதி நிர்வாகிகளிடம் கருத்து கேட்கும் நிகழ்வை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி உள்ளார்.
'உடன் பிறப்பே வா' என்ற தலைப்பில் நடைபெறும் சந்திப்பு நிகழ்ச்சியில் கடந்த 13-ந்தேதி சிதம்பரம், விழுப்புரம், உசிலம்பட்டி தொகுதி நிர்வாகிகளை சந்தித்து கருத்து கேட்டார்.
அதைத் தொடர்ந்து இன்று பரமக்குடி, கவுண்டம்பாளையம், பரமத்தி வேலூர் ஆகிய 3 தொகுதி நிர்வாகிகளை அழைத்து கருத்து கேட்டார்.
இந்த சந்திப்பில் ஒன்றிய செயலாளர், நகரச் செயலாளர் தொகுதி பார்வையாளர், மண்டலப் பொறுப்பாளர் என ஒவ்வொருவரையும் தனித்தனியாக அமர வைத்து பேசினார். அப்போது அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி மற்றும் தலைமைக் கழக நிர்வாகிகள் உடன் இருந்தனர்.
சட்டசபை தொகுதி நிலவரம் எப்படி உள்ளது? ஏதும் கருத்து வேறுபாடுகள் உள்ளதா? என்பது போன்று பல விவரங்களை கேட்டறிந்தார். தேர்தலில் எவ்வளவு வாக்கு வித்தியாசத்தில் வெற்றி கிடைக்கும் என்பதையும் அறிந்து கொண்டார். நிர்வாகிகளிடம் சகஜமாக பேசிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள் கூறும் கருத்துக்களை கவனமாக கேட்டறிந்தார்.
மொத்தம் 74 தொகுதிகளை சேர்ந்த நிர்வாகிகளை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சந்திக்க திட்டமிட்டு உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
- மின்னணு வாக்குப்பதிவு இயந்திரத்தை குறை கூறி ஜனநாயகத்தின் பிம்பத்தை அவர்கள் இப்போது கெடுக்கிறார்கள்.
- மக்கள் ராகுல் காந்தியை நிராகரித்து விட்டனர்.
மும்பை:
மகாராஷ்டிராவில் கடந்த ஆண்டு நடந்த சட்டசபை தேர்தலில் பா.ஜ.க. கூட்டணி வெற்றி பெற்று ஆட்சியை பிடித்தது.
இதற்கிடையே மகாராஷ்டிரா தேர்தலில் முறைகேடுகள் நடந்ததாக பாராளுமன்ற எதிர்க்கட்சி தலைவரும், காங்கிரஸ் தலைவருமான ராகுல் காந்தி குற்றம்சாட்டினார்.
இந்த நிலையில் மகாராஷ்டிரா முதல்-மந்திரி தேவேந்திர பட்னாவிஸ் கூறியதாவது:-
மக்களை சமாதானப்படுத்த முடியாவிட்டால், அவர்களை குழப்ப வேண்டும் என்ற கொள்கையை ராகுல் காந்தி ஏற்றுக் கொண்டுள்ளார். மக்களால் காங்கிரஸ் நிராகரிக்கப்பட்டு விட்டது. அதனால்தான் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரத்தை குறை கூறி ஜனநாயகத்தின் பிம்பத்தை அவர்கள் இப்போது கெடுக்கிறார்கள்.
மக்கள் ராகுல் காந்தியை நிராகரித்து விட்டனர். அதற்கு பழிவாங்கும் விதமாக, அவர் மக்களையும் அவர்களின் ஆணையையும் நிராகரிக்கிறார். மக்கள் அளித்த தீர்ப்பை அவமதிக்கிறார்.
ஒரு முறை தோல்வியை ஏற்றுக்கொண்டு, நீங்கள் எங்கே தவறு செய்கிறீர்கள், மக்களுடனான உங்கள் தொடர்பு எங்கே இல்லை, அதற்கு நீங்கள் என்ன செய்ய வேண்டும் என்பதைப் பற்றி சுயபரிசோதனை செய்வது மிகவும் புத்திசாலித்தனமாக இருக்கும்.
ஆனால் ராகுல் காந்தி தோல்வியை ஏற்றுக்கொள்ள முடியாத ஒரு தலைவராக உள்ளார். பீகார் உள்பட வரவிருக்கும் சட்டமன்றத் தேர்தல்களில் எதிர்கால தோல்விகளுக்கு காங்கிரஸ் தலைவர் தனது சாக்குபோக்குகளைத் தயாரித்து வருகிறார்.
இவ்வாறு அவர் கூறினார்.






