என் மலர்
தமிழ்நாடு செய்திகள்

தி.மு.க. கூட்டணியில் ஆட்சி அதிகாரத்தில் பங்கு கேட்போம்- கே.எஸ். அழகிரி
- இந்தியாவில் மக்கள் அமைதியாக வாழ்வதற்கு நமது அரசமைப்பு சட்டம் தான் காரணம்.
- வரும் சட்டசபை தேர்தலில் சிதம்பரம் தொகுதியை காங்கிரஸ் கட்சிக்கு ஒதுக்க வலியுறுத்தப்படும்.
சிதம்பரம்:
ஆட்சி அதிகாரத்தில் பங்கேற்க தி.மு.க. கூட்டணியில் வலியுறுத்துவோம் என முன்னாள் காங்கிரஸ் தலைவர் கே.எஸ். அழகிரி கூறினார்.
சிதம்பரம் வந்த முன்னாள் காங்கிரஸ் தலைவர் கே.எஸ். அழகிரி நிருபர்களிடம் கூறியதாவது:-
இந்தியாவில் மக்கள் அமைதியாக வாழ்வதற்கு நமது அரசமைப்பு சட்டம் தான் காரணம். வக்பு சட்ட திருத்தம் மூலமாக அரசமைப்பு சட்டத்திற்கு எதிராக பிரதமர் மோடி ஒரு தீர்மானம் கொண்டு வந்து பரிசோதித்து பார்க்கிறார்.
அதற்கு சுப்ரீம் கோர்ட்டு இடைக்கால தீர்ப்பு வழங்கி உள்ளது. இது மிகவும் வரவேற்க தக்கது. உலகில் சக்தி வாய்ந்த நாடுகள் தங்களுடைய மதத்திற்கு அதிகளவு மரியாைத கொடுப்பதில்லை.
ஆனால் இந்தியாவில் அனைத்து மதங்களுக்கும் சம உரிமை கொடுக்கிறோம. இந்த நிலையில் வக்பு வாரியத்திற்கு மட்டும் சட்ட திருத்தம் செய்வது ஏன்?
சட்ட திருத்தம், அனைதது மதங்களுக்கும் செய்து தீர்மானம் கொண்டு வந்திருக்க வேண்டும். வக்பு வாரியத்திற்கு மட்டும் திருத்தம் கொண்டு வருவதை ஏற்க முடியாது. சுப்ரீம் கோர்ட்டு நமது அரசமைப்பு சட்டத்தை கடைபிடித்து வக்பு வாரிய சட்டத்தின் சில பிரிவுகளுக்கு இடைக்கால தடை விதித்து காப்பாற்றி உள்ளது.
இவ்வாறு அவர் கூறினார்.
அவரிடம் தேர்தல் தொடர்பாக கேட்கப்பட்ட கேள்விகளுக்கு பதில் அளிக்கும் போது, தி.மு.க. கூட்டணியில் தொடர்ந்து பயணிப்போம்.
வரும் சட்டசபை தேர்தலில் சிதம்பரம் தொகுதியை காங்கிரஸ் கட்சிக்கு ஒதுக்க வலியுறுத்தப்படும்.
அத்துடன் தமிழகத்தில் கூடுதல் இடங்களில் போட்டியிடுவோம். மேலும் ஆட்சி அதிகாரத்தில் பங்கேற்க கூட்டணியில் வலியுறுத்தப்படும் என்றார்.






