search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "அமைச்சர் சிவி சண்முகம்"

    மயிலம் அருகே தழுதாளி அரசு பள்ளியில் கர்நாடக மாநில முத்திரையுடன் மாணவர்களுக்கு வழங்கப்பட்ட இலவச சைக்கிள்கள் குறித்து விசாரணை நடத்த மாவட்ட கலெக்டர் சுப்பிரமணியன் உத்தரவிட்டுள்ளார். #FreeCycles
    மயிலம்:

    தமிழகத்தில் பெண் கல்வியை ஊக்குவிக்கும் விதமாக 2001-02-ம் ஆண்டு அப்போதைய முதல்-அமைச்சர் ஜெயலலிதா, பிளஸ்-1 படிக்கும் மாணவிகளுக்கு விலையில்லா சைக்கிள்கள் வழங்கும் திட்டத்தை கொண்டு வந்தார். இதன் பின்னர் 2005-06-ம் ஆண்டு முதல் மாணவர்களுக்கும் சேர்த்து வழங்கப்பட்டது.

    நடப்பு ஆண்டிலும் தமிழகம் முழுவதும் உள்ள பள்ளி மாணவ-மாணவிகளுக்கு விலையில்லா சைக்கிள்கள் வழங்கப்பட்டு வருகிறது.

    இந்த நிலையில் விழுப்புரம் மாவட்டம் மயிலம் அருகே தழுதாளி கிராமத்தில் உள்ள அரசு மேல்நிலைப் பள்ளியில் 9 பள்ளிகளை சேர்ந்த மாணவ-மாணவிகளுக்கு விலையில்லா சைக்கிள்கள் வழங்கும் விழா நடைபெற்றது. இதில் அமைச்சர் சி.வி.சண்முகம் கலந்து கொண்டு ஆயிரத்து 524 பேருக்கு விலையில்லா சைக்கிள்களை வழங்கினார்.

    இதில் ஒருசில மாணவ- மாணவிகளுக்கு வழங்கப்பட்ட சைக்கிள்களில் முன் பகுதியில் கூடை அமைக்கப்பட்டிருந்தது. அதில் வட்டவடிவில் கன்னட மொழியில் உள்ள முத்திரை காணப்பட்டது. மாணவி படிப்பது போன்ற படமும் பொறிக்கப்பட்டு இருந்தது. ‘சார்வசனிகா சிக்சனா இலாகே, கர்நாடக சர்காரா’ என்று அதில் குறிப்பிட்டு இருந்தது. இதற்கு தமிழில் பொது கல்வித்துறை கர்நாடக அரசு என்று பொருளாகும்.

    கர்நாடக முத்திரை இருப்பதை கண்டு மாணவ- மாணவிகள் அதிர்ச்சி அடைந்தனர். இது மாணவர்கள் மத்தியிலும், அவர்களது பெற்றோரிடமும் குழப்பத்தை ஏற்படுத்தியது.

    இது குறித்து பொதுமக்கள் கூறியதாவது:-


    தமிழகத்தைபோல் கர்நாடகத்திலும் மாணவ- மாணவிகளுக்கு விலையில்லா சைக்கிள்கள் வழங்கப்பட்டு வருகிறது. அங்குள்ள மாணவர்களுக்கு வழங்க அங்குள்ள தனியார் நிறுவனத்தில் ஒப்பந்தம் செய்யப்பட்டு தயாரிக்கப்பட்டது. அந்த சைக்கிளை பரிசோதித்து சென்று பார்த்ததில் தரமற்றிருப்பது தெரியவந்தது. மேலும் இது எளிதில் துருபிடிக்கும் சைக்கிள்களாகவும் இருந்தது.

    இதையடுத்து கர்நாடக அரசு அந்த சைக்கிள்களை தரமற்றவை என்று கூறி நிராகரித்து விட்டதாக தெரிகிறது. இவ்வாறு நிராகரிக்கப்பட்ட சைக்கிள்கள் தான் தமிழகத்துக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. அவை தற்போது தழுதாளி பள்ளியில் நடந்த விழாவில் மாணவர்களுக்கு வழங்கப்பட்டு இருக்கிறது.

    இவ்வாறு அவர்கள் கூறினர்.

    பின்னர் அவர்களை அதிகாரிகள் சமரசம் செய்தனர். இதையடுத்து சைக்கிள்களை மாணவர்கள் வாங்கிச்சென்றனர்.

    இதுபற்றி விழுப்புரம் மாவட்ட முதன்மை கல்வி அதிகாரி முனுசாமியிடம் கேட்ட போது, இந்த சைக்கிள் எவ்வாறு இங்கு வந்தது? என்பது பற்றி தெரியவில்லை. மேலும் இதுபோன்ற முத்திரையுடன் எத்தனை சைக்கிள்கள் வந்தள்ளது? என்கிற விவரங்களை சேகரித்து தெரிவிக்குமாறு சம்பந்தப்பட்ட பள்ளி தலைமை ஆசிரியரிடம் கேட்டுள்ளோம். தொடர்ந்து இதுபற்றி விசாரணை நடந்து வருகிறது என்றார்.

    இது குறித்து மாவட்ட கலெக்டர் சுப்பிரமணியனிடம் கேட்டபோது, அரசால் கொள்முதல் செய்து தற்போது மாணவர்களுக்கு வழங்கப்பட்ட சைக்கிள்கள் அனைத்தையும் அரசு பரிசோதித்தது. இவை அனைத்தும் தரமானது என தெரிந்த பின்னர்தான் மாணவர்களுக்கு வழங்கப்படுகிறது.

    சைக்கிள்கள் தரமற்றவை என்று கூறப்படுவது முற்றிலும் தவறு. சைக்கிள்கள் கொள்முதல் செய்யும்போது அதில் அந்த ஸ்டிக்கர் மட்டும் தவறுதலாக இடம் பெற்றுள்ளது. அவை நீக்கப்படும்.

    இந்த சம்பவம் குறித்து விசாரணை நடத்தப்படும் என்றார்.

    கர்நாடக முத்திரையிடப்பட்ட சைக்கிள் தமிழகத்துக்கு வந்தது சர்சையை ஏற்படுத்தியுள்ளது. எனவே சைக்கிள் வழங்கிய நிறுவனத்தின் நிர்வாகியிடம் விசாரணை நடத்த தமிழ்நாடு பாடநூல் கழகம் முடிவு செய்துள்ளது.

    இதற்கிடையே மாவட்ட வாரியாக அனுப்பப்பட்ட சைக்கிள்களில் கன்னட மொழி மற்றும் படம் உள்ள சைக்கிள்களை பிரித்தெடுக்க உத்தரவிடப்பட்டுள்ளது. #FreeCycles
    திண்டிவனம் அருகே பள்ளி மாணவ-மாணவிகளுக்கு அமைச்சர் சி.வி.சண்முகம் வழங்கிய விலையில்லா சைக்கிள்களில் கர்நாடக அரசின் முத்திரை இருந்ததால் பரபரப்பு ஏற்பட்டது. #CVeshanmugam
    திண்டிவனம்:

    விழுப்புரம் மாவட்டம் திண்டிவனம் அருகே தழுதாளி கிராமத்தில் உள்ள அரசு மேல்நிலைப்பள்ளியில் மாணவ-மாணவிகளுக்கு நேற்று விலையில்லா சைக்கிள்கள் வழங்கும் விழா நடைபெற்றது. இதில் அமைச்சர் சி.வி.சண்முகம் கலந்துகொண்டு அந்த பகுதியில் உள்ள 9 அரசு பள்ளிகளை சேர்ந்த ஆயிரத்து 524 மாணவ, மாணவிகளுக்கு விலையில்லா சைக்கிள்களை வழங்கினார்.

    அதில், சில சைக்கிள்களின் முன்புறத்தில் இருந்த கூடையில், வட்டவடிவில் இருந்த முத்திரையில் மாணவி படிப்பது போன்ற படத்துடன், கன்னட மொழியில் சில வாசகங்கள் பொறிக்கப்பட்டு இருந்தது. தமிழக அரசின் முத்திரை இல்லாமல், கர்நாடக அரசின் முத்திரையுடைய சைக்கிள்கள் வழங்கப்படுவது பரபரப்பை ஏற்படுத்தியது.


    இதற்கிடையே இந்த சைக்கிள் பற்றி அதிர்ச்சியான தகவல்களும் வெளியாகி வருகின்றன. கர்நாடக மாநில அரசு சார்பில், அங்குள்ள பள்ளி மாணவ, மாணவிகளுக்கு விலையில்லா சைக்கிள்கள் வழங்கப்பட்டு வருகிறது. இவ்வாறு வழங்கிய சைக்கிள்கள் தரமற்றவையாக இருப்பதாக குற்றச்சாட்டு இருந்தது. இதையடுத்து கர்நாடக அரசு அந்த சைக்கிள்களை தரமற்றவை என்று கூறி நிராகரித்து விட்டதாக தெரிகிறது. இவ்வாறு நிராகரிக்கப்பட்ட சைக்கிள்கள் தான் தமிழகத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

    இதுபற்றி விசாரணை நடத்தப்பட்டு வருவதாக விழுப்புரம் மாவட்ட முதன்மை கல்வி அதிகாரி முனுசாமி தெரிவித்தார்.  #CVeshanmugam

    சர்ச்சைக்குரிய காட்சிகளை நீக்காவிட்டால் சர்கார் பட குழு மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்று அமைச்சர்கள் தெரிவித்துள்ளனர். #Sarkar #Vijay #ADMK #TNMinisters
    சென்னை:

    சர்கார் படத்துக்கு எதிராக அமைச்சர்கள் தெரிவித்துள்ள கருத்துக்கள் வருமாறு:-

    அமைச்சர் சி.வி.சண்முகம்:-

    சர்கார் படத்தில் அம்மாவின் விலையில்லா பொருட்கள் வழங்கும் திட்டத்தை அவமதிக்கும் காட்சிகள் இடம் பெற்றுள்ளன. இந்த காட்சி அரசின் மக்கள் நலத் திட்டங்களை அவமதிக்கும் செயலாகும். எனவே சர்கார் திரைப்படத்தை திரையிட்டுள்ள தியேட்டர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும்.

    அம்மாவின் விலையில்லா திட்டங்களை எரிப்பது போன்ற காட்சி இடம் பெற்றிருப்பது அரசை அவமதிக்கும் செயலாகும். இதற்காக நடிகர் விஜய், படத்தயாரிப்பாளர், இயக்குனர், படத்தை வெளியிட்ட தியேட்டர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும்.

    இவ்வாறு அமைச்சர் சி.வி.சண்முகம் கூறினார்.

    அமைச்சர் கே.பி.அன்பழகன்:-


    சர்கார் திரைப்படம் எதிர்க்கட்சி நிறுவனம் தயாரித்தது. அவர்கள் அரசை குறை கூறி, விமர்சனம் செய்வது போல் தான் எடுப்பார்கள். சர்க்கார் படத்தில் இலவசங்கள் தேவையில்லை என கூறுவதை மக்கள் ஏற்றுக் கொள்ள மாட்டார்கள். இன்று மக்களுக்கு வழங்கப்படும் நலத்திட்டங்கள், வாழ்வாதாரத்தை உயர்த்தவே வழங்கப்படுகிறது.

    குறிப்பாக கல்வித்துறையில் வழங்கப்படும் அரசு திட்டங்கள் மாணவர்கள் இடைநிற்றலை தடுக்கவும், அவர்களை ஊக்கப்படுத்தவுமே வழங்கப்படுகிறது. இன்றைய மக்களின் மனநிலை ஆளும் அரசுக்கு ஆதரவாகவே இருக்கிறது. சர்க்கார் படத்தில் எப்படி காட்சிகள் வந்தாலும் அதை மக்கள் ஏற்றுக்கொள்ள மாட்டார்கள்.

    அமைச்சர் கடம்பூர் ராஜூ:-

    சர்க்கார் படத்தில் உள்ள சில காட்சிகள் தொடர்பாக அரசுக்கு தகவல்கள் வந்துள்ளது. அவற்றில் சம கால அரசியலை விமர்சிக்கும் வகையிலும், அரசியல் உள்நோக்கத்துடனும் காட்சிகள் அமைக்கப்பட்டுள்ளன. அரசியல் நோக்கத்திற்காக சில காட்சிகள் அமைக்கப்பட்டுள்ளன. இது விஜய்க்கு நல்லதல்ல.

    சர்கார் படத்தில் அரசின் விலையில்லா பொருட்களை எரிப்பது போன்ற காட்சியை அவர்களாகவே நீக்கினால் நல்லது. இல்லையெனில் நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். அடுத்த கட்டநடவடிக்கை குறித்துயோசிப்போம். சர்ச்சைக்குரிய காட்சிகள் குறித்து முல்வருடன் விவாதிக்கப்படும்.

    இவ்வாறு அமைச்சர் கடம்பூர் ராஜூ கூறினார். #Sarkar #Vijay #ADMK #TNMinisters
    எம்எல்ஏக்கள் தகுதிநீக்க வழக்கின் தீர்ப்பு டிடிவி தினகரன் மற்றும் அவரது ஆதரவாளர்களுக்கு சரியான பாடத்தை புகட்டியிருப்பதாக அமைச்சர் சிவி சண்முகம் கூறினார். #MLAsDisqualificationCase #CVShanmugam
    சென்னை:

    தமிழக அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி வந்த 18 எம்எல்ஏக்கள் தகுதிநீக்க வழக்கில் இன்று சென்னை உயர்நீதிமன்ற மூன்றாவது நீதிபதி சத்தியநாராயணன் அதிரடி தீர்ப்பை வழங்கி உள்ளார். 18 எம்எல்ஏக்கள் தகுதி நீக்கம் செய்யப்பட்டது செல்லும் என்றும், தகுதிநீக்கம் தொடர்பாக சபாநாயகர் எடுத்த முடிவில் தவறு இல்லை என்றும் நீதிபதி அறிவித்தார். மேலும், தகுதிநீக்கம் செய்யப்பட்ட எம்எல்ஏக்கள் தாக்கல் செய்த மனுக்களையும் தள்ளுபடி செய்தார்.

    இந்த தீர்ப்பு முதல்வர் எடப்பாடி பழனிசாமி தலைமையிலான அரசுக்கு கிடைத்த வெற்றியாக பார்க்கப்படுகிறது. இந்த தீர்ப்பு டிடிவி தினகரன் மற்றும் அவரது ஆதரவாளர்களுக்கு சரியான பாடத்தை புகட்டியுள்ளது என சட்டத்துறை அமைச்சர் சிவி சண்முகம் தெரிவித்தார்.

    தீர்ப்பை நீதிபதி வாசித்து முடித்ததும் முதல்வர் தரப்பினர் இந்த வெற்றியை உற்சாகமாக கொண்டாடினர். அமைச்சர்கள் முதல்வரை சந்தித்து வாழ்த்து தெரிவித்தனர்.



    இந்த தீர்ப்பு அதிர்ச்சி அளிப்பதாகவும், ஜனநாயக நெறிகளுக்கு எதிரானது என்றும் விடுதலை சிறுத்தைகள் தலைவர் திருமாவளவன் கூறியுள்ளார். தகுதிநீக்கம் செய்யப்பட்ட 18 பேர் தரப்பிலும் மேல்முறையீடு செய்யப்பட்டால், அவர்களுக்கு வெற்றி கிடைக்கும் என்றும் கூறினார். #MLAsDisqualificationCase #CVShanmugam
    ஜெயலலிதா கொண்டு வந்த அனைத்து திட்டங்களையும் செயல்படுத்துகிறோம் என்று உளுந்தூர்பேட்டையில் நடந்த பொதுக்கூட்டத்தில் அமைச்சர் சி.வி.சண்முகம் பேசினார். #ministercvshanmugam #mkstalin
    உளுந்தூர்பேட்டை:

    உளுந்தூர்பேட்டையில் நடந்த அ.தி.மு.க. பொதுக்கூட்டத்தில் அமைச்சர் சி.வி.சண்முகம் கலந்து கொண்டு பேசியதாவது:-

    முதல்-அமைச்சர் ஜெயலலிதா மறைவுக்கு பின்னர் எடப்பாடி தலைமையிலான ஆட்சி 2 ஆண்டு காலத்தை நிறைவு செய்ய போகிறது. ஜெயலலிதா 100 ஆண்டுகாலம் இந்த ஆட்சி இருக்கும் என்றார், அதை நனவாக்கி வருகிறோம். இன்று அத்தனை சோதனைகளையும் சாதனைகளாக மாற்றி எடப்பாடி பழனிசாமி ஆட்சி செய்து கொண்டு இருக்கிறார்கள்.

    சட்டமன்றத்தில் எதிர்கட்சியினர் கலகத்தை உருவாக்கி ஆட்சியை கலைக்க முயன்றனர் அது நடக்கவில்லை. நீதிமன்றம் மூலம் முயன்றனர் அதுவும் முடியவில்லை. தற்போது முறைகேடு நடக்கிறது என்று சொல்கிறார்கள். அதை சொல்வது யார் தி.மு.க., அதன் புதிய தலைவராக உள்ள மு.க.ஸ்டாலின்.

    புதிய சட்டமன்ற கட்டிடம் கட்டிய விவகாரத்தில் விசாரணை கமிஷனை சந்திக்க ஏன் அச்சப்படுகிறீர்கள். சந்திக்க வேண்டியது தானே. ஏன் தடை வாங்குகிறீர்கள். நாங்கள் எதையும் சந்திக்க தயாராக இருக்கிறோம். ஊழல் பற்றி பேச பா.ம.க.வினருக்கும் தகுதி இல்லை. அவர்கள் மீதும் குற்றச்சாட்டு உள்ளது.

    ஜெயலலிதா கொண்டு வந்த திட்டங்கள் அனைத்தையும் செயல்படுத்தி கொண்டு இருக்கிற அரசு இது. இந்த ஆட்சி 100 ஆண்டு காலம் இருக்கும். தொண்டர்களின் ரத்தத்தை நம்பி இந்த இயக்கம் செயல்பட்டு கொண்டு இருக்கிறது என்று அவர் பேசினார்.

    முன்னதாக மாவட்ட செயலாளர் குமரகுரு எம்.எல்.ஏ. பேசியதாவது:-

    ஜெயலிலதா விட்டு சென்ற ஆட்சியை சிறந்த முறையில் எடப்பாடி பழனிசாமி ஆட்சி செய்து வருகிறார். இந்த இயக்கம், ஆட்சியை பற்றி பலர் பேசி வருகிறார்கள். நாம் தான் தமிழகத்தை ஆள போகிறோம் என்று உள்ளார் ஒரு கட்சியின் தலைவர். அவரது எண்ணம் பலிக்காது. எம்ஜி.ஆர். எந்த எண்ணத்தில் இந்த இயக்கத்தை தொடங்கினாரோ, அந்த வழியில் ஜெயலலிதா எப்படி ஆட்சி செய்தாரோ, அதே போன்று எடப்பாடி பழனிசாமி உள்ளார். விழுப்புரம் தெற்குமாவட்டம் எங்களது கோட்டை என்பதை நிரூபித்து உள்ளோம். எப்போதும் முதல்-அமைச்சரின் தலைமையின் கீழ் சிறப்பாக பணிசெய்வோம் என்று அவர் பேசினார். #ministercvshanmugam #mkstalin
    அ.தி.மு.க. கட்சி விதிகளில் செய்த மாற்றங்களை ஏற்கக்கூடாது என்று தேர்தல் ஆணையத்தில் சசிகலா தரப்பில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. #ADMK #ElectionCommission #Sasikala
    புதுடெல்லி:

    ஜெயலலிதா மறைவுக்கு பிறகு அ.தி.மு.க.வில் பொதுச்செயலாளர் பதவி நீக்கப்பட்டு ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் பதவிகள் புதிதாக உருவாக்கப்பட்டன. இதற்காக கட்சி விதிகளில் திருத்தம் செய்யப்பட்டது.

    இதனை தொடர்ந்து ஒருங்கிணைப்பாளராக ஓ.பன்னீர்செல்வமும், இணை ஒருங்கிணைப்பாளராக எடப்பாடி பழனிசாமியும் நியமிக்கப்பட்டனர்.

    கட்சி விதிகளில் செய்த திருத்தங்களை ரத்து செய்யக்கோரி முன்னாள் எம்.பி. கே.சி.பழனிசாமி (அ.தி.மு.க.வில் இருந்து நீக்கப்பட்டவர்) தலைமை தேர்தல் கமி‌ஷனில் முறையிட்டார். டெல்லி ஐகோர்ட்டிலும் வழக்கு தொடர்ந்தார்.


    இதற்கிடையே தேர்தல் கமி‌ஷனில் அமைச்சர் சி.வி.சண்முகம் நேரில் சென்று ஒரு மனு தாக்கல் செய்தார். அதில், கே.சி.பழனிசாமியின் மனுவை தள்ளுபடி செய்ய வேண்டும் என்று கூறியிருந்தார்.

    இந்த நிலையில் தேர்தல் கமி‌ஷனில் சசிகலா தரப்பில் பதில் மனு தாக்கல் செய்யப்பட்டது. அதில் கூறியிருப்பதாவது:-

    அ.தி.மு.க. கட்சி விதிகளில் செய்த மாற்றங்களை தேர்தல் ஆணையம் ஏற்கக்கூடாது. அ.தி.மு.க. பொதுச்செய லாளர் பதவிக்கு அடிப்படை உறுப்பினர் மூலம் உடனடியாக தேர்தல் நடத்த உத்தரவிட வேண்டும்.

    இவ்வாறு மனுவில் கூறப்பட்டு இருந்தது. #ADMK #ElectionCommission #Sasikala
    எம்.எல்.ஏ. கருணாஸ் மீது நடவடிக்கை எடுப்பது குறித்து சபாநாயகர் தனபாலுடன், சட்டத்துறை அமைச்சர் சி.வி. சண்முகம் ஆலோசனை மேற்கொண்டுள்ளார். #Karunas
    சென்னை:

    சமீபத்தில் வள்ளுவர் கோட்டம் பகுதியில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் முதல்வரை அவதூறாக பேசியதாக எம்.எல்.ஏ. கருணாஸ் மீது வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கில் கைது செய்யப்பட்ட கருணாஸ் தற்போது நிபந்தனை ஜாமீனில் வெளிவந்துள்ளார்.

    கருணாசின் பேச்சுக்கு பலரும் கண்டனம் தெரிவித்து இருந்த நிலையில், அவர் எம்.எல்.ஏ.வாக நீடிக்க வேண்டுமா? என பலரும் கேள்வி எழுப்புவதாக அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்து இருந்தார்.

    இந்நிலையில், அதிமுக கட்சியின் சார்பில் போட்டியிட்டு எம்.எல்.ஏ. பதவியில் உள்ள கருணாஸ் முதல்வரை அவதூறாக பேசியது குறித்து நடவடிக்கை எடுக்க சபாநாயகர் தனபாலுடன் ஆலோசனை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.



    சபாநாயகர் தனபாலுடன் தற்போது சட்டத்துறை மந்திரி சி.வி.சண்முகம் ஆலோசனை மேற்கொண்டுள்ளார். முன்னதாக முதல்வர் எடப்பாடி பழனிசாமி மற்றும் துணை முதல்வர் ஓ.பன்னீர் செல்வமும் ஆலோசனை செய்துள்ளனர்.

    இதுகுறித்து கருணாசுக்கு விரைவில் பதிலளிக்கப்படும் எனவும், அதன் பிறகு அவர் மீதான நடவடிக்கைகள் குறித்து முடிவு எடுக்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து, எம்.எல்.ஏ. கருணாசின் பதவி தப்புமா? என்ற கேள்வி எழுந்துள்ளது.

    அதே சமயம், கூவத்தூர் ரகசியங்களை தலைமை நீதிபதியிடம் தெரிவிக்க தயார் என கருணாஸ் கூறிவரும் நிலையில், ஒருவேளை அவர் மீது நடவடிக்கை எடுக்கப்படும் பட்சத்தில் விரைவில் கூவத்தூர் ரகசியம் குறித்து அவர் வெளியிடும் சூழல் ஏற்பட வாய்ப்புகள் உள்ளது. #Karunas
    தமிழர்களுக்காக பாடுபட்டு கொண்டிருக்கும் ஒரே இயக்கம் அ.தி.மு.க.தான் என்று விழுப்புரத்தில் நடந்த பொதுக்கூட்டத்தில் அமைச்சர் சி.வி.சண்முகம் பேசினார். #cvshanmugam #admk
    விழுப்புரம்:

    விழுப்புரம் ஒருங்கிணைந்த வடக்கு, தெற்கு மாவட்ட அ.தி.மு.க.சார்பில் ஈழத்தமிழர்கள் படுகொலை செய்யப்பட்டதற்கு காரணமான தி.மு.க.- காங்கிரஸ் கட்சிகளை போர்குற்ற விசாரணைக்கு உட்படுத்தி தண்டிக்க வலியுறுத்தி நேற்று இரவு விழுப்புரம் பழைய பஸ் நிலையம் அருகில் பொதுக் கூட்டம் நடைபெற்றது.

    கூட்டத்துக்கு விழுப்புரம் வடக்கு மாவட்ட செயலாளரும், ராஜ்யசபா எம்.பி.யுமான டாக்டர்.லட்சுமணன் எம்.பி., தெற்கு மாவட்ட செயலாளர் குமரகுரு எம்.எல்.ஏ. ஆகியோர் தலைமை தாங்கினர். எம்.பி.க்கள் ராஜேந்திரன், காமராஜ், ஏழுமலை, மாநில அமைப்பு செயலாளர் மோகன், சக்கரபாணி எம்.எல்.ஏ., திரைப்பட பாடலாசிரியர் கவிஞர் முத்துலிங்கம் ஆகியோர் முன்னிலை வகித்தனர். கூட்டத்தில் தமிழக சட்டத்துறை அமைச்சரும், அ.தி.மு.க.மாநில அமைப்பு செயலாளருமான சி.வி.சண்முகம், முன்னாள் அமைச்சரும் மாநில அமைப்பு செயலாளருமான நத்தம்  விஸ்வநாதன் ஆகியோர் கலந்துகொண்டு கண்டன உரையாற்றினர். 

    கூட்டத்தில் அமைச்சர் சி.வி.சண்முகம் பேசியதாவது:-

    இலங்கையில் தமிழர்களை கொன்று குவித்தவர் ராஜபக்சே. அதற்கு உடந்தையாக இருந்தது தி.மு.க., காங்கிரஸ் தலைமையிலான கூட்டணி அரசு. ஆனால் இன்று தி.மு.க.வுடன் வைகோ, திருமாவளவன் போன்றவர்கள் கூட்டணி வைத்துள்ளனர். இலங்கையில் நடந்த போருக்கு இந்திய அரசு உதவி செய்ததால்தான் போரில் வெற்றி பெற்றோம் என்று கடந்த 10 நாட்களுக்கு முன்பு டெல்லியில் ராஜபக்சே வெளிப்படையாக பேட்டியளித்துள்ளார். 

    இதற்கு வைகோ, திருமாவளவன், ராமதாஸ் போன்றவர்கள் கண்டனம் தெரிவித்து இருக்கிறார்களா? யாருமே இதைப்பற்றி பேசவில்லை. ஆனால் அன்றைக்கும், இன்றைக்கும் தமிழர்களுக்காக பாடுபட்டு கொண்டிருக்கிற ஒரே இயக்கம் அ.தி.மு.க. தான். இலங்கை தமிழர்களை கொன்று குவித்த ராஜபக்சே போர் குற்றவாளி என்றாலும் கொலை செய்தவனை விட கொலை செய்ய தூண்டுபவர்தான் குற்றவாளி. 

    தமிழினத்தை அழித்தது, தமிழினத்திற்கு துரோகம் செய்தது  தி.மு.க., எனவே ஈழத் தமிழர்களின் படுகொலைக்கு காரணமானவர்களை சர்வதேச குற்றவாளியாக அறிவித்து தண்டனை வழங்கும் வரை அ.தி.மு.க.வின் போராட்டம் நீடிக்கும்.

    இவ்வாறு அவர் பேசினார்.

    கூட்டத்தில் மாவட்ட எம்.ஜி.ஆர். இளைஞரணி செயலாளர் பசுபதி, துணைத்தலைவர் வண்டிமேடு ராமதாஸ், ஒன்றிய செயலாளர்கள் பேட்டை முருகன், கல்பர்ட் முத்தமிழ்செல்வன், சிந்தாமணி வேலு, கண்டமங்கலம் ராமதாஸ், முன்னாள் ஒன்றிய செயலாளர் வி.ஜி.சுரேஷ்பாபு, முன்னாள் மாவட்ட துணை செயலாளர் அற்புதவேல்,  மாவட்ட எம்.ஜி.ஆர்.மன்ற இணைசெயலாளர்கள் வி.பி.எஸ்.குருநாதன், மந்தக்கரை ஜானகிராமன், மாவட்ட தகவல் தொழில்நுட்ப பிரிவு செயலாளர் மணவாளன், தலைமை கழக பேச்சாளர் ராஜகோபால்,  முன்னாள் யூனியன் சேர்மன்கள் பெரும்பாக்கம் இளங்கோவன், விஜயா சுரேஷ்பாபு, விழுப்புரம் நகர கூட்டுறவு வங்கி இயக்குனரும், ரியல் எஸ்டேட் அதிபருமான வக்கீல் செந்தில், மாவட்ட மருத்துவரணி தலைவர் டாக்டர்.கலைச்செல்வன், கோலியனூர் ஒன்றிய துணை செயலாளர்கள் சீத்தாகலியபெருமாள், பவாணிதமிழ்மணி, இலக்கிய அணி செயலாளர் பெட்மார்ட் கலியமூர்த்தி, எம்.ஜி.ஆர்.மன்ற செயலாளர் மரகதபுரம் அழகேசன், மாவட்ட பிரதிநிதி ஜனார்த்தனன், ஒன்றிய இணை செயலாளர் பார்த்தசாரதி, பொருளாளர் அன்பழகன் உள்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர். முடிவில் முன்னாள் நகர சபை தலைவரும், அ.தி.மு.க.வின் நகர செயலாளருமான வக்கீல் பாஸ்கரன் நன்றி கூறினார். #cvshanmugam #admk 
    அ.தி.மு.க. ஆட்சியை கலைக்க ஸ்டாலினுடன் மறைமுகமாக தினகரன் கூட்டணி வைத்துள்ளதாக அமைச்சர் சி.வி.சண்முகம் குற்றம்சாட்டியுள்ளார். #ADMK #CVeShanmugam #MKStalin #TTVDhinakaran
    விழுப்புரம்:

    விழுப்புரம் நகர அ.தி.மு.க. சார்பில் மறைந்த தமிழக முன்னாள் முதல்- அமைச்சர் அண்ணாவின் 110-வது பிறந்தநாள் விழா பொதுக்கூட்டம் விழுப்புரம் மந்தக்கரை திடலில் நேற்று இரவு நடைபெற்றது.

    கூட்டத்தில் அமைச்சர் சி.வி.சண்முகம் பேசியதாவது:-

    தமிழகத்தில் அ.தி.மு.க. சிறப்பான ஆட்சி நடத்தி வருகிறது. முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி மக்கள் நலன் சார்ந்த திட்டங்களை உடனுக்குடன் நிறைவேற்றி வருகிறார். இந்த ஆட்சிக்கு தினகரனும், மு.க.ஸ்டாலினும் தொடர்ந்து அவப்பெயர் ஏற்படுத்தி வருகின்றனர்.

    அ.தி.மு.க. ஆட்சியை கலைக்க ஸ்டாலினுடன் மறைமுகமாக தினகரன் கூட்டணி வைத்துள்ளார். அவர்களின் எண்ணம் ஒருபோதும் நிறைவேறாது. 5 ஆண்டுகாலம் முழுமையாக ஆட்சி நடைபெறும். அதன் பின்னரும் மீண்டும் அ.தி.மு.க. ஆட்சி அமையும்.

    மு.க.ஸ்டாலினுக்கு முதல்-அமைச்சராக தகுதியும், ராசியும் கிடையாது. அவர் ஒருபோதும் தமிழகத்தின் முதல்வராக முடியாது. ஜெயலலிதாவால் போயஸ்கார்டன் மற்றும் கட்சியில் இருந்து விரட்டியடிக்கப்பட்டவர் தினகரன். இவர் தற்போது ஜெயலலிதா படத்தை வைத்து மக்களை ஏமாற்றி வருகிறார். அடுத்த தேர்தலில் மீண்டும் ஆர்.கே. நகரில் இவர் போட்டியிட்டு வெற்றிபெற முடியுமா?

    முதல்-அமைச்சர் பழனிசாமி, துணை முதல்- அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் ஆகியோரை ஏகவசனத்தில் வசைபாடி வருகிறார். ஒரு தலைவருக்கான தகுதி தினகரனுக்கு கிடையாது. தினகரன் கலந்து கொள்ளும் கூட்டங்களில் கூட்டம் சேருவதுபோல் ஒரு மாய தோற்றத்தை உருவாக்குகிறார்.

    அ.தி.மு.க.வின் வரலாறு தெரியாமல் எம்.ஜி.ஆர். படத்துக்கு அருகில் கருணாநிதி படத்தை வைக்க வேண்டும் என ரஜினிகாந்த் பேசி வருகிறார். கருணாநிதியை எதிர்க்கவே அ.தி.மு.க. தொடங்கப்பட்டது. அவர் மறைந்தாலும் தி.மு.க.தான் அ.தி.மு.க.வுக்கு எதிரி. மீண்டும் அ.தி.மு.க.வின் பொற்கால ஆட்சி எப்போதும் தொடரும்.

    இவ்வாறு அமைச்சர் சி.வி.சண்முகம் பேசினார். #ADMK #CVeShanmugam #MKStalin #TTVDhinakaran
    குட்கா ஊழல் புகார் குறித்து பேசிய போலீஸ் சூப்பிரண்டு ஜெயக்குமார் மீதான புகார் ஆதாரமற்றது என்று அமைச்சர் சிவி சண்முகம் தெரிவித்துள்ளார். #expolicecommissionergeorge #ministercvshanmugam

    விழுப்புரம்:

    விழுப்புரம் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டாக ஜெயக்குமார் பணியாற்றி வருகிறார். இவர் இதற்கு முன்பு சென்னையில் துணை கமி‌ஷனராக பணியாற்றினார்.

    அப்போது குட்கா ஊழல் பிரச்சினையில் சரியாக விசாரணை நடத்தவில்லை. அவர் பணியில் திறமையில்லாதவராக இருந்தார் என்று முன்னாள் போலீஸ் கமி‌ஷனர் ஜார்ஜ் குற்றம் சாட்டியிருந்தார்.

    இது தொடர்பாக போலீஸ் சூப்பிரண்டு ஜெயக்குமார் நேற்று பதில் அளித்தார். அப்போது அவர் நான் நேர்மையானவன். என்மீது காழ்ப்புணர்ச்சி காரணமாக ஜார்ஜ் குற்றம் சாட்டுகிறார். நான் நேர்மையானவன் என்பதை எங்கே நிரூபிக்க வேண்டுமோ அங்கு நிரூபிப்பேன் என்று அறிவித்திருந்தார்.


    இந்த நிலையில் விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டி தாலுகாவில் உள்ள பனையபுரத்தில் இன்று அரசு விழா நடைபெற்றது. இதில் அமைச்சர் சி.வி.சண்முகம் கலந்து கொண்டார். அப்போது அவர் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார்.

    அவரிடம் நிருபர்கள் கேட்ட கேள்விகளும் அவர் அதற்கு அளித்த பதில்களும் வருமாறு:-

    கேள்வி: குட்கா ஊழல் தொடர்பாக விழுப்புரம் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஜெயக்குமார் மீது முன்னாள் கமி‌ஷனர் ஜார்ஜ் குற்றம் சாட்டி உள்ளாரே?

    பதில்: போலீஸ் சூப்பிரண்டு ஜெயக்குமார் மீது கூறப்படும் குற்றச்சாட்டு ஆதராமற்றது.

    கேள்வி: ராஜீவ்காந்தி கொலை வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள 7 பேரை விடுதலை செய்யப்படுவார்களா?

    பதில்: இன்று நடைபெறும் அமைச்சரவை கூட்டத்தில் இதுகுறித்து முடிவு செய்யப்படும்.

    இவ்வாறு அவர் கூறினார். #expolicecommissionergeorge #ministercvshanmugam

    விழுப்புரத்தில் அமைச்சர் சி.வி.சண்முகம் அலுவலகத்தின் கண்ணாடி உடைக்கப்பட்டது தொடர்பாக போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
    விழுப்புரம்:

    விழுப்புரம் சட்டமன்ற தொகுதி எம்.எல்.ஏ.வாக இருப்பவர் அமைச்சர் சி.வி.சண்முகம். இவரது அலுவலகம் விழுப்புரம் கலெக்டர் அலுவலகத்தின் முன்பகுதியில் உள்ளது. இதன் அருகே ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகம் அமைந்துள்ளது. இங்கு 24 மணிநேரமும் ஆட்கள் நடமாட்டம் இருக்கும்.

    அமைச்சர் சி.வி.சண்முகத்தின் அலுவலகத்தில் அவரது தனி உதவியாளர் தரணிதரன் தினமும் வந்து பொதுமக்கள் அளிக்கும் கோரிக்கை மனுக்களை பெற்று அதனை அமைச்சரிடம் வழங்கி வருவார்.

    நேற்று இரவு அமைச்சர் அலுவலகத்தில் வலதுபுறத்தில் உள்ள கண்ணாடி மீது யாரோ? மர்ம மனிதர்கள் கல்வீசி சென்றுள்ளனர். இதில் கண்ணாடி உடைந்து நொறுங்கி சிதறியது. இன்று காலை அமைச்சரின் தனி உதவியாளர் தரணிதரன் அலுவலகத்தை திறக்க வந்தார். அப்போது கண்ணாடி உடைந்து கிடப்பதை பார்த்து அதிர்ச்சியடைந்தார்.

    இதுகுறித்து அவர் விழுப்புரம் தாலுகா போலீசில் புகார் செய்தார். அதன்பேரில் சப்-இன்ஸ்பெக்டர் ஆனந்தன் மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்றனர். அமைச்சர் அலுவலகத்தில் உள்ள கண்ணாடியை உடைத்தவர்கள் யார்? என்று விசாரணை மேற்கொண்டனர். மேலும் அந்த பகுதியில் உள்ள சி.சி.டி.வி.கேமராவில் பதிவான காட்சிகளை வைத்து ஆய்வு மேற்கொண்டு வருகின்றனர்.
    தமிழக சட்டத்துறை அமைச்சர் சி.வி. சண்முகத்தை கண்டித்து உத்தமபாளையத்தில் மருத்துவ சமூக நல சங்கத்தினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். #MinisterCVShanmugam

    உத்தமபாளையம்:

    தேனி மாவட்டம் உத்தமபாளையம் புறவழிச்சாலையில் தமிழ்நாடு மருத்துவ சமூக நல சங்கத்தினர் மற்றும் முடி திருத்தும் தொழிலாளர் நலச்சங்கம் ஆகியவை சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. மருத்துவர் சமூக நல சங்கத்தின் மாநில பொதுச் செயலாளர் ராஜன் தலைமை வகித்தார். மாவட்ட பொருளாளர் திருமலைராஜ் முன்னிலை வகித்தார்.

    அ.தி.மு.க. கட்சி கூட்டத்தில் பேசிய அமைச்சர் சி.வி.சண்முகம் மருத்துவர் சமூகத்தை இழிவுபடுத்தும் வகையில் கருத்து தெரிவித்துள்ளார். அவர் பேசியதற்கு மன்னிப்பு கேட்க வேண்டும் என வலியுறுத்தி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள் கோ‌ஷம் எழுப்பினர்.

    நிர்வாகிகள் போஸ், பாலு உள்பட முடி திருத்தும் தொழிலாளர்கள் பலர் கலந்து கொண்டனர். அமைச்சர் தான் தெரிவித்த கருத்துக்கு மன்னிப்பு கோரும் வரை தங்கள் போராட்டம் தொடர்ந்து நடைபெறும் என்று அவர்கள் தெரிவித்தனர். #MinisterCVShanmugam

    ×