search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "விழுப்புரம்"

    • பாராளுமன்ற தேர்தலில் புரட்சி பாரதம் கட்சிக்கு எந்த தொகுதியையும் அதிமுக ஒதுக்கவில்லை.
    • 40 தொகுதிகளிலும் அதிமுகவுக்கு ஆதரவு அளிப்பதாக புரட்சி பாரதம் கட்சி தலைவர் ஜெகன் மூர்த்தி திட்டவட்டமாக கூறினார்

    வரும் நாடாளுமன்றத் தேர்தலில் அதிமுகவுடன் புரட்சி பாரதம் கட்சித் தலைவர் பூவை ஜெகன்மூர்த்தி கூட்டணியில் பேச்சுவார்த்தை நடத்தி வந்தார்

    "திருவள்ளூர், காஞ்சிபுரம், விழுப்புரம் தொகுதிகளை விருப்பப் பட்டியலாக அளித்து, அதில் ஒரு தொகுதியை ஒதுக்க வேண்டும் என அதிமுகவிடம் அவர் கேட்டிருந்தார்.

    ஆனால் கூட்டணியில் புரட்சி பாரதம் கட்சிக்கு எந்த தொகுதியையும் அதிமுக ஒதுக்கவில்லை. இதனையடுத்து அதிமுக - புரட்சி பாரதம் கூட்டணி முறியும் என எதிர்பார்க்கப்பட்டது.

    இந்நிலையில், அதிமுக கூட்டணியில் புரட்சி பாரதம் கட்சி தொடரும் என அக்கட்சியின் தலைவர் பூவை ஜெகன்மூர்த்தி தெரிவித்துள்ளார்.

    செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த அவர், அதிமுக கூட்டணியில் எங்களுக்கு சீட் வழங்காததால் வருத்தத்தில் இருந்தோம். அடுத்த தேர்தலில் பார்த்துக் கொள்ளலாம் என அதிமுக தலைவர்கள் எங்களை சமாதானம் செய்தனர். பெரும்பாலான தொண்டர்கள் அதிமுகவுடன் தொடரலாம் என கூறியதால் அதில் தொடர முடிவு செய்யப்பட்டது என்றார்.

    40 தொகுதிகளிலும் அதிமுகவுக்கு ஆதரவு அளிப்பதாக புரட்சி பாரதம் கட்சி தலைவர் ஜெகன் மூர்த்தி திட்டவட்டமாக கூறினார்.

    • அரசு அதிகாரிகள் எங்களை தடுப்பதால் திருவிழா நடத்த முடியவில்லை.
    • கோவில் வளாகத்தில் பொதுமக்கள் சார்பில் நடைபெற்ற கூட்டத்தில் முதற்கட்டமாக அறிவித்து உள்ளனர்.

    மரக்காணம்:

    விழுப்புரம் மாவட்டம் மரக்காணம் ஒன்றியத்திற்கு உட்பட்டது நடுக்குப்பம் ஊராட்சி. இந்த கிராமத்தில் பழமை வாய்ந்த திரவுபதி அம்மன் கோவில் உள்ளது.

    இக்கோவிலில் அப்பகுதியை சேர்ந்த அனைத்து பொதுமக்கள் சார்பில் 10 நாள் திருவிழா நடத்தப்படுவது வழக்கம். இக்கோவில் திருவிழாவை நடத்துவது சம்பந்தமாக அப்பகுதியை சேர்ந்த இரு தரப்பினருக்கு கடந்த 7 வருடங்களாக பிரச்சினை ஏற்பட்டுள்ளது.

    இதன் காரணமாக அரசு அதிகாரிகள் இரு தரப்பினருக்கும் எவ்வித பிரச்சனையும் உண்டாகாமல் இருக்க கோவில் திருவிழாவை நடத்தாமல் நிறுத்தி விட்டனர். இதனால் கடந்த 7 ஆண்டு களாக திருவிழா நடைபெறவில்லை.


    இந்நிலையில் நடுக்குப்பம் கிராமத்தைச் சேர்ந்த ஊர் மக்கள் சார்பில் எங்கள் கிராமத்தில் உள்ள திரவுபதி அம்மன் கோவில் திருவிழா நடத்துவதை அரசு அதிகாரிகள் சட்டவிதிகளை பயன்படுத்தி தடுக்கின்றனர்.

    அரசு அதிகாரிகள் எங்களை தடுப்பதால் திருவிழா நடத்த முடியவில்லை. எனவே இந்த ஆண்டு எங்கள் கோவிலுக்கு வழக்கம்போல் திருவிழா நடத்த அரசு அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    அரசு அதிகாரிகள் திருவிழா நடத்த நடவடிக்கை எடுக்கவில்லை என்றால் வருகிற பாராளுமன்ற தேர்தலை புறக்கணிப்போம்.

    மேலும் அரசு சார்பில் எங்களுக்கு வழங்கிய குடும்ப அட்டை, ஆதார் அட்டை உள்ளிட்ட ஆவணங்களையும் திரும்ப அரசிடமே ஒப்படைப்போம் என கோவில் வளாகத்தில் பொதுமக்கள் சார்பில் நடைபெற்ற கூட்டத்தில் முதற்கட்டமாக அறிவித்து உள்ளனர்.

    வரும் நாடாளுமன்றத் தேர்தலில் அதிமுக கூட்டணியில் தொடர்வதாக புரட்சி பாரதம் கட்சித் தலைவர் பூவை ஜெகன்மூர்த்தி தெரிவித்துள்ளார்.

    "திருவள்ளூர், காஞ்சிபுரம், விழுப்புரம் தொகுதிகளை விருப்பப் பட்டியலாக அளித்து, அதில் ஒரு தொகுதியை ஒதுக்க வேண்டும் என அதிமுகவிடம் கேட்டுள்ளோம்" என்று அவர் கூறியுள்ளார்.

    இன்னமும் அதிமுக எங்களிடம் பேச்சுவார்த்தை நடத்தவில்லை. ஆனாலும் திருவள்ளூர் எங்களது சொந்த தொகுதி என்பதால் அதை நிச்சயம் கேட்டு வெற்றி பெறுவோம் என்று பூவை ஜெகன்மூர்த்தி தெரிவித்துள்ளார்.

    அரசியலமைப்பு சட்டத்தை வெளிப்படையாக மீறி ராமர் கோயிலை பிரதமர் மோடி திறந்து வைத்துள்ளார். ஒரு மதத்தை மட்டுமே வைத்து அவர் வெளிப்படையாகவே அரசியல் செய்கிறார். ஹிந்து மத்தை வைத்து பாஜக அரசியல் செய்கிறது. நான் கூட ஹிந்து தான் ஆனால் பாஜகவின் மத அரசியலை நான் ஆதரிக்கவில்லை என்று பூவை ஜெகன் மூர்த்தி பேசியுள்ளார்.

    மேலும் "திமுக வெல்லக் கூடாது என்பதுதான் பாஜகவின் ஒரே எண்ணமாக உள்ளது. பாஜக ஜெயிக்காது என பிரதமர் மோடிக்கே தெரியும். அதனால்தான், அதிமுக ஜெயித்தால்கூட பரவாயில்லை என அக்கட்சித் தலைவர்களை புகழ்ந்து பேசியுள்ளார் என்று பூவை ஜெகன்மூர்த்தி கூறியுள்ளார்.

    • அடுத்தடுத்த அதி வரைவு ரெயில்கள் நிறுத்தம் செய்யப்பட்டுள்ளதால், பயணிகள் அவதி அடைந்துள்ளனர்.
    • ராமேஸ்வரம் சிறப்பு ரெயில்களும் தாமதமாகும் சூழல் ஏற்பட்டுள்ளது.

    விழுப்புரம் ரெயில் நிலையத்தில் சிக்னல் கோளாறு காரணமாக அடுத்தடுத்த அதி வரைவு ரெயில்கள் நிறுத்தம் செய்யப்பட்டுள்ளன. இதனால், பயணிகள் அவதி அடைந்துள்ளனர்.

    தாதர் சாளுக்கியா, அனந்தபுரி எக்ஸ்பிரஸ், செங்கோட்டை எக்ஸ்பிரஸ், முத்துநகர் எக்ஸ்பிரஸ் ஆகிய 4 ரெயில்கள் 40 நிமிடம் தாமதம் ஏற்பட்டுள்ளது.

    அடுத்தடுத்து பொதிகை எக்ஸ்பிரஸ், கம்பன் எக்ஸ்பிரஸ், ராமேஸ்வரம் சிறப்பு ரெயில்களும் தாமதமாகும் சூழல் ஏற்பட்டுள்ளது.

    • இதற்கு எதிர்ப்பு தெரிவித்து பாதிக்கப்பட்டவர்கள் பலமுறை போராட்டத்தில் ஈடுப்பட்டு வருகின்றனர்.
    • பள்ளி கட்டிடம் இடிக்கும் பணி பொக்லைன் எந்திரம் கொண்டு தொடங்கியுள்ளது.

    சீர்காழி:

    விழுப்புரம் முதல் நாகப்பட்டினம் வரை நான்கு வழி சாலை அமைக்கும் பணியின் ஒரு கட்டமாக மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழியில் இருந்து தரங்கம்பாடி வரை நான்கு வழி சாலை அமைக்கும் பணிகள் கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு மேலாக தொடர்ந்து நடைபெற்று வருகிறது.

    இப்பணிக்காக சீர்காழி முதல் தரங்கம்பாடி வரை இரு பக்கமும் 20- க்கும் மேற்பட்ட கிராமங்களில் சாலையோரம் உள்ள விளைநிலங்கள், வீடுகள்,வீட்டு மனைகள் கையகப்படுத்தப்பட்டது. இவ்வாறு கையகப்படுத்தப்பட்ட நிலங்களுக்கு சதுர அடிக்கு ரூ.5, ரூ.6 வரை குறைந்த பட்சம் தொகை நிர்ணயம் செய்யப்பட்டு வழங்கப்பட்டதாக கூறப்படுகிறது.

    இதற்கு எதிர்ப்பு தெரிவித்து பாதிக்கப்பட்டவர்கள் பலமுறை போராட்டத்தில் ஈடுப்பட்டு வருகின்றனர் .

    இதனிடையே சீர்காழி சட்டநாதபுரம் பகுதியில் இருந்து தரங்கம்பாடி வரை சாலை விரிவாக்க பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. ஆங்காங்கே மேம்பாலங்கள் அமைக்கும் பணியும் ,சாலை விஸ்தரிப்பு பணியும் நடந்து வரும் நிலையில் காத்திருப்பு பகுதியில் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி உள்ளது .

    இந்தப் பள்ளி கட்டிடம் ஆனது சாலை விரிவாக்க பணியில் இடிபடும் நிலையில் உள்ளது. மற்ற பகுதிகளில் நிலங்கள் கையகப்படுத்தப்பட்டு இடித்து அகற்றப்பட்டு பணிகள் நடைபெற்று வரும் நிலையில் பள்ளி கட்டிடம் மட்டும் இடிக்கப்படாமல் இருந்து வந்த நிலையில் இன்று பள்ளி கட்டிடம் இடிக்கும் பணி துவங்கி உள்ளது. பள்ளியில் பயிலும் 200-க்கும் மேற்பட்ட மாணவ மாணவிகள் அருகில் உள்ள ஊராட்சி கட்டிடம் உள்ளிட்டவைகளில் கல்வி பயில நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. பள்ளி கட்டிடம் இடிக்கும் பணி பொக்லைன் எந்திரம் கொண்டு தொடங்கியுள்ளது. ஊராட்சி மன்ற தலைவர் அன்புமணி மணிமாறன் பணியை பார்வையிட்டார்.

    • விழுப்புரம் மாவட்டம் கோலியனூர் மற்றும் கண்டமங்கலம் ஊராட்சி ஒன்றியங்களில் ஊரக வளர்ச்சித்துறையின் மூலம் மேற்கொள்ளப்பட்டு வரும் வளர்ச்சித் திட்டப்பணி–களை மாவட்ட கலெக்டர் மோகன் ஆய்வு மேற்கொண்டார்.
    • இப்பணியினை விரைந்து முடித்து பயன்பாட்டிற்கு கொண்டு வர வேண்டும் என அலுவலர்களுக்கு அறிவுறுத்தினார்.

    விழுப்புரம்:

    விழுப்புரம் மாவட்டம் கோலியனூர் மற்றும் கண்டமங்கலம் ஊராட்சி ஒன்றியங்களில் ஊரக வளர்ச்சித்துறையின் மூலம் மேற்கொள்ளப்பட்டு வரும் வளர்ச்சித் திட்டப்பணி–களை மாவட்ட கலெக்டர் மோகன் ஆய்வு மேற்கொண்டார்.

    ஆய்வின்போது மாவட்ட கலெக்டர் கோலியனூர் ஊராட்சி ஒன்றியம் பனங்குப்பம் ஊராட்சியில் ரூ.18.50 லட்சம் மதிப்பீட்டில் ஊராட்சி ஒன்றிய துவக்க–ப்பள்ளி கட்டிடம் கட்டப்பட்டு வருவதை பார்வையிட்டு நடப்பு கல்வியாண்டிற்கு பள்ளிகள் திறக்கப்பட்டதால் இப்பணி யினை விரைந்து முடித்து பயன்பாட்டிற்கு கொண்டு வர வேண்டும் என அலுவலர்களுக்கு அறிவுறுத்தினார்.

    தொடர்ந்து கண்டமங்க–லம் ஊராட்சி ஒன்றியம் கெங்கராம்பாளையம் ஊராட்சியில் ரூ.1.58 லட்சம் மதிப்பீட்டில் நூலக கட்டிடம் சீரமைக்கப்பட்டுள்ளதை பார்வையிட்டு நூலகம் மாணவர்களுக்கும்ர பொது–மக்களுக்கும் பயன்பெறும் வகையில் அதிகளவு புத்தகங்கள் வரவழைத்து வைத்திட வேண்டும் என அலுவலர்களுக்கு அறிவுறுத்தினார். அதனை தொடர்ந்து சின்னபாபு சமுத்திரம் ஊராட்சியில் தேசிய ஊரக வேலை உறுதித்திட்டத்தின்கீழ் ரூ.14.37 லட்சம் மதிப்பீட்டில் கசிவு நீர் குட்டை அமைக்கப்பட்டு வருவதை பார்வையிட்டதுடன் விவசாயப்பணிக்கு ஏற்ப பணியினை விரைந்து முடித்திட வேண்டும் என பணியாளர்களுக்கு அறிவுறுத்தினார்.

    பின்னர் கண்டமங்கலம் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தை ஆய்வு செய்து மருத்துவர்கள் பணி–யாளர்கள் வருகை குறித்து கேட்டறிந்ததுடன் சிகிச்சைப் பிரிவுகளை பார்வையிட்டு நன்றாக பராமரிக்க மருத்து––வர்களுக்கு அறிவுறுத்தி–னார்.

    இந்த ஆய்வின்போது மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் சங்கர், வட்டார வளர்ச்சி அலுவலர்கள் மற்றும் அரசு அலுவலர்கள் உட்பட பலர் உடனிருந்தனர்.

    • விழுப்புரம் மாவட்டத்தில் 2,033 இடங்களில் கொரோனா சிறப்பு தடுப்பூசி முகாம் நடந்தது.
    • விழுப்புரம் மாவட்டத்தில் 18 வயதிற்கு மேற்பட்டோரில் முதல் தவணையாக 1811530 நபர்களுக்கும், இரண்டாம் தவணையாக 1807593 நபர்களுக்கும் மற்றும் ஊக்குவிப்பு தவணையாக 15759 நபர்களுக்கும் செலுத்தப்பட்டுள்ளது.

    விழுப்புரம்:

    விழுப்புரம் கலெக்டர் மோகன் விடுத்துள்ள செய்திக் குறிப்பில் கூறியதாவது:- இந்தியாவில் கொரோனா பாதிப்பு கடந்த 5 மாத இடை வெளிக்குப்பின் கொரோனா பாதிப்பு தற்போது மீண்டும் அதி கரித்து வருகிறது. ஜனவரி 2021 முதல் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை, அரசு ஆஸ்பத்திரிகள், அரசு ஆரம்ப சுகாதார நிலையங்கள் மற்றும் நகராட்சி அரசு ஆரம்ப சுகாதார நிலையங்களில் கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டு வருகிறது. விழுப்புரம் மாவட்ட–த்தில் கொரோனா தடுப்பூசி 16.1.2021 முதல் ஆஸ்பத்திரி பணியாளர்களுக்கும், 26.2.2021 முதல் முன்கள–ப்பணி யாளர்களுக்கும், 1.3.2021 முதல் 45 வயதிற்கு மேற்பட்ட பொது மக்களுக்கும், 20.5.2021 முதல் 18 வயதிற்கு மேற்பட்ட பொதுமக்களுக்கும், 3.1.2022 முதல் 15 வயதிலிருந்து 17 வயதிற்குட்பட்ட வர்களுக்கும், 16.3.2022 முதல் 12 வயதிலிருந்து 14 வயதிற் குட்பட்டவர்கள் என படிப்படியாக அனை வருக்கும் தடுப்பூசி வழங்கப்பட்டு வருகிறது.

    இதுவரை விழுப்புரம் மாவட்டத்தில் 18 வயதிற்கு மேற்பட்டோரில் முதல் தவணையாக 1811530 நபர்களுக்கும், இரண்டாம் தவணையாக 1807593 நபர்களுக்கும் மற்றும் ஊக்குவிப்பு தவணையாக 15759 நபர்களுக்கும் செலுத்தப்பட்டுள்ளது. 2-ம் தவணை செலுத்திய பிறகு 9 மாதங்கள் கடந்த முன்களப்பணியாளர்கள் மற்றும் 45 வயதிற்கு மேற்பட்டவர்களில் இரத்த அழுத்தம், சர்க்கரை நோய் போன்ற இணைநோய் உள்ளவர்கள் மற்றும் 60 வயதிற்கு மேற்பட்டவர்கள் ஊக்குவிப்பு தவணை செலுத்தி கொரோனா நோய்தொற்றிலிருந்து தங்களை பாதுகாத்துக் கொள்ள வேண்டும். தமிழக முதல்வர் அவர் களின் வழிகாட்டுதலின் படி, சுகாதாரத்துறை அமைச்சர் அறிவுறுத்தலின்படி வருகிற 12.6.2022 அன்று நமத மாவட்டத்தில் சிறப்பு மெகா தடுப்பூசி முகாம் 2033 இடங்களில் நடத்தப்பட வுள்ளது. முதல் தவணை, 2-ம் தவணை மற்றும் ஊக்குவிப்பு தவணை வழங்க ஏற்பாடு செய்யப் பட்டுள்ளது.

    கொரோனா உயிரிழப்ப–பைத் தடுக்க நம்மிடம் உள்ள ஒரே ஆயுதம் கொரோனா தடுப்பூசி ஆகும். 12.6.2022 அன்று நடைபெறும் சிறப்பு கொரோனா தடுப்பூசி முகாம்களில் கொரானா வழிகாட்டு நெறி முறைகளைப் பின்பற்றி கொரோனா தொற்று பாதிப்பில் இருந்து மீள கொரோனா தடுப்பூசி செலுத்திக்கொள்ளுமாறு விழுப்புரம் மாவட்ட கலெக்ர் மோகன் தெரிவித்துக் கொண்டார்.

    • லஞ்சம் வாங்கிய தாசில்தார் பணத்துடன் கையும்-களவுமாக பிடிபட்டு கைதானார்.
    • விழுப்புரம் மாவட்ட ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்தில் உள்ள லஞ்ச ஊழல் சிறப்பு தடுப்பு நீதிமன்றத்தில் விசாரணை.

    விழுப்புரம்:

    விழுப்புரம் மாவட்டம் செஞ்சி பகுதியை சேர்ந்தவர் வடிவேல். விவசாயி. இவர் வண்டல்மணல் அள்ளுவதற்காக கடந்த 2019 ஜூன் மாதம் செஞ்சி தாசில்தார் ஆதிமூலம் என்பவரை அணுகினார். அப்போது தாசில்தார் ஆதிமூலம், விவசாயி வடிவேலுவிடம் ரூ.8 ஆயிரம் பணம் கேட்டார்.

    அதிர்ச்சி அடைந்த விவசாயி வடிவேல் இது குறித்து விழுப்புரம் மாவட்ட லஞ்ச ஒழிப்பு போலீசில் புகார் செய்தார்.

    அதனடிப்படையில் தாசில்தார் ஆதிமூலம் பணத்துடன் கையும்-களவுமாக பிடிபட்டு கைதானார். இது தொடர்பாக அப்போதைய விழுப்புரம் மாவட்ட கலெக்டராக இருந்த அண்ணாதுரை, தாசில்தார் ஆதிமூலத்தை சஸ்பெண்ட் செய்தார்.

    இது தொடர்பான வழக்கு விழுப்புரம் மாவட்ட ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்தில் உள்ள லஞ்ச ஊழல் சிறப்பு தடுப்பு நீதிமன்றத்தில் நடக்கிறது.

    இதில் பல்வேறு சாட்சிகள் சேர்க்கப்பட்டுள்ளன. முதல் சாட்சியாக தற்போது வேளாண்துறை இயக்குனராக இருக்கும் முன்னாள் கலெக்டர் அண்ணாதுரை சேர்க்கப்பட்டுள்ளார்.

    இந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்தது. வேளாண்துறை இயக்குனர் அண்ணாதுரை, நீதிபதி புஷ்பராணி முன்னிலையில் ஆஜராகி சாட்சியம் அளித்தார்.

    • விழுப்புரம் மாவட்டம் முழுவதும் சுமார் 1100 நியாயவிலைக் கடைகள் உள்ளன.
    • ௧௧ அம்ச கோரிக்கைகளை நிறைவேற்ற வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

    விழுப்புரம்:

    விழுப்புரம் மாவட்டம் முழுவதும் சுமார் 1100 நியாயவிலைக் கடைகள் உள்ளன. இதில் தமிழ்நாடு அரசு நியாயவிலைக் கடை பணியாளர் சங்கம் சார்பாக இரண்டாவது நாளாக தனித்துறை, 3 சதவீதம் அகவிலைப்படி, புதிய விற்பனை முனையம், 4 ஜி மோடம் வழங்குதல், ஓய்வுதியம், சரியான விலையில் தரமான பொருட்கள் பொட்டலமாக வழங்குதல், உள்ளிட்ட 11 அம்ச கோரிக்கைகளை நிறைவேற்ற வலியுறுத்தி 7,8,9 தேதியில் மாநிலம் தழுவிய மூன்று நாள் தொடர் வேலை நிறுத்தப் போராட்டம் என அறிவிக்கப்பட்டு நேற்று நடைபெற்றது.

    அதன் தொடர்ச்சியாக இன்று 2-வது நாளாக விழுப்புரம் மாவட்ட ஆட்சியர் பெருந்திட்ட வளாகத்தில் தமிழ்நாடு அரசு நியாயவிலைக் கடை பணியாளர் சங்கத்தின் சார்பாக ௧௧ அம்ச கோரிக்கைகளை நிறைவேற்ற வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. விழுப்புரம் மாவட்டத்தில் இன்று 700 ரேசன் கடைகள் மூடப்பட்டன. இதனால் அத்தியாவசியப் பொருட்கள் வாங்க முடியாமல் பொதுமக்கள் பெரும் பாதிப்புக்கு உள்ளாகினர்.

    ×