search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "viluppuram"

    • அரசு அதிகாரிகள் எங்களை தடுப்பதால் திருவிழா நடத்த முடியவில்லை.
    • கோவில் வளாகத்தில் பொதுமக்கள் சார்பில் நடைபெற்ற கூட்டத்தில் முதற்கட்டமாக அறிவித்து உள்ளனர்.

    மரக்காணம்:

    விழுப்புரம் மாவட்டம் மரக்காணம் ஒன்றியத்திற்கு உட்பட்டது நடுக்குப்பம் ஊராட்சி. இந்த கிராமத்தில் பழமை வாய்ந்த திரவுபதி அம்மன் கோவில் உள்ளது.

    இக்கோவிலில் அப்பகுதியை சேர்ந்த அனைத்து பொதுமக்கள் சார்பில் 10 நாள் திருவிழா நடத்தப்படுவது வழக்கம். இக்கோவில் திருவிழாவை நடத்துவது சம்பந்தமாக அப்பகுதியை சேர்ந்த இரு தரப்பினருக்கு கடந்த 7 வருடங்களாக பிரச்சினை ஏற்பட்டுள்ளது.

    இதன் காரணமாக அரசு அதிகாரிகள் இரு தரப்பினருக்கும் எவ்வித பிரச்சனையும் உண்டாகாமல் இருக்க கோவில் திருவிழாவை நடத்தாமல் நிறுத்தி விட்டனர். இதனால் கடந்த 7 ஆண்டு களாக திருவிழா நடைபெறவில்லை.


    இந்நிலையில் நடுக்குப்பம் கிராமத்தைச் சேர்ந்த ஊர் மக்கள் சார்பில் எங்கள் கிராமத்தில் உள்ள திரவுபதி அம்மன் கோவில் திருவிழா நடத்துவதை அரசு அதிகாரிகள் சட்டவிதிகளை பயன்படுத்தி தடுக்கின்றனர்.

    அரசு அதிகாரிகள் எங்களை தடுப்பதால் திருவிழா நடத்த முடியவில்லை. எனவே இந்த ஆண்டு எங்கள் கோவிலுக்கு வழக்கம்போல் திருவிழா நடத்த அரசு அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    அரசு அதிகாரிகள் திருவிழா நடத்த நடவடிக்கை எடுக்கவில்லை என்றால் வருகிற பாராளுமன்ற தேர்தலை புறக்கணிப்போம்.

    மேலும் அரசு சார்பில் எங்களுக்கு வழங்கிய குடும்ப அட்டை, ஆதார் அட்டை உள்ளிட்ட ஆவணங்களையும் திரும்ப அரசிடமே ஒப்படைப்போம் என கோவில் வளாகத்தில் பொதுமக்கள் சார்பில் நடைபெற்ற கூட்டத்தில் முதற்கட்டமாக அறிவித்து உள்ளனர்.

    கள்ளக்குறிச்சி வட்டார போக்குவரத்து அலுவலகத்தில் பணியாற்றும் பாபு, லஞ்சம் வாங்கியதாக கைதான நிலையில் அவரது வீட்டில் நடத்தப்பட்ட சோதனையில் கட்டுக்கட்டாக பணம், நகை கைப்பற்றப்பட்டுள்ளது. #RTO #DVACRaid
    விழுப்புரம்:

    விழுப்புரம் மாவட்டம் கள்ளக்குறிச்சி வட்டார போக்குவரத்து அலுவலகத்தில் மோட்டார் வாகன ஆய்வாளராக பணியாற்றி வரும் பாபு என்பவர் வாகன தரச்சான்றிதல் வழங்க லஞ்சம் வாங்கிய போது, லஞ்ச ஒழிப்பு துறை போலீசாரால் கைது செய்யப்பட்டார். இதனை அடுத்து, செம்மண்டலத்தில் உள்ள அவரது வீட்டில் போலீசார் இன்று சோதனை நடத்தினர்.

    அப்போது, அவரது வீட்டில் இருந்து கட்டுக்கட்டாக பணம் மற்றும் நகைகள் கைப்பற்றப்பட்டன. கையாள் எண்ண முடியாததால் பணம் எண்ணும் இயந்திரம் கொண்டு வரப்பட்டு எண்ணப்பட்டது. ரூ.35 லட்சம் பணம் மற்றும் நகைகள் கைப்பற்றப்பட்டுள்ளதாக போலீசார் தெரிவித்துள்ளனர். 
    விழுப்புரம் அருகே கணவன்மார்கள் நீண்ட தூரம் சென்று குடிக்க முடியாமல் தவிப்பதாகக் கூறி மூடப்பட்ட டாஸ்மாக் கடையை மீண்டும் திறக்க வேண்டும் என பெண்களே போராட்டத்தில் ஈடுபட்டது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. #Viluppuram #Tasmac
    விழுப்புரம்:

    விழுப்புரம் மாவட்டம் சாலாமேடு பகுதியில் இயங்கி வந்த டாஸ்மாக் கடை, அப்பகுதியைச் சேர்ந்த சில பெண்களின் போராட்டத்தால் மூன்று மாதங்களுக்கு முன்பு மூடப்பட்டது. இதனால் மதுப்பிரியர்கள் 5 கிலோ மீட்டர் தூரம் சென்று மது வாங்க வேண்டிய நிலை ஏற்பட்டது.

    இந்நிலையில், தங்கள் கணவன்மார்கள் மது வாங்குவதற்காக வெகுதூரம் சென்று சிரமப்படுவதை பொறுத்துக் கொள்ள முடியவில்லை என்று கூறி மதுப்பிரியர்களின் மனைவிகள், மீண்டும் டாஸ்மாக்கை திறக்க வலியுறுத்தி போராட்டத்தில் ஈடுபட்டனர். இதையடுத்து சம்பவ இடத்துக்கு விரைந்து வந்த காவல்துறையினர் அவர்களை கலைக்கும் முயற்சியில் ஈடுபட்டனர்.

    இதனிடையே டாஸ்மாக் கடை மூடுவதற்கு காரணமாக இருந்த பெண்கள் அங்கு வந்து போராட்டத்தில் ஈடுபட்டவர்களுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். மீண்டும் டாஸ்மாக் கடை திறந்தால் தீக்குளித்து தற்கொலை செய்துகொள்வோம் என அவர்கள் எச்சரிக்கை விடுத்ததால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது. #Viluppuram #Tasmac
    ×