என் மலர்
நீங்கள் தேடியது "திரௌபதி அம்மன் கோவில்"
- கோவிலில் பாதுகாப்புக்காக 800 போலீசார் குவிக்கப்பட்டனர்.
- கோவிலில் ஒரு தரப்பினர் தரிசனம் செய்ய மற்றொரு தரப்பினர் கடும் எதிர்ப்பு தெரிவித்து கோஷமிட்டனர்.
விழுப்புரம் அருகே மேல்பாதி கிராமத்தில் மிகவும் பிரசித்தி பெற்றதும், 200 ஆண்டுகள் பழமை வாய்ந்ததுமான தர்மராஜா, திரவுபதி அம்மன் கோவில் உள்ளது. கடந்த 7.4.2023 அன்று நடந்த தீமிதி திருவிழாவில் ஒரு தரப்பினர் வழிபட மற்றொரு தரப்பினர் எதிர்ப்பு தெரிவித்தனர். இதனால் இரு தரப்பினரிடையே பிரச்சனை ஏற்பட்டது.
இதையடுத்து கடந்த 7.6.2023 அன்று கோவில் தற்காலிகமாக பூட்டி சீல் வைக்கப்பட்டது. பின்னர் சென்னை ஐகோர்ட் உத்தரவின்பேரில் 9 மாதங்களுக்குப்பிறகு கோவில் கதவு திறக்கப்பட்டு பக்தர்கள் யாரும் இன்றி ஒருகால பூஜை அர்ச்சகர் அய்யப்பன் மூலம் செய்யப்பட்டது. இந்த நடைமுறையே தொடர்ந்து 11 மாதங்களாக பின்பற்றப்பட்டு வந்தது.
இந்நிலையில் கோவிலுக்குள் அனைத்து தரப்பு மக்களும் சென்று சாமி தரிசனம் செய்யலாம் என்றும், சாமி தரிசனம் செய்ய செல்பவர்களை தடுத்தால் அவர்களை கைது செய்ய வேண்டும் என்றும் கடந்த பிப்ரவரி மாதம் 20-ந்தேதி சென்னை ஐகோர்ட் உத்தரவிட்டது.
அதன்படி, அனைத்து தரப்பு மக்களின் வழிபாட்டுக்காக நேற்று அதிகாலை 5.35 மணியளவில் கோவில் திறக்கப்பட்டது. முன்னதாக கோவிலில் பாதுகாப்புக்காக 800 போலீசார் குவிக்கப்பட்டனர்.
மூலவருக்கு அபிஷேக ஆராதனை செய்யப்பட்டு பக்தர்கள் வழிபட அனுமதிக்கப்பட்டது. அதன்படி காலை 6.20 மணியளவில் பக்தர்கள், கோவிலுக்குள் சென்று சாமி தரிசனம் செய்தனர். கோவிலுக்குள் செல்போன்கள், கேமராக்கள் கொண்டு செல்ல அனுமதி மறுக்கப்பட்டது.
இதில் ஒரு தரப்பினரை போலீசார் பாதுகாப்புடன் அழைத்து வந்து சாமி தரிசனம் செய்ய ஏற்பாடு செய்தனர்.
இதற்கிடையே கோவிலில் ஒரு தரப்பினர் தரிசனம் செய்ய மற்றொரு தரப்பினர் கடும் எதிர்ப்பு தெரிவித்து கோஷமிட்டனர். உடனே அவர்களிடம் போலீசார் சமரச பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது நாங்கள் கட்டிய கோவிலுக்குள் அவர்களை போலீசார் அழைத்துச்சென்று எப்படி சாமி கும்பிட வைக்கலாம், எல்லோரும் சமம் என்கிறார்களே அப்படியானால் அவர்களுக்கு மட்டும் சலுகை வழங்குவது ஏன்? அவர்களுக்கு வழங்குகின்ற கல்வி, வேலைவாய்ப்பில் முன்னுரிமை உள்ளிட்ட அனைத்து சலுகைகளையும் எங்களுக்கும் வழங்குங்கள் என்றுகூறி போலீசாரிடம் கடும் வாக்குவாதம் செய்தனர். இதையடுத்து பொதுமக்கள் அனைவரையும் போலீசார் சமாதானப்படுத்தி அங்கிருந்து அப்புறப்படுத்தினர்.
இதனை தொடர்ந்து, மற்றொரு தரப்பினர் இன்று வெள்ளிக்கிழமை என்பதால் கோவிலுக்கு வருவதாக கூறி இருந்தனர். ஆனால் பக்தர்கள் யாரும் வராததால் கோவில் நடை மூடப்பட்டது.
நேற்று பட்டியலின மக்கள் சென்று அம்மனை வழிபட்ட நிலையில், இன்று மற்றொரு சமூகத்தினர் கோவிலுக்கு வரவில்லை.
- மற்றொரு தரப்பினர் எதிர்ப்பு தெரிவித்ததால் பரபரப்பு ஏற்பட்டது.
- கோவில் முன்பு துப்பாக்கி ஏந்திய போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
விழுப்புரம் மாவட்டம் கோலியனூர் அருகே மேல்பாதி கிராமத்தில் உள்ள திரௌபதி அம்மன் கோவில் சுமார் 22 மாதங்களுக்கு பிறகு பலத்த போலீஸ் பாதுகாப்புடன் இன்று திறக்கப்பட்டது. இதையடுத்து, மிகுந்த மகிழ்ச்சியுடன் பட்டியலின மக்கள் வழிபாடு செய்தனர். இதற்கு மற்றொரு தரப்பினர் எதிர்ப்பு தெரிவித்ததால் பரபரப்பு ஏற்பட்டது.
இதனை தொடர்ந்து, திரௌபதி அம்மன் கோவிலில் பட்டியலின மக்கள் சாமி தரிசனம் செய்ததை தொடர்ந்து நடை சாத்தப்பட்டது.
தினந்தோறும் ஒரு மணிநேரம் நடை திறக்கப்படும் என்பதன் அடிப்படையில் நடை திறக்கப்பட்டு பின்னர் சாத்தப்பட்டது. கோவில் நடைசாத்தப்பட்ட நிலையில் கோவில் முன்பு துப்பாக்கி ஏந்திய போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
- திரௌபதி அம்மன் கோவிலுக்குள் பட்டியலின மக்கள் சென்று அம்மனை மகிழ்ச்சியுடன் வழிபட்டனர்.
- ஒருதரப்பினரிடம் நீதிமன்ற உத்தரவை மதிக்க வேண்டும் என காவல்துறையினர் அறிவுரை வழங்கினர்.
விழுப்புரம் மாவட்டம் கோலியனூர் அருகே உள்ள மேல்பாதி திரௌபதி அம்மன் கோவிலில் இரு தரப்பினருக்கும் இடையே ஏற்பட்ட மோதல் காரணமாக கோவிலுக்கு சீல் வைக்கப்பட்டது. இதை தொடர்ந்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவின்படி, இருதரப்பினரும் சென்று வழிபட இன்று அதிகாலை முதல் கோவில் திறக்கப்பட்டது. அதை தொடர்ந்து பட்டியலின மக்கள் வழிபாடு செய்து வந்தனர்.
இந்த நிலையில், திரௌபதி அம்மன் கோவிலில் பட்டியலின மக்கள் வழிபட மற்றொரு தரப்பினர் மீண்டும் எதிர்ப்பு தெரிவித்ததால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது. இதையடுத்து ஒருதரப்பினரிடம் நீதிமன்ற உத்தரவை மதிக்க வேண்டும் என காவல்துறையினர் அறிவுரை வழங்கினர். இருப்பினும் அப்பகுதியில் பதற்றமான சூழல் நிலவி வருகிறது.
உயர்நீதிமன்ற உத்தரவுப்படி, திரௌபதி அம்மன் கோவிலுக்குள் பட்டியலின மக்கள் சென்று அம்மனை மகிழ்ச்சியுடன் வழிபட்டனர்.
- 300-க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
- கோவிலில் சிசிடிவி கேமராக்களும் பொருத்தப்பட்டுள்ளது.
விழுப்புரம் மாவட்டம் கோலியனூர் அருகே உள்ள மேல்பாதி திரௌபதி அம்மன் கோவிலில் கடந்த 2023-ம் ஆண்டு பட்டியலின மக்கள் வழிபாடு செய்வதற்கு மற்றொரு தரப்பினர் எதிர்ப்பு தெரிவித்தனர். இதை தொடர்ந்து இருதரப்பினர் இடையே மோதல் ஏற்பட்டதை அடுத்து கோவிலுக்கு சீல் வைக்கப்பட்டது.
இதுதொடர்பாக சென்னை உயர்நீதிமன்றத்திலும் வழக்கு தொடரப்பட்டது. வழக்கை விசாரித்த நீதிமன்றம், பட்டியலின மக்கள் கோவிலுக்கு சென்று சாமி தரிசனம் செய்யலாம் என தெரிவித்தது.

இதனை தொடர்ந்து, சுமார் 22 மாதங்களுக்கு பிறகு திரௌபதி அம்மன் கோவில் இன்று திறக்கப்பட்டது. பலத்த பாதுகாப்புடன் பட்டியலின மக்கள் கோவிலுக்குள் சென்று சாமி தரிசனம் செய்து வருகின்றனர்.
எஸ்.பி. சரவணன் தலைமையில் 300-க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். மேலும் கோவிலில் சிசிடிவி கேமராக்களும் பொருத்தப்பட்டுள்ளது.
- திரௌபதி அம்மன் கோவிலில் தலித் மக்கள் கோவிலுக்குள் சென்று இறைவழிபாடு நடத்த அனுமதிக்கப்படுவதில்லை.
- தலித் மக்கள் சென்று வழிபடுவதற்கு உரிய நடவடிக்கைகள் மேற்கொள்ள வேண்டும்.
முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு மார்க்சிஸ்டு கம்யூனிஸ்டு கட்சி மாநில செயலாளர் கே.பாலகிருஷ்ணன் அனுப்பி உள்ள கடிதத்தில் கூறி இருப்பதாவது:-
விழுப்புரம் மாவட்டம், கோலியனூர் ஒன்றியம், மேல்பாதி கிராமத்தில் இந்து அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் உள்ள திரௌபதி அம்மன் கோவிலில் தலித் மக்கள் கோவிலுக்குள் சென்று இறைவழிபாடு நடத்த அனுமதிக்கப்படுவதில்லை. இந்தாண்டு கோவில் திருவிழாவின் போது கோவிலுக்குள் சென்ற தலித் இளைஞர் கதிரவன் என்பவர் கடுமையாகத் தாக்கப்பட்டுள்ளதுடன் சாதியைச் சொல்லி இழிவாகத் திட்டி அவமானப்படுத்தப்பட்டுள்ளார். இச்சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்யப்பட்டிருந்தும் இதுவரை தாக்குதல் தொடுத்தவர்கள் யாரும் கைது செய்யப்படவில்லை.
எனவே, தமிழ்நாடு அரசு தலையிட்டு தலித் மக்களின் உரிமைகளை நிலைநாட்டும் வகையில் இக்கிராமத்தில் நிலவும் தீண்டாமை கொடுமைகளுக்கு முடிவுகட்டுவதோடு திரௌபதி அம்மன் கோவிலுக்குள் தலித் மக்கள் சென்று வழிபடுவதற்கு உரிய நடவடிக்கைகள் மேற்கொள்ள வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.






