search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "அமைச்சர் சிவி சண்முகம்"

    தினகரனுக்கு ஆதரவு தெரிவிக்கும் அதிமுக எம்எல்ஏக்கள் மீது நடவடிக்கை எடுக்கும் வகையில், அவர்களுக்கு சபாநாயகர் நோட்டீஸ் அனுப்ப முடிவு செய்திருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. #speakerdhanapal #dinakaransupportmla
    சென்னை:

    சென்னையில் சட்டத்துறை அமைச்சர் சிவி சண்முகம், அதிமுக கொறடா ராஜேந்திரன் ஆகியோர் சபாநாயகர் தனபாலை சந்தித்து ஆலோசனை நடத்தினர். இந்த சந்திப்பின்போது, அதிமுகவின் இரட்டை இலை சின்னத்தில் போட்டியிட்டு வெற்றி பெற்று, தினகரனுக்கு ஆதரவு தெரிவிக்கும் எம்எல்ஏக்களை தகுதி நீக்கம் செய்ய வேண்டும் என அதிமுக தரப்பில் வலியுறுத்தப்பட்டதாக தெரிகிறது. 

    அதன்படி, அறந்தாங்கி எம்எல்ஏ ரத்தினசபாபதி, விருத்தாசலம் எம்எல்ஏ கலைச்செல்வன், கள்ளக்குறிச்சி எம்எல்ஏ பிரபு மற்றும் இரட்டை இலை சின்னத்தில் வெற்றி பெற்ற தமிமுன் அன்சாரி ஆகியோரிடம் விளக்கம் கேட்டு சபாநாயகர் நோட்டீஸ் அனுப்ப முடிவு செய்திருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. #speakerdhanapal #dinakaransupportmla

    கடந்த காலங்களில் அ.தி.மு.க. இக்கட்டான சூழ்நிலையில் இருந்த போது கட்சியின் வெற்றிக்கு பா.ம.க.உறுதுணையாக இருந்ததாக விழுப்புரம் பொதுக்கூட்டத்தில் அமைச்சர் சி.வி.சண்முகம் நினைவு கூர்ந்தார்.
    விழுப்புரம்:

    தேசிய ஜனநாயக முற்போக்கு கூட்டணியின் விழுப்புரம்(தனி), கள்ளக்குறிச்சி பாராளுமன்ற தொகுதி வேட்பாளர்கள் அறிமுக கூட்டம் விழுப்புரம் கரும்பு விவசாயிகள் சமுதாயக்கூடத்தில் நடைபெற்றது.

    கூட்டத்தில் பா.ம.க.நிறுவனர் டாக்டர் ராமதாஸ் பேசியதாவது:-

    தமிழகம், புதுச்சேரி சேர்த்து 40 பாராளுமன்ற தொகுதிகளிலும், இடைத்தேர்தல் நடைபெறும் 18 சட்டமன்ற தொகுதிகளிலும் நாம் வெற்றி பெற போகிறோம். மீண்டும் நம்முடைய மோடி பிரதமராக வரப்போகிறார். கருத்துக்கணிப்பும் அப்படித்தான் சொல்கிறது. பேரறிவாளன் உள்ளிட்ட 7 பேரின் விடுதலைக்காக தமிழக அரசு, அமைச்சரவை கூட்டத்தை நடத்தி கவர்னருக்கு ஒப்புதல் கடிதம் அனுப்பியுள்ளது. இந்த தேர்தலுக்கு பிறகு நிச்சயமாக 7 பேரும் விடுதலை ஆவார்கள் என்று நம்புகிறேன்.

    மத்தியில் கூட்டாட்சி, மாநிலத்தில் சுயாட்சி என்று கூறி வந்த தி.மு.க. ஆட்சி கட்டிலில் இருந்து பதவி சுகத்தை அனுபவித்தவர்கள் தமிழுக்கும் ஒன்றும் செய்யவில்லை, மாநில சுயாட்சியையும் பெற்றுத்தரவில்லை.

    இப்போது இந்த தேர்தலில் மாநிலத்தின் சுயாட்சியை பெற்றுத்தருவோம் என்று (அ.தி.மு.க., பா.ம.க.) நாங்கள் இருவரும் தேர்தல் அறிக்கையில் குறிப்பிட்டிருக்கிறோம். இந்த கூட்டணி அமைந்ததற்கு தம்பி சி.வி.சண்முகமும் காரணம். உள்ளாட்சி தேர்தல் ஜூன், ஜூலையில் வந்தே தீரும். அந்த தேர்தலிலும் இந்த கூட்டணி தொடரும். 40 தொகுதிகளிலும் நாம் வெற்றி பெறப்போவது உறுதி.

    இவ்வாறு அவர் பேசினார்.

    முன்னதாக அமைச்சர் சி.வி.சண்முகம் பேசியதாவது:-

    ஜெயலலிதா இல்லாமல் நாம் சந்திக்கிற முதல் தேர்தல் இது. ஜெயலலிதா மறைவுக்கு பிறகு இந்த இயக்கம் அழிந்து விடும், தலை தூக்க முடியாது என்று பேசியவர்கள் முகத்தில் கரியை பூசுகிற வகையில் இந்த தேர்தலில் நாம் வெற்றி பெற வேண்டும். தற்போது இந்த தேர்தலில் வெற்றிக்கூட்டணி அமைந்துள்ளது. இந்த தேர்தலுக்கு பிறகு மிகப்பெரிய அரசியல் மாற்றம் ஏற்படும். நம்மை பார்த்து ஏளனம் பேசியவர்கள் இந்த தேர்தலுக்கு பிறகு அரசியல் செய்ய முடியாத நிலை உருவாகும். ஆகவே எந்த சுணக்கமும் இல்லாமல் அனைவரும் சுறுசுறுப்பாக பணியாற்றி 40 தொகுதிகளிலும் அ.தி.மு.க. கூட்டணி வெற்றி பெற அயராது பாடுபட வேண்டும்.

    1996-ம் ஆண்டு சட்டசபை தேர்தலில் அ.தி.மு.க.தோல்வி அடைந்தது. அம்மாவும் தோல்வி அடைந்தார்.

    அ.தி.மு.க. இதோடு அழிந்து விட்டது என்று தீய சக்திகள் நினைத்து இருந்தார்கள். இந்த சூழ்நிலையில் 1998-ம் ஆண்டு தேர்தலில் அ.தி.மு.க.வோடு பா.ம.க.கூட்டணி அமைத்தது. இந்த தேர்தலில் அம்மா மாபெரும் வெற்றி பெற்றார்.

    2011-ம் ஆண்டு தேர்தலில் அ.தி.மு.க.வோடு கேப்டன் கூட்டணி அமைத்தார். அம்மா முதல்-அமைச்சர் ஆவதற்கு உறுதுணையாக இருந்தார்.

    தற்போது அ.தி.மு.க. இக்கட்டான சூழ்நிலையில் உள்ளது. இந்தநிலையில் அ.தி.மு.க.வுக்கு பா.ம.க., தே.மு.தி.க., ஆதரவு தெரிவித்துள்ளது.

    இந்த தேர்தலில் இந்த கூட்டணி மாபெரும் வெற்றிபெறும்.

    இந்த கூட்டணி உள்ளாட்சி தேர்தலிலும் தொடரும். 5 ஆண்டு காலம் அ.தி.மு.க.ஆட்சியை எந்த கொம்பனாலும் அசைக்க முடியாது.

    இவ்வாறு அவர் பேசினார்.
    தி.மு.க.வில் தற்போது எம்.எல்.ஏ.க்களாக உள்ள 22 பேர் மீதான ஊழல் வழக்குகளில் விரைவில் தீர்ப்பு வரும் என்று சட்டத்துறை அமைச்சர் சி.வி.சண்முகம் தெரிவித்துள்ளார். #TNMinister #CVShanmugam #DMKMLAs
    விழுப்புரம்:

    விழுப்புரம் சட்டமன்ற தொகுதி அ.தி.மு.க. சார்பில் எம்.ஜி.ஆர். பிறந்த நாள் விழா பொதுக்கூட்டம் விழுப்புரம் மந்தக்கரை திடலில் நடந்தது.

    இதில் அமைச்சர் சி.வி. சண்முகம் கலந்து கொண்டு பேசியதாவது:-

    எம்.ஜி.ஆர். உயிரோடு இருக்கின்ற வரையில் தி.மு.க. தலைவர் கருணாநிதியால் கோட்டைவாசலை மிதிக்க முடியவில்லை. அ.தி.மு.க. பிளவுபட்டதால் தி.மு.க. ஆட்சிக்கு வந்தது. அதன்பிறகு ஜெயலலிதா கட்சியை ஒன்றிணைத்து ஆட்சியை பிடித்தார். எம்.ஜி.ஆர். உருவாக்கிய, ஜெயலலிதாவால் வளர்க்கப்பட்ட இந்த இயக்கத்தை யாராலும் அழிக்கவும் முடியாது, அசைக்கவும் முடியாது.

    மத்திய அரசை எதிர்த்து குரல் கொடுக்கவில்லை என்று எதிர்க்கட்சி தலைவர் மு.க.ஸ்டாலின் கூறுகின்றார். காவிரி, முல்லைப்பெரியாறு தற்போதைய மேகதாது வரை எதிர்த்து குரல் கொடுப்பது அ.தி.மு.க. மட்டுமே. அதேபோல் ராஜீவ்காந்தி கொலையாளிகள் 7 பேரை விடுதலை செய்ய வேண்டி சட்டசபையில் தீர்மானம் நிறைவேற்றியது அ.தி.மு.க. தான்.

    எந்த சூழ்நிலையிலும் மத்திய அரசை எதிர்த்து தி.மு.க. குரல் கொடுத்ததும் இல்லை, தீர்மானம் நிறைவேற்றியதும் இல்லை.

    எப்படியாவது இந்த ஆட்சியை கவிழ்க்கலாம் என்று திட்டம் தீட்டுகிறார்கள். தற்போது முதல்-அமைச்சர் மீதே புகார் கூறுகிறார்கள். அண்ணா நகர் ரமேஷ், சாதிக்பாஷா மரணம் குறித்து மு.க.ஸ்டாலின் எப்போதாவது பேசியுள்ளாரா?, புதியதாக தலைமை செயலகம் கட்டியதில் ஊழல் நடைபெற்றுள்ளது என்று வழக்கு போட்டால் உடனடியாக அதற்கு தி.மு.க., கோர்ட்டில் தடை வாங்குகிறது.

    அதே நேரத்தில் அ.தி.மு.க. கொண்டு வரும் அனைத்து நல்ல திட்டங்களையும் எதிர்த்து தி.மு.க., கோர்ட்டில் வழக்கு தொடர்கிறது. அத்தனை வழக்குகளிலும் வெற்றி பெற்று மக்களுக்கு நல்ல முறையில் நலத்திட்ட உதவிகளை செய்து வருகின்றோம்.

    எதற்கு எடுத்தாலும் அனைத்து அமைச்சர்களும் சிறை செல்வார்கள் என்று மு.க.ஸ்டாலின் கூறி வருகிறார். ஊழல் வழக்குகளை விசாரிப்பதற்காக சிறப்பு தனி நீதிமன்றம் அமைக்கப்பட்டுள்ளது. தற்போது தி.மு.க.வில் எம்.எல்.ஏ.க்களாக உள்ள 22 பேர் மீது நிலஅபகரிப்பு உள்பட ஊழல் வழக்குகள் நடைபெற்று வருகின்றன. விரைவில் தீர்ப்பு வரும், அப்போது யார் சிறைக்கு செல்வார்கள் என்று தெரியும்.

    விழுப்புரம் மாவட்டத்தை இரண்டாக பிரித்து, கள்ளக்குறிச்சியை தலைமையிடமாக கொண்டு தனி மாவட்டத்தை உருவாக்கியது நல்லதுதான். அப்போதுதான் இன்னும் சிறந்த நிர்வாகத்தை மக்களுக்கு தர முடியும். விழுப்புரம் மாவட்டத்தில் குடிநீர் பிரச்சனை இருக்கிறது, அதனை போக்குகிற வகையில் கொள்ளிடம்- விழுப்புரம் கூட்டு குடிநீர் திட்டத்துக்கு வருகிற நிதிநிலை அறிக்கையில் நிதி ஒதுக்க முதல்-அமைச்சரிடம் வலியுறுத்தப்படும்.

    இவ்வாறு அவர் பேசினார்.

    அமைச்சர் சி.வி. சண்முகம் பேசியது தொடர்பாக தி.மு.க. முன்னாள் அமைச்சர் பொன்முடியிடம் நிருபர்கள் கேட்டபோது, ‘‘கொடநாடு விவகாரம் தொடர்பாக தமிழக முதல்-அமைச்சர் பழனிசாமி மீது கூறப்படும் குற்றச்சாட்டை திசைதிருப்புவதற்காக தி.மு.க.வினர் பற்றி அமைச்சர் இவ்வாறு பேசுகிறார்’’ என்றார்.  #TNMinister #CVShanmugam #DMKMLAs
    அப்பல்லோ மருத்துவமனையில் சிகிச்சை பெற்றபோது ஜெயலலிதாவை என்னுடன் சேர்ந்து சிவி சண்முகம பார்த்தார் என புகழேந்தி பேட்டி அளித்துள்ளார். #Pugalenthi #CVShanmugam #JayalalithaaDeath
    பெண்ணாடம்:

    கடலூர் மாவட்டம் பெண்ணாடத்தில் உள்ள உறவினர் வீட்டுக்கு நேற்று மாலை அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தின் கர்நாடக மாநில செயலாளரும், செய்தி தொடர்பாளருமான புகழேந்தி வந்தார்.

    பின்னர் அவர் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

    கேள்வி:- ஜெயலலிதா சாவில் மர்மம் இருப்பதாக அமைச்சர் சி.வி.சண்முகம் குற்றம் சாட்டியுள்ளாரே அது குறித்து உங்கள் கருத்து என்ன?

    பதில்:- ஜெயலலிதா அப்பல்லோ ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டிருந்த போது நான் சென்று பார்த்தேன். அப்போது அமைச்சர் சி.வி.சண்முகமும் வந்து பார்த்தார். அப்போது எந்த கருத்தையும் அவர் கூறவில்லை.

    ஆனால், தற்போது அமைச்சர் சி.வி.சண்முகம் பல்வேறு கருத்துக்களை கூறுகிறார். ஜெயலலிதா சாவில் மர்மம் இருக்கிறது என்று தெரிவிக்கிறார். மேலும் ஐ.ஏ.எஸ். அதிகாரிகளை கேவலமாக பேசுகிறார். இவர் சசிகலாவின் காலில் விழுந்து அமைச்சரானவர்.



    கே:- என்.எல்.சி. 3-வது சுரங்க விரிவாக்கம் பற்றி உங்களது கருத்து என்ன?

    ப:- நெய்வேலியில் 3-வது சுரங்கம் அமைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தின் துணை பொதுச்செயலாளர் டி.டி.வி. தினகரன் தலைமையில் சேத்தியாத்தோப்பில் போராட்டம் நடைபெற்றது.

    தமிழ்நாட்டில் உள்ள அமைச்சர்களில் சில பேருக்கு என்.எல்.சி. என்றால் அதற்கான அர்த்தம் தெரியாது. என்.எல்.சி. 3-வது சுரங்க விரிவாக்கத்துக்கு ஆதரவு தெரிவிப்பதுபோல் அமைச்சர் எம்.சி.சம்பத் கூறியுள்ளார்.

    ஆனால், கடலூர் பாராளுமன்ற உறுப்பினர் அருண்மொழிதேவன் பேசும்போது, என்.எல்.சி. 3-வது சுரங்க விரிவாக்கத்தை அனுமதிக்க மாட்டோம் என்று கூறுகிறார். இவர்களுக்குள்ளேயே ஒற்றுமை இல்லை என்று தெரிய வருகிறது.

    கே:- திருவாரூர் தேர்தல் ரத்து செய்யப்பட்டது பற்றி என்ன நினைக்கிறீர்கள்?

    ப:- திருவாரூர் இடைத்தேர்தலில் அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தின் சார்பில் காமராஜ் வேட்பாளராக நிறுத்தப்பட்டார்.

    எங்கள் மீதுள்ள பயத்தால் அனைவரும் இந்த இடைத்தேர்தலை ரத்து செய்ய வேண்டும் என தேர்தல் அதிகாரியிடம் மனுக்கள் கொடுத்தனர். மேலும் நீதிமன்றத்திலும் வழக்கு தொடர்ந்து தேர்தலை ரத்து செய்து விட்டனர்.

    பொங்கல் இனாம் அனைவருக்கும் வழங்கப்படும் என்று அறிவித்தனர்.தற்போது அவர்களாகவே வழக்கு தொடர்ந்து வறுமை கோர்ட்டுக்கு கீழே உள்ளவர்களுக்கு மட்டுமே பொங்கல் இனாம் வழக்கப்படும் என தெரிவிப்பது ஒரு ஏமாற்று வேலையாகும்.

    இவ்வாறு அவர் கூறினார். #Pugalenthi #CVShanmugam #JayalalithaaDeath
    ஜெயலலிதா மரணம் குறித்து பதில் சொல்ல முடியாதவர்கள் அமைச்சர்களை கட்டுக்குள் வைத்திருக்க வேண்டும் என்று மிரட்டும் தொனியில் பேசி வருவதாக அமைச்சர் சண்முகம் தெரிவித்தார். #MinisterCVshanmugam
    திண்டிவனம்:

    திருவாரூர் தொகுதிக்கு வருகிற 28-ந்தேதி இடைத்தேர்தல் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது. இதைத் தொடர்ந்து கடந்த 3-ந்தேதி வேட்புமனுதாக்கல் தொடங்கியது. 10-ந் தேதி வேட்பு மனுதாக்கல் கடைசி நாளாகும். பலர் மனுதாக்கல் செய்திருந்தனர்.

    இந்த நிலையில் திருவாரூர்தொகுதி இடைத்தேர்தல் திடீரென ரத்து செய்யப்பட்டுள்ளதாக தேர்தல் கமி‌ஷன் அறிவித்துள்ளது.

    இன்று காலை அமைச்சர் சி.வி.சண்முகம் விழுப்புரம் மாவட்டம் திண்டிவனத்தில் பொங்கல் பரிசு வழங்க சென்றார். அப்போது அவரிடம் நிருபர்கள் கேட்ட கேள்வியும், அவர் அதற்கு அளித்த பதில்களும் வருமாறு:-

    கேள்வி: திருவாரூர் தொகுதி தேர்தல் ரத்து செய்யப்பட்டுள்ளதே?

    பதில்: திருவாரூர் கஜா புயலால் பாதிக்கப்பட்டு உள்ளது. அங்கு நிவாரணம் வழங்கப்பட்டு வருகிறது. அங்கு சகஜநிலை திரும்பியபிறகு தேர்தல் நடந்தால் நல்லதுதான்.

    திருவாரூரில் எப்போது தேர்தல் வந்தாலும் சந்திக்க அ.தி.மு.க. தயாராக உள்ளது.

    கேள்வி: பாராளுமன்ற தேர்தலோடு சேர்த்து இடைத்தேர்தல் நடக்குமா?

    பதில்: அவ்வாறு நடந்தாலும் நல்லதுதான்.

    கேள்வி: ஜெயலலிதா மரணம் குறித்து சந்தேகம் இருப்பதாக கூறியிருந்தீர்களே?


    பதில்: அம்மாவின் மரணம் குறித்து பத்திரிகைகளில் வந்த செய்திகளின் அடிப்படையில் அ.தி.மு.க. தொண்டன் என்ற முறையில் பல்வேறு சந்தேகங்களை எழுப்பியிருந்தேன். ஆனால் அதற்கு பதில் சொல்ல முடியாதவர்கள் அமைச்சர்களை கட்டுக்குள் வைத்திருக்க வேண்டும் என்று மிரட்டும் தொனியில் பேசி வருகின்றனர்.

    இந்தியாவில் இருக்கும் ஒவ்வொருவருக்கும் எதனை பற்றியும் கேட்கும் உரிமை உண்டு. இது பெரியார் பிறந்த மண். இது ஹிட்லர் நாடு அல்ல.

    ஆனால் தேவையின்றி அமைச்சர்களை கட்டுப்படுத்துங்கள் என்று பேசுவது தவறு. அம்மா வீட்டுக்கு வேலை செய்ய வந்தவர்கள், அம்மா மரணத்துக்கு காரணமான தினகரன் குடும்பத்தினர் இன்று வாய்க்கு வந்ததை பேசி வருகின்றனர்.

    தினகரன் உல்லாச விடுதியில் இருந்து போதையில் பேசுவதுபோல் பேசி வருகின்றார். அம்மா வீட்டிற்கு வேலை செய்ய வந்தவர்கள் தமிழகத்தை ஆளவேண்டும் என்று நினைப்பது தவறு. தினகரன் இதோடு நிறுத்தி கொள்ளவேண்டும்.

    அதுபோலவே அ.தி.மு.க. தொண்டன் என்ற முறையில் எனக்கு தோன்றிய சந்தேகங்களை தெரிவித்திருந்தேன். ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் சங்கத்தினர் நான் கேட்ட கேள்விக்கு பதில் சொல்லியிருக்க வேண்டும்.

    இவ்வாறு அவர் கூறினார்.  #MinisterCVshanmugam
    அரசு சட்டக்கல்லூரி அமைக்காத மாவட்டங்களில் தனியார் சட்டக் கல்லூரி அமைக்க அரசு அனுமதி வழங்கி உள்ளதாக சட்டசபையில் அமைச்சர் சி.வி.சண்முகம் தெரிவித்தார்.
    சென்னை:

    சட்டசபையில் இன்று கேள்வி நேரத்தின்போது பட்டுக்கோட்டையில் சட்டக்கல்லூரி தொடங்க அரசு முன் வருமா? என்று உறுப்பினர் சி.வி.சேகர் கேள்வி எழுப்பினார். இதற்கு அமைச்சர் சி.வி.சண்முகம் அளித்த பதில் வருமாறு:-

    அனைத்து மாவட்டங்களிலும் சட்டக் கல்லூரி அமைக்க வேண்டும் என்பது அரசின் விருப்பம். அரசு சட்டக்கல்லூரி அமைக்காத மாவட்டங்களில் தனியார் சட்டக் கல்லூரி அமைக்க அரசு அனுமதி வழங்கி உள்ளது. பட்டுக்கோட்டையில் தனியார் தொடங்க முன் வந்தால் அரசு உரிய அனுமதி வழங்கும். பல நகரங்களில் ஊரின் மையப் பகுதியில் கிளை சிறைச்சாலை உள்ளது. இவற்றை ஊருக்கு வெளியே அமைக்க அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது என்றார்.
    ஐ.ஏ.எஸ் அதிகாரிகள் அரசுக்கு இதயம் போன்றவர்கள் என்றும் யாரையும் தனிப்பட்ட முறையில் குற்றம்சாட்ட வேண்டும் என்பது தங்களின் எண்ணம் இல்லை என்றும் அமைச்சர் ஜெயக்குமார் கூறினார். #IASOfficers #MinisterJayakumar
    ராயபுரம்:

    சென்னை ஸ்டான்லி அரசு ஆஸ்பத்திரியில் நுண் கதிரியல் துறையில் ‘கேத் லேப்’ மற்றும் ஆஸ்பத்திரி வளாகத்தில் அம்மா குடிநீர் விற்பனை நிலையத்தை அமைச்சர்கள் விஜயபாஸ்கர், ஜெயக்குமார், எம்.ஆர்.விஜய பாஸ்கர் ஆகியோர் திறந்து வைத்தனர்.

    பின்னர் அமைச்சர் ஜெயக்குமார் நிருபர்களிடம் கூறியதாவது:-

    இயற்கைக்கு இடர்பாடுகள் அளிக்கக்கூடிய மற்றும் சுகாதாரமற்ற நிலையை கொண்ட 14 பிளாஸ்டிக் பொருட்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.

    கணவன்-மனைவி போல் மக்களுடன் ஒன்றி இருந்த பிளாஸ்டிக் பொருட்களை விவாகரத்து செய்ய வேண்டும் என்கிற அளவுக்கு அரசு நடவடிக்கை எடுத்துள்ளது.

    ஐ.ஏ.எஸ் அதிகாரிகள் அரசுக்கு இதயம் போன்றவர்கள். அவர்களை அரசு மதிக்கிறது. எனவே யாரையும் தனிப்பட்ட முறையில் குற்றம்சாட்ட வேண்டும் என்பது எங்கள் எண்ணம் இல்லை.


    சட்ட அமைச்சர் குற்றம் சாட்டி உள்ளார். அதுகுறித்து உண்மை நிலை மக்களுக்கு தெரிய வேண்டும் என்று தான் விசாரணை வேண்டும் என்று தெரிவித்தோம். அமைச்சரவை, முதல்-அமைச்சரின் கட்டுக்குள்தான் உள்ளது.

    இவ்வாறு அவர் கூறினார்.

    அமைச்சர் விஜயபாஸ்கர் கூறும்போது, “நுண் கதிரியல் துறையில் ரத்தநாளங்களில் ஏற்படும் வீக்கம், ரத்தகசிவு, அடைப்பு, ரத்தநாள வெடிப்பு உள்ளிட்ட நோய்களுக்கு நுண்துளைகள் மூலம் அறுவை சிகிச்சை இல்லாமல் அதிநவீன சிகிச்சை வழங்க ரூ.6.5கோடி மதிப்பில் பிப்லேன் டிஜிட்டல் சப்ஸ்ட்ராக்சன் ஆஞ்சியோகிராம் கேத்லேப் திறந்து வைக்கப்பட்டுள்ளது.

    இந்த கருவி மூலம் மூளை, குடல் மற்றும் உள்ளுறுப்புகளில் ஏற்படும் ரத்த கசிவு, மற்றும் கல்லீரல் புற்றுநோய் உட்பட புற்றுநோய்களை தெளிவாக கண்டறிந்து, அறுவை சிகிச்சை இல்லாமல் சிகிச்சை வழங்கப்படும்.

    அதுமட்டுமின்றி குறைவான மருத்துவ செலவில் மக்களுக்கு சிகிச்சைகள் அளிக்க வேண்டும் என இத்திட்டம் துவக்கப்பட்டுள்ளது” என்றார்.

    நிகழ்ச்சியில் ஸ்டான்லி அரசு ஆஸ்பத்திரி டீன் பொன்னம்பல நமச்சிவாயம், மருத்துவ நிலைய அதிகாரி ரமேஷ் உள்பட பலர் கலந்து கொண்டனர். #IASOfficers #MinisterJayakumar
    திருவாரூர் தொகுதியில் அம்மா மக்கள் முன்னேற்றக் கழகம் சார்பில் போட்டியிடும் வேட்பாளர் நாளை அறிவிக்கப்படுவார் என்று டி.டி.வி. தினகரன் தெரிவித்துள்ளார். #TTVDhinakaran #ThiruvarurByElection
    சென்னை:

    அம்மா மக்கள் முன்னேற்ற கழக துணை பொதுச்செயலாளர் டி.டி.வி.தினகரன் சட்டசபை வளாகத்தில் நிருபர்களிடம் கூறியதாவது:-

    இடைத்தேர்தல் ஒரு தொகுதிக்கு தானே வருகிறது. மற்ற தொகுதிகளுக்கு எப்படி வரும். திருப்பரங்குன்றம் தொகுதியில் போட்டியிட்ட தி.மு.க. வேட்பாளர் சரவணன் வழக்கு போட்டு அங்கு தேர்தல் வரவிடாமல் செய்துள்ளார். மற்ற 19 தொகுதிகளுக்கும் தேர்தல் வர வேண்டும் என நினைக்கிறேன்.

    தகுதி நீக்க வழக்கில் மேல்முறையீடு செய்வதற்கு ஜனவரி 25 வரை காலம் உள்ளது. அதற்கு முன்னர் எப்படி 18 தொகுதிகளுக்கும் தேர்தல் தேதியை அறிவிக்க முடியும்.

    திருவாரூர் தொகுதியில் இடைத்தேர்தலை நடத்த தடை கேட்டு கபில்சிபில் மூலம் உச்சநீதிமன்றத்தில் யாரோ வழக்கு தொடுத்துள்ளதை பார்க்கும்போது அதற்கு பின்னணியில் யார் இருப்பார்கள் என்பது தெரியும். தேர்தலை வேண்டாம் என்று நினைப்பவர்கள், தேர்தலை கண்டு பயப்படுகிறவர்கள் தான் இதனை செய்துள்ளார்கள்.

    எல்லா தரப்பினரும் ஏமாற்றப்படுகிற நிலையில் தான் தற்போது தமிழகத்தில் ஆட்சி நடைபெறுகிறது. தேர்தல் வந்தால் இந்த ஆட்சி நீடிக்குமா? என்று தெரிந்து விடும். அதனால்தான் இடைத்தேர்தல் வர வேண்டும் என நான் சொல்கிறேன்.

    இடைத்தேர்தல் வரும் போது யார், என்ன என்பது தெரிந்துவிடும். அதற்காகத்தான் தேர்தல் வர வேண்டும் என நானும் காத்திருக்கிறேன்.

    இடைத்தேர்தல் நிச்சயம் நடக்கும்என நான் நினைக்கிறேன். திருவாரூர் தொகுதியில் அம்மா மக்கள் முன்னேற்றக் கழகம் மாபெரும் வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெறும். நாளை நிர்வாகிகள் கூட்டம் போட்டுள்ளோம். அதன்பிறகு வேட்பாளர் யாரென்று அறிவிப்போம்.

    பொதுமேடையிலோ, சட்டமன்றத்திலோ குரலை உயர்த்தி முதல்-அமைச்சர் பேசினால், அவர் உண்மையை பேசவில்லை, சமாளிக்கிறார் என்று அர்த்தம். கேபினட் முடிவெடுத்துவிட்டதால் ஸ்டெர்லைட் ஆலை திறக்க முடியாது என்று ஆட்சியாளர்கள் கூறியபோது மேல்முறையீடு சென்றால் ஆலை திறப்பை தடுக்க முடியாது என எல்லோரும் சொன்னோம்.

    தமிழகத்திற்கு தாமிர ஆலையே வேண்டாம் என கொள்கை முடிவெடுத்து அதனை மத்திய அரசுக்கு அனுப்ப வேண்டும். தமிழக ஆட்சியாளர்கள் மத்திய அரசுக்கு மிகவும் வேண்டியவர்களாக இருக்கிறார்கள். வாரவாரம் அமைச்சர்கள் விமானத்தில் டெல்லிக்கு பறந்து கொண்டுள்ளார்கள். ஆனால் இவர்களால் ஒன்றுமே பெற முடியவில்லையே.

    மத்தியில் இருப்பவர்கள் சொல்லும் பேச்சை கேட்டு அதனை செயல்படுத்தும் சேவகர்களாக தானே இருக்கிறார்களே தவிர, இவர்கள் கேட்கும் எதுவும் முதலாளியிடமிருந்து வருவதில்லை என்பது நன்றாக தெரிகிறது.

    சட்டமன்ற தேர்தல் வந்தால் பழனிசாமி, பன்னீர் செல்வத்தினால் வெற்றி பெற முடியாது என்பது அவர்களுக்கே தெரியும். பணம் கொடுத்தாலும் மக்கள் வாக்களிக்க தயாராக இல்லை என்பதும் தெரியும். இருக்கும்வரை பதவியில் இருக்கலாம் என ஒரு குரூப் நினைப்பதால் இந்த ஆட்சியின் நாட்கள் எண்ணப்படுகிறது.

    திருவாரூர் தொகுதியில் அம்மா மக்கள் முன்னேற்றக் கழகம் சார்பில் போட்டியிடும் வேட்பாளர் நாளை அறிவிக்கப்படும்.

    ஜெயலலிதா மறைவிற்கு பிறகு ஆர்.கே.நகர் இடைத்தேர்தலின்போது எதிர்க்கட்சி தலைவர் ஜெயலலிதாவின் மரணத்தைப் பற்றி பேசினார். அதன் பிறகு அதனை விட்டுவிட்டார். இப்போது சி.வி.சண்முகம் ஆரம்பித்துள்ளார். அவர் பேசுவதற்கெல்லாம் நான் பதில்சொல்ல விரும்பவில்லை. அமைச்சராக அவர் பேசவில்லை. அவர் தெளிவாக இருந்து நிதானத்தில் பேசினாரா? என தெரியவில்லை.

    அமைச்சரவை கூட்டமே நடக்கவில்லை. நான்தான் சாட்சி என கூறுகிறார். ஆனால், தலைமைச் செயலாளர் கடிதத்தில் அக்டோபர் 19-ந்தேதி அமைச்சரவை கூட்டம் நடைபெற்றது என உள்ளது. எல்லோரையும் மிரட்டுவது போல பேசுகிறார். சுகாதாரத்துறை செயலாளர் அவருக்கு தெரிந்த உண்மையை சொல்கிறார்.

    அதுபோல காலை 10 மணி ஆனவுடன் செய்தியாளர்களை சந்திக்கும் அமைச்சர், விசாரிக்க வேண்டிய விதத்தில் விசாரித்தால் உண்மை வெளிவரும் என்கிறார். அப்படியெனில் ஐ.ஏ.எஸ். ஆபீசர்களை இவர்கள் மிரட்டுகிறார்களா? ஆட்சியாளர்களை விசாரிக்க வேண்டிய காலம் வரப்போகிறது.

    ஆர்.கே.நகர் இடைத்தேர்தலின்போது ஜெயலலிதாவின் மரணத்தில் மர்மம் இருப்பதாக திடீரென்று தி.மு.க. தலைவர் ஸ்டாலின் பேசினார். இப்போது ஜெயலலிதா மரணம் தொடர்பாக சி.பி.ஐ. விசாரிக்க வேண்டும் என்று கூறி உள்ளார்.

    ஜெயலலிதா மருத்துவமனைக்கு உயிருடன் வந்தார். அங்கு உயிருடன் தான் சிகிச்சை பெற்று வந்தார் என்பது ஆறுமுகசாமி ஆணையம் அமைக்கப்பட்டதன் மூலம் வெளிப்பட்டுள்ளது. தற்போது ஜெயலலிதாவிற்கு ஆஞ்சியோகிராம் செய்திருக்கலாமோ என்று பேசிக் கொள்ளும் நிலைக்கு வந்துள்ளது. கார்டியாக் அரஸ்ட் ஏற்பட்டதால்தான் ஜெயலலிதா மரணம் அடைந்ததாக டாக்டர்கள் கூறுவதை நாம் பார்க்கிறோம்.

    ஆர்.கே.நகரில் டெபாசிட் போனது போல திருவாரூரி லும் போய் விடக் கூடாது என்பதற்காகத் தான் எதையாவது பேசி ஜெயலலிதாவின் மரணத்தை வைத்து அரசியல் செய்கிறார்கள்.

    இவ்வாறு தினகரன் கூறினார். #TTVDhinakaran #ThiruvarurByElection
    அமைச்சர் சி.வி.சண்முகம் ஆதாரம் இன்றி பேசி வருவதால் சம்மன் அனுப்பி அவரை அழைத்து விசாரிப்பதற்கு கமி‌ஷனிடம் அனுமதி கேட்போம் என்று சசிகலா தரப்பு வழக்கறிஞர் ராஜா செந்தூர்பாண்டியன் தெரிவித்துள்ளார். #CVShanmugam
    சென்னை:

    ஜெயலலிதா மரணத்தில் மர்மம் இருப்பதாகவும், சிறப்பு குழு அமைத்து விசாரிக்க வேண்டும் என்றும் அமைச்சர் சி.வி.சண்முகம் நேற்று பரபரப்பாக கூறி இருந்தார். அதுமட்டுமல்ல ஜெயலலிதா ஆஸ்பத்திரியில் சிகிச்சையில் இருந்தபோது அமைச்சரவை கூடி விவாதிக்கவில்லை என்றும் கூறி இருந்தார்.

    நீதிபதி ஆறுமுகசாமி விசாரணை கமி‌ஷனில் சசிகலா தரப்பில் ஆஜராகி வரும் வக்கீல் ராஜா செந்தூர் பாண்டியனிடம் இதுகுறித்து கேட்டபோது அவர் கூறியதாவது:-

    அமைச்சர் சி.வி.சண்முகம் ஆதாரம் இன்றி பல்வேறு தகவல்களை வெளிப்படுத்தி வருகிறார். ஜெயலலிதா அமைச்சரவையில் அன்று முதல் இன்று வரை இவர் அமைச்சராக இருந்தவர். தினமும் அப்பல்லோ ஆஸ்பத்திரிக்கு வந்து சென்றவர். அவருக்கு எல்லாம் தெரிந்தும் தெரியாதது போல் பேசுகிறார்.


    சசிகலா குடும்பத்தினர் சாப்பிட்டு தான் இவ்வளவு பில் வந்ததாக அமைச்சர் குற்றம் சாட்டுகிறார். அது தவறு. அப்பல்லோவில் தரப்பட்ட டீ, காபி, சமோசா, வடை, பிஸ்கட், மதிய உணவு ஆகியவற்றை யார் யாரெல்லாம் சாப்பிட்டார்கள் என்பது பத்திரிகையாளர்களுக்கு தெரியும். காலையில் இருந்து இரவு வரை இருந்த அமைச்சர்களுக்கும் தெரியும்.

    ஜெயலலிதா சிகிச்சையில் இருந்தபோது ஒருமுறை கூட அமைச்சரவை கூட்டம் நடைபெறவில்லை என்றும் ஒரு குற்றச்சாட்டை கூறி இருக்கிறார். அது தவறு.

    உண்மை என்னவென்றால் ஜெயலலிதா ஆஸ்பத்திரியில் சிகிச்சையில் இருந்தபோது 19.10.2016 அன்று கேபினட் கூட்டம் நடைபெற்றதாகவும், அதில் அம்மா பூரண நலம் பெற வேண்டி தீர்மானம் நிறைவேற்றப்பட்டதாகவும் இப்போதைய தலைமை செயலாளர் கிரிஜா வைத்தியநாதன் 31.10.2018 அன்று ஆணையத்தில் கடிதம் சமர்ப்பித்துள்ளார்.

    ஆனால் வெளிநாட்டுக்கு சென்று சிகிச்சை பெறுவது குறித்து அதில் எந்த அம்சமும் இடம்பெறவில்லை என தெரிகிறது. இதுபற்றி அப்போதைய தலைமை செயலாளராக இருந்த ராமமோகன ராவிடம் ஆணையத்தில் கேள்விகள் கேட்கப்பட்டது. அவரும் கேபினட் கூட்டம் நடந்ததை தெரிவித்துள்ளார்.

    எனவே அமைச்சர் சி.வி.சண்முகம் ஆதாரம் இன்றி பேசி வருவதால் சம்மன் அனுப்பி அவரை அழைத்து விசாரிப்பதற்கு கமி‌ஷனிடம் அனுமதி கேட்போம்.

    ஆறுமுகசாமி விசாரணை கமி‌ஷன் இடைக்கால அறிக்கையை தாக்கல் செய்ய வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தி இருக்கிறார். எங்களுக்கு தெரிந்தவரை இடைக்கால அறிக்கை வழங்க ஆணைய விதிகளில் இடம் இல்லை என தெரிகிறது.

    சி.வி.சண்முகம் இப்போது புதுப்புது தகவல்களை கூறுவதை பார்க்கும் போது கமி‌ஷன் விசாரணை இன்னும் 6 மாதத்துக்கு மேல் செல்லும் என தெரிகிறது.

    சுருக்கமாக சொல்ல வேண்டுமானால் மருத்துவத்தை தாண்டி அரசியல் நடைபெறுவதாகவே கருத வேண்டி உள்ளது.

    இவ்வாறு அவர் கூறினார். #CVShanmugam #RajaSenthurpandian
    ஜெயலலிதா மரணம் குறித்து அரசு சிறப்பு விசாரணை குழு அமைத்து விசாரிக்க வேண்டும் என்று அமைச்சர் சி.வி.சண்முகம் வலியுறுத்தியுள்ளார். #JayaDeathprobe #CVShanmugam
    விழுப்புரம்:

    விழுப்புரம் நகராட்சிக்கு உட்பட்ட மகராஜாபுரத்தில் புதியதாக கட்டப்பட்ட ரூ.50 லட்சம் மதிப்பிலான நகர ஆரம்ப சுகாதார நிலையத்தை அமைச்சர் சி.வி.சண்முகம் இன்று திறந்துவைத்தார். அதன்பின்பு விழுப்புரம் நகராட்சி சார்பில் பிளாஸ்டிக் ஒழிப்பு பேரணியை விழுப்புரம் புதிய பஸ்நிலையம் அருகே தொடங்கி வைத்தார்.

    மேலும் அங்கு ஒரு திருமண மண்டபத்தில் பிளாஸ்டிக் ஒழிப்பு கண்காட்சியையும் அமைச்சர் திறந்து வைத்தார்.

    அப்போது செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த அமைச்சர் சி.வி.சண்முகம் கூறியதாவது:-

    ஜெயலலிதா சாவில் சந்தேகம் இருப்பது உறுதியாகி உள்ளது. ஜெயலலிதாவுக்கு வெளிநாட்டில் சிகிச்சை அளிக்கவிடாமல் தடுத்தது யார்? என்று ஆணையம் விசாரிக்க வேண்டும். ஜெயலலிதாவுக்கு ஆஞ்ஜியோகிராம் செய்யவிடாமல் தடுத்தது யார்? என்பது தெரியவரவேண்டும்.



    மருத்துவமனையை உல்லாச விடுதியாக்கி தங்கியிருந்து இட்லி-தோசை சாப்பிட்டு ரூ.1 கோடி அளவுக்கு சசிகலா குடும்பத்தினர் செலவு ஏற்படுத்தி உள்ளனர். சசிகலா தரப்பினர் உண்மையான ஆவணங்களை மறைத்துள்ளார்கள். ஆணையத்தில் பொய்யான தகவல்களை கூறி உள்ளனர். சசிகலாவை தவிர அவரது குடும்பத்தினர் அனைவரையும் ஜெயலலிதா ஒதுக்கி வைத்திருந்தார்.

    எனவே ஜெயலலிதா மரணம் குறித்து அரசு சிறப்பு விசாரணை குழு அமைத்து விசாரிக்க வேண்டும். ஜெயலலிதா சாவில் உள்ள உண்மை விபரங்களை வெளியிட வேண்டும்.

    இவ்வாறு அவர் கூறினார். #JayaDeathprobe #CVShanmugam
    காவல்துறையினர் ஐ.ஜி. பொன்மாணிக்கவேல் மீது பல்வேறு குற்றச்சாட்டுகள் சுமத்தி வருவதால் அவர் குற்றமற்றவர் என்று நிரூபிக்க வேண்டும் என்று அமைச்சர் சி.வி.சண்முகம் தெரிவித்துள்ளார். #ministercvshanmugam #ponmanickavel

    விக்கிரவாண்டி:

    விழுப்புரம் கூட்டேரிப்பட்டு மற்றும் முண்டியம்பாக்கம் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் உள்ள தேசிய நெடுஞ்சாலையில் போக்குவரத்து எச்சரிக்கை ஒளிரும் விளக்கை சட்ட அமைச்சர் சி.வி. சண்முகம் இன்று திறந்து வைத்தார்.

    பின்னர் அவரிடம் நிருபர்கள் கேட்ட கேள்விகளும், அவர் அதற்கு அளித்த பதில்களும் வருமாறு:-

    கேள்வி: மேகதாது அணை பிரச்சினைபற்றி உங்கள் கருத்து என்ன?

    பதில்: காவிரி ஆறு மேகதாது அணை விவகாரத்தில் உச்ச நீதி மன்ற தீர்ப்பை மதிக்க வேண்டும். அதன்படி காவிரி ஆற்றில் அணை கட்டும் போது சம்மந்தப்பட்ட மாநில அரசுகளின் அனுமதி பெறாமல் எந்த ஒரு அணையும் கட்டக் கூடாது என்பது சட்டவிதி. மேகதாது அணை விவகாரத்தில் உச்ச நீதிமன்றத்தில் தமிழக அரசு மேல்முறையீடு செய்துள்ளது.

    கேள்வி: சிலை கடத்தல் தடுப்பு பிரிவு ஐ.ஜி. பொன் மாணிக்கவேல் மீது பல்வேறு குற்றசாட்டுகள் கூறப்படுவது குறித்து என்ன சொல்கிறீர்கள்?


    பதில்: ஐ.ஜி.பொன்மாணிக்கவேல் கீழ் பணியாற்றும் காவல்துறையினர் அவர் மீது பல்வேறு குற்றச்சாட்டுகள் சுமத்தி வருகின்றனர். அதற்கு அவர் பதிலளிக்க வேண்டும். அவர் குற்றமற்றவர் என்று நிரூபிக்க வேண்டும்.

    இவ்வாறு அவர் கூறினார். #ministercvshanmugam #ponmanickavel 

    பொன்.மாணிக்கவேல் மீது அவரின் கீழ் பணியாற்றும் காவல் துறையினர் வைத்துள்ள குற்றச்சாட்டுகள் குறித்து விசாரிக்கப்பட வேண்டும் என அமைச்சர் சிவி சண்முகம் கூறியுள்ளார். #CVShanmugam #PonManickavel
    காஞ்சீபுரம்:

    காஞ்சீபுரம் தாலுக்கா அலுவலக வளாகத்தில் புதிதாக அமைக்கப்பட்டுள்ள நீதிமன்ற கட்டிடத்தினை சென்னை உயர்நீதி மன்ற தலைமை நீதிபதி விஜயா கமலேஷ் தகில்ரமானி மற்றும் அமைச்சர் சி.வி.சண்முகம் திறந்து வைத்தனர்.

    பின்னர் அமைச்சர் சி.வி.சண்முகம் நிருபர்களிடம் கூறியதாவது:-

    சிலை கடத்தல் தடுப்புப் பிரிவு ஐ.ஜி. பொன்.மாணிக்கவேல் மீது அவரின் கீழ் பணியாற்றும் காவல் துறையினர் குற்றச்சாட்டுகள் வைத்துள்ளனர். அவர்களை இப்படித்தான் விசாரணை செய்ய வேண்டும், இப்படித்தான் எப்.ஐ.ஆர். பதிவு செய்ய வேண்டும் எனக் கூறியுள்ளார்.

    தனக்கு கீழ் பணியாற்றுபவர்களை மனிதர்களாக மதிக்க வேண்டும். மனித உரிமைகளை மீறக் கூடாது. அவர் மீது கூறப்படுவது மிகப்பெரிய குற்றச்சாட்டு, பொன்.மாணிக்கவேல் என்பதால் அவர் மீது விசாரணை நடத்தாமல் இருக்க முடியாது. அவர் மீதான குற்றச்சாட்டு விசாரிக்கப்பட வேண்டும்.

    விசாரணையின் போது தமிழக அரசு தனது நிலைப்பாட்டினை எடுத்துரைக்கும்.

    மேகதாது விவகாரத்தில் கர்நாடக அரசுடன் தமிழக அரசு எந்தவித பேச்சுவார்த்தைக்கும் இடமில்லை.

    இவ்வாறு அவர் கூறினார்.

    நிகழ்சியில் சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி விஜயா கமலேஷ் தகில் ரமானி பேசியதாவது:-

    புதிய சார்பு நீதிமன்ற கட்டிடம் அமைப்பின் கோரிக்கை தற்போது நிறைவேறியுள்ளது.

    அதே போன்று காஞ்சீபுரத்தில் ஒருங்கிணைந்த புதிய நீதிமன்ற கட்டிடங்கள் அமைக்கப்பட வேண்டும் என்ற வழக்கறிஞர்களின் கோரிக்கையினை சென்னை உயர்நீதி மன்றம் கவனத்தில் கொண்டு விரைந்து முடிக்க நடவடிக்கை மேற்கொள்ளும்.



    வழக்கு தொடுத்தவர்கள் பயன்பெறும் வகையில் வழக்குகளை விரைந்து முடிக்க வேண்டிய உதவிகளை உயர்நீதிமன்றம் செய்து கொடுக்கும். இதனால் வழக்கு தொடுத்தவர்கள் பயன் பெறுவர். புதிய நீதிமன்றங்கள் அமைக்கப்படுவதன் மூலம் இளம் வழக்கறிஞர்கள் நிறைய அனுபவங்களை பெறலாம்.

    இவ்வாறு அவர் பேசினார்.

    நிகழ்ச்சியில் உயர் நீதிமன்ற நீதிபதிகள் விமலா, பவானி சுப்பராயன், மாவட்ட முதன்மை நீதிபதி வசந்தலீலா, மாவட்ட நீதிமன்றம்-2 நீதிபதி கருணாநிதி, மற்றும் நீதிபதிகள் கீதாராணி, பாக்கியஜோதி, மாவட்ட கலெக்டர் பொன்னையா, மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சந்தோஷ் ஹதிமானி.

    காஞ்சீபுரம் மேற்கு மாவட்ட அ.தி.மு.க. செயலாளர் வாலாஜாபாத் பா.கணேசன், நிர்வாகிகள் வி.சோமசுந்தரம், கே.யு.எஸ்.சோமசுந்தரம், வள்ளிநாயகம், காஞ்சி பன்னீர்செல்வம், அத்திவாக்கம் ரமேஷ், அக்ரி நாகராஜன், படுநெல்லிதயாளன், அதிமுக வழக்கறிஞர் அணி கே.ரவிச்சந்திரன், ஜி.எம்.சி. ஜீவரத்தினம்

    பார் அசோசியேசன் தலைவர் கார்த்திகேயன், செயலாளர் சுப்பிரமணி, லாயர் அசோசியேசன் தலைவர் பார்த்தசாரதி, செயலாளர் கார்த்திகேயன்,

    அட்வகேட் அசோசியேசன் தலைவர் ரவிச்சந்திரன், செயலாளர் சத்தியமூர்த்தி, மூத்த வழக்கறிஞர்கள் டி.சி.வரதராஜன், டோமேசன், ஒய்.தியாகராஜன், கேதார் நாத், தாங்கி பழனி, துரைமுருகன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். #CVShanmugam #PonManickavel
    ×