search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "chennai stanley hospital"

    ஐ.ஏ.எஸ் அதிகாரிகள் அரசுக்கு இதயம் போன்றவர்கள் என்றும் யாரையும் தனிப்பட்ட முறையில் குற்றம்சாட்ட வேண்டும் என்பது தங்களின் எண்ணம் இல்லை என்றும் அமைச்சர் ஜெயக்குமார் கூறினார். #IASOfficers #MinisterJayakumar
    ராயபுரம்:

    சென்னை ஸ்டான்லி அரசு ஆஸ்பத்திரியில் நுண் கதிரியல் துறையில் ‘கேத் லேப்’ மற்றும் ஆஸ்பத்திரி வளாகத்தில் அம்மா குடிநீர் விற்பனை நிலையத்தை அமைச்சர்கள் விஜயபாஸ்கர், ஜெயக்குமார், எம்.ஆர்.விஜய பாஸ்கர் ஆகியோர் திறந்து வைத்தனர்.

    பின்னர் அமைச்சர் ஜெயக்குமார் நிருபர்களிடம் கூறியதாவது:-

    இயற்கைக்கு இடர்பாடுகள் அளிக்கக்கூடிய மற்றும் சுகாதாரமற்ற நிலையை கொண்ட 14 பிளாஸ்டிக் பொருட்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.

    கணவன்-மனைவி போல் மக்களுடன் ஒன்றி இருந்த பிளாஸ்டிக் பொருட்களை விவாகரத்து செய்ய வேண்டும் என்கிற அளவுக்கு அரசு நடவடிக்கை எடுத்துள்ளது.

    ஐ.ஏ.எஸ் அதிகாரிகள் அரசுக்கு இதயம் போன்றவர்கள். அவர்களை அரசு மதிக்கிறது. எனவே யாரையும் தனிப்பட்ட முறையில் குற்றம்சாட்ட வேண்டும் என்பது எங்கள் எண்ணம் இல்லை.


    சட்ட அமைச்சர் குற்றம் சாட்டி உள்ளார். அதுகுறித்து உண்மை நிலை மக்களுக்கு தெரிய வேண்டும் என்று தான் விசாரணை வேண்டும் என்று தெரிவித்தோம். அமைச்சரவை, முதல்-அமைச்சரின் கட்டுக்குள்தான் உள்ளது.

    இவ்வாறு அவர் கூறினார்.

    அமைச்சர் விஜயபாஸ்கர் கூறும்போது, “நுண் கதிரியல் துறையில் ரத்தநாளங்களில் ஏற்படும் வீக்கம், ரத்தகசிவு, அடைப்பு, ரத்தநாள வெடிப்பு உள்ளிட்ட நோய்களுக்கு நுண்துளைகள் மூலம் அறுவை சிகிச்சை இல்லாமல் அதிநவீன சிகிச்சை வழங்க ரூ.6.5கோடி மதிப்பில் பிப்லேன் டிஜிட்டல் சப்ஸ்ட்ராக்சன் ஆஞ்சியோகிராம் கேத்லேப் திறந்து வைக்கப்பட்டுள்ளது.

    இந்த கருவி மூலம் மூளை, குடல் மற்றும் உள்ளுறுப்புகளில் ஏற்படும் ரத்த கசிவு, மற்றும் கல்லீரல் புற்றுநோய் உட்பட புற்றுநோய்களை தெளிவாக கண்டறிந்து, அறுவை சிகிச்சை இல்லாமல் சிகிச்சை வழங்கப்படும்.

    அதுமட்டுமின்றி குறைவான மருத்துவ செலவில் மக்களுக்கு சிகிச்சைகள் அளிக்க வேண்டும் என இத்திட்டம் துவக்கப்பட்டுள்ளது” என்றார்.

    நிகழ்ச்சியில் ஸ்டான்லி அரசு ஆஸ்பத்திரி டீன் பொன்னம்பல நமச்சிவாயம், மருத்துவ நிலைய அதிகாரி ரமேஷ் உள்பட பலர் கலந்து கொண்டனர். #IASOfficers #MinisterJayakumar
    தப்பி செல்ல முயன்றபோது தவறி விழுந்ததில் ரவுடி தனசேகரனின் வலது கை, இடது காலில் முறிவு ஏற்பட்டதால் அவருக்கு சென்னை ஸ்டான்லி அரசு ஆஸ்பத்திரியில் அவசர சிகிச்சை பிரிவில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
    ராயபுரம்:

    எண்ணூர் அன்னை சத்யா நகரை சேர்ந்த பிரபல ரவுடி தனசேகரன். இவன் மீது 7 கொலை வழக்கு உள்பட 40-க்கும் மேற்பட்ட வழக்குகள் உள்ளன. 5 முறை குண்டர் சட்டத்தில் கைது செய்யப்பட்டு சிறைக்கு சென்றுள்ளான்.

    கடந்த சில நாட்களுக்கு முன்பு வடசென்னை அனல் மின்நிலையம் அருகே ஒப்பந்ததாரர் ஜேம்ஸ் பால் என்பவர் வெட்டிக் கொலை செய்யப்பட்டார். ரூ.1 கோடி கேட்டு மிரட்டியபோது ஏற்பட்ட தகராறில் அவரை தனசேகரன் திட்டமிட்டு தீர்த்துகட்டியது போலீஸ் விசாரணையில் தெரிந்தது.

    இதையடுத்து தலைமறைவாக இருந்த ரவுடி தனசேகரன் மற்றும் அவனது கூட்டாளிகளை போலீசார் தேடி வந்தனர்.

    இந்த நிலையில் நேற்று முன்தினம் இரவு மீஞ்சூர் அருகே நாப்பாளையத்தில் காரில் தப்பி செல்ல முயன்ற ரவுடி தனசேகரன், அவனது கூட்டாளிகள் தஞ்சாவூரை சேர்ந்த மதி, உளுந்தூர் பேட்டை மும்மூர்த்தி ஆகிய 3 பேரை போலீசார் துப்பாக்கி முனையில் கைது செய்தனர்.

    அப்போது தப்பி செல்ல முயன்ற போது தவறி விழுந்ததில் தனசேகரனின் வலது கை, இடது காலில் முறிவு ஏற்பட்டது. அவரை பொன்னேரி கோர்ட்டில் போலீசார் கைதாங்கலாக அழைத்து வந்து ஆஜர்படுத்தினர். கூட்டாளிகள் மதி, மும்மூர்த்தி ஆகிய 2 பேரும் கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டு புழல் சிறையில் அடைக்கப்பட்டனர்.

    பலத்த காயம் அடைந்த தனசேகரனை மட்டும் சிகிச்சைக்காக சென்னை ஸ்டான்லி அரசு ஆஸ்பத்திரியில் போலீசார் சேர்த்தனர்.

    அவனுக்கு முதல் மாடியில் உள்ள அவசர சிகிச்சை பிரிவில் தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதையொட்டி அங்கு பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

    ×