search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Minister Cve shanmugam"

    கடந்த காலங்களில் அ.தி.மு.க. இக்கட்டான சூழ்நிலையில் இருந்த போது கட்சியின் வெற்றிக்கு பா.ம.க.உறுதுணையாக இருந்ததாக விழுப்புரம் பொதுக்கூட்டத்தில் அமைச்சர் சி.வி.சண்முகம் நினைவு கூர்ந்தார்.
    விழுப்புரம்:

    தேசிய ஜனநாயக முற்போக்கு கூட்டணியின் விழுப்புரம்(தனி), கள்ளக்குறிச்சி பாராளுமன்ற தொகுதி வேட்பாளர்கள் அறிமுக கூட்டம் விழுப்புரம் கரும்பு விவசாயிகள் சமுதாயக்கூடத்தில் நடைபெற்றது.

    கூட்டத்தில் பா.ம.க.நிறுவனர் டாக்டர் ராமதாஸ் பேசியதாவது:-

    தமிழகம், புதுச்சேரி சேர்த்து 40 பாராளுமன்ற தொகுதிகளிலும், இடைத்தேர்தல் நடைபெறும் 18 சட்டமன்ற தொகுதிகளிலும் நாம் வெற்றி பெற போகிறோம். மீண்டும் நம்முடைய மோடி பிரதமராக வரப்போகிறார். கருத்துக்கணிப்பும் அப்படித்தான் சொல்கிறது. பேரறிவாளன் உள்ளிட்ட 7 பேரின் விடுதலைக்காக தமிழக அரசு, அமைச்சரவை கூட்டத்தை நடத்தி கவர்னருக்கு ஒப்புதல் கடிதம் அனுப்பியுள்ளது. இந்த தேர்தலுக்கு பிறகு நிச்சயமாக 7 பேரும் விடுதலை ஆவார்கள் என்று நம்புகிறேன்.

    மத்தியில் கூட்டாட்சி, மாநிலத்தில் சுயாட்சி என்று கூறி வந்த தி.மு.க. ஆட்சி கட்டிலில் இருந்து பதவி சுகத்தை அனுபவித்தவர்கள் தமிழுக்கும் ஒன்றும் செய்யவில்லை, மாநில சுயாட்சியையும் பெற்றுத்தரவில்லை.

    இப்போது இந்த தேர்தலில் மாநிலத்தின் சுயாட்சியை பெற்றுத்தருவோம் என்று (அ.தி.மு.க., பா.ம.க.) நாங்கள் இருவரும் தேர்தல் அறிக்கையில் குறிப்பிட்டிருக்கிறோம். இந்த கூட்டணி அமைந்ததற்கு தம்பி சி.வி.சண்முகமும் காரணம். உள்ளாட்சி தேர்தல் ஜூன், ஜூலையில் வந்தே தீரும். அந்த தேர்தலிலும் இந்த கூட்டணி தொடரும். 40 தொகுதிகளிலும் நாம் வெற்றி பெறப்போவது உறுதி.

    இவ்வாறு அவர் பேசினார்.

    முன்னதாக அமைச்சர் சி.வி.சண்முகம் பேசியதாவது:-

    ஜெயலலிதா இல்லாமல் நாம் சந்திக்கிற முதல் தேர்தல் இது. ஜெயலலிதா மறைவுக்கு பிறகு இந்த இயக்கம் அழிந்து விடும், தலை தூக்க முடியாது என்று பேசியவர்கள் முகத்தில் கரியை பூசுகிற வகையில் இந்த தேர்தலில் நாம் வெற்றி பெற வேண்டும். தற்போது இந்த தேர்தலில் வெற்றிக்கூட்டணி அமைந்துள்ளது. இந்த தேர்தலுக்கு பிறகு மிகப்பெரிய அரசியல் மாற்றம் ஏற்படும். நம்மை பார்த்து ஏளனம் பேசியவர்கள் இந்த தேர்தலுக்கு பிறகு அரசியல் செய்ய முடியாத நிலை உருவாகும். ஆகவே எந்த சுணக்கமும் இல்லாமல் அனைவரும் சுறுசுறுப்பாக பணியாற்றி 40 தொகுதிகளிலும் அ.தி.மு.க. கூட்டணி வெற்றி பெற அயராது பாடுபட வேண்டும்.

    1996-ம் ஆண்டு சட்டசபை தேர்தலில் அ.தி.மு.க.தோல்வி அடைந்தது. அம்மாவும் தோல்வி அடைந்தார்.

    அ.தி.மு.க. இதோடு அழிந்து விட்டது என்று தீய சக்திகள் நினைத்து இருந்தார்கள். இந்த சூழ்நிலையில் 1998-ம் ஆண்டு தேர்தலில் அ.தி.மு.க.வோடு பா.ம.க.கூட்டணி அமைத்தது. இந்த தேர்தலில் அம்மா மாபெரும் வெற்றி பெற்றார்.

    2011-ம் ஆண்டு தேர்தலில் அ.தி.மு.க.வோடு கேப்டன் கூட்டணி அமைத்தார். அம்மா முதல்-அமைச்சர் ஆவதற்கு உறுதுணையாக இருந்தார்.

    தற்போது அ.தி.மு.க. இக்கட்டான சூழ்நிலையில் உள்ளது. இந்தநிலையில் அ.தி.மு.க.வுக்கு பா.ம.க., தே.மு.தி.க., ஆதரவு தெரிவித்துள்ளது.

    இந்த தேர்தலில் இந்த கூட்டணி மாபெரும் வெற்றிபெறும்.

    இந்த கூட்டணி உள்ளாட்சி தேர்தலிலும் தொடரும். 5 ஆண்டு காலம் அ.தி.மு.க.ஆட்சியை எந்த கொம்பனாலும் அசைக்க முடியாது.

    இவ்வாறு அவர் பேசினார்.
    ஐ.ஏ.எஸ் அதிகாரிகள் அரசுக்கு இதயம் போன்றவர்கள் என்றும் யாரையும் தனிப்பட்ட முறையில் குற்றம்சாட்ட வேண்டும் என்பது தங்களின் எண்ணம் இல்லை என்றும் அமைச்சர் ஜெயக்குமார் கூறினார். #IASOfficers #MinisterJayakumar
    ராயபுரம்:

    சென்னை ஸ்டான்லி அரசு ஆஸ்பத்திரியில் நுண் கதிரியல் துறையில் ‘கேத் லேப்’ மற்றும் ஆஸ்பத்திரி வளாகத்தில் அம்மா குடிநீர் விற்பனை நிலையத்தை அமைச்சர்கள் விஜயபாஸ்கர், ஜெயக்குமார், எம்.ஆர்.விஜய பாஸ்கர் ஆகியோர் திறந்து வைத்தனர்.

    பின்னர் அமைச்சர் ஜெயக்குமார் நிருபர்களிடம் கூறியதாவது:-

    இயற்கைக்கு இடர்பாடுகள் அளிக்கக்கூடிய மற்றும் சுகாதாரமற்ற நிலையை கொண்ட 14 பிளாஸ்டிக் பொருட்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.

    கணவன்-மனைவி போல் மக்களுடன் ஒன்றி இருந்த பிளாஸ்டிக் பொருட்களை விவாகரத்து செய்ய வேண்டும் என்கிற அளவுக்கு அரசு நடவடிக்கை எடுத்துள்ளது.

    ஐ.ஏ.எஸ் அதிகாரிகள் அரசுக்கு இதயம் போன்றவர்கள். அவர்களை அரசு மதிக்கிறது. எனவே யாரையும் தனிப்பட்ட முறையில் குற்றம்சாட்ட வேண்டும் என்பது எங்கள் எண்ணம் இல்லை.


    சட்ட அமைச்சர் குற்றம் சாட்டி உள்ளார். அதுகுறித்து உண்மை நிலை மக்களுக்கு தெரிய வேண்டும் என்று தான் விசாரணை வேண்டும் என்று தெரிவித்தோம். அமைச்சரவை, முதல்-அமைச்சரின் கட்டுக்குள்தான் உள்ளது.

    இவ்வாறு அவர் கூறினார்.

    அமைச்சர் விஜயபாஸ்கர் கூறும்போது, “நுண் கதிரியல் துறையில் ரத்தநாளங்களில் ஏற்படும் வீக்கம், ரத்தகசிவு, அடைப்பு, ரத்தநாள வெடிப்பு உள்ளிட்ட நோய்களுக்கு நுண்துளைகள் மூலம் அறுவை சிகிச்சை இல்லாமல் அதிநவீன சிகிச்சை வழங்க ரூ.6.5கோடி மதிப்பில் பிப்லேன் டிஜிட்டல் சப்ஸ்ட்ராக்சன் ஆஞ்சியோகிராம் கேத்லேப் திறந்து வைக்கப்பட்டுள்ளது.

    இந்த கருவி மூலம் மூளை, குடல் மற்றும் உள்ளுறுப்புகளில் ஏற்படும் ரத்த கசிவு, மற்றும் கல்லீரல் புற்றுநோய் உட்பட புற்றுநோய்களை தெளிவாக கண்டறிந்து, அறுவை சிகிச்சை இல்லாமல் சிகிச்சை வழங்கப்படும்.

    அதுமட்டுமின்றி குறைவான மருத்துவ செலவில் மக்களுக்கு சிகிச்சைகள் அளிக்க வேண்டும் என இத்திட்டம் துவக்கப்பட்டுள்ளது” என்றார்.

    நிகழ்ச்சியில் ஸ்டான்லி அரசு ஆஸ்பத்திரி டீன் பொன்னம்பல நமச்சிவாயம், மருத்துவ நிலைய அதிகாரி ரமேஷ் உள்பட பலர் கலந்து கொண்டனர். #IASOfficers #MinisterJayakumar
    திண்டிவனம் அருகே பள்ளி மாணவ-மாணவிகளுக்கு அமைச்சர் சி.வி.சண்முகம் வழங்கிய விலையில்லா சைக்கிள்களில் கர்நாடக அரசின் முத்திரை இருந்ததால் பரபரப்பு ஏற்பட்டது. #CVeshanmugam
    திண்டிவனம்:

    விழுப்புரம் மாவட்டம் திண்டிவனம் அருகே தழுதாளி கிராமத்தில் உள்ள அரசு மேல்நிலைப்பள்ளியில் மாணவ-மாணவிகளுக்கு நேற்று விலையில்லா சைக்கிள்கள் வழங்கும் விழா நடைபெற்றது. இதில் அமைச்சர் சி.வி.சண்முகம் கலந்துகொண்டு அந்த பகுதியில் உள்ள 9 அரசு பள்ளிகளை சேர்ந்த ஆயிரத்து 524 மாணவ, மாணவிகளுக்கு விலையில்லா சைக்கிள்களை வழங்கினார்.

    அதில், சில சைக்கிள்களின் முன்புறத்தில் இருந்த கூடையில், வட்டவடிவில் இருந்த முத்திரையில் மாணவி படிப்பது போன்ற படத்துடன், கன்னட மொழியில் சில வாசகங்கள் பொறிக்கப்பட்டு இருந்தது. தமிழக அரசின் முத்திரை இல்லாமல், கர்நாடக அரசின் முத்திரையுடைய சைக்கிள்கள் வழங்கப்படுவது பரபரப்பை ஏற்படுத்தியது.


    இதற்கிடையே இந்த சைக்கிள் பற்றி அதிர்ச்சியான தகவல்களும் வெளியாகி வருகின்றன. கர்நாடக மாநில அரசு சார்பில், அங்குள்ள பள்ளி மாணவ, மாணவிகளுக்கு விலையில்லா சைக்கிள்கள் வழங்கப்பட்டு வருகிறது. இவ்வாறு வழங்கிய சைக்கிள்கள் தரமற்றவையாக இருப்பதாக குற்றச்சாட்டு இருந்தது. இதையடுத்து கர்நாடக அரசு அந்த சைக்கிள்களை தரமற்றவை என்று கூறி நிராகரித்து விட்டதாக தெரிகிறது. இவ்வாறு நிராகரிக்கப்பட்ட சைக்கிள்கள் தான் தமிழகத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

    இதுபற்றி விசாரணை நடத்தப்பட்டு வருவதாக விழுப்புரம் மாவட்ட முதன்மை கல்வி அதிகாரி முனுசாமி தெரிவித்தார்.  #CVeshanmugam

    அ.தி.மு.க. கட்சி விதிகளில் செய்த மாற்றங்களை ஏற்கக்கூடாது என்று தேர்தல் ஆணையத்தில் சசிகலா தரப்பில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. #ADMK #ElectionCommission #Sasikala
    புதுடெல்லி:

    ஜெயலலிதா மறைவுக்கு பிறகு அ.தி.மு.க.வில் பொதுச்செயலாளர் பதவி நீக்கப்பட்டு ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் பதவிகள் புதிதாக உருவாக்கப்பட்டன. இதற்காக கட்சி விதிகளில் திருத்தம் செய்யப்பட்டது.

    இதனை தொடர்ந்து ஒருங்கிணைப்பாளராக ஓ.பன்னீர்செல்வமும், இணை ஒருங்கிணைப்பாளராக எடப்பாடி பழனிசாமியும் நியமிக்கப்பட்டனர்.

    கட்சி விதிகளில் செய்த திருத்தங்களை ரத்து செய்யக்கோரி முன்னாள் எம்.பி. கே.சி.பழனிசாமி (அ.தி.மு.க.வில் இருந்து நீக்கப்பட்டவர்) தலைமை தேர்தல் கமி‌ஷனில் முறையிட்டார். டெல்லி ஐகோர்ட்டிலும் வழக்கு தொடர்ந்தார்.


    இதற்கிடையே தேர்தல் கமி‌ஷனில் அமைச்சர் சி.வி.சண்முகம் நேரில் சென்று ஒரு மனு தாக்கல் செய்தார். அதில், கே.சி.பழனிசாமியின் மனுவை தள்ளுபடி செய்ய வேண்டும் என்று கூறியிருந்தார்.

    இந்த நிலையில் தேர்தல் கமி‌ஷனில் சசிகலா தரப்பில் பதில் மனு தாக்கல் செய்யப்பட்டது. அதில் கூறியிருப்பதாவது:-

    அ.தி.மு.க. கட்சி விதிகளில் செய்த மாற்றங்களை தேர்தல் ஆணையம் ஏற்கக்கூடாது. அ.தி.மு.க. பொதுச்செய லாளர் பதவிக்கு அடிப்படை உறுப்பினர் மூலம் உடனடியாக தேர்தல் நடத்த உத்தரவிட வேண்டும்.

    இவ்வாறு மனுவில் கூறப்பட்டு இருந்தது. #ADMK #ElectionCommission #Sasikala
    அ.தி.மு.க. ஆட்சியை கலைக்க ஸ்டாலினுடன் மறைமுகமாக தினகரன் கூட்டணி வைத்துள்ளதாக அமைச்சர் சி.வி.சண்முகம் குற்றம்சாட்டியுள்ளார். #ADMK #CVeShanmugam #MKStalin #TTVDhinakaran
    விழுப்புரம்:

    விழுப்புரம் நகர அ.தி.மு.க. சார்பில் மறைந்த தமிழக முன்னாள் முதல்- அமைச்சர் அண்ணாவின் 110-வது பிறந்தநாள் விழா பொதுக்கூட்டம் விழுப்புரம் மந்தக்கரை திடலில் நேற்று இரவு நடைபெற்றது.

    கூட்டத்தில் அமைச்சர் சி.வி.சண்முகம் பேசியதாவது:-

    தமிழகத்தில் அ.தி.மு.க. சிறப்பான ஆட்சி நடத்தி வருகிறது. முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி மக்கள் நலன் சார்ந்த திட்டங்களை உடனுக்குடன் நிறைவேற்றி வருகிறார். இந்த ஆட்சிக்கு தினகரனும், மு.க.ஸ்டாலினும் தொடர்ந்து அவப்பெயர் ஏற்படுத்தி வருகின்றனர்.

    அ.தி.மு.க. ஆட்சியை கலைக்க ஸ்டாலினுடன் மறைமுகமாக தினகரன் கூட்டணி வைத்துள்ளார். அவர்களின் எண்ணம் ஒருபோதும் நிறைவேறாது. 5 ஆண்டுகாலம் முழுமையாக ஆட்சி நடைபெறும். அதன் பின்னரும் மீண்டும் அ.தி.மு.க. ஆட்சி அமையும்.

    மு.க.ஸ்டாலினுக்கு முதல்-அமைச்சராக தகுதியும், ராசியும் கிடையாது. அவர் ஒருபோதும் தமிழகத்தின் முதல்வராக முடியாது. ஜெயலலிதாவால் போயஸ்கார்டன் மற்றும் கட்சியில் இருந்து விரட்டியடிக்கப்பட்டவர் தினகரன். இவர் தற்போது ஜெயலலிதா படத்தை வைத்து மக்களை ஏமாற்றி வருகிறார். அடுத்த தேர்தலில் மீண்டும் ஆர்.கே. நகரில் இவர் போட்டியிட்டு வெற்றிபெற முடியுமா?

    முதல்-அமைச்சர் பழனிசாமி, துணை முதல்- அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் ஆகியோரை ஏகவசனத்தில் வசைபாடி வருகிறார். ஒரு தலைவருக்கான தகுதி தினகரனுக்கு கிடையாது. தினகரன் கலந்து கொள்ளும் கூட்டங்களில் கூட்டம் சேருவதுபோல் ஒரு மாய தோற்றத்தை உருவாக்குகிறார்.

    அ.தி.மு.க.வின் வரலாறு தெரியாமல் எம்.ஜி.ஆர். படத்துக்கு அருகில் கருணாநிதி படத்தை வைக்க வேண்டும் என ரஜினிகாந்த் பேசி வருகிறார். கருணாநிதியை எதிர்க்கவே அ.தி.மு.க. தொடங்கப்பட்டது. அவர் மறைந்தாலும் தி.மு.க.தான் அ.தி.மு.க.வுக்கு எதிரி. மீண்டும் அ.தி.மு.க.வின் பொற்கால ஆட்சி எப்போதும் தொடரும்.

    இவ்வாறு அமைச்சர் சி.வி.சண்முகம் பேசினார். #ADMK #CVeShanmugam #MKStalin #TTVDhinakaran
    மதுரை சிறைத்துறை எஸ்.பி.க்கு மிரட்டல் விடுத்தது உண்மை என்றால் ரவுடி மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்று அமைச்சர் சி.வி.சண்முகம் தெரிவித்துள்ளார். #TNMinister #CVeShanmugam
    விழுப்புரம்:

    விழுப்புரத்தில் அமைச்சர் சி.வி.சண்முகம் நிருபர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

    தமிழ்நாடு சென்னை மாகாணம் என்று முன்பு அழைக்கப்பட்டது. அண்ணாவின் சீரிய முயற்சியால் தமிழ்நாடு என பெயர் சூட்டப்பட்டது. தமிழ்நாடு என்று பெயர் சூட்டப்பட்டு 50 ஆண்டுகள் ஆகிறது.

    இதைபோல் சென்னை உயர்நீதிமன்றத்தின் பெயரையும் தமிழ்நாடு உயர்நீதிமன்றம் என பெயர் மாற்றம் செய்ய அரசு பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது. அதற்கான பணிகளும் தொடங்கி உள்ளது.

    இவ்வாறு அவர் கூறினார்.

    பின்னர் அவரிடம் மதுரையில் சிறைத்துறை பெண் எஸ்.பி.யை ரவுடி மிரட்டி உள்ளார். அவர் மீது நடவடிக்கை எடுக்கப்படுமா? என நிருபர்கள் கேட்டனர்.

    அதற்கு அமைச்சர் பதில் அளிக்கும்போது, இந்த பிரச்சனை பற்றி எனக்கு தெரியாது. போலீஸ் சூப்பிரண்டுக்கு ரவுடி மிரட்டல் விடுத்தது உண்மை என்றால் தமிழகத்தில் உள்ள ரவுடிகள் அனைவருக்கும் எச்சரிக்கை விடும் விதமாக பாரபட்சமின்றி உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்றார். #TNMinister #CVeShanmugam
    விழுப்புரத்தில் அமைச்சர் சி.வி.சண்முகம் அலுவலகத்தின் கண்ணாடி உடைக்கப்பட்டது தொடர்பாக போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
    விழுப்புரம்:

    விழுப்புரம் சட்டமன்ற தொகுதி எம்.எல்.ஏ.வாக இருப்பவர் அமைச்சர் சி.வி.சண்முகம். இவரது அலுவலகம் விழுப்புரம் கலெக்டர் அலுவலகத்தின் முன்பகுதியில் உள்ளது. இதன் அருகே ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகம் அமைந்துள்ளது. இங்கு 24 மணிநேரமும் ஆட்கள் நடமாட்டம் இருக்கும்.

    அமைச்சர் சி.வி.சண்முகத்தின் அலுவலகத்தில் அவரது தனி உதவியாளர் தரணிதரன் தினமும் வந்து பொதுமக்கள் அளிக்கும் கோரிக்கை மனுக்களை பெற்று அதனை அமைச்சரிடம் வழங்கி வருவார்.

    நேற்று இரவு அமைச்சர் அலுவலகத்தில் வலதுபுறத்தில் உள்ள கண்ணாடி மீது யாரோ? மர்ம மனிதர்கள் கல்வீசி சென்றுள்ளனர். இதில் கண்ணாடி உடைந்து நொறுங்கி சிதறியது. இன்று காலை அமைச்சரின் தனி உதவியாளர் தரணிதரன் அலுவலகத்தை திறக்க வந்தார். அப்போது கண்ணாடி உடைந்து கிடப்பதை பார்த்து அதிர்ச்சியடைந்தார்.

    இதுகுறித்து அவர் விழுப்புரம் தாலுகா போலீசில் புகார் செய்தார். அதன்பேரில் சப்-இன்ஸ்பெக்டர் ஆனந்தன் மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்றனர். அமைச்சர் அலுவலகத்தில் உள்ள கண்ணாடியை உடைத்தவர்கள் யார்? என்று விசாரணை மேற்கொண்டனர். மேலும் அந்த பகுதியில் உள்ள சி.சி.டி.வி.கேமராவில் பதிவான காட்சிகளை வைத்து ஆய்வு மேற்கொண்டு வருகின்றனர்.
    நதிகள் இணைப்பு பற்றி நடிகர் ரஜினிகாந்த் பேசியதை வரவேற்பதாக விழுப்புரம் அமைச்சர் சி.வி.சண்முகம் தெரிவித்தார். #TNMinister #CVeShanmugam #Rajinikanth
    விழுப்புரம்:

    விழுப்புரத்தில் அமைச்சர் சி.வி.சண்முகம் இன்று மதியம் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

    நதிகள் இணைப்பு பற்றி நடிகர் ரஜினிகாந்த் பேசினார். இதனை நான் வரவேற்கிறேன். ஆனால் அவரின் சொந்த மாநிலமான கர்நாடகத்தில் இருந்து தமிழகத்துக்கு காவிரி நீர் திறக்க அவர் எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை.


    பெண் பத்திரிகையாளர்கள் குறித்து அவதூறு கருத்து பதிவிட்ட நடிகர் எஸ்.வி.சேகரை கைது செய்வதற்கான அனைத்து நடவடிக்கைகளையும் இந்த அரசு மேற்கொண்டு வருகிறது.

    காவிரி மேலாண்மை வாரியம் அமைப்பது தொடர்பாக பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறோம். ஆனால், ஒருசில அரசியல் கட்சி தலைவர்கள் காவிரி நீருக்காக போராட்டம் நடத்தி மக்களை குழப்பத்திற்கு ஆளாக்கி வருகிறார்கள்.

    இவ்வாறு அவர் கூறினார். #TNMinister #CVeShanmugam #Rajinikanth
    ×