search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Madurai prison department SP"

    மதுரை சிறைத்துறை எஸ்.பி.க்கு மிரட்டல் விடுத்தது உண்மை என்றால் ரவுடி மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்று அமைச்சர் சி.வி.சண்முகம் தெரிவித்துள்ளார். #TNMinister #CVeShanmugam
    விழுப்புரம்:

    விழுப்புரத்தில் அமைச்சர் சி.வி.சண்முகம் நிருபர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

    தமிழ்நாடு சென்னை மாகாணம் என்று முன்பு அழைக்கப்பட்டது. அண்ணாவின் சீரிய முயற்சியால் தமிழ்நாடு என பெயர் சூட்டப்பட்டது. தமிழ்நாடு என்று பெயர் சூட்டப்பட்டு 50 ஆண்டுகள் ஆகிறது.

    இதைபோல் சென்னை உயர்நீதிமன்றத்தின் பெயரையும் தமிழ்நாடு உயர்நீதிமன்றம் என பெயர் மாற்றம் செய்ய அரசு பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது. அதற்கான பணிகளும் தொடங்கி உள்ளது.

    இவ்வாறு அவர் கூறினார்.

    பின்னர் அவரிடம் மதுரையில் சிறைத்துறை பெண் எஸ்.பி.யை ரவுடி மிரட்டி உள்ளார். அவர் மீது நடவடிக்கை எடுக்கப்படுமா? என நிருபர்கள் கேட்டனர்.

    அதற்கு அமைச்சர் பதில் அளிக்கும்போது, இந்த பிரச்சனை பற்றி எனக்கு தெரியாது. போலீஸ் சூப்பிரண்டுக்கு ரவுடி மிரட்டல் விடுத்தது உண்மை என்றால் தமிழகத்தில் உள்ள ரவுடிகள் அனைவருக்கும் எச்சரிக்கை விடும் விதமாக பாரபட்சமின்றி உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்றார். #TNMinister #CVeShanmugam
    ×