என் மலர்
செய்திகள்

ஜெயலலிதா மரணம் தொடர்பாக சிறப்பு விசாரணை குழு அமைக்க வேண்டும்- அமைச்சர் சண்முகம் வலியுறுத்தல்
ஜெயலலிதா மரணம் குறித்து அரசு சிறப்பு விசாரணை குழு அமைத்து விசாரிக்க வேண்டும் என்று அமைச்சர் சி.வி.சண்முகம் வலியுறுத்தியுள்ளார். #JayaDeathprobe #CVShanmugam
விழுப்புரம்:
விழுப்புரம் நகராட்சிக்கு உட்பட்ட மகராஜாபுரத்தில் புதியதாக கட்டப்பட்ட ரூ.50 லட்சம் மதிப்பிலான நகர ஆரம்ப சுகாதார நிலையத்தை அமைச்சர் சி.வி.சண்முகம் இன்று திறந்துவைத்தார். அதன்பின்பு விழுப்புரம் நகராட்சி சார்பில் பிளாஸ்டிக் ஒழிப்பு பேரணியை விழுப்புரம் புதிய பஸ்நிலையம் அருகே தொடங்கி வைத்தார்.
மேலும் அங்கு ஒரு திருமண மண்டபத்தில் பிளாஸ்டிக் ஒழிப்பு கண்காட்சியையும் அமைச்சர் திறந்து வைத்தார்.
அப்போது செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த அமைச்சர் சி.வி.சண்முகம் கூறியதாவது:-

மருத்துவமனையை உல்லாச விடுதியாக்கி தங்கியிருந்து இட்லி-தோசை சாப்பிட்டு ரூ.1 கோடி அளவுக்கு சசிகலா குடும்பத்தினர் செலவு ஏற்படுத்தி உள்ளனர். சசிகலா தரப்பினர் உண்மையான ஆவணங்களை மறைத்துள்ளார்கள். ஆணையத்தில் பொய்யான தகவல்களை கூறி உள்ளனர். சசிகலாவை தவிர அவரது குடும்பத்தினர் அனைவரையும் ஜெயலலிதா ஒதுக்கி வைத்திருந்தார்.
எனவே ஜெயலலிதா மரணம் குறித்து அரசு சிறப்பு விசாரணை குழு அமைத்து விசாரிக்க வேண்டும். ஜெயலலிதா சாவில் உள்ள உண்மை விபரங்களை வெளியிட வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார். #JayaDeathprobe #CVShanmugam
விழுப்புரம் நகராட்சிக்கு உட்பட்ட மகராஜாபுரத்தில் புதியதாக கட்டப்பட்ட ரூ.50 லட்சம் மதிப்பிலான நகர ஆரம்ப சுகாதார நிலையத்தை அமைச்சர் சி.வி.சண்முகம் இன்று திறந்துவைத்தார். அதன்பின்பு விழுப்புரம் நகராட்சி சார்பில் பிளாஸ்டிக் ஒழிப்பு பேரணியை விழுப்புரம் புதிய பஸ்நிலையம் அருகே தொடங்கி வைத்தார்.
மேலும் அங்கு ஒரு திருமண மண்டபத்தில் பிளாஸ்டிக் ஒழிப்பு கண்காட்சியையும் அமைச்சர் திறந்து வைத்தார்.
அப்போது செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த அமைச்சர் சி.வி.சண்முகம் கூறியதாவது:-
ஜெயலலிதா சாவில் சந்தேகம் இருப்பது உறுதியாகி உள்ளது. ஜெயலலிதாவுக்கு வெளிநாட்டில் சிகிச்சை அளிக்கவிடாமல் தடுத்தது யார்? என்று ஆணையம் விசாரிக்க வேண்டும். ஜெயலலிதாவுக்கு ஆஞ்ஜியோகிராம் செய்யவிடாமல் தடுத்தது யார்? என்பது தெரியவரவேண்டும்.

மருத்துவமனையை உல்லாச விடுதியாக்கி தங்கியிருந்து இட்லி-தோசை சாப்பிட்டு ரூ.1 கோடி அளவுக்கு சசிகலா குடும்பத்தினர் செலவு ஏற்படுத்தி உள்ளனர். சசிகலா தரப்பினர் உண்மையான ஆவணங்களை மறைத்துள்ளார்கள். ஆணையத்தில் பொய்யான தகவல்களை கூறி உள்ளனர். சசிகலாவை தவிர அவரது குடும்பத்தினர் அனைவரையும் ஜெயலலிதா ஒதுக்கி வைத்திருந்தார்.
எனவே ஜெயலலிதா மரணம் குறித்து அரசு சிறப்பு விசாரணை குழு அமைத்து விசாரிக்க வேண்டும். ஜெயலலிதா சாவில் உள்ள உண்மை விபரங்களை வெளியிட வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார். #JayaDeathprobe #CVShanmugam
Next Story






