search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "pugalenthi"

    அ.தி.மு.க.வுக்கு இரட்டை இலை சின்னம் கிடைக்காது என்று கர்நாடக மாநில அம்மா மக்கள் முன்னேற்ற கழக செயலாளர் புகழேந்தி தெரிவித்துள்ளார். #pugalenthi #admkleaf #edappadipalanisamy

    பெங்களூரு:

    கர்நாடக மாநில அம்மா மக்கள் முன்னேற்ற கழக செயலாளரும், செய்தி தொடர்பாளருமான புகழேந்தி இன்று நிருபரிடம் கூறியதாவது:-

    முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி, துணை முதல்-அமைச்சர் ஒ.பன்னீர்செல்வம் ஆகியோர் உள்ள அ.தி.மு.க.வுக்கு இரட்டை இலை சின்னத்தை ஒதுக்கீடு செய்து தேர்தல் ஆணையம் உத்தரவிட்டதை எதிர்த்து சசிகலா மற்றும் தினகரன் தரப்பில் டெல்லி ஐகோர்ட்டில் மேல்முறையீட்டு மனு விசாரணை முடிந்து தீர்ப்பு வர உள்ளது.

    இந்த இரட்டை இலை சின்னம் தொடர்பான வழக்கை 4 வாரங்களுக்குள் முடிக்க வேண்டும் என்று டெல்லி ஐகோர்ட்டுக்கு சுப்ரீம் கோர்ட்டு உத்தரவு பிறப்பித்துள்ளது. எனவே 4 வாரங்களுக்குள் தீர்ப்பு வரவேண்டும். தீர்ப்பு வந்தாலும் இரட்டை இலை சின்னம் அவர்களுக்கு கிடைக்குமா என்பது சந்தேகம்தான்.

    எங்களுக்கு சின்னமே இல்லை என்று கேலி செய்தவர்களுக்கு சின்னம் கிடைக்குமா என்பதே கேள்விக்குறியாகி விட்டது. இப்போது இரட்டை இலை அந்தரத்தில் தொங்கிக் கொண்டிருக்கிறது.

    இரட்டை இலை சின்னம் எங்களுக்கு தான் கிடைக்கும். அப்படி கிடைக்கவில்லை என்றால் குக்கர் சின்னத்தை மீண்டும் அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்திற்கு கொடுக்க வேண்டிய கட்டாயம் தேர்தல் ஆணையத்துக்கு ஏற்படும்.

    எந்த காலத்திலும் அ.தி.மு.க.வுடன் அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் இணையாது.

    இவ்வாறு அவர் கூறினார். #pugalenthi #admkleaf #edappadipalanisamy

    நீண்ட வரலாறு கொண்ட தி.மு.க.வில் எங்களோடு இருந்த ஒருவரை அழைத்து கட்சி நடத்துவது பலவீனத்தை காட்டுகிறது என்று வேலூரில் புகழேந்தி பேசினார். #pugalenthi #mkstalin #senthilbalaji

    வேலூர்:

    வேலூர் கிழக்கு, மேற்கு, மத்திய மாவட்ட அம்மா மக்கள் முன்னேற்ற கழக மாணவரணி சார்பில் மொழிப்போர் தியாகிகளுக்கு வீரவணக்க நாள் பொதுக்கூட்டம் சத்துவாச்சாரியில் நடந்தது. இதில், கர்நாடக மாநில செயலாளர் புகழேந்தி கலந்து கொண்டு பேசியதாவது:-

    ‘‘டி.டி.வி. தினகரன் பின்னால் இளைஞர் பட்டாளம் இருக்கிறது. மக்கள் ஆதரவோடு அவர் அரியணை ஏறப்போகிறார்’’.

    எம்.ஜி.ஆர். ஆட்சியை கட்டிக்காத்து மக்களுக்காக ஜெயலலிதா தன்னையே அர்ப்பணித்தார். அவருக்கு உதவியாக இருந்து பல தியாகங்களை செய்தவர் சசிகலா.

    ஜெயலலிதாவால் அறிவிக்கப்பட்டு அவர் வெற்றி பெற செய்த தினகரன் ஆதரவு எம்.எல்.ஏ.க்களை தகுதி நீக்கம் செய்திருப்பது ஜெயலலிதாவிற்கு செய்த துரோகம்.

    அ.தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள், நிர்வாகிகள், தொண்டர்கள் அனைவரும் சசிகலாவை நீங்கள்தான் பொதுச்செயலாளராக, முதல்வராக வரவேண்டும் என்று அழைத்தனர்.

    சசிகலா என்ன தவறு செய்தார். சும்மா கிடந்த சங்கை ஊதி கெடுத்த கதையாக அவரை அழைத்துவிட்டு தற்போது தரம் தாழ்த்தி பேசுகின்றார்கள்.

    துரோக ஆட்சி நடத்தியவர்கள் கடந்து வந்த பாதையை பின்னோக்கி பார்க்க வேண்டும். மக்கள் ஆதரவோடு டி.டி.வி. தினகரன் தமிழக முதல்-அமைச்சர் ஆவார். இப்போது தரம் தாழ்ந்து பேசுபவர்களை காலம் மறந்து விடாது.

    அரசியலில் நாங்கள் தவழ்ந்து வரும் குழந்தையாக இருந்துவிட்டு போகிறோம். நீண்ட வரலாறு கொண்ட தி.மு.க.வில் எங்களோடு இருந்த ஒருவரை அழைத்து சென்று கரூர் மாவட்டத்தை காப்பாற்ற வேண்டிய நிலை ஸ்டாலினுக்கு ஏற்பட்டுள்ளது. இது தி.மு.க.வின் பலவீனத்தை காட்டுகிறது.

    எந்த தேர்தல் வந்தாலும் அதனை சந்திக்க திராணி உள்ள ஒரே கட்சி அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் மட்டும்தான்.

    பா.ஜ.க. வட மாநிலங்களில் தோல்வியடைந்து விட்டது. அதுமுடிந்து போன கட்சி. வரும் தேர்தலில் 60 அல்லது 70 இடங்களுக்கு மேல் பா.ஜ.க. வெற்றி பெற்றால் நாங்கள் அரசியலை விட்டு வெளியேறி விடுகிறோம்.

    இவ்வாறு அவர் பேசினார். #pugalenthi #mkstalin #senthilbalaji

    பெங்களூர் ஜெயிலில் இருக்கும் சசிகலா மீது அவதூறாக புகார் கூறிய அதிகாரி ரூபா மீது மானநஷ்ட வழக்கு தொடர முடிவு செய்து இருக்கிறேன் என்று புகழேந்தி கூறியுள்ளார். #pugalenthi #sasikal #roopa

    பெங்களூரு:

    கர்நாடக மாநில அம்மா மக்கள் முன்னேற்ற கழக செயலாளரும், செய்தி தொடர்பாளருமான புகழேந்தி கூறியதாவது:-

    போலீஸ் அதிகாரி ரூபா தனது கடமையை செய்யாமல் தன்னை முன்னிலைப் படுத்துவதையே தொழிலாக கொண்டுள்ளார். அவருக்கு பெயரும், புகழும் கிடைக்க வேண்டும் என்றால் அவர் அதிகாரி பதவியை ராஜினாமா செய்து விட்டு தேர்தலில் நிற்கட்டும். நாங்களும் அவரை எதிர்த்து வேட்பாளரை நிறுத்துகிறோம்.

    ஓய்வுபெற்ற டி.ஜி.பி. சத்தியநாராயணராவ் சிறைத்துறை பொறுப்பில் இருந்தபோது 2 மெமோக்களை ரூபாவுக்கு வழங்கினார்.

    அந்த மெமோக்களுக்கு பதிலளிக்காத அவர் சசிகலா விவகாரத்தை கையில் எடுத்து அவரது பிரச்சினையை திசைதிருப்பி விட்டார். சிறையில் எந்த வசதியும் இல்லாமல் சசிகலா, அவதிப்பட்டு வருகிறார். ஆனால் அவருக்கு சலுகை செய்து கொடுக்க ரூ.2 கோடி லஞ்சம் கொடுக்கப்பட்டதாக ரூபா கூறி இருக்கிறார். நான் இதுவரை 1 கோடி பணத்தைகூட நேரில் பார்த்தது இல்லை.


    இந்த விவகாரத்தில் என்னையும் தேவையில்லாமல் இழுத்து கர்நாடக ஊழல் தடுப்புபடை போலீஸ் விசாரணைக்கு ஆஜராக உத்தரவிட்டுள்ளனர். ரூபா மீது நானே மானநஷ்ட வழக்கு தொடரலாம் என்று முடிவு செய்து இருக்கிறேன். இதற்காக இன்னும் ஓரிரு நாளில் அவருக்கு நோட்டீஸ் அனுப்பப்படும். சசிகலா தரப்பிலும் அவர் மீது வழக்கு தொடர திட்டமிடப்பட்டுள்ளது.

    இவ்வாறு அவர் கூறினார். #pugalenthi #sasikal #roopa

    அப்பல்லோ மருத்துவமனையில் சிகிச்சை பெற்றபோது ஜெயலலிதாவை என்னுடன் சேர்ந்து சிவி சண்முகம பார்த்தார் என புகழேந்தி பேட்டி அளித்துள்ளார். #Pugalenthi #CVShanmugam #JayalalithaaDeath
    பெண்ணாடம்:

    கடலூர் மாவட்டம் பெண்ணாடத்தில் உள்ள உறவினர் வீட்டுக்கு நேற்று மாலை அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தின் கர்நாடக மாநில செயலாளரும், செய்தி தொடர்பாளருமான புகழேந்தி வந்தார்.

    பின்னர் அவர் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

    கேள்வி:- ஜெயலலிதா சாவில் மர்மம் இருப்பதாக அமைச்சர் சி.வி.சண்முகம் குற்றம் சாட்டியுள்ளாரே அது குறித்து உங்கள் கருத்து என்ன?

    பதில்:- ஜெயலலிதா அப்பல்லோ ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டிருந்த போது நான் சென்று பார்த்தேன். அப்போது அமைச்சர் சி.வி.சண்முகமும் வந்து பார்த்தார். அப்போது எந்த கருத்தையும் அவர் கூறவில்லை.

    ஆனால், தற்போது அமைச்சர் சி.வி.சண்முகம் பல்வேறு கருத்துக்களை கூறுகிறார். ஜெயலலிதா சாவில் மர்மம் இருக்கிறது என்று தெரிவிக்கிறார். மேலும் ஐ.ஏ.எஸ். அதிகாரிகளை கேவலமாக பேசுகிறார். இவர் சசிகலாவின் காலில் விழுந்து அமைச்சரானவர்.



    கே:- என்.எல்.சி. 3-வது சுரங்க விரிவாக்கம் பற்றி உங்களது கருத்து என்ன?

    ப:- நெய்வேலியில் 3-வது சுரங்கம் அமைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தின் துணை பொதுச்செயலாளர் டி.டி.வி. தினகரன் தலைமையில் சேத்தியாத்தோப்பில் போராட்டம் நடைபெற்றது.

    தமிழ்நாட்டில் உள்ள அமைச்சர்களில் சில பேருக்கு என்.எல்.சி. என்றால் அதற்கான அர்த்தம் தெரியாது. என்.எல்.சி. 3-வது சுரங்க விரிவாக்கத்துக்கு ஆதரவு தெரிவிப்பதுபோல் அமைச்சர் எம்.சி.சம்பத் கூறியுள்ளார்.

    ஆனால், கடலூர் பாராளுமன்ற உறுப்பினர் அருண்மொழிதேவன் பேசும்போது, என்.எல்.சி. 3-வது சுரங்க விரிவாக்கத்தை அனுமதிக்க மாட்டோம் என்று கூறுகிறார். இவர்களுக்குள்ளேயே ஒற்றுமை இல்லை என்று தெரிய வருகிறது.

    கே:- திருவாரூர் தேர்தல் ரத்து செய்யப்பட்டது பற்றி என்ன நினைக்கிறீர்கள்?

    ப:- திருவாரூர் இடைத்தேர்தலில் அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தின் சார்பில் காமராஜ் வேட்பாளராக நிறுத்தப்பட்டார்.

    எங்கள் மீதுள்ள பயத்தால் அனைவரும் இந்த இடைத்தேர்தலை ரத்து செய்ய வேண்டும் என தேர்தல் அதிகாரியிடம் மனுக்கள் கொடுத்தனர். மேலும் நீதிமன்றத்திலும் வழக்கு தொடர்ந்து தேர்தலை ரத்து செய்து விட்டனர்.

    பொங்கல் இனாம் அனைவருக்கும் வழங்கப்படும் என்று அறிவித்தனர்.தற்போது அவர்களாகவே வழக்கு தொடர்ந்து வறுமை கோர்ட்டுக்கு கீழே உள்ளவர்களுக்கு மட்டுமே பொங்கல் இனாம் வழக்கப்படும் என தெரிவிப்பது ஒரு ஏமாற்று வேலையாகும்.

    இவ்வாறு அவர் கூறினார். #Pugalenthi #CVShanmugam #JayalalithaaDeath
    ஜெயலலிதா மரணத்துக்கு ஓ.பன்னீர்செல்வம்தான் காரணம் என்று தங்கதமிழ்செல்வன் மற்றும் புகழேந்தி கூட்டாக தெரிவித்தனர். #ThangaTamilSelvan #Pugalenthi #OPS
    திண்டுக்கல்:

    திண்டுக்கல்லில் அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தின் கொள்கை பரப்பு செயலாளர் தங்கதமிழ்செல்வன் மற்றும் கர்நாடக மாநில செயலாளர் புகழேந்தி கூட்டாக நிருபர்களுக்கு பேட்டியளித்தனர். அப்போது அவர்கள் கூறியதாவது:-

    ஜெயலலிதா மரணம் குறித்து ஆறுமுகசாமி கமி‌ஷன் தமிழக துணை முதல்வரை விசாரணைக்கு அழைக்க பயப்படுகிறது . ஜெயலலிதா மரணத்தில் மர்மம் உள்ளது எனக் கூறிய ஓ.பன்னீர் செல்வத்திடம் விசாரணை கமி‌ஷன் இதுவரை அதற்கான ஆதாரத்தை ஏன் கேட்கவில்லை. மக்களவை துணை சபாநாயகர் தம்பிதுரை, துணை முதல்வர் பன்னீர்செல்வம் மற்றும் தமிழக அமைச்சர்களை விசாரணைக் கமி‌ஷன் ஏன் விசாரணைக்கு அழைக்கவில்லை. இவர்களை உடனடியாக விசாரிக்கா விட்டால் ஆறுமுகசாமி கமி‌ஷனை எதிர்த்து நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்படும். ஜெயலலிதா மரணத்திற்கு துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் தான் காரணம்.



    ராஜீவ் காந்தி கொலை வழக்கில் சம்பந்தப்பட்ட 7 பேரையும் தமிழக ஆளுநர் உடனடியாக விடுதலை செய்ய வேண்டும். இல்லையென்றால் தமிழகத்தில் புரட்சி வெடிக்கும். மத்தியில் ஆளும் பா.ஜ.க. அரசை கண்டு எடப்பாடி அரசு பயப்படுகிறது. எச்.ராஜா காவல்துறை மற்றும் நீதித்துறை பற்றி அவதூறாக பேசினார். இது தொடர்பாக அவர் மீது வழக்கு பதிவு செய்த பின்பும் போலீஸ் துணையுடன் பொதுக்கூட்டத்திற்கு வருகை தருகிறார். அவரை கைது செய்யாமல் தமிழக அரசு ஏன் மவுனம் காத்து வருகிறது? அரசை மக்கள் கேவலமாக பார்க்க மாட்டார்களா அ.தி.மு.க. அரசை மக்கள் கூடிய விரைவில் தூக்கி எறிவார்கள்.

    இவ்வாறு அவர்கள் கூறினர்.  #ThangaTamilSelvan #Pugalenthi #OPS

    எடப்பாடி பழனிசாமியும், ஓ.பன்னீர்செல்வமும் திருவாரூர், திருப்பரங்குன்றம் இடைத்தேர்தலில் நமக்கு எதிராக பிரசாரம் செய்தாலே அமமுக வெற்றி பெற்று விடும் என புகழேந்தி தெரிவித்துள்ளார். #ADMK #OPS #EPS #AMMK #Pugalenthi
    தஞ்சாவூர்:

    தஞ்சை ஆபிரகாம்பண்டிதர் சாலையில் மாநகர மாவட்ட அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தின் சார்பில் அண்ணா பிறந்தநாளையொட்டி நேற்று இரவு பொதுக்கூட்டம் நடந்தது. .

    கூட்டத்தில் கர்நாடக மாநில செயலாளரும், செய்தி தொடர்பாளருமான புகழேந்தி கலந்து கொண்டு பேசினார். அப்போது அவர் கூறியதாவது:-

    அண்ணாவின் கொள்கைகளை நிறைவேற்றியவர் ஜெயலலிதா. தி.மு.க.வின் 2-ம் கட்ட தலைவர்கள் கூட மு.க.ஸ்டாலினுக்கு அதிர்ஷ்டம் இல்லை, தமிழகத்தின் அடுத்த முதலமைச்சர் டி.டி.வி.தினகரன் தான் என்று சொல்கிறார்கள்.

    நாடாளுமன்ற தேர்தல் உள்ளிட்ட எந்த தேர்தலாக இருந்தாலும் அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் தான் வெற்றி பெறும். 18 எம்.எல்.ஏ.க்கள் தகுதிநீக்க வழக்கில் நல்ல தீர்ப்பு வரும். துரோகிகள் விலகுவார்கள். இரட்டை இலையையும், கழக கொடியையும் மீட்டெடுப்போம்.

    தமிழகத்தில் பா.ஜ.னதா ஆட்சி தான் நடக்கிறது. மத்தியில் பா.ஜ.னதா ஆட்சிக்கு தினகரன் தான் முடிவு கட்டுவார். எடப்பாடி பழனிசாமியும், ஓ.பன்னீர்செல்வமும் திருவாரூர், திருப்பரங்குன்றம் இடைத்தேர்தலில் நமக்கு எதிராக பிரசாரம் செய்தாலே நாம் வெற்றி பெற்று விடுவோம்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    முடிவில் கோட்டை பகுதி செயலாளர் செந்தில்குமார் நன்றி கூறினார். #ADMK #OPS #EPS #Pugalenthi
    குட்கா ஊழல் வழக்கில் தொடர்புடைய அமைச்சர் விஜயபாஸ்கர் கைது செய்யப்படுவது உறுதி என்று புகழேந்தி தெரிவித்துள்ளார். #pugalenthi #ministervijayabaskar #Gutkha

    குத்தாலம்:

    நாகை மாவட்டம் குத்தாலத்திற்கு வந்த அம்மா மக்கள் முன்னேற்றக் கழக செய்தித்தொடர்பாளரும், கர்நாடக மாநில செயலாளருமான புகழேந்தி நிருபர்களுக்கு பேட்டியளித்தார்.

    தமிழிசை சவுந்திரராஜன் செல்லும் விமானத்தில் இனி செல்லப்போவதில்லை. இனிமேல் ரெயிலில் பயணம் செய்யப் போகிறோம். பொதுமக்களும் இதனை கருத்தில் கொள்ள வேண்டும் பதவியில் உள்ள டி.ஜி.பி வீட்டில் சி.பி.ஐ சோதனை நடைபெறுவது இந்தியாவிலேயே முதல்முறை. சி.பி.ஐ. அதிரடி சோதனைக்குப்பின், அமைச்சர் பதவியில் விஜயபாஸ்கர் தொடரக்கூடாது, உடனடியாக ராஜினாமா செய்ய வேண்டும். இந்த விவகாரத்தில், சிபிஐ சம்மன் அனுப்பும். அமைச்சர் விஜயபாஸ்கர் கைது செய்யப்படுவது உறுதி.


    தமிழகம் முழுவதும் மணல்கொள்ளை நடைபெறுகின்றது. இதில் முதலமைச்சர் உள்ளிட்ட அனைத்து அமைச்சர்களுக்கும் தொடர்பு உள்ளது.

    இவ்வாறு அவர் கூறினார்.

    அப்போது மாநில பொருளாளர் ரெங்கசாமி, அ.ம.மு.க அமைப்புச் செயலாளர் குடவாசல் ராஜேந்திரன், நாகை வடக்கு மாவட்ட செயலாளர் செந்தமிழன் ஆகியோர் உடனிருந்தனர். #pugalenthi #ministervijayabaskar #Gutkha

    ×