search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Roopa"

    சசிகலா விவகாரத்தில் தன் மீது ஒரு வழக்கு மட்டுமல்ல, ஓராயிரம் வழக்கு தொடர்ந்தாலும் அதை சந்திக்க தயாராக உள்ளதாக கர்நாடக முன்னாள் சிறைத்துறை டிஐஜி ரூபா கூறி உள்ளார். #Roopa
    பெங்களூரு:

    பெங்களூரு சிறையில் உள்ள சசிகலாவுக்கு சிறப்பு வசதிகள் செய்து கொடுக்க ரூ.2 கோடி லஞ்சம் வழக்கப்பட்ட வழக்கை கர்நாடக ஊழல் தடுப்பு படை போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    ஓய்வு பெற்ற ஐ.ஏ.எஸ். அதிகாரி வினய்குமார் நடத்திய விசாரணை அறிக்கையில் சசிகலாவுக்கு சிறையில் சிறப்பு வசதிகள் செய்து கொடுக்கப்பட்டது உண்மைதான் என்று கூறப்பட்டு உள்ளது.

    இதன்மூலம் சிறைத்துறை டி.ஐ.ஜி.யாக இருந்த ரூபா கூறிய குற்றச்சாட்டுகள் அனைத்தும் உண்மை என்பது தற்போது தெரியவந்து உள்ளது.

    ரூபா மீது மான நஷ்ட வழக்கு தொடர போவதாக சசிகலாவின் வக்கீல் அசோகன், கர்நாடக மாநில அம்மா மக்கள் முன்னேற்ற கழக செயலாளரும், செய்தி தொடர்பாளருமான புகழேந்தி ஆகியோர் அறிவித்து உள்ளனர்.

    இதுகுறித்து போலீஸ் அதிகாரி ரூபாவிடம் கேட்டபோது, அவர் கூறியதாவது:-

    என் மீது ஒரு வழக்கு மட்டுமல்ல, ஓராயிரம் வழக்கு தொடர்ந்தாலும் அதை சந்திக்க தயாராக உள்ளேன். வழக்கு தொடர்ந்தால் அந்த வழக்கு விசாரணைக்கு வரும்போது என்னிடம் உள்ள ஆதாரங்களை சமர்ப்பிப்பேன்.

    இதுபோன்ற மிரட்டல்களுக்கெல்லாம் நான் பயப்பட மாட்டேன். என் கடமையை தொடர்ந்து செய்வேன்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    சசிகலாவுக்கு சிறப்பு வசதி செய்து கொடுத்தது தொடர்பாக கர்நாடக உள்துறை மந்திரி எம்.பி. பாட்டீல் நிருபர்களிடம் கூறியதாவது:-

    ஓய்வு பெற்ற ஐ.ஏ.எஸ். அதிகாரி வினய்குமார் கமிட்டி அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் தொடர்பாக நடவடிக்கை எடுக்கப்படும். தவறு செய்தவர்கள் யாராக இருந்தாலும் அவர்கள் மீது கண்டிப்பாக நடவடிக்கை எடுக்கப்படும்.

    இவ்வாறு அவர் கூறினார். #Roopa
    பெங்களூர் ஜெயிலில் இருக்கும் சசிகலா மீது அவதூறாக புகார் கூறிய அதிகாரி ரூபா மீது மானநஷ்ட வழக்கு தொடர முடிவு செய்து இருக்கிறேன் என்று புகழேந்தி கூறியுள்ளார். #pugalenthi #sasikal #roopa

    பெங்களூரு:

    கர்நாடக மாநில அம்மா மக்கள் முன்னேற்ற கழக செயலாளரும், செய்தி தொடர்பாளருமான புகழேந்தி கூறியதாவது:-

    போலீஸ் அதிகாரி ரூபா தனது கடமையை செய்யாமல் தன்னை முன்னிலைப் படுத்துவதையே தொழிலாக கொண்டுள்ளார். அவருக்கு பெயரும், புகழும் கிடைக்க வேண்டும் என்றால் அவர் அதிகாரி பதவியை ராஜினாமா செய்து விட்டு தேர்தலில் நிற்கட்டும். நாங்களும் அவரை எதிர்த்து வேட்பாளரை நிறுத்துகிறோம்.

    ஓய்வுபெற்ற டி.ஜி.பி. சத்தியநாராயணராவ் சிறைத்துறை பொறுப்பில் இருந்தபோது 2 மெமோக்களை ரூபாவுக்கு வழங்கினார்.

    அந்த மெமோக்களுக்கு பதிலளிக்காத அவர் சசிகலா விவகாரத்தை கையில் எடுத்து அவரது பிரச்சினையை திசைதிருப்பி விட்டார். சிறையில் எந்த வசதியும் இல்லாமல் சசிகலா, அவதிப்பட்டு வருகிறார். ஆனால் அவருக்கு சலுகை செய்து கொடுக்க ரூ.2 கோடி லஞ்சம் கொடுக்கப்பட்டதாக ரூபா கூறி இருக்கிறார். நான் இதுவரை 1 கோடி பணத்தைகூட நேரில் பார்த்தது இல்லை.


    இந்த விவகாரத்தில் என்னையும் தேவையில்லாமல் இழுத்து கர்நாடக ஊழல் தடுப்புபடை போலீஸ் விசாரணைக்கு ஆஜராக உத்தரவிட்டுள்ளனர். ரூபா மீது நானே மானநஷ்ட வழக்கு தொடரலாம் என்று முடிவு செய்து இருக்கிறேன். இதற்காக இன்னும் ஓரிரு நாளில் அவருக்கு நோட்டீஸ் அனுப்பப்படும். சசிகலா தரப்பிலும் அவர் மீது வழக்கு தொடர திட்டமிடப்பட்டுள்ளது.

    இவ்வாறு அவர் கூறினார். #pugalenthi #sasikal #roopa

    பெங்களூர் ஜெயிலில் சசிகலாவுக்கு வசதிகள் செய்து கொடுத்திருப்பது தொடர்பாக நான் அப்போது கூறிய குற்றச்சாட்டு உண்மை என்று நிரூபணமாகி இருக்கிறது என்று போலீஸ் அதிகாரி ரூபா கூறினார். #Roopa #Sasikala
    பெங்களூரு:

    சொத்து குவிப்பு வழக்கு தண்டனை பெற்ற சசிகலா பெங்களூரு பரப்பன அக்ரஹார ஜெயிலில் அடைக்கப்பட்டுள்ளார். அவருக்கு விதிமுறைகளை மீறி ஏராளமான சலுகைகளை அளித்து வருவதாக அப்போது சிறைத்துறை டி.ஐ.ஜி.யாக இருந்த ரூபா குற்றம் சாட்டினார்.

    இதுதொடர்பாக ஓய்வு பெற்ற ஐ.ஏ.எஸ். அதிகாரி வினய்குமார் தலைமையிலான விசாரணை கமிட்டி அமைக்கப்பட்டது. அதன் அறிக்கை அரசிடம் தாக்கல் செய்யப்பட்டிருக்கிறது.

    அதில், சசிகலாவுக்கு வசதிகள் செய்து கொடுத்திருப்பது உண்மைதான், பல விதிமுறைகள் மீறப்பட்டுள்ளது என்று கூறப்பட்டிருக்கிறது.

    இதுசம்பந்தமாக போலீஸ் அதிகாரி ரூபா கூறியதாவது:-

    சசிகலாவுக்கு செய்யப்பட்ட வசதிகள் தொடர்பாக விசாரணை அறிக்கையை தகவல் பெறும் உரிமை சட்டத்தின் கீழ் கேட்டிருக்கிறேன். அது இன்னும் எனக்கு தரப்படவில்லை. முழுமையாகவும் பொதுமக்களுக்கு வெளிப்படுத்தவில்லை. அந்த அறிக்கையில் இன்னும் பல வி‌ஷயங்கள் வெளிவரலாம்.

    நான் அப்போது கூறிய குற்றச்சாட்டு உண்மை என்று இந்த அறிக்கை மூலம் நிரூபணமாகி இருக்கிறது. விசாரணை ஆழமாகி ஊடுருவி நடத்தி இருக்கிறார்கள். ஜெயில் அதிகாரிகள் ஆவணங்களை திருத்தி பதிவு செய்திருந்த விவரங்களும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

    சசிகலாவை முதல் வகுப்பு கைதியாக நடத்தி இருக்கிறார்கள். ஆனால் அவர் முதல் வகுப்பு கைதி அல்ல. அவருக்காக 5 அறைகள் ஒதுக்கப்பட்டிருந்தன. தனி சமையல் கூடம் ஏற்படுத்தி உணவு தயாரிக்கும் வசதி, தனி பார்வையாளர் கூடம், படுக்கை அறை, எல்.இ.டி. டி.வி. என வசதிகள் செய்யப்பட்டுள்ளது. ஆனால் இவை முழுமையாக கணக்கில் எடுத்துக் கொள்ளப்படவில்லை.

    இந்த பிரச்சினையால் நான் பல இன்னல்களை சந்தித்தேன். என்னை இடமாற்றம் செய்தார்கள். ஆனால் இதை நான் தண்டனையாக கருதவில்லை. அதே நேரத்தில் தனி விசாரணை குழு அமைக்கப்பட்டதை நல்ல வி‌ஷயமாக கருதினேன். இப்போது நான் கூறிய குற்றச்சாட்டின்படி உண்மை வெளிவந்துள்ளது.

    ஜெயிலில் சசிகலாவுக்கு செய்யப்பட்ட வசதிகள் ஜெயில் விதிமுறைகளை மீறியது மட்டும் அல்ல. சுப்ரீம் கோர்ட்டு தண்டனை வழங்கிய ஒருவருக்கு அதை முறையாக நிறைவேற்றாததால் கோர்ட்டு அவமதிப்பு செயலாகவும் இது உள்ளது.

    அப்போதைய ஜெயில் இயக்குனர், சசிகலாவுக்கு எந்த வசதிகளையும் செய்யவில்லை என்று கூறியிருந்தார். ஆனால் அவர் சொன்னது தவறு என்பதை ஆவணங்கள் தெரிவிக்கின்றன. இதற்கு அவர் தான் பொறுப்பேற்க வேண்டும். அதேபோல ஜெயில் சூப்பிரண்டும் இதற்கு பொறுப்பானவர் ஆவார்.

    2014-ல் ஜெயலலிதா அடைக்கப்பட்டிருந்தபோது இதே வசதிகள் செய்து கொடுக்கப்பட்டிருந்ததா? என்று எனக்கு தெரியாது. அப்போது நான் ஜெயில் அதிகாரியாக நியமிக்கப்படாததால் எனக்கு எதுவும் தெரியாது.

    இவ்வாறு அவர் கூறினார். #Roopa #Sasikala
    ×