search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "minister kp anbazhagan"

    தமிழகத்திலேயே முதன் முறையாக தர்மபுரி மாவட்டத்தில் பாப்பாரப்பட்டி அரசு பள்ளியில் மழலையர் வகுப்புகளை அமைச்சர் அன்பழகன் இன்று காலை குத்துவிளக்கு ஏற்றி தொடங்கி வைத்தார். #LKG #KPAnbazhagan
    தர்மபுரி:

    தமிழகத்திலேயே முதன் முறையாக தர்மபுரி மாவட்டத்தில் பாப்பாரப்பட்டி அரசு பள்ளியில் மழலையர் வகுப்புகளை தமிழக உயர் கல்வித்துறை அமைச்சர் கே.பி.அன்பழகன் இன்று காலை குத்துவிளக்கு ஏற்றி தொடங்கி வைத்தார்.

    இவ்விழாவில் மாவட்ட ஆட்சியர் எஸ்.மலர்விழி, முதன்மை கல்வி அலுவலர் ராமசாமி உள்ளிட்ட அதிகாரிகள் கலந்து கொண்டனர். எல்.கே.ஜி. வகுப்புக்கு குழந்தைகள் சேர்க்கப்பட்டனர் இது தவிர மாவட்ட முழுவதும் 72 அங்கன்வாடி மையங்களில் எல்.கே.ஜி மற்றும் யு.கே.ஜி. வகுப்புகள் தொடங்கப்பட்டன.

    இது குறித்து தர்மபுரி மாவட்ட முதன்மை கல்வி அதிகாரி ராமசாமி கூறியதாவது:-

    தர்மபுரி மாவட்டத்தில் ஊராட்சி ஒன்றிய-நகராட்சி மற்றும் அரசு நடுநிலைப்பள்ளி வளாகத்திற்குள் இயங்கி வரும் 72 அங்கன்வாடி மையங்களில் எல்.கே.ஜி. மற்றும் யு.கே.ஜி. வகுப்புகள் தொடங்கப்பட்டுள்ளது.

    தர்மபுரி ஒன்றியத்தில் ராஜாதோப்பு, குண்டலப்பட்டி, புளியம்பட்டி, ஆட்டுக்காரம்பட்டி, ஆலிவாயன்கொட்டாய், சிக்கம்பட்டி ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி மற்றும் குமாரசாமிபேட்டை, 4வது வார்டு சாலை விநாயகர் கோவில் தெரு, சந்தைப்பேட்டை, நகராட்சி நடுநிலைப்பள்ளிகள் என 9 பள்ளிகளிலும் வகுப்புகள் தொடங்கப்பட்டன.

    நல்லம்பள்ளி ஒன்றியத்தில் தேங்காமரத்துப்பட்டி, கமலநத்தம், ஓமல்நத்தம், காளேகவுண்டனூர், ஏறுபள்ளி, நெக்குந்தி, இ.கே.புதூர், மேல்பூரிக்கல், பாப்பம்பட்டி மற்றும் சோளியானூர் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி என 10 பள்ளிகளிலும் வகுப்புகள் தொடங்கப்பட்டன.

    பென்னாகரம் ஒன்றியத்தில் மஞ்சாரஅள்ளி, நல்லாம்பட்டி, திகிலோடு, நாகமரை, பளிஞ்சரஅள்ளி, அஞ்சேஅள்ளி, ஏ.எட்டியாம்பட்டி, வேலம்பட்டி, கிட்டனஅள்ளி, சிட்லகாரம்பட்டி, வத்தல்பட்டி, கோடிஅள்ளி (ஜக்கம்பட்டி ), நாகனூர், மற்றும் வெள்ளமண்காடு ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளிகள் என 14 பள்ளிகளிலும் வகுப்புகள் தொடங்கப்பட்டன.

    கோப்புப்படம்

    பாலக்கோடு ஒன்றியத்தில் சிங்காடு, மேல்சந்திராபுரம், பாலக்கோடு உருது மற்றும் திருமல்வாடி ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளிகள் என 4 பள்ளிகளிலும், காரிமங்கலம் ஒன்றியத்தில் ஜம்பூத், அடிலம், கெரகோடஅள்ளி, பல்லேனஅள்ளி, சொன்னம்பட்டி, குண்டலஅள்ளி, கெங்குசெட்டிப்பட்டி, நாகணம்பட்டி, கொல்லப்பட்டி, கதிரம்பட்டி மற்றும் அ.முருகம்பட்டி ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளிகள் என 11 பள்ளிகளிலும் வகுப்புகள் தொடங்கப்பட்டன.

    மொரப்பூர் ஒன்றியத்தில் அஸ்தகிரியூர், புளியம்பட்டி, அம்பாலப்பட்டி, சின்னமுருக்கம்பட்டி, கெலவல்லி, கொங்கரப்பட்டி, தாளநத்தம், குண்டலப்பட்டி, சுங்கரஅள்ளி மற்றும் ராணிமூக்கனூர் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளிகள் என 10 பள்ளிகள், அரூர் ஒன்றியத்தில் எருமியாம்பட்டி, கொங்கவேம்பு, பாப்பநாயக்கன் வலசை, அ.ஈச்சம்பாடி, நாச்சினாம்பட்டி, கணபதிப்பட்டி, வள்ளிமதுரை, சூரநத்தம், ஆண்டியூர், கீழானூர், கொக்கராப்பட்டி, மற்றும் அச்சல்வாடி ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளிகள் என 12 பள்ளிகளில் வகுப்புகள் தொடங்கப்பட்டன.

    பாப்பிரெட்டிப்பட்டி ஒன்றியத்தில் பாப்பம்பாடி மற்றும் குண்டலமடுவு ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளிகள் 2 என தருமபுரி மாவட்டத்தில் மொத்தம் 72 பள்ளிகளில் இன்று முதல் சேர்க்கை தொடங்கப்பட்டு உள்ளது. பொதுமக்கள் தங்கள் குழந்தைகளை மேற்காணும் பள்ளிகளுடன் இணைந்த அங்கன்வாடி மையங்களில் எல்.கே.ஜி. மற்றும் யு.கே.ஜி. வகுப்புகளில் சேர்க்கை செய்து வாய்ப்பை பயன்படுத்திக் கொள்ளுமாறு கேட்டுக் கொள்கிறேன்.

    இவ்வாறு அவர் கூறினார். #LKG #TNMinister #KPAnbazhagan
    பாராளுமன்ற தேர்தலுடன், 20 சட்டசபை தொகுதிகளுக்கும் இடைத்தேர்தல் வரும் என்று அமைச்சர் கே.பி.அன்பழகன் தெரிவித்துள்ளார்.

    தர்மபுரி, ஜன.12-

    தர்மபுரி மாவட்டம் அரூரில் கட்சி நிர்வாகிகள் மத்தியில் அமைச்சர் கே.பி. அன்பழகன் பேசியதாவது:-

    கஜா புயல் நிவாரண பணிகள் முழுமையாக முடியாததால் திருவாரூர் இடைத்தேர்தல் ரத்து செய்யப்பட்டு உள்ளது. பாராளுமன்ற தேர்தலுக்கு முன்பு அரூர், பாப்பிரெட்டிப் பட்டி உள்ளிட்ட 20 தொகுதிகளுக்கும் இடைத்தேர்தல் வரும் என்று கருதி பூத் கமிட்டி அமைக்கப்பட்டது. 200 பேருக்கு ஆறு பேர் கொண்ட பொறுப்பாளர்கள் நியமனம் செய்யப்பட்டனர். நாமக்கல், ஈரோடு, மாவட்டங்களில் இருந்து பொறுப்பாளர்கள் தேர்தல் பணிக்கு வந்தனர்.

    பாராளுமன்ற தேர்தல் மார்ச் மாதத்தில் வர உள்ளதால், அதற்குள் இடைத்தேர்தல் நடத்த மாட்டார்கள். எனவே, பாராளுமன்ற தேர்தலுடன், 20 தொகுதிகளுக்கும் இடைத்தேர்தல் வரும்.

    அப்போது, வெளி மாவட்டத்தில் இருந்து, தேர்தல் பணிக்கு யாரும் வரமாட்டார்கள். எனவே, கட்சியினர் முழு முயற்சி எடுத்து பாடுபட வேண்டும். அப்போதுதான் கட்சி, ஆட்சி இரண்டையும் நிறுத்த முடியும்.

    அரூர், பாப்பிரெட்டிப் பட்டி தொகுதிகளில் வெற்றி பெறுவோம் என்று தலைமை நம்பிக்கை வைத்து உள்ளது.

    இவ்வாறு அவர் பேசினார்.

    புயல் பாதித்த பகுதிகளை சேர்ந்த தனியார் கல்லூரிகளில் படிக்கும் மாணவர்களின் கட்டணங்களை குறைப்பது குறித்து தனியார் கல்லூரி நிறுவனங்களுடன் பேசி நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்று அமைச்சர் அன்பழகன் தெரிவித்தார். #GajaCyclone
    ஓமலூர்:

    சேலம் விமான நிலையத்தில் உயர்கல்வித்துறை அமைச்சர் கே.பி.அன்பழகன் நிருபர்களிடம் கூறியதாவது:-

    கஜா புயல் நிவாரணப் பணிகள் வேகமாக நடைபெற்று வருகிறது. அங்கே பொதுமக்களின் குடிநீர் தேவைக்காக போர்வெல்கள் அமைத்து குடிநீர் விநியோகம் செய்யப்பட்டு வருகிறது. புயல் பாதிக்கப்பட்ட பகுதிகளில் மாணவர்களின் நலன் கருதி தேர்வுகள் ஒத்தி வைக்கப்பட்டுள்ளது. புயல் பாதித்துள்ள பகுதிகளை சேர்ந்த அரசு கல்லூரிகளில் படிக்கும் மாணவர்கள் ஏற்கனவே கட்டணம் செலுத்திவிட்டனர். தனியார் கல்லூரிகளில் படிக்கும் மாணவர்களின் கட்டணங்களை குறைப்பது குறித்து தனியார் கல்லூரி நிறுவனங்களுடன் பேசி நடவடிக்கைகள் எடுக்கப்படும்.

    துணை வேந்தர் பதவி காலியாகும் பல்கலைக்கழகங்களில் உடனடியாக துணை வேந்தர் நியமிக்க முன்கூட்டியே ஆய்வு கமிட்டி அமைக்கப்படும். அதன் மூலம் உடனடியாக துணை வேந்தர் பணியிடங்கள் நிரப்பப்படும். சேலம் பெரியார் பல்கலைக்கழகத்திற்கு பதிவாளர் மற்றும் தேர்வாணையர் பணியிடம் விரைவில் நிரப்பப்படும்.


    இதேபோன்று காலியாக உள்ள பதிவாளர், தேர்வாணையர் மற்றும் இதர பணியிடங்கள் விரைவில் நிரப்பப்படும். பெரியார் பல்கலைக்கழகத்தில் போலி சான்றுகள் கொடுத்து பேராசிரியர் பணியிடங்களில் உள்ளோர் மற்றும் இதர பலகலைக்கழகங்களில் போலி சான்றுகள் மூலம் பணியாற்றுவோர் குறித்து ஆய்வுகள் நடத்தப்பட்டு வருகிறது. போலி சான்றுகள் கொடுத்து ஆசிரியர் பணியில் உள்ளவர்களின் சான்றுகள் சரிபார்க்கப்பட்டு அவர்கள் மீது பணி நீக்கம் உள்ளிட்ட நடவடிக்கைகள் எடுக்கப்படும்.

    இவ்வாறு அவர் கூறினார். #GajaCyclone #KPAnbazhagan

    விலையில்லா பொருட்கள் குறித்து புதிதாக கட்சி ஆரம்பித்தவர்கள் குறை கூறி ஆதாயம் தேடுவதாக அமைச்சர் கே.பி.அன்பழகன் குற்றம்சாட்டினார். #ADMK #KPAnbazhagan
    தருமபுரி:

    தருமபுரியில் இருந்து புதிதாக 4 வழித்தடங்களுக்கு பஸ் இயக்கப்பட்டன. இதனை உயர் கல்வித்துறை அமைச்சர் கே.பி.அன்பழகன் இன்று தருமபுரி பஸ் நிலையத்தில் இருந்து தொடங்கி வைத்தார்.

    கஜா புயல் காரணமாக தமிழகத்தில் எந்தவித பாதிப்பும் ஏற்படாத வகையில் முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளது. ஏற்கனவே வந்த புயலின் போது தமிழக அரசு சார்பில் எடுக்கப்பட்ட முன்னெச்சரிக்கை நடவடிக்கையால் சிறப்பாக பணியாற்றினோம்.


    மாணவி கற்பழித்து கொன்ற சம்பவத்தில் ஒரு வாலிபரை போலீசார் கைது செய்துள்ளனர். அந்த வழக்கில் சம்பந்தப்பட்ட மற்றொரு வாலிபர் சேலம் கோர்ட்டில் சரண் அடைந்துள்ளார்.

    இந்த வழக்கில் பாரபட்சமின்றி அந்த 2 வாலிபர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும்.

    மக்களின் வாழ்க்கை தரம் உயரதான் விலையில்லா பொருட்களை இந்த அரசு வழங்கி வருகின்றது. அதற்காகதான் இலவச பொருட்கள் என்பதை விலையில்லா பொருட்கள் என்று மாற்றி ஜெயலலிலதா வழங்கினார். இதனை புதிதாக கட்சி ஆரம்பித்தவர்கள் குறை கூறி ஆதாயம் தேடிவருகின்றனர்.

    இவ்வாறு அவர் கூறினார். #ADMK #KPAnbazhagan
    சர்ச்சைக்குரிய காட்சிகளை நீக்காவிட்டால் சர்கார் பட குழு மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்று அமைச்சர்கள் தெரிவித்துள்ளனர். #Sarkar #Vijay #ADMK #TNMinisters
    சென்னை:

    சர்கார் படத்துக்கு எதிராக அமைச்சர்கள் தெரிவித்துள்ள கருத்துக்கள் வருமாறு:-

    அமைச்சர் சி.வி.சண்முகம்:-

    சர்கார் படத்தில் அம்மாவின் விலையில்லா பொருட்கள் வழங்கும் திட்டத்தை அவமதிக்கும் காட்சிகள் இடம் பெற்றுள்ளன. இந்த காட்சி அரசின் மக்கள் நலத் திட்டங்களை அவமதிக்கும் செயலாகும். எனவே சர்கார் திரைப்படத்தை திரையிட்டுள்ள தியேட்டர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும்.

    அம்மாவின் விலையில்லா திட்டங்களை எரிப்பது போன்ற காட்சி இடம் பெற்றிருப்பது அரசை அவமதிக்கும் செயலாகும். இதற்காக நடிகர் விஜய், படத்தயாரிப்பாளர், இயக்குனர், படத்தை வெளியிட்ட தியேட்டர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும்.

    இவ்வாறு அமைச்சர் சி.வி.சண்முகம் கூறினார்.

    அமைச்சர் கே.பி.அன்பழகன்:-


    சர்கார் திரைப்படம் எதிர்க்கட்சி நிறுவனம் தயாரித்தது. அவர்கள் அரசை குறை கூறி, விமர்சனம் செய்வது போல் தான் எடுப்பார்கள். சர்க்கார் படத்தில் இலவசங்கள் தேவையில்லை என கூறுவதை மக்கள் ஏற்றுக் கொள்ள மாட்டார்கள். இன்று மக்களுக்கு வழங்கப்படும் நலத்திட்டங்கள், வாழ்வாதாரத்தை உயர்த்தவே வழங்கப்படுகிறது.

    குறிப்பாக கல்வித்துறையில் வழங்கப்படும் அரசு திட்டங்கள் மாணவர்கள் இடைநிற்றலை தடுக்கவும், அவர்களை ஊக்கப்படுத்தவுமே வழங்கப்படுகிறது. இன்றைய மக்களின் மனநிலை ஆளும் அரசுக்கு ஆதரவாகவே இருக்கிறது. சர்க்கார் படத்தில் எப்படி காட்சிகள் வந்தாலும் அதை மக்கள் ஏற்றுக்கொள்ள மாட்டார்கள்.

    அமைச்சர் கடம்பூர் ராஜூ:-

    சர்க்கார் படத்தில் உள்ள சில காட்சிகள் தொடர்பாக அரசுக்கு தகவல்கள் வந்துள்ளது. அவற்றில் சம கால அரசியலை விமர்சிக்கும் வகையிலும், அரசியல் உள்நோக்கத்துடனும் காட்சிகள் அமைக்கப்பட்டுள்ளன. அரசியல் நோக்கத்திற்காக சில காட்சிகள் அமைக்கப்பட்டுள்ளன. இது விஜய்க்கு நல்லதல்ல.

    சர்கார் படத்தில் அரசின் விலையில்லா பொருட்களை எரிப்பது போன்ற காட்சியை அவர்களாகவே நீக்கினால் நல்லது. இல்லையெனில் நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். அடுத்த கட்டநடவடிக்கை குறித்துயோசிப்போம். சர்ச்சைக்குரிய காட்சிகள் குறித்து முல்வருடன் விவாதிக்கப்படும்.

    இவ்வாறு அமைச்சர் கடம்பூர் ராஜூ கூறினார். #Sarkar #Vijay #ADMK #TNMinisters
    மத்திய அரசின் உயர் கல்வி ஆணையம் தொடர்பான மு.க.ஸ்டாலின் கேள்விக்கு தமிழகத்தின் கல்வி உரிமையை விட்டு கொடுக்கமாட்டோம் என்று அமைச்சர் கே.பி.அன்பழகன் பதில் அளித்துள்ளார்.
    சென்னை:

    சட்டசபையில் இன்று எதிர்க்கட்சி தலைவர் மு.க.ஸ்டாலின் பேசியதாவது:-

    மத்திய அரசு பல்கலை கழக மானிய குழுவை மாற்றி விட்டு உயர் கல்வி ஆணையம் என்று தொடங்க இருப்பதாக செய்தி வெளியாகி உள்ளது.

    தற்போது உயர் கல்விக்கு பல்கலைக்கழக மானிய குழு மூலம் தான் நிதி ஒதுக்கப்படுகிறது. ஆனால் அந்த உரிமையை மத்திய அரசு பறித்து விட்டு உயர் கல்வி ஆணையம் என்ற புதிய அமைப்பை தொடங்க உள்ளது.

    இதன் மூலம் மாநில அரசின் உரிமைகள் பறிக்கப்படும். கல்வி நிதி ஒதுக்கீடு இல்லாமல் போய்விடும். இதன் மூலம் மத்திய பா.ஜனதா அரசு இதில் புகுந்து விளையாட பார்க்கிறது. தமிழ்நாட்டில் 13 பல்கலைக்கழகங்கள் உள்ளன. இதில் 12 ஆயிரம் பேர் பி.எச்.டி.யும், 600 பேர் எம்.எஸ்.சும் படிக்கின்றனர்.

    இவர்களுக்கிடையே உயர் கல்விக்கான சலுகைகள் பாதிக்கப்படும். எனவே மாநில அரசு, மத்திய அரசின் இந்த திட்டத்துக்கு தகுந்த வகையில் எதிர்ப்பு தெரிவித்து தமிழகத்தின் கல்வி உரிமையை விட்டு கொடுக்காமல் பாதுகாக்க வேண்டிய நடவடிக்கை எடுக்க வேண்டும். இதற்கு முதல்-அமைச்சரும் உரிய அழுத்தம் கொடுக்க வேண்டும் என்றார்.

    இதற்கு பதிலளித்து உயர்க்கல்வித்துறை அமைச்சர் கே.பி.அன்பழகன் பேசியதாவது:-

    மத்திய மனித வளத்துறை அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர் உயர் கல்வி ஆணையம் அமைப்பதற்கான சட்டமுன் வடிவை கொண்டு வந்துஇருக்கிறார். இதற்கு முன்பு மாநிலங்கள் சார்பில் தங்களின் கருத்துகளையும், பரிந்துரைகளையும் வருகிற 7-ந் தேதிக்குள் டெல்லிக்கு தெரிவிக்க வேண்டும் என்று கூறி இருக்கிறார்கள்.

    தமிழகத்தில் உள்ள 13 பல்கலைக்கழக வேந்தர்கள் மற்றும் உயர் அதிகாரிகள், கல்வியாளர்கள் ஆகியோரின் ஆலோசனைகளை பெற்று 7-ந் தேதிக்குள் தமிழகத்தில் இருந்து அறிக்கை தாக்கல் செய்யப்பட்டது. இதில் தமிழகத்தின் உரிமைகளை விட்டு கொடுக்க மாட்டோம். நமது தேவைகளை வலியுறுத்துவோம்.

    எந்த சூழ்நிலையிலும் நமது உரிமைகள் பறிபோகாத அளவில் தமிழக அரசு செயல்படும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    துரைமுருகன் (தி.மு.க.):-

    பல்கலைகழக மானிய குழுவை கலைத்து விட்டு உயர் கல்வி ஆணையம் அமைக்க வேண்டிய அவசியம் என்ன?

    அமைச்சர் அன்பழகன்:- மத்திய அரசு இந்த முடிவை எடுத்து இருக்கிறது. இதில் நமது உரிமை எந்த அளவிலும் பாதிக்கப்படாத அளவுக்கு உரிய முயற்சிகள் எடுக்கப்படும்.

    இவ்வாறு விவாதம் நடந்தது. #TNAssembly
    மாணவர்களின் தேவை இருப்பின் கூடுதலாக பி.காம். இடங்கள் அதிகரிக்கப்படும் என்று உயர் கல்வித்துறை அமைச்சர் கே.பி. அன்பழகன் தெரிவித்துள்ளார்.
    சென்னை:

    அரசு மற்றும் தனியார் சுயநிதி கலை அறிவியல் கல்லூரிகளில் சேருவதற்கு இந்த ஆண்டு மாணவர்களின் கூட்டம் அலைமோதுகிறது. பட்டப்படிப்புகளின் மீது அதிகரித்து வரும் மோகம் தான் இதற்கு காரணமாகும்.

    பொறியியல் படிப்புகளின் மீது இருந்து வந்த ஆர்வம் குறைந்து இப்போது கலை அறிவியல் பாடப் பிரிவுகள் மீது திரும்பி இருப்பதால் எல்லா கல்லூரிகளிலும் இடங்கள் நிரம்பி வருகின்றன.

    குறிப்பாக பி.காம்., பி.ஏ. ஆங்கிலம், அறிவியல் பாடப்பிரிவுகளுக்கு கடும் கிராக்கி ஏற்பட்டுள்ளதால் அதிக மதிப்பெண் பெற்ற மாணவர்களுக்கே இடம் கிடைக்கவில்லை.

    அரசு மட்டுமின்றி ஒரு சில தனியார் கலைக் கல்லூரிகளில் குறிப்பிட்ட பாடப்பிரிவுகளில் இடங்கள் நிரம்பி விட்டதால் மற்ற பாடப்பிரிவுகளுக்கு விண்ணப்பதாரர்களை மாற்றி வருகிறார்கள். ஆனாலும் இந்த ஆண்டு அதிக மதிப்பெண் பெற்ற மாணவர்களுக்கு பி.காம்.மில் இடம் கொடுக்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.

    பி.காம். இடங்கள் கடந்த ஆண்டு சில கல்லூரிகளுக்கு அதகரித்து கொடுக்கப்பட்டது. அதுபோல இந்த வருடமும் தேவையைக் கருதி கூடுதலாக இடங்கள் உருவாக்கப்படுமா என்ற கேள்வி எழுந்துள்ளது.

    இதுகுறித்து உயர் கல்வித்துறை அமைச்சர் கே.பி. அன்பழகன் கூறியதாவது:-

    அரசு கலைக்கல்லூரிகளில் 264 புதிய பாடப் பிரிவுகள் இந்த வருடம் அறிமுகம் செய்யப்பட்டுள்ளன. எந்தெந்த கல்லூரிகளில் என்னென்ன பாடப் பிரிவுகள் தொடங்கப்படும் என்பது குறித்து விரைவில் அரசாணை வெளியிடப்படும்.

    தற்போது விண்ணப்பிக்கப்பட்டுள்ள விண்ணப்பங்கள் அடிப்படையில் புதிய பாடப்பிரிவுகளுக்கு மாணவர்கள் சேர்த்து கொள்ளப்படுவார்கள்.

    புதிய பாடப்பிரிவுகள் அரசு கலை அறிவியல் கல்லூரிகளில் மட்டுமே அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. அதனை பூர்த்தி செய்த பிறகு தேவை இருப்பின் கூடுதலாக பி.காம். இடங்கள் அதிகரிக்கப்படும். அதேபோல தனியார் கல்லூரிகளிலும் தேவையை அறிந்து இடங்கள் அதிகரிக்க நடவடிக்கை எடுக்கப்படும்.

    இவ்வாறு அவர் கூறினார்.  #BCom #TNMinister #KPAnbazhagan
    ×