search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "education right"

    மத்திய அரசின் உயர் கல்வி ஆணையம் தொடர்பான மு.க.ஸ்டாலின் கேள்விக்கு தமிழகத்தின் கல்வி உரிமையை விட்டு கொடுக்கமாட்டோம் என்று அமைச்சர் கே.பி.அன்பழகன் பதில் அளித்துள்ளார்.
    சென்னை:

    சட்டசபையில் இன்று எதிர்க்கட்சி தலைவர் மு.க.ஸ்டாலின் பேசியதாவது:-

    மத்திய அரசு பல்கலை கழக மானிய குழுவை மாற்றி விட்டு உயர் கல்வி ஆணையம் என்று தொடங்க இருப்பதாக செய்தி வெளியாகி உள்ளது.

    தற்போது உயர் கல்விக்கு பல்கலைக்கழக மானிய குழு மூலம் தான் நிதி ஒதுக்கப்படுகிறது. ஆனால் அந்த உரிமையை மத்திய அரசு பறித்து விட்டு உயர் கல்வி ஆணையம் என்ற புதிய அமைப்பை தொடங்க உள்ளது.

    இதன் மூலம் மாநில அரசின் உரிமைகள் பறிக்கப்படும். கல்வி நிதி ஒதுக்கீடு இல்லாமல் போய்விடும். இதன் மூலம் மத்திய பா.ஜனதா அரசு இதில் புகுந்து விளையாட பார்க்கிறது. தமிழ்நாட்டில் 13 பல்கலைக்கழகங்கள் உள்ளன. இதில் 12 ஆயிரம் பேர் பி.எச்.டி.யும், 600 பேர் எம்.எஸ்.சும் படிக்கின்றனர்.

    இவர்களுக்கிடையே உயர் கல்விக்கான சலுகைகள் பாதிக்கப்படும். எனவே மாநில அரசு, மத்திய அரசின் இந்த திட்டத்துக்கு தகுந்த வகையில் எதிர்ப்பு தெரிவித்து தமிழகத்தின் கல்வி உரிமையை விட்டு கொடுக்காமல் பாதுகாக்க வேண்டிய நடவடிக்கை எடுக்க வேண்டும். இதற்கு முதல்-அமைச்சரும் உரிய அழுத்தம் கொடுக்க வேண்டும் என்றார்.

    இதற்கு பதிலளித்து உயர்க்கல்வித்துறை அமைச்சர் கே.பி.அன்பழகன் பேசியதாவது:-

    மத்திய மனித வளத்துறை அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர் உயர் கல்வி ஆணையம் அமைப்பதற்கான சட்டமுன் வடிவை கொண்டு வந்துஇருக்கிறார். இதற்கு முன்பு மாநிலங்கள் சார்பில் தங்களின் கருத்துகளையும், பரிந்துரைகளையும் வருகிற 7-ந் தேதிக்குள் டெல்லிக்கு தெரிவிக்க வேண்டும் என்று கூறி இருக்கிறார்கள்.

    தமிழகத்தில் உள்ள 13 பல்கலைக்கழக வேந்தர்கள் மற்றும் உயர் அதிகாரிகள், கல்வியாளர்கள் ஆகியோரின் ஆலோசனைகளை பெற்று 7-ந் தேதிக்குள் தமிழகத்தில் இருந்து அறிக்கை தாக்கல் செய்யப்பட்டது. இதில் தமிழகத்தின் உரிமைகளை விட்டு கொடுக்க மாட்டோம். நமது தேவைகளை வலியுறுத்துவோம்.

    எந்த சூழ்நிலையிலும் நமது உரிமைகள் பறிபோகாத அளவில் தமிழக அரசு செயல்படும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    துரைமுருகன் (தி.மு.க.):-

    பல்கலைகழக மானிய குழுவை கலைத்து விட்டு உயர் கல்வி ஆணையம் அமைக்க வேண்டிய அவசியம் என்ன?

    அமைச்சர் அன்பழகன்:- மத்திய அரசு இந்த முடிவை எடுத்து இருக்கிறது. இதில் நமது உரிமை எந்த அளவிலும் பாதிக்கப்படாத அளவுக்கு உரிய முயற்சிகள் எடுக்கப்படும்.

    இவ்வாறு விவாதம் நடந்தது. #TNAssembly
    ×