search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "20 assembly constituency by election"

    பாராளுமன்ற தேர்தலுடன், 20 சட்டசபை தொகுதிகளுக்கும் இடைத்தேர்தல் வரும் என்று அமைச்சர் கே.பி.அன்பழகன் தெரிவித்துள்ளார்.

    தர்மபுரி, ஜன.12-

    தர்மபுரி மாவட்டம் அரூரில் கட்சி நிர்வாகிகள் மத்தியில் அமைச்சர் கே.பி. அன்பழகன் பேசியதாவது:-

    கஜா புயல் நிவாரண பணிகள் முழுமையாக முடியாததால் திருவாரூர் இடைத்தேர்தல் ரத்து செய்யப்பட்டு உள்ளது. பாராளுமன்ற தேர்தலுக்கு முன்பு அரூர், பாப்பிரெட்டிப் பட்டி உள்ளிட்ட 20 தொகுதிகளுக்கும் இடைத்தேர்தல் வரும் என்று கருதி பூத் கமிட்டி அமைக்கப்பட்டது. 200 பேருக்கு ஆறு பேர் கொண்ட பொறுப்பாளர்கள் நியமனம் செய்யப்பட்டனர். நாமக்கல், ஈரோடு, மாவட்டங்களில் இருந்து பொறுப்பாளர்கள் தேர்தல் பணிக்கு வந்தனர்.

    பாராளுமன்ற தேர்தல் மார்ச் மாதத்தில் வர உள்ளதால், அதற்குள் இடைத்தேர்தல் நடத்த மாட்டார்கள். எனவே, பாராளுமன்ற தேர்தலுடன், 20 தொகுதிகளுக்கும் இடைத்தேர்தல் வரும்.

    அப்போது, வெளி மாவட்டத்தில் இருந்து, தேர்தல் பணிக்கு யாரும் வரமாட்டார்கள். எனவே, கட்சியினர் முழு முயற்சி எடுத்து பாடுபட வேண்டும். அப்போதுதான் கட்சி, ஆட்சி இரண்டையும் நிறுத்த முடியும்.

    அரூர், பாப்பிரெட்டிப் பட்டி தொகுதிகளில் வெற்றி பெறுவோம் என்று தலைமை நம்பிக்கை வைத்து உள்ளது.

    இவ்வாறு அவர் பேசினார்.

    20 தொகுதிகளுக்கான இடைத்தேர்தலில் 8 தொகுதிகளில் வென்றால் மட்டுமே ஆட்சியை தக்க வைக்க முடியும் என்று தேர்தல் பொறுப்பாளர்களிடம் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்தார். #ADMK #EdappadiPalaniswami #OPanneerSelvam
    சென்னை:

    தி.மு.க. தலைவர் கருணாநிதி, அ.தி.மு.க. எம்.எல்.ஏ. ஏ.கே.போஸ் ஆகியோர் மரணம் காரணமாக திருவாரூர், திருப்பரங்குன்றம் தொகுதிகள் காலி இடமாக அறிவிக்கப்பட்டன.

    இந்த நிலையில் டி.டி.வி. தினகரனை ஆதரித்த 18 எம்.எல்.ஏ.க்களை சபாநாயகர் தகுதி நீக்கம் செய்தது செல்லும் என்று சமீபத்தில் சென்னை ஐகோர்ட்டு தீர்ப்பளித்ததால், மேலும் 18 தொகுதிகள் காலி இடங்களாக மாறியுள்ளன.

    இதையடுத்து திருவாரூர், திருப்பரங்குன்றம், பூந்தமல்லி, பெரம்பூர், திருப்போரூர், சோளிங்கர், குடியாத்தம், ஆம்பூர், பாப்பிரெட்டிபட்டி, அரூர், நிலக்கோட்டை, மானாமதுரை, ஆண்டிப்பட்டி, பெரியகுளம், சாத்தூர், பரமக்குடி, விளாத்திக்குளம், ஓட்டப்பிடாரம், அரவக்குறிச்சி, தஞ்சை ஆகிய 20 தொகுதிகளுக்கு இடைத்தேர்தல் நடத்த வேண்டியதுள்ளது. ஒரு சட்டசபை தொகுதி காலியாக அறிவிக்கப்பட்டால், அரசியல் சாசன சட்டப்படி அடுத்த 6 மாதத்துக்குள் தேர்தல் நடத்தப்பட வேண்டும் என்பது விதியாகும்.

    அதன்படி திருவாரூர், திருப்பரங்குன்றம் தொகுதிகளில் பிப்ரவரி மாதம் முதல் வாரத்துக்குள் இடைத்தேர்தலை நடத்தி முடிக்க வேண்டும். 18 அ.தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள் தொகுதியும் காலியாகி இருப்பதால் அவற்றையும் சேர்த்து நடத்திவிட தேர்தல் ஆணைய அதிகாரிகள் முடிவு செய்துள்ளனர்.

    தற்போதைய சூழ்நிலையில் டிசம்பர் மாதமே 20 தொகுதிகளுக்கும் இடைத்தேர்தலை நடத்தி முடிப்பது குறித்து தலைமை தேர்தல் ஆணையம் ஆலோசித்து வருவதாக கூறப்படுகிறது. அந்த மாதம் நடத்த இயலாத பட்சத்தில் ஜனவரி மாதம் 20 தொகுதிகளின் இடைத்தேர்தல்களையும் நடத்தி முடிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. எனவே 20 தொகுதி இடைத்தேர்தல் அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

    20 தொகுதி இடைத்தேர்தல் ‘‘மினி பொது தேர்தல்’’ ஆக கருதப்படுகிறது. இந்த 20 தொகுதி தேர்தல் முடிவுகள் தமிழக அரசியலை புரட்டி போடும் என்று அரசியல் நிபுணர்கள் கணித்துள்ளனர்.

    ஆளும் அ.தி.மு.க.வை பொறுத்தவரை தற்போது அந்த கட்சிக்கு 109 எம்.எல்.ஏ.க்கள் ஆதரவே உள்ளது. 20 தொகுதிகளில் 8 அல்லது 10 தொகுதிகளில் வெற்றி பெற்றால் மட்டுமே அ.தி.மு.க. சட்டசபையில் மெஜாரிட்டியை பெற முடியும்.

    இந்த சூழ்நிலையை கருத்தில் கொண்டு அ.தி.மு.க. இந்த 20 தொகுதிகளிலும் வெற்றி பெற வேண்டிய இலக்குடன் தேர்தல் பணிகளை முன்னதாகவே தொடங்கி உள்ளது. கடந்த மாதம் 20 தொகுதிகளுக்கும் தேர்தல் பொறுப்பாளர்களை முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி, துணை முதல்-அமைச்சர் ஓ.பன்னீர் செல்வம் அறிவித்தனர்.

    20 தொகுதிகளுக்கும் அமைச்சர்கள், எம்.பி.க்கள், எம்.எல்.ஏ.க்கள், மூத்த நிர்வாகிகள் என 120 பேர் தேர்தல் பொறுப்பாளர்களாக களத்தில் இறக்கப்பட்டுள்ளனர். அவர்கள் உடனடியாக தங்களுக்கு ஒதுக்கப்பட்டுள்ள தொகுதிகளுக்கு சென்று களப்பணியாற்ற உத்தரவிடப்பட்டுள்ளது.

    20 தொகுதி தேர்தல் எப்போது நடத்தப்படும் என்ற கேள்விக்குறி நீடிக்கும் நிலையில் தேர்தல் பொறுப்பாளர்களின் பணியை முடுக்கி விடுவதற்காக ஆலோசனை நடத்த முடிவு செய்யப்பட்டது. அதன்படி இன்று சென்னை ராயப்பேட்டையில் உள்ள அ.தி.மு.க. தலைமை கழகத்தில் 20 தொகுதி இடைத்தேர்தல் குறித்த ஆலோசனை கூட்டம் நடந்தது.

    முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி, துணை முதல்-அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம், அவைத் தலைவர் மதுசூதனன், துணை ஒருங்கிணைப்பாளர்கள் கே.பி.முனுசாமி, வைத்திலிங்கம் மற்றும் மூத்த தலைவர்கள், தலைமை கழக நிர்வாகிகள் ஆலோசனை கூட்டத்தில் கலந்து கொண்டனர்.

    தேர்தல் பொறுப்பாளர்களாக அறிவிக்கப்பட்டுள்ள 120 பேரும் கூட்டத்தில் கலந்து கொண்டனர்.

    இந்த கூட்டத்தில் 20 தொகுதி இடைத்தேர்தலுக்கான வேட்பாளர்கள் தேர்வு பற்றி முதலில் ஆய்வு செய்யப்பட்டது. பிறகு பிரசார திட்டங்கள் பற்றி விவாதிக்கப்பட்டது. வீடு வீடாக சென்று ஆதரவு திரட்டுவது பற்றியும் அ.தி.மு.க. நிர்வாகிகள் பேசினார்கள்.



    20 தொகுதிகளிலும் வெற்றி பெறுவதற்கு எத்தகைய நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என்று தொகுதி பொறுப்பாளர்களிடம் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி, துணை முதல்-அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் கேட்டு அறிந்தனர். பிரசாரத்துக்காக தமிழகம் முழுவதும் இருந்து அ.தி.மு.க. தொண்டர்கள் மற்றும் பேச்சாளர்களை களம் இறக்குவது பற்றியும் விவாதிக்கப்பட்டது.

    20 தொகுதி தேர்தல் களத்தில் டி.டி.வி. தினகரனின் அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தை எதிர்கொள்வது பற்றியும், அவர்களது பிரசாரத்துக்கு எவ்வாறு பதிலடி கொடுப்பது என்பது பற்றியும் விரிவாக ஆலோசனை நடத்தப்பட்டது. டி.டி.வி.தினகரன் நிறுத்தும் வேட்பாளர்களுக்கு சவால் விடும் வகையில் அ.தி.மு.க. வேட்பாளர்கள் தேர்வு இருக்க வேண்டும் என்றும் கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்டது.

    அ.தி.மு.க. 20 தொகுதியிலும் ஜெயித்தால் 5 ஆண்டு காலம் எந்த பிரச்சனையும் இன்றி ஆட்சியை கொண்டு செல்லலாம். எனவே அதற்காக கடுமையாக உழைக்க வேண்டும். 20 தொகுதியிலும் நன்கு பரீட்சயமான உள்ளூர் நபர்களை வேட்பாளர்களாக அறிவிக்க வேண்டும் என்று யோசனை கூறப்பட்டது.

    ஆலோசனைக்கு பிறகு பொறுப்பாளர்களுக்கு அறிவுரை வழங்கி முதல்- அமைச்சர் எடப்பாடி பழனிசாமி பேசினார். அப்போது “20 தொகுதிகளிலும் அவசியம் வெற்றி பெற்றே ஆக வேண்டும் என்று வலியுறுத்தினார். 8 தொகுதிகளில் கட்டாய வெற்றி பெற்றால் மட்டுமே ஆட்சியை தக்க வைக்க முடியும்” என்று அவர் கூறினார்.

    அ.தி.மு.க. நிர்வாகிகள், தொண்டர்கள் அனைவரும் இந்த 20 தொகுதிகளுக்கும் எப்போது தேர்தல் வந்தாலும் சந்திக்க தயாராக இருக்க வேண்டும் என்று வலியுறுத்தினார்.

    கட்சி ஒருங்கிணைப்பாளரும், துணை முதல்-அமைச்சருமான ஓ.பன்னீர் செல்வம் பேசியதாவது:-

    20 தொகுதி இடைத்தேர்தல் எப்போது நடந்தாலும் அதில் அனைத்திலும் நாம் வெற்றி பெற்று ஆக வேண்டும். ஆர்.கே.நகரில் ஏற்பட்ட நிலையை நாம் மாற்றிக் காட்ட வேண்டும். கட்சி நமது பக்கம்தான் இருக்கிறது என்பதை உணர்த்தவும் ஆட்சியை 5 ஆண்டுக்கு கொண்டு செல்லவும் இடைத்தேர்தலில் அத்தனை தொகுதிகளிலும் ஜெயித்தே ஆக வேண்டும்.

    அதற்கு உங்களுக்கு என்னென்ன உதவி வேண்டுமோ அதை தலைமை கழகத்தில் கேளுங்கள். வெற்றி ஒன்றே நமது குறிக்கோளாக இருக்க வேண்டும்.

    இவ்வாறு அவர் பேசினார்.

    கூட்டத்தில் அமைச்சர்கள் ஜெயக்குமார், தங்கமணி, வேலுமணி, சி.வி. சண்முகம், கே.பி.அன்பழகன், உதயகுமார், செல்லூர் ராஜூ, பாஸ்கரன், துரைக்கண்ணு மற்றும் பொள்ளாச்சி ஜெயராமன், வளர்மதி, ஜே.சி.டி.பிரபாகர், விஜிலா சத்தியானந்த் எம்.பி., ஆதிராஜாராம், வாலாஜாபாத் கணேசன், சிட்லபாக்கம் ராஜேந்திரன், தளவாய்சுந்தரம், செம்மலை, ராஜன் செல்லப்பா, மாதவரம் மூர்த்தி, சிறுணியம் பலராமன் உள்பட பலர் பங்கேற்றனர்.

    கூட்டத்தில் எடுக்கப்படும் முடிவுகளை அறிந்து கொள்ள மாவட்டச் செயலாளர்கள் விருகை ரவி, ராஜேஷ், தி.நகர் சத்யா, விஜயகுமார் எம்.பி., இ.சி.சேகர், மின்சாரம் சத்திய நாராயணமூர்த்தி உள்பட ஏராளமான கட்சி நிர்வாகிகள் தலைமைக் கழகத்தில் திரண்டிருந்தனர். #ADMK #EdappadiPalaniswami #OPanneerSelvam #TTVDhinakaran
    அ.தி.மு.க. பேனர்களை அவர்களே கிழித்து விட்டு எங்கள் மீது பொய் வழக்கு போட வைத்துள்ளனர். 18 தொகுகளில் இடைத்தேர்தல் நடக்க வாய்ப்பு இல்லை என்று தங்க தமிழ்ச்செல்வன் தெரிவித்தார். #ThangaTamilselvan #ADMK
    மதுரை:

    அம்மா மக்கள் முன்னேற்றக்கழக கொள்கை பரப்புச் செயலாளர் தங்க தமிழ்ச்செல்வன் மதுரையில் உள்ள தென் மண்டல ஐ.ஜி. அலுவலகத்தில் இன்று மனு கொடுத்தார். பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-

    பசும்பொன்னில் கடந்த 30-ந்தேதி தேவர் ஜெயந்தி விழாவின் போது துணை பொதுச்செயலாளர் தினகரன் தலைமையில் மதியம் 1 மணிக்குச் சென்று மரியாதை செலுத்தினோம்.

    அப்போது 8 மாவட்ட மக்கள் துணைப் பொதுச்செயலாளருக்கு வரவேற்பு கொடுத்தனர். தேவர் நினைவிடத்தில் மரியாதை செலுத்திவிட்டு நாங்கள் அமைதியாக திரும்பினோம்.

    அந்த நேரத்தில் அ.தி.மு.க. கொடிகளை தலையில் மஞ்சள் துணி கட்டியிருந்த சிலர் சேதப்படுத்தினர். எங்கள் கட்சியினர் யாரும் பேனர்களை சேதப்படுத்தவில்லை. அப்படி கிழித்திருந்தால் அங்கு பாதுகாப்புக்கு நின்றிருந்த போலீசார் பிடித்திருக்க வேண்டியது தானே.

    அதை விட்டு விட்டு தற்போது போலீசாரின் துணையோடு எங்கள் மீது பொய் வழக்கு போட்டுள்ளனர். இதில் 53 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். இது எந்த வகையில் நியாயம்?

    தற்போது நடப்பது மைனாரிட்டி அ.தி.மு.க. ஆட்சி. நாங்களும் அ.தி.மு.க. தான். ஜெயலலிதாவின் தலைமையில் இரட்டை இலை சின்னத்தில் தான் வெற்றி பெற்றோம். ஆனால் தற்போது துரோக கும்பலிடம் இருந்து வெளிவந்து விட்டோம்.

    ராமநாதபுரம் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஒருதலைபட்சமாக செயல்பட்டு முன்ஜாமீன் பெற்றிருப்பவர்களை கூட கைது செய்ய உத்தரவிட்டுள்ளார். தீபாவளி நேரத்தில் திட்டமிட்டு எங்களுக்கு தேவையற்ற தண்டனையை கொடுத்துள்ளனர்.

    அவர் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி தென் மண்டல ஐ.ஜி. சண்முக ராஜேஸ்வரனிடம் மனு கொடுக்க வந்தோம். அவர் இல்லாததால் அலுவலகத்தில் புகார் மனு கொடுக்கப்பட்டது.

    நடவடிக்கை எடுக்கப்படாத பட்சத்தில் போலீஸ் சூப்பிரண்டுக்கு எதிராக மிகப்பெரிய சட்ட போராட்டம் நடத்துவோம்.


    தற்போதுள்ள மத்திய அரசும், தேர்தல் ஆணையமும் மைனாரிட்டி அ.தி.மு.க. அரசுக்கு ஆதரவாக உள்ளன. எனவே தற்போது 20 தொகுதிகளுக்கும் இடைத்தேர்தல் வராது.

    திருப்பரங்குன்றம், திருவாரூர் தொகுதிகளுக்கு வேண்டுமானால் ஒரு வேளை இடைத்தேர்தல் நடத்தப்படலாம். மற்ற 18 தொகுதிகளுக்கும் இடைத்தேர்தல் வராது.

    பாராளுமன்ற தேர்தலோடு சேர்த்து தான் 20 தொகுதிகளுக்கும் தேர்தல் நடக்கும். நாங்கள் மேல்முறையீடு செய்தால் அது நிலுவையில் இருக்கும் என்பதால் தேர்தலை சந்திக்க உள்ளோம்.

    மைனாரிட்டி அ.தி.மு.க. ஆட்சி மீது மக்கள் கோபத்தில் உள்ளனர். தேர்தலின் போது அதனை வெளிப்படுத்துவார்கள்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    பேட்டியின் போது மாவட்டச் செயலாளர்கள் ராஜலிங்கம், ஜெயபால் உடனிருந்தனர். #AmmaMakkalMunnetraKazhagam #ThangaTamilselvan #ADMK
    தகுதி நீக்கம் செய்யப்பட்ட 18 எம்.எல்.ஏ.க்கள் தொகுதியோடு சேர்த்து 20 தொகுதிக்கும் நடைபெறும் இடைத்தேர்தலை சந்திக்க அதிமுக தயாராக உள்ளது என்று அமைச்சர் உடுமலை ராதாகிருஷ்ணன் தெரிவித்தார்.
    பொள்ளாச்சி:

    பொள்ளாச்சி அடுத்த மாக்கினாம்பட்டி, கொள்ளும்பாளையம், கோலார்பட்டி ஆகிய பகுதிகளில் ரெயில்வே பாலங்களின் கீழ் பகுதியில் மழைக்காலங்களில் மழைநீர் தேங்கிநிற்கிறது.

    இதனால், அந்த பகுதிகளை சேர்ந்த மக்கள் ரெயில்வே தரைப்பாலத்தை பயன்படுத்துவதில் சிரமம் இருந்துவந்தது. இதனால், தண்ணீர் தேங்காமல் இருக்க நடவடிக்கை எடுக்கவேண்டும் கோரிக்கை விடுத்துவந்தனர். இந்நிலையில், கால்நடை பராமரிப்பு துறை அமைச்சர் உடுமலை கே.ராதா கிருஷ்ணன், மகேந்திரன் எம்.பி. ஆகியோர் மழை நீர் தேங்கி உள்ள பாலங்களை பார்வையிட்டனர். அதற்கு பிறகு பாலங்களில் தேங்கி நிற்கும் தண்ணீரை அப்புறப்படுத்த அதிகாரிகளுக்கு உத்தரவிட்டனர். பின்னர் அமைச்சர் உடுமலை கே.ராதா கிருஷ்ணன் நிருபர்களிடம் கூறியதாவது,

    அ.தி.மு.க. அரசு மக்கள் நலன் காக்கும் அரசாக செயல்பட்டுவருகிறது. அனைத்து துறைகளிலும் நல்ல திட்டங்களை செயல்படுத்திவருகிறது.

    கால்நடை பராமரிப்புத் துறையை பொறுத்தவரை ஏழை எளிய மக்களுக்கு கறவை மாடு, ஆடு, நாட்டுக்கோழி வளர்ப்பு உள்ளிட்ட திட்டங்களில் ஆண்டுக்கு இரண்டரை லட்சம் ஏழைக் குடும்பங்கள் பயனடைந்துவருகின்றனர். இது போன்று அனைத்து திட்டங்களுக்கும் மக்கள் அங்கீகாரம் வழங்கி வருகின்றனர்.

    எந்த நேரத்தில் தேர்தல் வந்தாலும் அதிமுக சந்திக்க தயாராக உள்ளது. தகுதி நீக்கம் செய்யப்பட்ட 18 எம்.எல்.ஏ.க்கள் தொகுதியோடு சேர்த்து 20 தொகுதிக்கும் நடைபெறும் இடைத்தேர்தலை சந்திக்க அதிமுக தயாராக உள்ளது என தெரிவித்தார். உடன் வட்டார வளர்ச்சி அலுவலர் சீனிவாசன், சந்திரகுமார் உட்பட பலர் இருந்தனர்.
    20 தொகுதிகளிலும் இடைத்தேர்தலை சந்திப்பது தொடர்பாக முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி, துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் ஆகியோரது தலைமையில் நாளை ஆலோசனை நடத்தப்படுகிறது. #ADMK #EdappadiPalaniswami #OPanneerSelvam
    சென்னை:

    எடப்பாடி பழனிசாமி அரசுக்கு எதிராக செயல்பட்ட தினகரன் ஆதரவு எம்.எல்.ஏ.க்கள் 18 பேர் தகுதி நீக்கம் செய்யப்பட்டதை தொடர்ந்து அந்த தொகுதிகளில் இடைத்தேர்தல் நடைபெற உள்ளது.

    அதனுடன் சேர்த்து, தி.மு.க. தலைவர் கருணாநிதி மறைவால் காலியான திருவாரூர், ஏ.கே.போஸ் மறைவால் காலியான திருப்பரங்குன்றம் தொகுதிகளுக்கும் தேர்தல் நடைபெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இடைத்தேர்தலை சந்திக்க ஆளும் கட்சியான அ.தி.மு.க. தயாராகி வருகிறது.

    இதனை தொடர்ந்து கடந்த சில நாட்களுக்கு முன்னதாகவே 20 தொகுதிகளுக்கும் தேர்தல் பொறுப்பாளர்கள் நியமிக்கப்பட்டனர். துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் மற்றும் அமைச்சர்கள் அதில் இடம்பெற்றுள்ளனர். 20 தொகுதிகளிலும் வெற்றி பெறும் முனைப்பில் அமைச்சர்களும், அ.தி.மு.க. நிர்வாகிகளும் முன்கூட்டியே களம் இறக்கப்பட்டுள்ளனர்.


    இந்த நிலையில் 20 தொகுதிகளிலும் இடைத்தேர்தலை சந்திப்பது தொடர்பாக அ.தி.மு.க. சார்பில் நாளை (3-ந்தேதி) ஆலோசனை கூட்டம் நடக்கிறது. முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி, துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் ஆகியோரது தலைமையில் நடைபெறும் இந்த கூட்டத்தில் இடைத்தேர்தலில் வெற்றி பெறுவது எப்படி? என்பது பற்றி விரிவாக விவாதிக்கப்படுகிறது.

    தமிழக அரசின் திட்டங்களை எடுத்துக்கூறி அ.தி.மு.க. நிர்வாகிகள் 20 தொகுதிகளிலும் வெற்றிக்காக கடுமையாக உழைக்க வேண்டும் என்று கூட்டத்தில் வலியுறுத்தப்பட உள்ளது.

    இதன்படி 20 தொகுதிகளிலும் அ.தி.மு.க.வின் வெற்றிக்காக அமைச்சர்கள் மற்றும் கட்சி நிர்வாகிகளை தீவிரமாக களம் இறக்க எடப்பாடி பழனிசாமியும், ஓ.பன்னீர்செல்வமும் முடிவு செய்துள்ளனர். #ADMK #EdappadiPalaniswami #OPanneerSelvam
    கடந்த தேர்தலில் பெரம்பூர் தொகுதியில் தி.மு.க. கூட்டணியில் போட்டியிட்டது போல் இந்த இடைத்தேர்தலிலும் கண்டிப்பாக போட்டியிடுவேன் என்று என்.ஆர். தனபால் தெரிவித்தார். #DMK #NRDhanapalan
    சென்னை:

    2016-ம் ஆண்டு நடைபெற்ற சட்டசபை தேர்தலின்போது பெரம்பூர் தொகுதியில் அ.தி.மு.க. சார்பில் போட்டியிட்ட வெற்றிவேல் 79,974 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றிருந்தார்.

    இவரை எதிர்த்து தி.மு.க. கூட்டணியில் போட்டியிட்ட பெருந்தலைவர் மக்கள் கட்சித் தலைவர் என்.ஆர்.தனபாலன் 79,455 வாக்குகள் பெற்றிருந்தார். அதாவது 519 வாக்கு வித்தியாசத்தில் என்.ஆர்.தனபாலன் தோல்வி அடைந்திருந்தார்.

    இந்த நிலையில் டி.டி.வி.தினகரன் ஆதரவாளரான வெற்றிவேல் உள்பட 18 எம்.எல்.ஏ.க்கள் கடந்த ஆண்டு முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமியை மாற்ற வேண்டும் என்று கவர்னரிடம் மனு கொடுத்ததால் 18 பேரின் எம்.எல்.ஏ. பதவியை சபாநாயகர் தகுதி நீக்கம் செய்து விட்டார்.

    இதை எதிர்த்து 18 எம்.எல்.ஏ.க்களும் ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்தனர். வழக்கை விசாரித்த நீதிபதிகள் சபாநாயகர் அறிவித்த தகுதி நீக்க உத்தரவு செல்லும் என்று கூறி விட்டனர். தற்போது 18 தொகுதிகளும் காலியான தொகுதியாக உள்ளது.

    இந்த தொகுதிகளுடன் திருப்பரங்குன்றம், திருவாரூர் தொகுதி என 20 தொகுதிகளுக்கு விரைவில் இடைத்தேர்தல் வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

    இந்த இடைத்தேர்தலில் தி.மு.க. கூட்டணியில் ஏற்கனவே போட்டியிட்டவர்களுக்கு மீண்டும் வாய்ப்பு வழங்கப்படும் என தெரிகிறது.

    அந்த வகையில் பெரம்பூர் தொகுதியில் கடந்த முறை போட்டியிட்டு 519 வாக்கு வித்தியாசத்தில் வெற்றி வாய்ப்பை இழந்த பெருந்தலைவர் மக்கள் கட்சித் தலைவர் என்.ஆர்.தனபாலன் மீண்டும் தி.மு.க. கூட்டணியில் போட்டியிடுவார் என தெரிகிறது.

    இதுபற்றி என்.ஆர்.தனபாலனிடம் ‘மாலைமலர்’ நிருபர் கேட்டபோது அவர் கூறியதாவது:-


    கடந்த தேர்தலில் பெரம்பூர் தொகுதியில் தி.மு.க. கூட்டணியில் போட்டியிட்டேன். இந்த இடைத்தேர்தலிலும் கண்டிப்பாக போட்டியிடுவேன்.

    தி.மு.க. தலைவர் மு.க. ஸ்டாலினை சந்தித்து ‘சீட்’ கேட்பேன். தேர்தல் ஆணையம் இடைத்தேர்தல் தேதியை அறிவித்த பிறகுதான் இது குறித்து பேச முடியும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    கடந்த சட்டசபை தேர்தலில் தி.மு.க. கூட்டணியில் மனிதநேய மக்கள் கட்சிக்கு ஆம்பூர் தொகுதி ஒதுக்கப்பட்டது. இதில் அ.தி.மு.க.விடம் தோற்றது. இதற்கிடையே அத்தொகுதி எம்.எல்.ஏ. தகுதி நீக்கம் செய்யப்பட்டதால் இடைத்தேர்தல் நடைபெற உள்ளது.

    ஆம்பூர் தொகுதியில் மனிதநேய மக்கள் கட்சி மீண்டும் போட்டியிடுமா? என்று அக்கட்சி தலைவர் ஜவாஹிருல்லாவிடம் கேட்ட போது அவர் கூறியதாவது:-

    இடைத்தேர்தலுக்கான தேதி இன்னும் அறிவிக்கப்படவில்லை. தேதி அறிவிக்கப்பட்டவுடன் ஆம்பூர் தொகுதியில் மீண்டும் போட்டியிடுவது குறித்து தி.மு.க.விடம் கேட்பது பற்றி தலைமை நிர்வாக குழு கூட்டத்தில் முடிவு செய்யப்படும் என்றார். #DMK #NRDhanapalan
    ×