search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    20 தொகுதி இடைத்தேர்தலை சந்திக்க அதிமுக தயாராக உள்ளது- அமைச்சர் உடுமலை ராதாகிருஷ்ணன்
    X

    20 தொகுதி இடைத்தேர்தலை சந்திக்க அதிமுக தயாராக உள்ளது- அமைச்சர் உடுமலை ராதாகிருஷ்ணன்

    தகுதி நீக்கம் செய்யப்பட்ட 18 எம்.எல்.ஏ.க்கள் தொகுதியோடு சேர்த்து 20 தொகுதிக்கும் நடைபெறும் இடைத்தேர்தலை சந்திக்க அதிமுக தயாராக உள்ளது என்று அமைச்சர் உடுமலை ராதாகிருஷ்ணன் தெரிவித்தார்.
    பொள்ளாச்சி:

    பொள்ளாச்சி அடுத்த மாக்கினாம்பட்டி, கொள்ளும்பாளையம், கோலார்பட்டி ஆகிய பகுதிகளில் ரெயில்வே பாலங்களின் கீழ் பகுதியில் மழைக்காலங்களில் மழைநீர் தேங்கிநிற்கிறது.

    இதனால், அந்த பகுதிகளை சேர்ந்த மக்கள் ரெயில்வே தரைப்பாலத்தை பயன்படுத்துவதில் சிரமம் இருந்துவந்தது. இதனால், தண்ணீர் தேங்காமல் இருக்க நடவடிக்கை எடுக்கவேண்டும் கோரிக்கை விடுத்துவந்தனர். இந்நிலையில், கால்நடை பராமரிப்பு துறை அமைச்சர் உடுமலை கே.ராதா கிருஷ்ணன், மகேந்திரன் எம்.பி. ஆகியோர் மழை நீர் தேங்கி உள்ள பாலங்களை பார்வையிட்டனர். அதற்கு பிறகு பாலங்களில் தேங்கி நிற்கும் தண்ணீரை அப்புறப்படுத்த அதிகாரிகளுக்கு உத்தரவிட்டனர். பின்னர் அமைச்சர் உடுமலை கே.ராதா கிருஷ்ணன் நிருபர்களிடம் கூறியதாவது,

    அ.தி.மு.க. அரசு மக்கள் நலன் காக்கும் அரசாக செயல்பட்டுவருகிறது. அனைத்து துறைகளிலும் நல்ல திட்டங்களை செயல்படுத்திவருகிறது.

    கால்நடை பராமரிப்புத் துறையை பொறுத்தவரை ஏழை எளிய மக்களுக்கு கறவை மாடு, ஆடு, நாட்டுக்கோழி வளர்ப்பு உள்ளிட்ட திட்டங்களில் ஆண்டுக்கு இரண்டரை லட்சம் ஏழைக் குடும்பங்கள் பயனடைந்துவருகின்றனர். இது போன்று அனைத்து திட்டங்களுக்கும் மக்கள் அங்கீகாரம் வழங்கி வருகின்றனர்.

    எந்த நேரத்தில் தேர்தல் வந்தாலும் அதிமுக சந்திக்க தயாராக உள்ளது. தகுதி நீக்கம் செய்யப்பட்ட 18 எம்.எல்.ஏ.க்கள் தொகுதியோடு சேர்த்து 20 தொகுதிக்கும் நடைபெறும் இடைத்தேர்தலை சந்திக்க அதிமுக தயாராக உள்ளது என தெரிவித்தார். உடன் வட்டார வளர்ச்சி அலுவலர் சீனிவாசன், சந்திரகுமார் உட்பட பலர் இருந்தனர்.
    Next Story
    ×