search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Perambur constituency"

    பெரம்பூர் பகுதியில் வாக்காளர்களுக்கு தபாலில் 500 ரூபாய் நோட்டு டன் கடிதம் வந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. #LokSabhaElections2019 #Peramburconstituency

    ராயபுரம்:

    தமிழகத்தில் பாராளுமன்ற தேர்தல் வாக்குப்பதிவு வருகிற 18-ந் தேதி நடக்கிறது. பாராளுமன்ற தேர்தலோடு பெரம்பூர் உள்பட 18 சட்டசபை இடைத்தேர்தலும், இதைத் தொடர்ந்து மே 19-ந் தேதி அரவக்குறிச்சி, திருப்பரங்குன்றம், சூலூர், ஓட்டப்பிடாரம் சட்டசபை தொகுதிகளுக்கான இடைத்தேர்தலும் நடைபெறுகிறது.

    வாக்குப்பதிவுக்கு இன்னும் 4 நாட்களே உள்ள நிலையில் அரசியல் கட்சியினர் தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டு வருகிறார்கள். வாக்காளர்களுக்கு அரசியல் கட்சியினர் பணம்-பரிசு பொருட்கள் கொடுப்பதை தடுக்க தேர்தல் பறக்கும் படையினர் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வருகிறார்கள்.

    ஓட்டுக்கு பணம் வாங்கும் சில வாக்காளர்களை குறி வைத்து புதுப்புது விதத்தில் அரசியல் கட்சியினர் பணம் கொடுத்து வருவது வாடிக்கையாக உள்ளது.

    இந்த நிலையில் பெரம்பூர் பகுதியில் வாக்காளர்களுக்கு தபாலில் 500 ரூபாய் நோட்டு டன் கடிதம் வந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    பெரம்பூர் பகுதியில் உள்ள பிரபல தனியார் ஆலை பல ஆண்டுகளுக்கு முன்பு மூடப்பட்டது. அந்த தொழிற் சாலையின் தொழிற்சங்கம் பெயரில் இந்த தபால் வந்து உள்ளது. அந்த தபாலில் கடிதத்துடன் புதிய 500 ரூபாய் நோட்டும் இருந்தது.

     


    கடிதத்தில், தேர்தலில் குறிப்பிட்ட வேட்பாளருக்கு வாக்கு அளிக்கும்படி எழுதப்பட்டு இருந்தது. இதேபோல் 500 ரூபாய் நோட்டுடன் கூடிய தபால் பெரம்பூர், கொடுங்கையூர், வியாசர்பாடி உள்ளிட்ட பகுதியில் சுமார் 2 ஆயிரத்துக்கும் மேற்பட்டோருக்கு வந்து இருப்பதாக தெரிகிறது.

    ரூபாய் நோட்டுடன் வந்த கடிதத்தை சிலர் அக்கம் பக்கத்தினரிடம் தெரிவித்ததால் இது வெளிச்சத்துக்கு வந்தது. அந்த தபால் பெரம்பூர் தபால் நிலையத்தில் இருந்து அனுப்பப்பட்டதாக தெரிகிறது.

    இதேபோல் ரூபாயுடன் மேலும் கடிதம் வருமா? என்றும் சிலர் ஏக்கத்துடன் காத்து உள்ளனர். இதற்கிடையே ஓட்டுக்காக வாக்காளர்களின் வீட்டுக்கே தபாலில் ரூ. 500 நோட்டு அனுப்பப்பட்டது பற்றி தேர்தல் அதிகாரிகளுக்கும் புகார் வந்தது. அவர்கள் அரசியல் கட்சியினரை தீவிரமாக கண்காணித்து வருகிறார்கள். மேலும் தபாலில் பணம் அனுப்பியவர்கள் யார்? என்பது பற்றி ரகசிய விசாரணையில் ஈடுபட்டு உள்ளனர்.

    பெரம்பூர் சட்டசபை இடைத்தேர்தலில் வேட்பாளர்களாக ஆர்.எஸ். ராஜேஷ் (அ.தி.மு.க.), ஆர்.டி.சேகர்(தி.மு.க.), வெற்றிவேல் (அ.ம.மு.க.) ஆகியோர் போட்டியிடுகிறார்கள். இதேபோல பெரம்பூர் தொகுதியை உள்ளடக்கிய வட சென்னை பாராளுமன்ற தொகுதியில் தி.மு.க. சார்பில் கலாநிதி வீராசாமியும், அழகாபுரம் மோகன்ராஜ் (தே.மு.தி.க.), சந்தான கிருஷ்ணன் (அ.ம.மு.க.) போட்டியிடுகிறார்கள். #LokSabhaElections2019 #Peramburconstituency

    பெரம்பூர் தொகுதி அ.ம.மு.க. வேட்பாளர் பி.வெற்றிவேல் தொகுதி முழுவதும் தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டு வருகிறார். #LokSabhaElections2019

    சென்னை:

    பெரம்பூர் தொகுதி அ.ம.மு.க. வேட்பாளர் பி.வெற்றிவேல் தொகுதி முழுவதும் தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டு வருகிறார்.

    அனைத்து சமூகத்தினர் பொதுநல அமைப்புகளை சந்தித்து ஆதரவு திரட்டினார். கொடுங்கையூர் குப்பைமேடு அப்பகுதியில் உள்ள மக்களுக்கு சுகாதார சீர்கேடு அச்சத்தை ஏற்படுத்தி வருகிறது. சுற்றுச்சூழல் மாசு படுவதன் மூலம் மக்களின் வாழ்க்கை தரம் குறைந்து வருவதால் நவீன தொழில் நுட்பத்தில் குப்பை மேட்டை நவீனப்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும் என்று வேட்பாளர் பி.வெற்றிவேல் பிரசாரத்தின்போது வாக்குறுதி அளித்தார்.

    பல மைல் துரத்துக்கு பாதிப்பை ஏற்படுத்தி வரும் குப்பைமேடு பிரச்சினைக்கு முற்றுப்புள்ளி வைக்க தகுந்த நடவடிக்கை எடுத்து மேம்படுத்த அனைத்து முயற்சிகலும் மேற்கொள்ளப்படும் என்றார். வீதிவீதியாக சென்று ஆதரவு திரட்டிய வெற்றிவேலுக்கு பெண்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர். #LokSabhaElections2019

    பெரம்பூர் தொகுதி அமமுக வேட்பாளர் பி.வெற்றிவேல் தான் வெற்றி பெற்ற தொகுதி மக்களுக்கு பல்வேறு வாக்குறுதிகளை அளித்து வருகிறார். #LokSabhaElections2019 #AMMK

    சென்னை:

    பெரம்பூர் தொகுதி அ.ம.மு.க. வேட்பாளர் பி.வெற்றிவேல் தான் வெற்றி பெற்ற தொகுதி மக்களுக்கு பல்வேறு வாக்குறுதிகளை அளித்து வருகிறார். வியாசர்பாடி கக்கன்ஜி நகர் பகுதியில் வீதி வீதியாக வழியாக நடந்து சென்று பரிசு பெட்டி சின்னத்திற்கு ஆதரவு திரட்டினார்.

    பெரம்பூர் தொகுதி மக்கள் பாதுகாப்பாக வசிக்க முக்கிய இடங்களில் சி.சி.டி.வி. கேமரா பொருத்த நடவடிக்கை எடுக்கப்படும். சமூக விரோத செயல்களில் இருந்து பாதுகாக்கவும், திருட்டு, வழிப்பறி, கொள்ளை போன்றவற்றில் இருந்து தப்பிக்கவும் மேரகாக்கள் பொருத்தப்படும். பட்டா இல்லாத வீடுகளுக்கு பட்டா பெற்று தரப்படும், பாதுகாப்பான குடிநீர், சாலை வசதி அமைத்து தருவதோடு, கழிவு நீரில் இருந்து கொசுக்கள் பெருகி நோய் தொற்று ஏற்படுவதை தடுக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று வேட்பாளர் பி.வெற்றிவேல் உறுதியளித்தார்.

    வேட்பாளருடன் நிர்வாகிகள் பழனி, லட்சுமி நாராயணன், மாரிமுத்து உள்ளிட்ட தொண்டர்கள், பெண்கள் அணிவகுத்து சென்றனர். #LokSabhaElections2019 #AMMK

    கடந்த தேர்தலில் பெரம்பூர் தொகுதியில் தி.மு.க. கூட்டணியில் போட்டியிட்டது போல் இந்த இடைத்தேர்தலிலும் கண்டிப்பாக போட்டியிடுவேன் என்று என்.ஆர். தனபால் தெரிவித்தார். #DMK #NRDhanapalan
    சென்னை:

    2016-ம் ஆண்டு நடைபெற்ற சட்டசபை தேர்தலின்போது பெரம்பூர் தொகுதியில் அ.தி.மு.க. சார்பில் போட்டியிட்ட வெற்றிவேல் 79,974 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றிருந்தார்.

    இவரை எதிர்த்து தி.மு.க. கூட்டணியில் போட்டியிட்ட பெருந்தலைவர் மக்கள் கட்சித் தலைவர் என்.ஆர்.தனபாலன் 79,455 வாக்குகள் பெற்றிருந்தார். அதாவது 519 வாக்கு வித்தியாசத்தில் என்.ஆர்.தனபாலன் தோல்வி அடைந்திருந்தார்.

    இந்த நிலையில் டி.டி.வி.தினகரன் ஆதரவாளரான வெற்றிவேல் உள்பட 18 எம்.எல்.ஏ.க்கள் கடந்த ஆண்டு முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமியை மாற்ற வேண்டும் என்று கவர்னரிடம் மனு கொடுத்ததால் 18 பேரின் எம்.எல்.ஏ. பதவியை சபாநாயகர் தகுதி நீக்கம் செய்து விட்டார்.

    இதை எதிர்த்து 18 எம்.எல்.ஏ.க்களும் ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்தனர். வழக்கை விசாரித்த நீதிபதிகள் சபாநாயகர் அறிவித்த தகுதி நீக்க உத்தரவு செல்லும் என்று கூறி விட்டனர். தற்போது 18 தொகுதிகளும் காலியான தொகுதியாக உள்ளது.

    இந்த தொகுதிகளுடன் திருப்பரங்குன்றம், திருவாரூர் தொகுதி என 20 தொகுதிகளுக்கு விரைவில் இடைத்தேர்தல் வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

    இந்த இடைத்தேர்தலில் தி.மு.க. கூட்டணியில் ஏற்கனவே போட்டியிட்டவர்களுக்கு மீண்டும் வாய்ப்பு வழங்கப்படும் என தெரிகிறது.

    அந்த வகையில் பெரம்பூர் தொகுதியில் கடந்த முறை போட்டியிட்டு 519 வாக்கு வித்தியாசத்தில் வெற்றி வாய்ப்பை இழந்த பெருந்தலைவர் மக்கள் கட்சித் தலைவர் என்.ஆர்.தனபாலன் மீண்டும் தி.மு.க. கூட்டணியில் போட்டியிடுவார் என தெரிகிறது.

    இதுபற்றி என்.ஆர்.தனபாலனிடம் ‘மாலைமலர்’ நிருபர் கேட்டபோது அவர் கூறியதாவது:-


    கடந்த தேர்தலில் பெரம்பூர் தொகுதியில் தி.மு.க. கூட்டணியில் போட்டியிட்டேன். இந்த இடைத்தேர்தலிலும் கண்டிப்பாக போட்டியிடுவேன்.

    தி.மு.க. தலைவர் மு.க. ஸ்டாலினை சந்தித்து ‘சீட்’ கேட்பேன். தேர்தல் ஆணையம் இடைத்தேர்தல் தேதியை அறிவித்த பிறகுதான் இது குறித்து பேச முடியும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    கடந்த சட்டசபை தேர்தலில் தி.மு.க. கூட்டணியில் மனிதநேய மக்கள் கட்சிக்கு ஆம்பூர் தொகுதி ஒதுக்கப்பட்டது. இதில் அ.தி.மு.க.விடம் தோற்றது. இதற்கிடையே அத்தொகுதி எம்.எல்.ஏ. தகுதி நீக்கம் செய்யப்பட்டதால் இடைத்தேர்தல் நடைபெற உள்ளது.

    ஆம்பூர் தொகுதியில் மனிதநேய மக்கள் கட்சி மீண்டும் போட்டியிடுமா? என்று அக்கட்சி தலைவர் ஜவாஹிருல்லாவிடம் கேட்ட போது அவர் கூறியதாவது:-

    இடைத்தேர்தலுக்கான தேதி இன்னும் அறிவிக்கப்படவில்லை. தேதி அறிவிக்கப்பட்டவுடன் ஆம்பூர் தொகுதியில் மீண்டும் போட்டியிடுவது குறித்து தி.மு.க.விடம் கேட்பது பற்றி தலைமை நிர்வாக குழு கூட்டத்தில் முடிவு செய்யப்படும் என்றார். #DMK #NRDhanapalan
    ×