search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Tamil Nadu Government"

    • ஆறுமுகசாமி ஆணையத்துக்கு உதவ 8 உறுப்பினர்களை கொண்ட மருத்துவ குழுவை எய்ம்ஸ் நியமித்தது.
    • ஆறுமுகசாமி ஆணையத்துக்கு தடைகோரி உச்சநீதிமன்றத்தில் வழக்கு .

    முன்னாள் முதல்-அமைச்சர் ஜெயலலிதா மரணம் குறித்து விசாரிக்க ஓய்வுபெற்ற உயர்நீதிமன்ற நீதிபதி ஆறுமுகசாமி தலைமையிலான ஆணையத்தை அமைத்து 2017-ம் ஆண்டு செப்டம்பர் மாதம் 25-ந்தேதி அப்போதைய முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி உத்தரவிட்டர்.

    முதல் கட்டமாக விசாரணை ஆணையத்தின் காலம் 3 மாதமாக நிர்ணயிக்கப்பட்டது. விசாரணையை தொடங்கிய ஆணையம், ஜெயலலிதாவின் உதவியாளர்கள் அவருடன் உடன் இருந்தவர்கள், உறவினர்கள், அமைச்சர்கள், போலீஸ் அதிகாரிகள், அப்பல்லோ நிர்வாகம், டாக்டர்கள் உள்ளிட்ட பலருக்கு சம்மன் அனுப்பி விசாரித்து வந்தது.

    குறிப்பிட்ட காலத்துக்குள் விசாரணை முடிவடையாததால் 2017 டிசம்பர் 24-ந் தேதியில் இருந்து 6 மாதங்களுக்கு ஆணையத்தின் கால அவகாசத்தை தமிழக அரசு முதன் முதலாக நீட்டித்தது. அதன்பிறகு அடுத்தடுத்து ஆணையத்தின் கால அவகாசம் நீட்டிக்கப்பட்டு கொண்டே வந்தது. விசாரணை ஆணையத்தின் கால அவகாசம் தொடர்ந்து நீட்டிக்கப்பட்டு வந்தது.

    இதனிடையே ஆறுமுகசாமி ஆணையத்துக்கு தடைகோரி உச்சநீதிமன்றத்தில் வழக்கும் தொடரப்பட்டது. அந்த வழக்கில் விசாரணை நடத்திய உச்சநீதிமன்றம் ஆறுமுகசாமி ஆணையம் விசாரணை நடத்த இடைக்கால தடையும் விதித்தது. அதன்பிறகு மருத்துவ குழுவை அமைத்து விசாரணையை நடத்த எய்ம்ஸ் இயக்குனரகத்துக்கு உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது.

    அதன்படி ஆறுமுகசாமி ஆணையத்துக்கு உதவ 8 உறுப்பினர்களை கொண்ட மருத்துவ குழுவை எய்ம்ஸ் நியமித்தது. இதன் பிறகு தான் மீண்டும் விசாரணை துரிதமாக நடைபெற்றது. ஆறுமுகசாமி விசாரணை ஆணையத்தில் எய்ம்ஸ் மருத்துவ குழு 3 பக்க அறிக்கையை அளித்தது. அதில் ஜெயலலிதாவுக்கு அளிக்கப்பட்ட சிகிச்சையில் எந்தவித தவறுகளும் இல்லை.

    உரிய மருத்துவ சிகிச்சை அளிக்கப்பட்டதாக தெரிவித்திருந்தது. ஒருவழியாக ஆறுமுகசாமி ஆணையத்தின் விசாரணை முடிவடைந்து விரிவான அறிக்கை தயாரிக்கும் பணி வேகமாக நடைபெற்று வந்தது. தற்போது இந்த பணியும் முடிவடைந்துள்ளது.

    இதையடுத்து ஜெயலலிதா மரணம் தொடர்பான ஆணையத்தின் இறுதி அறிக்கையை நீதிபதி ஆறுமுகசாமி முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினிடம் நாளை காலை 10.30 மணி அளவில் தாக்கல் செய்கிறார். இதில் உள்ள தகவல்கள் அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தக்கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது.

    இந்திய தேர்தல் ஆணைய வரைவு வாக்காளர் பட்டியல்படி நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் நடத்தப்படும் என்று மாநில தேர்தல் ஆணையம் அறிவித்திருந்தது.

    சென்னை:

    தமிழ்நாட்டில் 9 மாவட்டங்களை தவிர்த்து மற்ற மாவட்டங்களுக்கு 2019-ம் ஆண்டு ஊரக உள்ளாட்சி தேர்தல் நடந்தது.

    வார்டு மறுவரையறைக்குப் பிறகு புதிதாக உருவாக்கப்பட்ட காஞ்சிபுரம், செங்கல்பட்டு, வேலூர், திருப்பத்தூர், ராணிப்பேட்டை, விழுப்புரம், கள்ளக்குறிச்சி, நெல்லை ஆகிய 9 மாவட்டங்களுக்கு கடந்த மாதம் 6 மற்றும் 9-ந் தேதிகளில் ஊரக உள்ளாட்சி தேர்தல் நடந்தது.

    ஊரக உள்ளாட்சி தேர்தல் நடத்தி முடிக்கப்பட்டதைத் தொடர்ந்து அடுத்து நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலை நடத்த மாநில தேர்தல் ஆணையம் தீவிர நடவடிக்கை மேற் கொண்டு வருகிறது. இந்திய தேர்தல் ஆணைய வரைவு வாக்காளர் பட்டியல்படி நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் நடத்தப்படும் என்று மாநில தேர்தல் ஆணையம் அறிவித்திருந்தது.

    இந்த நிலையில் புதிதாக உருவாக்கப்பட்ட 9 மாவட்டங்களில் நகராட்சி, பேரூராட்சிகள் மறுவரையறை செய்யப்பட்டன.

    காஞ்சிபுரம், செங்கல்பட்டு உள்ளிட்ட 9 மாவட்டங்களில் நகராட்சி, பேரூராட்சி எல்லைகளை மறுவரையறை செய்து தமிழக அரசு வெளியிட்டுள்ளது.

    அடுத்து தரம் உயர்த்தப்பட்ட மாநகராட்சிகளுக்கான வார்டு மறுவரையறை பணிகளும் நிறைவடையும் தருவாயில் உள்ளது. விரைவில் அதற்கான அறிவிப்பும் வெளியாக உள்ளது.

    இந்த அறிவிப்பு வெளியான பிறகு நகர்புற உள்ளாட்சி தேர்தல் தேதியை மாநில தேர்தல் ஆணையம் வெளியிடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

    இதையும் படியுங்கள்... செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர் மாவட்டத்தில் நாளை பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிப்பு

    நல்லகண்ணு மற்றும் கக்கன் குடும்பத்தினருக்கும் விரைவில் மாற்று வீடு வழங்கப்படும் என்று தமிழக அரசு தகவல் தெரிவித்துள்ளது.

    சென்னை:

    இந்திய கம்யூனிஸ்டு மூத்த தலைவர் நல்லகண்ணு தி.நகரில் குடியிருந்த அரசு வீட்டை காலி செய்ய சொன்னதால் அவர் வேறு வீட்டுக்கு சென்று விட்டார்.

    இந்த விவகாரம் தற்போது பெரிய சர்ச்சையை ஏற்படுத்தி விட்டது. இதுகுறித்து அரசு அதிகாரியிடம் கேட்டபோது அவர் கூறியதாவது:-

    நகர அபிவிருந்தி கழகம் மூலம் 1953-ல் வாரியத்திற்கு சொந்தமான நிலத்தில் 119 வீடுகள் சி.ஐ.டி. காலனியில் கட்டப்பட்டு, பொதுமக்களுக்கு பொது ஒதுக்கீடு முறையில் வாடகை அடிப்படையில் ஒதுக்கீடு செய்யப்பட்டது.

    2004-05ல் இந்த வீடுகள் மிகவும் பழுதடைந்த நிலையில் இருந்ததால், வீடுகளை இடித்து விட்டு ஒருங்கிணைந்த திட்டம் செயல்படுத்த வாரியம் முடிவு எடுத்தது.

    இந்நிலையில் நல்ல கண்ணுக்கு 2007-ம் ஆண்டு வீடு ஒதுக்கீடு செய்யப்பட்டது. அவர் தமது சொந்த செலவில் கான்கீரிட் பழுதுகளை சரி செய்தும், கதவு, ஜன்னல் மற்றும் தர ஓடுகள் ஆகியவற்றை மாற்றம் செய்து குடியிருந்து வந்தார்.


    வீடுகள் மிகவும் பழு தடைந்த நிலையில் இருப்பதால், 2011-ல் வீட்டு வசதி துறை அமைச்சரால் தமிழ் நாடு சட்டசபையில், 119 குடியிருப்புகளை இடித்து விட்டு, புதிய வீடுகள் கட்டும் திட்டம் செயல்படுத்த அறிவிக்கப்பட்டது.

    இதைத் தொடர்ந்து குடியிருப்புதாரர் அனைவருக்கும் குடியிருப்பை காலி செய்ய நோட்டீஸ் அனுப்பப்பட்டது. இதை எதிர்த்து குடியிருப்புதாரர்கள் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்தனர்.

    இந்த வழக்கில் சென்னை ஐகோர்ட்டு அரசிடமிருந்து திட்ட ஒப்புதல் மற்றும் நிதி ஒதுக்கீடு பெறும்வரை வீடுகளை காலி செய்யக் கூடாது என 2011-ல் உத்தரவு பிறப்பித்தது.

    இதைத் தொடர்ந்து 5-3-2012 அன்று அரசாணை வெளியிடப்பட்டு மீண்டும் குடியிருப்பதாரர்களுக்கு வீடுகளை காலி செய்ய 2-வது முறையாக நோட்டீஸ் அனுப்பப்பட்டது.

    இதனை எதிர்த்து பல்வேறு மேல்முறையீட்டு மனுக்கள் ஐகோர்ட்டில் தாக்கல் செய்யப்பட்டது. இந்த மனுக்கள் விசாரணை செய்து 25.7.2014ல் ஐகோர்ட்டு 3 மாத காலக்கெடுவிற்குள் வீடுகளை காலி செய்யுமாறு உத்தரவிட்டு மனுக்களை தள்ளுபடி செய்தது. இதைத் தொடர்ந்து ஐகோர்ட்டில் சீராய்வு மனுதாக்கல் செய்யப்பட்டு அதுவும் 2015-ல் தள்ளுபடி செய்யப்பட்டது.

    இதனை எதிர்த்து சுப்ரீம் கோர்ட்டில் மேல்முறையீடு செய்து 27.4.2015ல் நிரந்தர உறுத்துகட்டளை ஆணை பெற்றனர்.

    மேற்கண்ட வழக்கு தொடர்ந்த நபர்கள் தவிர, மேலும் சிலர் சென்னை ஐகோர்ட்டில் புதிதாக 2016-ம் ஆண்டு வழக்குகள் தொடர்ந்தனர். அதனை 7.2.2017ல் தள்ளுபடி செய்து சென்னை ஐகோர்ட்டு உத்தரவு பிறப்பித்தது.

    இதன் மீது தொடர்ந்த மேல் முறையீடு மனுவும் 5.2.2018ல் தள்ளுபடி செய்யப்பட்டது. மேலும் இவர்கள் சுப்ரீம் கோர்ட்டில் தொடர்ந்த வழக்கினையும்,நிலுவையில் இருந்த வழக்குகளையும் ஒருங்கிணைத்து 5.2.2019ல் சுப்ரீம்கோர்ட்டு தள்ளுபடி செய்தது.

    இதைத் தொடர்ந்து குடியிருப்புதாரர்கள் வீடுகளை தாமாக முன்வந்து வாரியத்திடம் காலி செய்து ஒப்படைக்க தொடங்கினர். இதுவரை 96 குடியிருப்புதாரர்கள் வீடுகளை ஒப்படைத்துள்ளனர்.

    நல்லகண்ணு 15.5.2019 அன்று வீட்டை ஒப்படைத்தார். கக்கன் குடும்பத்தினர் இதுவரை வீட்டினை ஒப்படைக்கவில்லை.

    சமூகத்தில் முக்கிய பங்காற்றியவர்களுக்கு வாடகை அடிப்படையில் பொது ஒதுக்கீடு முறையில் வீடுகள் ஒதுக்கீடு வழங்குவது சம்பந்தமாக ஐகோர்ட்டின் வழிகாட்டுதலின்படி, புதிய கொள்கை இறுதி செய்யும் தருவாயில் உள்ளது.

    இக்கொள்கை இறுதி செய்யப்பட்ட உடன், நல்ல கண்ணு மற்றும் கக்கன் குடும்பத்தார் உள்பட இது போன்ற பொது வாழ்க்கையில் சமூகத்தில் முக்கிய பங்காற்றியவர்களுக்கு பொது ஒதுக்கீடு அடிப்படையில் வீடுகள் வழங்குவதற்கு வழிவகை செய்யப்படும்.

    நல்லகண்ணுவை துணை முதல்-அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் தொலை பேசியில் தொடர்பு கொண்டபோது, அவர் கக்கன் குடும்பத்தினருக்கும் மாற்று வீடு ஒதுக்கீடு வழங்க வேண்டும் என கோரிக்கை வைத்தார். துணை முதல்-அமைச்சரும், நல்லகண்ணு மற்றும் கக்கன் குடும்பத்தினருக்கும் விரைவில் மாற்று வீடு வழங்கப்படும் என்று தெரிவித்துள்ளார்.

    இவ்வாறு அந்த அதிகாரி கூறினார்.

    ஆட்டோவில் ஜிபிஎஸ் கருவியுடன் மீட்டரை பொருத்த கோரிய வழக்கில் தமிழக அரசு பதில் அளிக்க ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது. #HighCourt #TamilNadu

    சென்னை:

    ஆட்டோக்களில் ஜி.பி.எஸ்.கருவியுடன் இணைந்த கட்டண மீட்டர்களை பொருத்துவது தொடர்பாக தமிழக அரசு கடந்த 2013- ம் ஆண்டு அரசாணை பிறப்பித்தது.

    இந்த அரசாணையின் படி, கடந்த 2014-ம் ஆண்டு சென்னையிலும், பின்னர் தமிழகம் முழுவதும் இத்திட்டம் நடைமுறைப் படுத்தப்படும் என்றும் அறிவிக்கப்பட்டது. 6 ஆண்டுகளாக இந்த திட்டம் நடைமுறைப்படுத்தாமல் உள்ளது. எனவே, இந்த அரசாணையை தீவிரமாக அமல்படுத்த வேண்டும் என்று ராஹத் பாதுகாப்பு சமுதாய அறக்கட்டளை சார்பில் சென்னை ஐகோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டது.

    இந்த வழக்கு நீதிபதிகள் எஸ்.மணிக்குமார், சுப்பிரமணிய பிரசாத் ஆகியோர் முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது, இந்த திட்டம் முழுமையாக அமல்படுத்தப்படாததால் பயணிகள் பாதுகாப்பு சிக்கல் இருப்பதாகவும், அதிக கட்டணம் செலுத்த வேண்டிய நிலை தொடர்வதாகவும் மனுதாரர் தரப்பில் வாதிடப்பட்டது.

    இதை ஏற்ற நீதிபதிகள், இந்த மனுவுக்கு விரிவாக பதில் அளிக்க தமிழக அரசுக்கு உத்தரவிட்டனர். வழக்கு விசாரணையை ஜூன் மாதத்துக்கு தள்ளி வைத்தனர். #HighCourt #TamilNadu

    தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலைக்கு ஆதரவாக தமிழக அரசு செயல்படுகிறதா? என்று மதுரை ஐகோர்ட்டு நீதிபதிகள் கேள்வி எழுப்பியுள்ளனர். #Sterlite
    மதுரை:

    தூத்துக்குடியை சேர்ந்த மோகன், மதுரை ஐகோர்ட்டில் தாக்கல் செய்த மனுவில் கூறி இருந்ததாவது:-

    தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக போராடியவர்கள் மீது போலீசார் பொய் வழக்குகளை பதிந்து துன்புறுத்தி வருகின்றனர். இதனால் தூத்துக்குடி மக்களின் சுதந்திரம் பாதிக்கப்பட்டுள்ளது. தூத்துக்குடி வட்டாரத்தில் போராட்டத்துக்கு அனுமதி கேட்பவர்கள் தேவையின்றி அலைக்கழிக்கப்படுகிறார்கள். துப்பாக்கிச்சூடு தொடர்பாக அரசுக்கு எதிராக சாட்சி அளிப்பவர்கள் மீது பொய் வழக்கு பதிவு செய்கின்றனர். துப்பாக்கிச்சூடு தொடர்பாக அரசுக்கு எதிராக சி.பி.ஐ., அருணாஜெகதீசன் ஆணையத்திடம் சாட்சி கூறிய சந்தோஷ்ராஜ் என்பவர் மீது போலீசார் பல்வேறு பொய் வழக்குகளை பதிந்துள்ளனர்.

    எனவே ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக போராடியவர்கள் மீது பொய் வழக்கு பதிந்து, சட்டவிரோதமாக கைது செய்வதை தடுக்க உரிய உத்தரவு பிறப்பிக்க வேண்டும்.

    இவ்வாறு மனுவில் கூறியிருந்தார்.

    இந்த வழக்கை ஏற்கனவே விசாரித்த ஐகோர்ட்டு, தூத்துக்குடி போலீஸ் சூப்பிரண்டு நேரில் ஆஜராகி விளக்கம் அளிக்க உத்தரவிட்டது.

    இந்தநிலையில் அந்த வழக்கு நீதிபதிகள் கே.கே.சசிதரன், பி.டி.ஆதிகேசவலு ஆகியோர் முன்பு நேற்று மீண்டும் விசாரணைக்கு வந்தது.

    அப்போது, தூத்துக்குடி போலீஸ் சூப்பிரண்டு முரளிரம்பா ஆஜரானார்.

    இதையடுத்து அரசு தரப்பில் தாக்கல் செய்யப்பட்ட அறிக்கையை பார்த்த நீதிபதிகள் அதிருப்தி அடைந்து, “இந்த அறிக்கை ஸ்டெர்லைட் ஆலைக்கு ஆதரவாக அரசு செயல்படுவதை போல உள்ளது. ஆலைக்கு எதிராக போராட்டம் என்று பேசினாலே நள்ளிரவில் கைது செய்வதா? என்று நீதிபதிகள் கேள்வி எழுப்பினர்.

    பின்னர், ஸ்டெர்லைட் ஆலை திறப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்தவர்கள் மீது போடப்பட்ட எப்.ஐ.ஆர். நகல்களை வருகிற 14-ந்தேதி தாக்கல் செய்ய வேண்டும் என்று போலீஸ் சூப்பிரண்டுக்கு நீதிபதிகள் உத்தரவிட்டு, விசாரணையை ஒத்திவைத்தனர். #Sterlite
    அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களின் பங்களிப்பு ஓய்வூதிய திட்ட நிதி முறையாக பராமரிக்கப்படுகிறது என்று தமிழக அரசு விளக்கம் அளித்துள்ளது. #GovernmentStaff #Teacher #PensionScheme #TNGovernment
    சென்னை:

    அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களின் பங்களிப்பு ஓய்வூதிய திட்ட நிதி முறையாக பராமரிக்கப்படுகிறது என்று தமிழக அரசு விளக்கம் அளித்துள்ளது.

    இதுகுறித்து தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டு உள்ளதாவது:-

    பங்களிப்பு ஓய்வூதிய திட்ட நிதி பராமரிப்பு பற்றி தவறான தகவல்கள் பரப்பப்பட்டு வரும் நிலையில் அது பற்றிய உண்மை நிலையை விளக்க வேண்டியது அவசியமாகிறது.

    பங்களிப்பு ஓய்வூதியத் திட்டத்தை 2003-ல் நடைமுறைக்கு கொண்டுவந்த பின்பு, அத்திட்டப்படி அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களின் சம்பளத்தில் 10 சதவீதம் பிடித்தம் செய்யப்பட்டு, அதற்கு ஈடாக 10 சதவீதம் தொகையை அரசு வழங்கி வருகிறது. இத்திட்டப்படி இந்தத் தொகைகளை ஓய்வூதிய நிதி ஒழுங்குமுறை நிறுவனத்துக்கு மாற்றம் செய்ய முடிவெடுக்காத நிலையில் இந்த நிதி தனி பொதுக்கணக்கில் இருப்பு வைத்து பராமரிக்கப்படுகிறது.

    இந்த நிதி அவ்வப்போது மத்திய ரிசர்வ் வங்கி வெளியிடும் கருவூல பத்திரங்களில் முதலீடு செய்யப்படுகிறது. சேமநல வைப்பு நிதி வட்டி வீதத்தின்படி வட்டியைக் கணக்கிட்டு, அத்தொகைக்கும் கருவூல பத்திரங்களில் கிடைக்கும் வட்டிக்கும் உள்ள வித்தியாசத் தொகையை மாநில அரசே பொறுப்பேற்று அதை கருவூல பத்திர முதலீட்டில் கிடைக்கும் வட்டியுடன் இந்த பொதுக் கணக்கு நிதியில் சேர்க்கப்படுகிறது.

    அந்தவகையில் அரசு 2017-18-ம் ஆண்டு வரை ரூ.2,115.47 கோடி கூடுதல் வட்டியை வழங்கியுள்ளது. இந்த நிதியில் உரியவாறு ஆண்டுதோறும் பிடித்தம் செய்யப்படும். அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களின் பங்களிப்புத் தொகை, அதற்கு ஈடான அரசின் பங்களிப்புத் தொகை மற்றும் அதற்கான வட்டித் தொகை முறையாக சேர்க்கப்படுகிறதா? என மத்திய கணக்கு ஆய்வாளரால் சரிபார்க்கப்படுகிறது.

    கடந்த ஆண்டு மார்ச் 31-ந் தேதி வரை இந்த நிதியில் அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களின் பங்களிப்பு ரூ.8,283.97 கோடியுடன் அரசின் பங்களிப்பாகப் பெறப்பட்ட ரூ.8,283.97 கோடியும், பெறப்பட்ட வட்டியாக ரூ.5,252.90 கோடியும் பொதுக்கணக்கில் இருப்பு வைக்கப்பட்டு முறையாக பராமரிக்கப்படுகிறது.

    நடப்பு ஆண்டிலும் பெறப்படும் பங்களிப்புத் தொகை முறையாக வரவு வைக்கப்படுவதுடன் ஆண்டின் இறுதியில் அதற்கான வட்டியும் கணக்கிடப்பட்டு அதுவும் இந்த பொதுக் கணக்கு நிதியில் சேர்க்கப்படும். ஒவ்வொரு அரசு ஊழியர் மற்றும் ஆசிரியரின் கணக்கிலும் அவர்களின் பங்களிப்புத் தொகை எவ்வளவு?, அரசு அதற்கு ஈடாகச் செலுத்திய தொகை எவ்வளவு?, சேர்ந்துள்ள வட்டித் தொகை எவ்வளவு? என்பதை முறையாக அரசு தகவல் தொகுப்பு விவர மையம் மூலம் கணக்கிட்டு கணக்கு பராமரிக்கப்பட்டு வருகிறது. அதன் விவரத்தை சம்பந்தப்பட்ட அரசு அலுவலர்கள் மற்றும் ஆசிரியர்கள் http://cps.tn.gov.in/pub-l-ic இணையதளம் மூலம் தெரிந்துகொள்ளவும் வழிவகை செய்யப்பட்டுள்ளது.

    இந்த நிதி தனி பொதுக்கணக்கு வட்டியுடன் பராமரிக்கப்பட்டு வருகிறது. எனவே பிடித்தம் செய்யப்பட்ட நிதி முறையாக பராமரிக்கப்படுவதுடன் அதற்கான வட்டி, சேமநல நிதிக்கு தற்போது கிடைக்கும் வட்டி அளவான 8 சதவீதம் என்ற அடிப்படையில் கணக்கிடப்பட்டு சம்பந்தப்பட்ட அரசு ஊழியர் மற்றும் ஆசிரியர்களின் கணக்கில் வரவு வைக்கப்படுகிறது.

    இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது. 
    பொங்கல் பண்டிகையை முன்னிட்டு அரசு ஊழியர்களுக்கு 30 நாட்கள் ஊதியத்திற்கு இணையான தொகை, போனசாக வழங்கப்படும் என தமிழக அரசு அறிவித்துள்ளது. #TNGovernment #PongalBonus
    சென்னை:

    பொங்கல் பண்டிகையை முன்னிட்டு தமிழக அரசு ஊழியர்களுக்கு 30 நாட்கள் ஊதியத்திற்கு இணையான தொகை, போனசாக வழங்கப்படும் என தமிழக அரசு அறிவித்துள்ளது.

    இதன்படி, காலமுறை சம்பளம் பெறும் சி, டி பிரிவு அரசு பணியாளர்கள், உள்ளாட்சி மன்றம், அரசு மானியம் பெறும் கல்வி நிறுவன பணியாளர்களுக்கு போனஸ் வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டு உள்ளது.  தமிழக நிதி துறை செயலாளர் வெளியிட்டுள்ள அறிவிப்பில் இந்த தகவல் வெளியாகி உள்ளது. #TNGovernment #PongalBonus
    ஸ்டெர்லைட் ஆலை விவகாரம் தொடர்பான தமிழக அரசு மனுவை அவசர வழக்காக விசாரிக்க உச்சநீதிமன்றம் மறுப்பு தெரிவித்துள்ளது. #SupremeCourt #Sterlite
    புதுடெல்லி:

    தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையை மீண்டும் திறக்குமாறு தேசிய பசுமை தீர்ப்பாயம் வழங்கிய தீர்ப்பை எதிர்த்து தமிழக அரசு சுப்ரீம் கோர்ட்டில் மேல்முறையீடு செய்து உள்ளது.



    இந்த நிலையில் நேற்று தமிழக அரசு தரப்பில் அரசு வக்கீல் யோகேஷ் கன்னா சுப்ரீம் கோர்ட்டில் தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய் அமர்வில் ஆஜராகி, தங்கள் தரப்பு மனுவை அவசர வழக்காக கருதி உடனடியாக விசாரிக்க உத்தரவிட வேண்டும் என்று முறையிட்டார். இந்த கோரிக்கையை ஏற்க மறுத்த நீதிபதிகள், சுப்ரீம் கோர்ட்டு பதிவாளர் அலுவலகம் முறைப்படி பட்டியலிடும் போது இந்த மனு விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்படும் என்று தெரிவித்தனர். #SupremeCourt #Sterlite
    தமிழகத்தில் ரூ.30,500 கோடி தொழில் முதலீடு செய்வதற்கு அமைச்சரவை கூட்டத்தில் ஒப்புதல் வழங்கப்பட்டுள்ளது. #GIM2019 #TNCabinet #TNGovt
    சென்னை:

    தலைமைச் செயலகத்தில் இன்று தமிழக அமைச்சரவை கூட்டம் நடைபெற்றது. முதல்வர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் நடைபெற்ற இந்த அமைச்சரவை கூட்டத்தில் உலக முதலீட்டாளர் மாநாடு, வானூர்தி பூங்கா உள்ளிட்ட பல்வேறு அம்சங்கள் குறித்து ஆலோசனை நடத்தப்பட்டது.

    இந்த கூட்டத்தில் ரூ.30,500 கோடி தொழில் முதலீட்டுக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது. ரூ.30,500 கோடி முதலீட்டில் தொடங்கப்படும் 14 தொழில் நிறுவனங்களால் 18 ஆயிரம் பேருக்கு வேலைவாய்ப்பு கிடைக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.



    உலக முதலீட்டாளர்கள் பங்கேற்கும் இரண்டாவது மாநாடு சென்னையில் வரும் 23 மற்றும் 24  ஆகிய தேதிகளில் நடைபெற உள்ளது குறிப்பிடத்தக்கது. #GIM2019 #TNCabinet #TNGovt
    காவிரி பிரச்சனையில் தமிழக அரசும், கர்நாடகமும் பேச்சு வார்த்தை நடத்தி சுமூக தீர்வு காண வேண்டும் என்று திருப்பதியில் குமாரசாமி கூறினார். #Kumaraswamy #CauveryIssue

    திருமலை:

    திருப்பதியில் சாமி தரிசனம் செய்வதற்காக கர்நாடக முதல்வர் குமாரசாமி நேற்று இரவு திருமலைக்கு வந்தார். இன்று அதிகாலை வைகுண்ட ஏகாதசியையொட்டி நடந்த சொர்க்கவாசல் திறப்பு தரிசனத்தில் பங்கேற்று குமாரசாமி சாமி தரிசனம் செய்தார்.

    திருப்பதி தேவஸ்தானம் சார்பில் அவருக்கு தீர்த்தம், லட்டு பிரசாதம் வழங்கப்பட்டது. தரிசனம் முடிந்து வெளியே வந்த அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-

     


    கர்நாடக மக்களும் தமிழர்களும் எதிரிகள் அல்ல. அவர்கள் சகோதரத்துவத்துடன் உள்ளனர். இயற்கை ஒத்துழைக்காததால் மழை இல்லாத காரணத்தினால் மட்டுமே கர்நாடகாவில் இருந்து தமிழ்நாட்டிற்கு காவிரி நீர் அனுப்ப முடியாமல் உள்ளது.

    இதனால் பிரச்சனை தொடர்ந்து வருகிறது இதனை பல்வேறு கட்சிகள் அரசியல் ஆக்குவதால் பிரச்சனை தொடங்குகிறது. இரு மாநில அரசும் அமர்ந்து பேச்சுவார்த்தை நடத்தினால் காவிரி பிரச்சனையில் சுமூகமான தீர்வை காணலாம்.

    இவ்வாறு அவர் கூறினார். #Kumaraswamy #CauveryIssue

    தமிழக அரசை எதிர்ப்பதையே கமல்ஹாசன் கொள்கையாக வைத்துள்ளார் என்று இந்து மக்கள் கட்சியின் மாநில தலைவர் அர்ஜூன்சம்பத் விமர்சித்துள்ளார். #ArjunSampath #KamalHaasan
    ஈரோடு:

    இந்து மக்கள் கட்சி சார்பில் இன்று ஈரோடு பெரிய மாரியம்மன் கோவிலில் இருந்து 108 நாட்கள் ஆன்மீக பிரச்சாரத்தின் தொடக்க நிகழ்ச்சி நடந்தது.

    பிரச்சார வாகனத்தை இந்து மக்கள் கட்சியின் மாநில தலைவர் அர்ஜூன்சம்பத் தொடங்கி வைத்தார்.

    பின்னர் அர்ஜூன்சம்பத் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார்.

    அவர் கூறியதாவது:-

    தமிழகம் முழுவதும் இந்து மக்கள் சட்சி சார்பில் 108 நாட்கள் ஆன்மீக அரசியல் பிரச்சாரங்கள் நடந்து கொண்டிருக்கிறது.

    தமிழகத்தில் அ,தி.மு.க, தி.மு.க.வுக்கு மாற்றாக ஆன்மீக அரசியல் கொள்கையில் நம்பிக்கை இருக்கக்கூடிய அனைத்து தலைவர்களை ஒன்று திரட்ட வேண்டும். ஒரு மாற்று அரசியல் சக்தி, தேசிய அரசியல், ஆன்மீக அரசியல் தமிழகத்தில் காலுன்ற வேண்டும்.

    மத்தியில் மீண்டும் பிரதமராக நரேந்திர மோடி பதவியேற்க வேண்டும். இந்த இரண்டு கருத்துகளை மையமாக வைத்து தமிழகம் முழுவதும் 108 நாட்கள் இந்த பிரச்சாரம் நடைபெறும்.

    கஜா புயலால் தற்போது டெல்டா மாவட்டங்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன. இந்த பாதிப்புகளில் இருந்து மக்களை மீட்க மறுசீரமைப்பு பணிகளை மேற்கொள்ள வேண்டும்.

    கடந்த காலங்களில் நிஷாபுயல், தானே புயல் ஏற்பட்டபோது நரேந்திரமோடி நேரடியாக வந்து வெள்ள சேத பகுதிகளை பார்வையிட்டார். இடைகால நிவாரணமாக சில நூறு கோடி ரூபாய் ஒதுக்கினார். அதேபோல் இப்போதும் மோடி வந்து பார்வையிட வேண்டும்.

    கஜா புயலால் சேதமடைந்த வீடுகளை மத்திய அரசின் அனைவருக்கும் வீடுகட்டும் திட்டம் மூலம் மறுசீரமைப்பு செய்து கொடுக்க வேண்டும் இப்படி புயல் பாதித்த அனைத்து பகுதிகளில் மத்திய அரசு திட்டங்களை செயல்படுத்த வேண்டும். அதற்குரிய நடவடிக்கைகளை மாநில அரசு செய்ய வேண்டும். தமிழக அரசு முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுத்தது பாராட்டுக்குரியது.

    மக்கள் எளிதில் அணுகும் முதல்வராக எடப்பாடி பழனிசாமியும், துணை முதல்வராக ஓ.பன்னீர்செல்வமும் உள்ளனர்.



    கமல்ஹாசன் தமிழக அரசை எதிர்ப்பதையே தனது கொள்கையாக வைத்துள்ளார். அதன் மூலம் விளம்பரம் தேடி கொள்கிறார். தமிழகத்தில் எந்த நன்மையும் கிடைக்க கூடாது என்பதில் அவர் தெளிவாக இருக்கிறார். தி.மு.க. மற்றும் கம்யூனிஸ்டு கட்சிகளின் ஊதுகோலாக கமல்ஹாசன் உள்ளார்.

    சபரிமலை ஐயப்பன் கோவில் விவகாரத்தை பொறுத்தவரை சபரிமலை ஐயப்பன் கோவிலை அழித்துவிட்டு அதை சுற்றுலா தலமாக்க மாற்ற முயற்சி செய்து வருகிறார் கேரள முதல்வர். ஒரு மத்திய அமைச்சரையே கேரள போலீசார் தடுத்து உள்ளார்கள் என்றால் சாதாரண பக்தர் நிலை என்னவாகும்?

    உடனடியாக மத்திய அரசு சபரிமலை ஐயப்பன் கோவிலை தனது கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வர வேண்டும்.

    இவ்வாறு அவர் கூறினார். #ArjunSampath #KamalHaasan

    தீபாவளி நாளில் பட்டாசுகள் வெடிப்பது தொடர்பாக பல்வேறு அறிவுறுத்தல்களை வழங்கி உள்ள தமிழக அரசு, தொடர்ந்து வெடிக்கும் சரவெடிகளை வெடிக்க வேண்டாம் என கேட்டுக்கொண்டுள்ளது. #Diwali #CrackersBurstingTime #TNGovernment
    சென்னை:

    தமிழகத்தில் தீபாவளி தினத்தன்று 2 மணி நேரம் மட்டுமே பட்டாசு வெடிக்க வேண்டும் என உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது. இந்த 2 மணி நேரத்தை தமிழக அரசே முடிவு செய்யலாம் என்றும் கூறியிருந்தது. அதன்படி, இன்று பட்டாசு வெடிக்கும் நேரத்தை தமிழக அரசு அறிவித்தது. காலையில் 6 மணி முதல் 7 மணி வரையிலும் இரவு 7 மணி முதல் 8 மணி வரையிலும் பட்டாசு வெடிக்கலாம் என கூறியுள்ளது.



    மேலும், வெடி வெடிப்பதற்கான பல்வேறு அறிவுறுத்தல்களையும் தமிழக அரசு வழங்கி உள்ளது. அவை வருமாறு:-

    • அதிக ஒலி எழுப்பும், தொடர்ச்சியாக வெடிக்கக்கூடிய சரவெடிகளை தவிர்க்க வேண்டும்

    • குறைந்த ஒலி எழுப்பும், குறைந்த அளவில் மாசுபடுதல் தன்மை கொண்ட பட்டாசுகளை வெடிக்க வேண்டும்

    • மருத்துவமனைகள், வழிபாட்டுத் தலங்கள் மற்றும் அமைதி காக்கப்படும் இடங்களில் பட்டாசு வெடிப்பதை தவிர்க்க வேண்டும்

    • குடிசைப் பகுதி மற்றும் எளிதில் தீப்பற்றக்கூடிய இடங்களுக்கு அருகில் வெடி வெடிப்பதை தவிர்க்க வேண்டும்

    • உள்ளாட்சி அமைப்புகளிடம் முன் அனுமதி பெற்று திறந்தவெளியில் மக்கள் ஒன்றுகூடி கூட்டாக வெடி வெடிக்கலாம்

    • திறந்த வெளியில் கூட்டாக வெடி வெடிப்பற்கு அந்தந்த பகுதியில் உள்ள நல சங்கங்கள் மூலம் முயற்சிக்கலாம். #Diwali #CrackersBurstingTime #TNGovernment
    ×