search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "அறிவுரை"

    முகாம்களில் பெறப்பட்ட விண்ணப்பங்களை உரிய காலக்கெடுக்குள் நடவடிக்கை மேற்கொள்ள வும் அறிவுரை வழங்கினார்.

    கள்ளக்குறிச்சி:

    இந்திய தேர்தல் ஆணையம் மற்றும் சென்னை தலைமை தேர்தல் அலுவலரின் அறிவுரைகளி ன்படி கள்ளக்குறிச்சி மாவ ட்டத்தில் 27.10.2023 முதல் 9.12.2023 வரை சிறப்பு சுருக்க திருத்தம்-2024 பணியின்கீழ் 1.1.2024 தேதியை தகுதி நாளாகக் கொண்டு 18 வயது நிரம்பிய புதிய வாக்காளர்களை வாக்காளர்பட்டியலில் சேர்க்கும் பணி நடைபெற்று வருகிறது. இச்சிறப்பு சுருக்க திருத்தப்பணியின்கீழ் 4.11.2023 மற்றும் 5.11.2023 ஆகிய நாட்களில் நடைபெற்ற முகாம்களில் வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்த்தல், நீக்கம் மற்றும்திருத்தம் தொடர்பாக 23,011 விண்ணப்பங்கள் பெறப்பட்டு, நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.மேலும், 25.11.2023 மற்றும் 26.11.2023 ஆகிய தேதிகளில் அனைத்து வாக்குச்சாவடி மையங்களில் சிறப்பு முகாம் நடைபெற உள்ளது. இந்நிலையில்சிறப்பு சுருக்கத் திருத்தப் பணி முன்னேற்றம் குறித்து தமிழக தலைமை தேர்தல்அதிகாரியும் , அரசு முதன்மைச் செயலா ளருமான சத்யபிரதா சாகு, மாவட்ட தேர்தல் அலுவலரும், மாவட்ட கலெக்டருமான ஷ்ரவன் குமாருடன் கள்ளக்குறிச்சி நெடுஞ்சாலைத்துறை பயணியர் மாளிகையில் ஆய்வு மேற்கொண்டார்.

    அப்போது புதிய வாக்காளர்களை வாக்காளர் பட்டியலில் சேர்த்தல், நீக்கம், திருத்தம் தொடர்பாக பொதும க்களிடமும், கல்லூரி மாணவர்களிடமும் போதிய விழிப்புணர்வு ஏற்படுத்தவும், இம் முகாம்களில் பெறப்பட்ட விண்ணப்பங்களை உரிய காலக்கெடுக்குள் நடவடிக்கை மேற்கொள்ள வும் அறிவுரை வழங்கினார்.மேலும், ஒரே நபரின் புகைப்படம் மற்றும் ஒரே நபரின் பெயர் மற்றும் முகவரி ஒரே வாக்குச்சாவடி மையத்திற்குள்ளேயும், ஒரே சட்டமன்ற தொகுதி க்குட்பட்ட வாக்குச்சாவடி மையத்திற்குள்ளேயும், இதர சட்டமன்ற தொகுதி க்குட்பட்ட வாக்குச்சாவடி மையங்க ளுக்கான வா க்காளர் பட்டியலி ல்கண்டறியப்பட்ட பதிவுகளை சம்மந்தப்பட்ட வாக்காளருக்கு உரிய அறிவிப்பினை வழங்கி, தகுதியற்ற வாக்காளர்களை நீக்கம் செய்ய அறிவுறுத்தினார்.

    நாடாளுமன்ற பொதுத் தேர்தல் பணி முன்னே ற்பாடுகள் குறித்தும், மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்கள், கட்டுப்பாட்டு கருவிகள், வாக்குப்பதிவை சரிபாக்கும் கருவிகள் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளது குறித்தும், பதட்டமான வாக்கு ச்சாவடிகள் குறித்தும் கலெக்டரிடம் கேட்டறிந்தார்.மேலும் நாடாளுமன்றத் பொதுத் தேர்தலைஅமைதியான முறையில் நடத்திட போதிய முன்னேற்பாடு பணிகளை விரைந்து மேற்கொள்ள தமிழக தலைமை தேர்தல் அதிகாரி அறிவுறுத்தினார்.அப்போது, மாவட்ட வருவாய் அலுவலர் சத்திய நாராயணன்,கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு ஜவஹர்லால், கள்ளக்குறிச்சிவருவாய் கோ ட்டாட்சியர் (பொறுப்பு) கிருஷ்ணன், தரணி கூட்டுறவு சர்க்கரை ஆலை வடிப்பக அலுவலர் பாலமுருகன், தனி தாசி ல்தார் (தேர்தல்) பசுபதி ஆகியோர் உடனிருந்தனர்.

    அரும்பட்டு கிராமத்தில் நடைபெற்ற முகாமில் விழுப்புரம் மாவட்ட கூடுதல் கலெக்டர் ஸ்ருதன் ஜெய்நாராயணன் கலந்து கொண்டு பயனாளிகளிடம் குறைகளை கேட்டறிந்தார்.

    விழுப்புரம்:

    திருவெண்ணைநல்லூர் ஒன்றியத்தில் பிரதமரின் குடியிருப்பு திட்டத்தின் கீழ் 2016-22 வரை வழங்கப் பட்ட 2862 வீடுகளை கட்டி முடிக்காதவர்களுக்கு ஆலங் குப்பம் சமுதாயக் கூடத்திலும், ஏனாதிமங்க லம் ஊராட்சி சேவைமைய கட்டிடத்திலும், அரும் பட்டு சமத்துபுரம் சமுதாயக் கூடத்திலும், மணக்குப்பம் விஜய் திருமணமண்ட பத்தி லும் அண்டராய நல்லூர் அஞ்சுகம் திருமண மண்ட பத்திலும் முகாம் நடை பெற்றது.

    அரும்பட்டு கிராமத்தில் நடைபெற்ற முகாமில் விழுப்புரம் மாவட்ட கூடுதல் கலெக்டர் ஸ்ருதன் ஜெய்நாராயணன் கலந்து கொண்டு பயனாளிகளிடம் குறைகளை கேட்டறிந்தார். மேலும் சிமெண்ட் கம்பி பணம் முறையாக வழங்கப்படுகின்றதா எனவும் வீடு கட்டுவதற்கு சிரமங்கள் இருந்தால் தீர்ப்பதாகவும் வருகிற 31.12. 2023-க்குள் வீடுகளை கட்டி முடிக்க வேண்டும் எனவும் வீடுகளை கட்டி முடிப்பவர்கள் வீடுகளுக்கு தான் வருவதாகவும் கூறினார்.அவருடன் திருவெண்ணைநல்லூர் வட்டார வளர்ச்சி அலுவ லர்கள் (வட்டார ஊராட்சி) கேசவலு (வட்டார ஊராட்சி) விஜயபாலன்(கிராம ஊராட்சி), துணை வட்டார வளர்ச்சி அலுவலர் சுந்தர் ராஜன், ஒன்றிய பொறி யாளர் ரங்கபாஷியம் மற்றும் அதிகாரிகள் உடன் இருந்தனர்.

    முதல் மற்றும் இரண்டாம் கட்ட அளவில் கண்டறிந்தால் அதற்கு சிகிச்சை அளித்து முழுமையாக குணப்படுத்த முடியும். 3 மற்றும் 4-ம் கட்டத்தில் புற்றுநோய் கண்டறிந்தால் உரிய சிகிச்சை அளிக்கப்படும்.

    கடலூர்:

    கடலூரில் உலக மார்பக புற்றுநோய் குறித்து விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது.நிகழ்ச்சியில் தி.மு.க. மருத்துவரணி அமைப் பாளர் டாக்டர் பால. கலைக்கோவன் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு பேசியதாவது:-உலக நாடுகளில் தற்போது இந்தியாவில் அதிக அளவில் புற்று நோய் அதிகரித்து வருகின்றது. இதில் தமிழகத்திலும் நாளுக்கு நாள் புற்றுநோய் பாதிப்பு அதிகரித்து வரும் நிலையில் கடலூரில் தற்போது புற்றுநோயின் பாதிப்பு அதிக அளவில் கண்டறியப்பட்டு வருகிறது.கடந்த சில வருடங்களில் நான் மேற்கொண்ட பரிசோதனையில் கணிச மாக புற்றுநோய் பாதிப்பு அதிகரித்து காணப்பட்டு வருகின்றது. இதன் காரணமாக பொதுமக்கள் மற்றும் குறிப்பாக பெண்கள் இடையே புற்றுநோய் விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் இது போன்ற நிகழ்வுகள் நடைபெற்று வருகிறது. 4 வகையான புற்றுநோய் உள்ளன.இதில் முதல் மற்றும் இரண்டாம் கட்ட அளவில் கண்டறிந்தால் அதற்கு சிகிச்சை அளித்து முழுமையாக குணப்படுத்த முடியும். 3 மற்றும் 4-ம் கட்டத்தில் புற்றுநோய் கண்டறிந்தால் உரிய சிகிச்சை அளிக்கப்படும்.

    ஆகையால் பெண்கள் முதற்கட்டமாக மார்பக புற்றுநோய் உள்ளதா? என்பதை சுய பரிசோதனை செய்து கொள்ள வேண்டும். மேலும் உடலில் மாற்றங்கள் ஏற்பட்டாலோ அல்லது கட்டிகள் உருவாகி நீண்ட நாட்கள் இருந்தால் அதனை அலட்சியமாக விடுபடாமல் உடனடியாக கண்டறிந்து மருத்துவமனைக்கு சென்று பரிசோதனை செய்து கொள்ள வேண்டும். இது மட்டும் இன்றி புற்று நோய்கள் குறித்து சமூக வலைத்தளங்களில் பெண்கள் அதிகளவில் பதிவுகள் செய்து விழிப்பு ணர்வு ஏற்படுத்த வேண்டும். ஆகையால் பெண்கள் மற்றும் பொதுமக்கள் மிகுந்த கவனத்துடன் இருக்க வேண்டும்.இவ்வாறு அவர் பேசினார்.

    • செயற்கை நுண்ணறிவு துறையில் அதிக கவனம் செலுத்த வேண்டும் .
    • 250-க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் உள்ளிட்ட 450-க்கும் மேற்பட்ட வர்களும், 70-க்கும் மேற் பட்ட பேராசிரியர்களும் கலந்து கொண்டனர்.

    திருமங்கலம்

    திருமங்கலம் ஆலம்பட் டியில் அமைந்துள்ள அன்னை பாத்திமா கலை மற்றும் அறிவியல் கல்லூ ரியில் கணினி துறை சார் பில் 'அலெக்சா 2கே23' என்ற கம்ப்யூட்டர் கருத்தரங்கம் கல்லூரி சேர்மன் எம்.எஸ். ஷா மற்றும் பொருளா ளர் சகிலா ஷா ஆகியோர் வழிகாட்டுதல்படி நடை–பெற்றது.

    கம்ப்யூட்டர் சயின்ஸ் துறை தலைவர் கார்த்திகா வர வேற்றார். கருத்தரங்கை துவக்கி வைத்து உரையாற் றிய கல்லூரி முதல்வர் டாக்டர். அப்துல் காதிர், கம்ப்யூட்டரை தவிர்த்து மனிதன் வாழ இயலாத சூழல் உருவாகியுள்ளது. கம்ப்யூட்டர் துறையில் அடுத்த கட்ட முன்னேற்றமாக செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பம் வளர்ந்துள் ளது.

    இதன் மூலம் பல்வேறு வேலைகளை மிகவும் துல்லி யமாகவும், துரிதமாக வும் செயலாற்ற இயலும் என்ப தால் மாணவர்கள் செயற்கை நுண்ணறிவு தொழில் நுட்பத் துறையில் தங்களது திறமையை வளர்த்துக் கொள்ள வேண் டும் என்றார். பின்னர் கருத்தரங்கில் கலந்து கொள்ள வந்த அனைத்துக் கல்லூரி மாண வர்கள் தங்களது ஆராய்ச்சி கட்டுரைகளை வாசித்தும், தாங்கள் தயாரித்துக் கொண்டு வந்த போஸ்டர் மற்றும் கம்ப்யூட்டர் மாடல்க ளையும் காட்சிப்படுத்தினர். கருத்த ரங்கில் நடத்தப்பட்ட பேஸ் பெயிண்டிங், டெக்னோ குவிஸ், பேஷன் பேரேடு, ஆஸ் யூ லைக் இட் போன்ற போட்டிகளில் மாணவ, மாண வியர்கள் ஆர்வமுடன் பங்கேற்றனர். பின்னர் நடந்த அமர்வில் விஜய் டி.வி. புகழ் அருண் மற்றும் அரவிந்த் கலந்து கொண்டு மாணவர்களுக் கான விழிப்புணர்வு உரை யாற்றினர். இக்கருத்தரங்கில் மதுரையைச் சேர்ந்த பல் வேறு கல்லூரிகளில் இருந்து 250-க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் உள் ளிட்ட 450-க்கும் மேற்பட்ட வர்களும், 70-க்கும் மேற் பட்ட பேராசிரியர்களும் கலந்து கொண்டனர். நிகழ்ச்சி ஏற்பா டுகளை கணினி அறிவியல் துறை தலைவர் கார்த்திகா தலை மையில் பேராசிரியர்கள் ராமநாதன், சசிகலா, நந்தினி, கவிதா, மேகலா, ஆர்த்தி, சகாய ஆக்ஸிலின் பிரவீனா ஆகியோர் தலை மையில் மாணவர்கள் செய் தனர். கூட்ட அரங்கம் மற் றும் உணவு ஏற்பாடுகளை கல்லூரியின் மனித வள மானேஜர் முகமது பாசில் செய்தார். முடிவில் பேராசி ரியர் ராமநாதன் நன்றி கூறினார்.

    • வினோதன் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் முகாம் செயலா ளராக உள்ளார்.
    • மனைவி கோபித்துக் கொண்டு சென்றதால் தீக்குளிக்க போவதாக கூறியுள்ளார்.

    கடலூர்:

    கடலூர் மாவட்டம் பண்ருட்டி ஒன்றியம் அங்குசெட்டிபாளையம் கிராம த்தை சேர்ந்தவர் வினோதன் (வயது 27), ஆட்டோ டிரைவர். இவர் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் முகாம் செயலா ளராக உள்ளார். இவருக்கு திருமணமாகி மனைவி மற்றும் 3 குழந்தைகள் உள்ளனர்.இவர் நேற்று மதியம் 3 மணியளவில் பண்ருட்டி ராஜானி சாலையில் நோ பார்க்கிங்கில் ஆட்டோவை நிறுத்தி வைத்திருந்தார். அங்கு வந்த போக்குவரத்து போலீசார், ஆட்டோவை போலீஸ் நிலையம் எடுத்துவர கூறியுள்ளனர். ஸ்கூல் சவாரி உள்ளதால், மாணவர்களை வீட்டில் விட்டுவிட்டு போலீஸ் நிலையம் வருவதாக கூறி சென்றுள்ளார். பள்ளி மாணவர்களை அழைத்துக் கொண்டு அவரவர் வீட்டில் விட்டுவிட்டு, வீடு திரும்பியு ள்ளார். அப்போது அவர் குடித்துவிட்டு வந்ததை அறிந்த அவரது மனைவி அம்சவள்ளி அதனை கண்டித்துள்ளார். போலீசார் கண்டித்ததாலும், ஆட்டோவை போலீஸ் நிலையம் எடுத்துவர சொன்னதாலும் குடித்ததாக வினோதன் அம்சவள்ளி யிடம் கூறினார்.

    இதில் ஆத்திரமடைந்த அம்சவள்ளி, உன்னுடன் நான் வாழமாட்டேன் எனக் கூறி குழந்தைகளை அழைத்துக் கொண்டு அவரது தாய் வீட்டிற்கு சென்று விட்டார். இதையடுத்து இரவு 8 மணிக்கு தனது ஆட்டோவை எடுத்துக் கொண்டு பண்ருட்டி 4 முனை சந்திப்பிற்கு வந்த வினோதன், கையில் வைத்திருந்த பாட்டிலில் இருந்த டீசலை தன் மீது ஊற்றிக் கொண்டார். மேலும், மனைவி கோபித்துக் கொண்டு சென்றதால் தீக்குளிக்க போவதாக கூறியுள்ளார். அங்கு போக்குவரத்து சீரமைக்கும் பணியில் இருந்த போக்குவரத்து போலீசார், வினோதனை போலீஸ் நிலையத்துக்கு அழைத்துச் சென்றனர். அவருக்கு அறிவுரை கூறிய போலீசார், அவரது மனைவியை வரவழைத்து வீட்டிற்கு அனுப்பி வைத்தனர். இந்த சம்பவத்தால் பண்ருட்டி 4 முனை சந்திப்பில் திடீர் பரபரப்பு ஏற்பட்டது.

    • ராமநாதபுரத்தில் சேமிக்கும் குடிநீரை மூடி வைத்து பயன்படுத்த அறிவுரை வழங்கப்பட்டது.
    • சுகாதாரத்துறையினர் பொதுமக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகின்றனர்.

    ராமநாதபுரம்

    ராமநாதபுரத்தில் நிலவி வரும் குடிநீர் பற்றாக்குறை காரணமாக வீடுகளில் குடி நீரை கேன்கள், திறந்த நிலை டிரம்களில் பொது மக்கள் பிடித்து சேமித்து வருகின்ற னர். இதில் உருவாகும் கொசுக்களால் டெங்கு பாதிப்பு ஏற்படுகிறது. இந் தப் பகுதியில் சுகாதா ரத்து றையினர் பொதுமக்களி டையே விழிப்புணர்வு ஏற்ப டுத்தி வருகின்றனர்.

    திறந்த வெளியில் தண் ணீரை சேமிக்க கூடாது, சேமிக்கப்படும் தண்ணீர் டிரம்களை மூடி பாதுகாப் பாக வைக்க வேண்டும், டெங்கு கொசுக்கள் உற்பத்தி யாகாமல் தடுக்க வேண்டும் என்று வீடு, வீடாக விழிப்பு ணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது.

    இதுகுறித்து ராமநாதபுரம் சுகாதாரத்துறை துணை இயக்குனர் அர்ஜூன்குமார் கூறுகையில், மாவட்டத்தில் டெங்கு பாதிப்பில் 6 பேர் சிகிச்சையில் உள்ளனர். குடிநீர் பற்றாக்குறையால் வீடுகளில் சேமிக்கப்படும் குடிநீரால் டெங்கு பாதிப்பு அதிகளவில் உள்ளது. ஆர்.எஸ்.மங்கலம், தொண்டி ஆகிய பகுதிகளில் இது குறித்து விழிப்புணர்வு ஏற்ப டுத்தி வருகிறோம்.

    பரிசோதனைகளை உரிய முறையில் நடத்த வேண்டும். தனியார் மருத்துவமனை களில் கார்டுகளில் டெங்கு பரிசோதனை செய்யக் கூடாது. காய்ச்சல் குறித்து உடனடியாக கட்டுப்பாட்டு அறைகளுக்கு தகவல் தெரி விக்க வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது என்றார்.

    • விடாமுயற்சியுடன் கடினமாக உழைத்தால் நிச்சயம் வெற்றி பெறலாம்.
    • அத்திறமைகளை அனைவரும் வளர்த்து கொண்டு வாழ்வில் முன்னேற வேண்டும்.

    விருதுநகர்

    விருதுநகர் கலெக்டர் அலுவலகத்தில் 58-வது காபி வித் கலெக்டர் நிகழ்ச்சி நடந்தது. இதில் அரசு மற்றும் தன்னார்வு தொண்டு நிறுவ னங்களின் கீழ் செயல்படும் குழந்தைகள் இல்லங்களில் தங்கி பயிலும் 10 மற்றும் 12 -ம் வகுப்பு பயிலும் 37 பள்ளி மாணவ-மாணவி களை சந்தித்து கலெக்டர் ஜெயசீலன் உரையாடினார்.

    அப்போது அவர் கூறியதாவது:-

    பள்ளி கல்லூரி படிப்பு என்பது ஒருவரின் வாழ்க்கை யில் ஒருமுறை மட்டுமே கிடைக்கும் எனவே பள்ளி மற்றும் கல்லூரி படிப்பின் மூலம் வாழ்க்கைக்கான பல அனுபவங்களை கற்றுக் கொள்ளலாம். அனு வங்களில் இருந்து கிடைக் கும் கல்விதான் சிறந்த கல்வியாகும்.

    வாழ்க்கையில் சாதிக்க கூடுதல் முயற்சி செய்ய 12-ம் வகுப்பு பள்ளி படிப்பை முடித்தவுடன் கல்லூரி படிப்பில் சேருவதற்காக அனைத்து கல்லூரிகளிலும் தவறாமல் விண்ணப்பம் செய்ய வேண்டும். கடந்தாண்டு எந்த கல்லூரியில் எவ்வளவு கட் ஆப் மதிப்பெண் அடிப்படையில் மாணவர் சேர்க்கை நடைபெற்றது போன்ற தகவல்களை தெரிந்துகொள்ள வேண்டும்.

    படிப்பு மட்டுமே ஒருவரின் வாழ்க்கையை முன்னேற்றம் அடைய செய்யும். வாழ்க்கையில் முன்னேறுவதற்கான ஒரு மிகவும் எளிய வழி என்றால் அது படிப்பு மட்டுமே.

    உயர்கல்வி எங்கு பயின் றாலும், இந்தியாவில் சிறந்த கல்லூரியை தேர்ந்தெடுத்து படிக்க வேண்டும். வெற் றிக்கு தேவையான விஷ யங்களை தொடர்ந்து ஆர்வத்துடன், கவனசிதறல் இல்லாமல், தொடர்ந்து விடா முயற்சியுடனும், கடினமாக உழைத்தால் எளிதாக வெற்றி பெறலாம்.

    மேலும், ஒவ்வொரு வருக்கும் என்று தனித் திறமைகள் உள்ளன. அத்திறமைகளை அனைவரும் வளர்த்து கொண்டு வாழ்வில் முன்னேற வேண்டும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • கிராம பகுதி மாணவ-மாணவிகள் விருப்பமான பாடங்களை தேர்வு செய்து உயர்கல்வி வரை பயில வேண்டும்.
    • அரசு பணிக் கான போட்டிதேர்வுகளுக்கு அரசே பயிற்சி வழங்கி வருகிறது.

    ராமநாதபுரம்

    ராமநாதபுரம் மாவட்டம், கீழக்கரை அருகே உள்ள கொம்பூதி கிராமத்தில் அரசின் சார்பில் மேற் கொள்ளப்பட்டு வரும் பணிகளை கலெக்டர் விஷ்ணு சந்திரன், நேரடியாக ஆய்வு செய்து பொதுமக்களுடன் உரை யாடினார். அரசின் திட்டங்கள் கிடைக்கப் பெறுவது மற்றும் அடிப் படை வசதிகள் மேம்படுத்து வது குறித்து அவர் பொது மக்களிடம் கேட்டறிந்தார். அவர்களிடம் இருந்து கோரிக்கை மனுக்களையும் பெற்றுக் கொண்டார்.

    அப்போது கலெக்டர் கூறியதாவது:-

    பல்வேறு துறைகளின் மூலம் அரசு நலத்திட்ட உதவிகள் வழங்கப்படுகிறது. தகுதியுடைய பயனாளிகள் விண்ணப்பித்து அரசின் திட்டங்களை பெற்று பயன்பெற வேண்டும். பொதுவாக கிராமப் பகுதிகளில் பிள்ளைகள் 12-ம் வகுப்போடு நின்று விடுகிறார்கள். பெற் றோ ர்கள் பிள்ளை களை பட்ட மேற்படிப்பு வரை படிக்க வைக்க வேண்டும்.

    பிள்ளைகளும் தொடர்ந்து ஆர்வமுடன் தங்கள் விருப்பமுள்ள பாடங்களை தேர்வு செய்து உயர்கல்வி வரை படிக்க வேண்டும். அதற்கேற்ப தற்பொழுது அரசு தொழிற் பயிற்சியுடன் வேலை வாய்ப்புகளும் தனியார் துறைகளில் வழங்கப்பட்டு வருகின்றன. அரசு பணிக் கான போட்டிதேர்வுகளுக்கு அரசே பயிற்சி வழங்கி வருகிறது. இது போன்ற வாய்ப்புகளை பயன்படுத்திக் கொள்ள வேண்டும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • சட்டம் ஒழுங்கு பிரச்சினைகள் ஏற்படாமல் தடுப்பதற்கு உரிய நடவடிக்கைகள் மேற்கொள்ள வேண்டும்.
    • காவல்துறைக்கு முழு ஒத்துழைப்பு வழங்க கோரி அறிவுரைகள் வழங்கப்பட்டது.

    பாபநாசம்:

    தஞ்சாவூர் மாவட்டம் ஊரக உட்கோட்டத்தில் உள்ள அனைத்து காவல் நிலைய சரகங்களிலும் கொண்டாவிருக்கும் விநாயகர் சதுர்த்தி விழாவினை முன்னிட்டு ஆங்காங்கே அமைக்கப்படும் விநாயகர் சிலை தொடர்பாக விழா குழுவினர் கடைப்பிடிக்க வேண்டிய வழிமுறைகள் தொடர்பாக பாபநாசம் துர்கா மஹாலில் சிறப்பு கூட்டம் பாபநாசம் போலீஸ் துணை சூப்பிரண்டு பூரணி தலைமையில் நடைபெற்றது.

    கூட்டத்தின் போது விநாயகர் சிலை நிறுவுதல், ஊர்வலமாக கொண்டு செல்லுதல், பின்னர் நீர் நிலைகளில் கரைத்தல் போன்ற நிகழ்வுகள் தொடர்பாகவும் சட்டம் மற்றும் ஒழுங்கு பிரச்சினைகள் ஏற்படாமல் தடுப்பதற்கு உரிய நடவடிக்கைகள் மேற்கொள்வதுடன் காவல்துறைக்கு முழு ஒத்துழைப்பு வழங்கிட கோரியும் அறிவுரைகள் வழங்கப்பட்டது.

    கூட்டத்தில் பாபநாசம் போலீஸ் இன்ஸ்பெக்டர் கலைவாணி, கபிஸ்தலம் போலீஸ் இன்ஸ்பெக்டர் மகாலட்சுமி , சப் இன்ஸ்பெக்டர் குமார் மற்றும் சிலை அமைப்பாளர்கள், பொறுப்பாளர்கள் விழாக் குழுவினர்கள் கலந்து கொண்டனர்.

    • பாலுக்கான தொகை வாரம் ஒருமுறை அல்லது 10 நாட்களுக்கு ஒருமுறை தாமதமின்றி வழங்கப்படுகிறது.
    • அனைத்து விவசாயிகள், பால் உற்பத்தியாளர்களும், அரசின் திட்டங்களை பெற்று பயனடைய வேண்டும்.

    கிருஷ்ணகிரி, 

    கிருஷ்ணகிரி மாவட்டம் பாலிநாயனப்பள்ளி மகளிர் பால் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு சங்கம் கிளை மிட்டப்பள்ளியில், கிருஷ்ணகிரி மாவட்ட கூட்டுறவு பால் உற்பத்தியாளர்கள் ஒன்றியம், பால்வளத்துறை மற்றும் கால்நடை பராமரிப்புத்துறை சார்பாக முன்னாள் முதல்-அமைச்சர் கருணாநிதியின் 100-வது பிறந்த நாளை முன்னிட்டு கால்நடை மருத்துவ முகாம் மற்றும் பால் உற்பத்தி கருத்தரங்கு நேற்று நடந்தது.

    இதற்கு கலெக்டர் கே.எம்.சரயு தலைமை தாங்கினார். டி.மதியழகன் எம்.எல்.ஏ. முன்னிலை வகித்தார். நிகழ்ச்சியில் கால்நடைகளுக்கு தடுப்பூசி மற்றும் பூச்சி மருந்துகள் வழங்கும் பணியை தொடங்கி வைத்து கலெக்டர் பேசியதாவது:-

    உற்பத்தியாளர்கள் வழங்கும் பாலுக்கு பாலின் தரத்தின் அடிப்படையில் வெளிப்படை தன்மையுடன் அரசு நிர்ணயித்த விலை வழங்கப்படுகிறது. தனியார் நிறுவனம் போல் விலை கூட்டவோ, குறைப்பதோ இல்லை. பாலுக்கான தொகை வாரம் ஒருமுறை அல்லது 10 நாட்களுக்கு ஒருமுறை தாமதமின்றி வழங்கப்படுகிறது.

    கலப்பு தீவனம், தனியார் நிறுவனங்களை விட குறைந்த விலையில் கிலோ ரூ.21-க்கு விநியோகம் செய்யப்படுகிறது. மாவட்ட மண் பரிசோதனைப்படி சிறப்பு தாது உப்பு கலவை குறைந்த விலையில் கிலோ ஒன்றுக்கு ரூ.50 என வழங்கப்பட்டு கால்நடையின் உடல் ஆரோக்கியம் மற்றும் பால் உற்பத்தி அதிகரிக்க நடவடிக்கை மேற்கொள் ளப்படுகிறது.

    மேலும், பேரறிஞர் அண்ணா நலநிதி திட்டத்தின் மூலம் வருடம் முழுவதும் தொடர்ந்து பால் வழங்கும் உற்பத்தியாளர்களுக்கு காப்பீடு செய்யப்பட்டு, அதன் மூலம் விபத்தில் ஒரு உறுப்பு இழப்புக்கு ரூ.75,000-ம், விபத்தில் ஒன்றுக்கு மேற்பட்ட உறுப்பு இழப்புக்கு ரூ.1,75,000-ம், விபத்தில் உயிர்நீத்த உற்பத்தியாளர் குடும்பத்திற்கு ரூ.2,50,000-ம்,

    இறந்தவரின் இறுதிசடங்கிற்கு ரூ.5,000-ம், குழந்தையின் திருமண செலவுக்கு ஒரு நபருக்கு ரூ.30,000-ம் மற்றும் அவரின் 2 குழந்தைகள் கல்வி உதவித்தொகை ரூ.50 ஆயிரம் என காப்பீடு தொகை வழங்கப்படுகிறது. எனவே, அனைத்து விவசாயிகள், பால் உற்பத்தியாளர்களும், அரசின் திட்டங்களை பெற்று பயனடைய வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.

    இந்த நிகழ்ச்சியில் ஆவின் பொது மேலாளர் சுந்தரவடிவேலு, மாவட்ட ஊராட்சி குழு தலைவர் மணிமேகலை நாகராஜ், கால்நடை பராமரிப்புத்துறை மண்டல இணை இயக்குநர் ராஜேந்திரன், கால்நடை பராமரிப்புத்துறை உதவி இயக்குனர் அருள்ராஜ், பால்வள துணைப்பதிவாளர் கோபி, ஆவின் உதவி பொது மேலாளர் நாகராஜன், பாலிநாயனப்பள்ளி ஊராட்சி மன்றத் தலைவர் மகேந்திரன், பாலிநாயனப்பள்ளி, பால் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு சங்க தலைவர் சரஸ்வதி சீனிவாசன், முன்னாள் ஒன்றியக்குழுத் தலைவர் வி.ஜி.ராஜேந்திரன், பால் உற்பத்தியாளர்கள் மற்றும் கால்நடைத்துறை மருத்துவர்கள் மற்றும் துறை சார்ந்த அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

    • சேலத்தில் 4 மாவட்ட எஸ்.பி.க்களுடன் ஏ.டி.ஜி.பி அருண் திடீர் ஆலோசனை நடத்தினார்.
    • போலீசாரின் மன அழுத்தத்தை குறைக்க நடவடிக்கை எடுக்க அறிவுரை வழங்கினார்.

    சேலம்:

    கோவையில் போலீஸ் டி.ஐ.ஜி. விஜயகுமார் நேற்று துப்பாக்கியால் சுட்டு தற்கொலை செய்து கொண்டார். இந்த சம்பவம் போலீசார் மத்தியில் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

    அதைத்தொடர்ந்து இன்று காலை கோவை மாநகர மற்றும் சரகத்தில் உள்ள காவல் அதிகாரிகளுடன் தமிழக போலீஸ் ஏ.டி.ஜி.பி (சட்டம் ஒழுங்கு) அருண் ஆலோசனை நடத்தி வருகிறார்.

    அதன்படி, இன்று மதியம் சேலம் மாநகர போலீஸ் கமிஷனர் அலுவல கத்தில் போலீஸ் கமிஷனர் விஜயகுமாரி, சேலம் சரக டிஐஜி ராஜேஸ்வரி, சேலம் மாநகர போலீஸ் துணை கமிஷனர்கள் லாவண்யா, மற்றும் கவுதம் கோயல், மாவட்ட போலீஸ் சூப்பிரண்டுகள் சேலம் சிவகுமார், நாமக்கல் ராஜேஷ் கண்ணா, தர்மபுரி ஸ்டீபன் ஜேசுபாதம், கிருஷ்ணகிரி சரத்குமார் தாகூர் ஆகியோருடன் ஏ.டி.ஜி.பி அருண் ஆலோசனை நடத்தினார்.

    கோவையில் டி.ஐ.ஜி விஜயகுமார் மன அழுத்தத்தால் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் போல் இனி நடைபெறுவதை தடுக்கும் பொருட்டு உயர் அதிகாரிகளுக்கு மன அழுத்தத்தை குறைக்கவும், அவர்களுக்கு தேவையான உதவிகளை தயக்கமின்றி தெரிவித்தால் உடனடி நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்றும் அவர் ஆலோசனை வழங்கி வழங்கினார்.

    இதேபோல் உயர் அதிகாரிகளுக்கு கீழ் பணிபுரியும் அனைத்து தரப்பினரையும் அழைத்து அவர்களின் குறைகளை கேட்டு அறிந்து தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் அறிவுரை வழங்கினார்.

    • ஊராட்சி திட்டப்பணிகளை விரைந்து முடிக்க வேண்டும்.
    • ஆய்வுக்கூட்டத்தில் கலெக்டர் அறிவுறுத்தினார்.

    ராமநாதபுரம்

    ராமநாதபுரம் மாவட்டம் உச்சிப்புளியில் உள்ள மண்டபம் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் ஊராட்சி தலைவர்களுக்கான ஊரக வளர்ச்சி துறை பணிகள் குறித்தஆய்வுக்கூட்டம் நடந்தது. கலெக்டர் விஷ்ணு சந்திரன் தலைமை வகித்து பேசுகையில்,

    பொது மக்களிடம் வரி வசூல் செய்யும் போது ரொக்கமாக பெறாமல் ஆன்-லைன் முறையில் வசூல் செய்ய வேண்டும். தனிநபர் வீடு கட்டும் திட்டத்தில் பணிகள் தாமதம் இன்றி விரைவில் முடிக்க வேண்டும்.குளங்கள் சீரமைத்தல், வரத்து கால்வாய் சீரமைத்தல், அங்கன்வாடி கட்டிடம் மற்றும் மயானங்கள் கட்டும் பணிகளை அந்தந்த நிதி ஒதுக்கீடு காலத்திற்குள் முடிக்க வேண்டும், என்றார்.

    மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் அபிதா ஹனிப், ஊரக வளர்ச்சித்துறை செயற்பொறியாளர் சுந்தரேசன், மண்டபம் ஊராட்சி ஒன்றிய தலைவர் சுப்புலட்சுமி ஜீவானந்தம், ஊராட்சிகள் உதவி இயக்குநர் பரமசிவம், மண்டபம் பி.டி.ஓ., க்கள் முரளிதரன், நடராஜன், பங்கேற்றனர்.

    ×