search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Admonition"

    • நகராட்சி ஊழியர்கள் தமிழக அரசால் தடை செய்யப்பட்ட நெகிழி பயன்படுத்தப்படுகிறதா என ஆய்வு செய்யப்பட்டது,
    • மக்கக்கூடிய பொருள்களை பயன்படுத்த பொதுமக்கள், கடைஉரிமையாளருக்கு அறிவுரை வழங்கினார்.

    சீர்காழி:

    சீர்காழி நகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் நெகிழி பயன்பாடு அதிகமாக இருப்பதாக நகராட்சி நிர்வாகத்திற்கு வந்த புகாரின்பேரில் நகர்மன்ற தலைவர் துர்காபரமேஸ்வரி அறிவுறுத்தலின்படி, நகராட்சி ஆணையர் வாசுதேவன் தலைமையில் பிடாரி வடக்கு வீதி, தெற்கு வீதி மற்றும் கடைவீதி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் 100க்கும் மேற்பட்ட கடைகளில் நகராட்சி ஊழியர்கள் தமிழக அரசால் தடை செய்யப்பட்ட நெகிழி பயன்படுத்தப்படுகிறதா என ஆய்வு மேற்கொண்டனர்.

    அப்போது கடைகளில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த நெகிழியால் ஆன 50 கிலோ பொருட்களை நகராட்சி ஊழியர்கள் பறிமுதல் செய்தனர். பதுக்கி வைக்கப்பட்ட கடை உரிமையாளருக்கு அபராதம் விதிக்கப்பட்டது.

    மேலும் நெகிழி பொருட்களுக்கு மாற்றாக துணிப்பை மற்றும் விரைவில் மக்கக்கூடிய பொருள்களை பயன்படுத்த பொது மக்களுக்கும் கடை உரிமையாளருக்கும் அறிவுரை வழங்கினார்.

    ×