search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "importance"

    • எனக்கு விருது கிடைத்தது கூட்டு முயற்சியால் தான்.
    • விளிம்பு நிலை மக்களுக்கு வீடு கட்டி கொடுத்தது மன நிறைவை கொடுக்கிறது.

    தஞ்சாவூர்:

    தஞ்சாவூர் நாஞ்சிக்கோட்டை சாலை உழவர் சந்தை எதிரில் சிட்கோ வளாகத்தில் கவின்மிகு தஞ்சை - சமுதாய நாற்றங்கால் தோட்டம் என்ற திட்டத்தை இன்று கலெக்டர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் தொடங்கி வைத்தார்.

    பின்னர் அவர் பேசியதாவது:-

    ஆங்கில புத்தாண்டு தினத்தில் சமுதாய நாற்றங்கள் தோட்டம் என்ற திட்டம் தொடங்கி வைக்கப்பட்டுள்ளது. இன்றைய தினம் லயன் சங்கங்கள், ரோட்டரி சங்கங்கள், பல்வேறு அமைப்புகள் , தன்னார்வலர்கள் என அனைவரும் ஒரு இடத்தில் கூடியுள்ளோம்.

    சமுதாய நாற்றங்கால் தோட்டம் முக்கியத்துவம் வாய்ந்தது. கவின்மிகு தஞ்சை இயக்கத்தின் மரக்கன்றுகள் நடுதல், தற்போது சமுதாய மாற்றங்கள் தோட்டம் என அவர்களது பல்வேறு சமுதாய , பசுமையான பணிகள் பாராட்டுக்குரியது. விரைவில் கவின்மிகு தஞ்சை இயக்கத்திற்கு கிரீன் சாம்பியன் விருது கிடைக்க வாய்ப்பு உள்ளது. எனக்கு விருது கிடைத்தது கூட்டு முயற்சியால் தான்.

    தனி மரம் என்றைக்கும் தோப்பு ஆகாது. கடந்த சில நாட்களுக்கு முன்பு தனியார் தொலைக்காட்சி நிறுவனம் உங்களது சேவையை பாராட்டி விருது வழங்குகிறோம் என கூறினர். அதன்படி அவர்களும் எனக்கு விருது வழங்கினர். ஆனால் தனிப்பட்ட என்னால் மட்டும் இந்த விருது உள்பட பல்வேறு விருதுகளும் எனக்கு கிடைக்கவில்லை.

    அனைவரும் ஒன்று சேர்ந்து பணி செய்த கூட்டு முயற்சியால் மட்டுமே அது சாத்தியமானது. முதலமைச்சர் கையால் விருது வாங்க வேண்டும் என்று எனக்கு ஆசை. அந்த ஆசையும் நிறைவேறி விட்டது. முதலமைச்சர் கையால் விருது வாங்கிய பிறகு இன்னும் எனது பணியை திறம்பட செய்ய வேண்டும் என்று எனக்கு ஒரு உந்துதல் கிடைத்துள்ளது.

    தஞ்சை மாவட்டத்தில் விளிம்பு நிலை மக்களுக்கு வீடுகளை கட்டிக் கொடுக்க வேண்டும் என்று செந்தமிழ் நகர் திட்டம் உருவாக்கப்பட்டது. முற்றிலும் விளிம்பு நிலையில் உள்ள ஏழை மக்களுக்காக வீடுகள் கட்டிக் கொடுக்கும் திட்டம் தொடங்கப்பட்டது. ஆண்டுக்கு ஏழு வீடுகள் என கடந்த இரண்டு ஆண்டுகளில் 14 வீடுகள் இலக்கு நிர்ணயம் செய்யப்பட்டது.

    இதில் 11 வீடுகள் கட்டி முடிக்கப்பட்டுள்ளது. இன்னும் மூன்று வீடுகள் மட்டுமே பாக்கி உள்ளது. வீடுகள் கட்டிக் கொடுக்க லயன் சங்கங்கள், ரோட்டரி சங்கங்கள், அறக்கட்டளைகள் இன்னும் பல்வேறு தன்னார்வ அமைப்புகள் உறுதுணையாக இருந்து தேவையான நிதி வழங்கினர். அதனால்தான் விளிம்பு நிலை மக்களுக்கு வீடு கட்டிக் கொடுக்க முடிந்தது.

    அவர்களுக்கு பட்டா வழங்கி வீடு கட்டி கொடுப்பது என்பது கடினமான பணி. இருந்தாலும் அனைவரது கூட்டு முயற்சியால் அந்த பணியையும் திறம்பட செய்து முடித்துள்ளோம். விளிம்பு நிலை மக்களுக்கு வீடு கட்டிக் கொடுத்தது எனக்கு மன நிறைவை கொடுத்துள்ளது. அரசு பணியில் சேர்ந்து இந்த பணியை செய்தது மன நிறைவு. தொடர்ந்து அரசின் திட்டங்கள் அனைத்தும் கடை கோடி மக்களுக்கு சென்று சேரும் வகையில் நடவடிக்கை எடுக்கப்படும்.

    இவ்வாறு அவர் கூறினார். இந்த நிகழ்ச்சியில் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

    • வாகன ஓட்டிகள் 12 பேருக்கு ஹெல்மெட் வழங்கல்.
    • இருசக்கர வாகன ஓட்டிகளுக்கு போலீசார் அறிவுரை வழங்கினர்.

    மன்னார்குடி:

    திருவாரூர் மாவட்டம் மன்னார்குடி காவல் துறை சார்பில் இருசக்கர வாகன ஓட்டிகள் ஹெல்மெட் அணிவது குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சி கீழபாலம் பகுதியில் நடைபெற்றது.

    இதில் மன்னார்குடி துணை போலீஸ் சூப்பிரண்டு அஸ்வந்த் ஆண்டோ பங்கேற்று வாகன ஓட்டிகள் 12 பேருக்கு ஹெல்மெட்களை வழங்கினார்.

    மேலும் சாலை விதிகள், தலைகவசத்தின் முக்கியத்துவம் குறித்து இருசக்கர வாகன ஓட்டிகளுக்கு போலீசார் அறிவுரைகளை கூறி விழிப்புணர்வை ஏற்படுத்தினர்.

    இந்த நிகழ்ச்சியில் போக்குவரத்து உதவி ஆய்வாளர் சண்முகசுந்தரம் மகிழ்வாகனன், நகர காவல் உதவி ஆய்வாளர் கோகிலா உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

    • ஒட்டுண்ணிகள் நோய் கிருமிகளின் வகைகளை பற்றி விவசாயிகளுக்கு விளக்கம்.
    • தென்னையை தாக்கும் காண்டாமிருக வண்டை கட்டுப்படுத்த மெட்டாரைசியம்.

    பேராவூரணி:

    தஞ்சாவூர் மாவட்டம் சேதுபாவாசத்திரம் வட்டார வேளாண்மை துறை சார்பில் வாத்தலைக்காடு கிராமத்தில் அட்மா திட்டத்தின் கீழ் பூச்சி மற்றும் நோய் மேலாண்மையில் உயிரியல் கட்டுப்பாட்டு முறைகள் குறித்து விவசாயிகளுக்கு தொழில்நுட்ப பயிற்சி நடைபெற்றது.

    சேதுபாவாசத்திரம் வட்டார வேளாண்மை உதவி இயக்குனர் மற்றும் அட்மா திட்ட ஒருங்கிணைப்பாளர் சாந்தி தலைமை வகித்து பேசுகையில், பயிர்களில் தீங்கு செய்யும் பூச்சிகளின் எண்ணிக்கையை கட்டுக்குள் வைத்திருக்கும் பொருட்டு இயற்கை தந்த நன்கொடை பூச்சிகளின் இயற்கை எதிரிகள். இயற்கை உயிரினங்களை கொண்டு தீங்கு செய்யும் பூச்சி இனங்களை கட்டுப்படுத்துவதற்கு உயிரியல் முறை பூச்சி மேலாண்மை என்று பெயர். உயிரியல் காரணிகளான சாறுண்ணிகள், ஒட்டுண்ணிகள் நோய் கிருமிகளின் வகைகளைப் பற்றி விவசாயிகளிடையே விளக்கி கூறினார். வேப்பங்குளம் தென்னை ஆராய்ச்சி நிலையத்தில் உதவி பேராசிரியர் சுருளிராஜன் பேசியதாவது, ரசாயன பூச்சி மற்றும் நோய் கொல்லி மருந்துகளுக்கு பதிலாக உயிரியல் முறையில் பூச்சி நோய்களை கட்டுப்படுத்தும் முக்கியத்துவத்தை விவசாயிகள் உணர்ந்து செயல்பட வேண்டும்.

    மண் மூலம் பரவும் நாற்றங்கால் வேர் அழுகல், வாடல் நோய், இலை கருகல் போன்ற நோய்களை கட்டுப்படுத்த டிரைக்கோடெர்மா விரிடி மற்றும் சூடோமோனஸ் புளோரோசன்ஸ், தென்னையைத் தாக்கும் காண்டாமிருக வண்டை கட்டுப்படுத்த மெட்டாரைசியம், கருந்தலைப் புழு கட்டுப்படுத்த கிரைசொபொலா, மக்காச்சோளம் படைப்புழு கட்டுப்படுத்த வெவேரியா, சாறு உறிஞ்சும் பூச்சிகளை கட்டுப்படுத்த பச்சை இறகு பூச்சி போன்ற காரணிகளை விவசாயிகள் பயன்படுத்தி அதிக லாபம் பெறலாம் என்றார்.

    அட்மா திட்ட வட்டார தொழில்நுட்ப மேலாளர் சுரேஷ், ஊராட்சி மன்ற தலைவர் சுப்புரத்தினம், உதவி வேளாண்மை அலுவலர் பாலசுந்தர், அட்மா உதவி தொழில்நுட்ப மேலாளர்கள் தமிழழகன், நெடுஞ்செழியன் மற்றும் விவசாயிகள் கலந்து கொண்டனர்.

    • வங்கி கடன் அல்லது தொழில் கடன் வேண்டுதல் குறித்த மனுக்கள் இருக்கக் கூடாது.
    • அடுத்த மாதம் 7-ம் தேதிக்கு பின்னர் பெறப்படும் மனுக்கள் குழுவின் ஆய்வுக்கு எடுத்துக் கொள்ளப்படாது.

    தஞ்சாவூர்:

    தஞ்சை மாவட்ட கலெக்டர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது :-

    தமிழ்நாடு சட்டசபை மனுக்கள் குழு தஞ்சை மாவட்டத்தில் விரைவில் கூடுவது என முடிவு செய்துள்ளது.

    இதனை முன்னிட்டு தஞ்சை மாவட்ட எல்லைக்கு உட்பட்ட பகுதிகளில் உள்ள தனிப்பட்ட நபரோ, சங்கங்களோ அல்லது நிறுவனங்களோ தீர்க்கப்பட வேண்டிய பொது பிரச்சனைகள் , குறைகள் குறித்தான மனுக்களை (5 நகல்கள் தமிழில் மட்டும்) தேதியுடன் கையொப்பமிட்டு தலைவர், மனுக்கள் குழு, தமிழ்நாடு சட்டசபை பேரவை, சென்னை- 600009 என்ற முகவரிக்கு அடுத்த மாதம் 7-ம் தேதிக்குள் அனுப்ப வேண்டும்.

    மனுக்கள் கண்ணியமான வாக்கியத்தில் இருக்க வேண்டும்.

    பல ஆண்டுகளாக அரசு அலுவலகங்களில் தீர்க்கப்படாமல் இருக்கும் பொது பிரச்சனைகள் குறித்ததாக மனுக்கள் இருக்கலாம். மனுக்கள் ஒரே ஒரு பிரச்சனையை உள்ளடக்கியதாகவும், ஒரே ஒரு துறையை சார்ந்ததாகவும் இருக்க வேண்டும்.

    மனுக்கள் பொது முக்கியத்துவம் வாய்ந்த பொருள் ஒன்றை உள்ளடக்கியதாக இருக்க வேண்டும் ‌‌.

    ஆனால் மனுவில் உள்ள பொருளானது தனிநபர் குறை, நீதிமன்றத்தின் முன் வழக்கில் உள்ள பொருள், வேலை வாய்ப்பு, முதியோர் ஓய்வூதியம், பட்டா மற்றும் அரசு வழங்கும் இலவச உதவிகள் வேண்டுதல் , வங்கி கடன் அல்லது தொழில் கடன் வேண்டுதல், அரசு பணியில் மாற்றம் வேண்டுதல், அரசு அலுவல ர்களின் குறைகளை வெளி ப்படுத்துதல், போன்றவை குறித்து இருக்கக் கூடாது.

    இது குறித்து மனுதார ர்களுக்கு மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் இருந்து குழு ஆய்வு செய்யும் நாளில் தகவல் தனியாக அனுப்பப்படும்.

    அடுத்த மாதம் 7-ம் தேதிக்கு பின்னர் பெறப்படும் மனுக்கள் குழுவின் ஆய்வுக்கு எடுத்துக் கொள்ளப்படாது.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    • உபகரணங்கள் பாதுகாப்பு மற்றும் பயன்படுத்தும் முறை போன்றவற்றின் முக்கியத்துவம் தொடர்பாக விவசாய களை பயிற்சி அளிக்கப்பட்டது.
    • அனைத்து ஆராய்ச்சியாளர்கள், முன்னவர்கள், அலுவலர்கள், 400-க்கும் மேற்பட்ட விவசாயிகள் பங்கேற்றனர்.

    நாகப்பட்டினம்:

    நாகை மாவட்டம் காரையூர் ஊராட்சியில் கோர்டேவா அக்ரி சைன்ஸ் -ன் விவசாய களை பயிற்சி நடைப்பெற்றது.விவசாய புரட்சியில் பல ஆண்டுகளாக சேவை செய்து வரும் கோர்டேவா அக்ரி சைன்ஸ் நிறுவனம் சார்பில் காரையூர் கிராமத்தில், நாகை மற்றும் திருவாரூர் மாவட்ட விவசாயிகளுக்கு விவசாய களை மேலாண்மை பற்றியும், நோவ்லக்ட் களைகொல்லி பற்றியும், உபகரணங்கள் பாதுகாப்பு மற்றும் பயன்படுத்தும் முறை போன்றவற்றின் முக்கியத்துவம் தொடர்பாக விவசாய களை பயிற்சி விழா நடைப்பெற்றது.

    இதில் கோர்டேவாவின், அனைத்து ஆராய்ச்சியாளர்கள், முன்னவர்கள், அலுவலர்கள், 400 -க்கும் மேற்ற விவசாயிகள் பங்கேற்றனர். இதில் திருவாரூர் சந்தை தொடர்பாளர், வேளாண்மை அலுவலர், துணை வேளண்மை அலுவலர், ஆத்மா திட்ட மேலாளர், விவசாய சங்க தலைவர்கள், கொர்டெவா அமைப்பினர் பங்கேற்றனர். அனைவருக்கும் தென்னை மர கன்றுகள் வழங்கப்பட்டது. விவசாயிகள் மற்றும் கோர்டேவா வின் திருவாரூர் அதிகாரிகள் ஶ்ரீதர், வெங்கடேஷ், கார்த்திகேயன் ஆகியோர் பங்கேற்றனர்.

    • மாணவர்களை நேரில் சென்று தங்கபாண்டியன் எம்.எல்.ஏ. வரவேற்றார்.
    • இந்தியாவிலேயே கல்விக்கு அதிக முக்கியத்துவம் கொடுக்கும் முதல்வர் தமிழக முதல்வர் தான் எனக்கூறினார்.

    ராஜபாளையம்

    விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் தொகுதியில் கோடை விடுமுறை முடிந்து அரசு பள்ளிகளுக்கு வருகை புரிந்த மாணவ- மாணவிகளை வகுப்பறைகளுக்கு நேரில் சென்று தங்கபாண்டியன் எம்.எல்.ஏ. வரவேற்றார். அவர்களுக்கு காலை வணக்கம் கூறி நன்றாக படித்து முன்னுக்கு வாருங்கள் என வாழ்த்தி உற்சாகப்படுத்தினார்.

    ராஜபாளையம் ரெயில்வே பீடர் ரோட்டில் உள்ள சேத்தூர் சேவுகப்பாண்டியனார் அரசு மேல்நிலைப்பள்ளிக்கும், மேலப்பாட்டகரிசல்குளம் ஊராட்சி திருவள்ளுவர் நகரில் உள்ள ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளிக்கும் சென்று மாணவர்களை சந்தித்து வாழ்த்து கூறி அனைவரும் நன்றாக படிக்க வேண்டும் என்று கூறினார்.

    மாணவர்களை சந்திக்க வகுப்பறைக்கு செல்லும்போது வகுப்பில் போதிய வெளிச்சம் இல்லாதை அறிந்து சொந்த செலவில் வகுப்பறைக்கு தேவையான மின்விளக்கு, மின்விசிறி வசதி விரைவில் செய்துதரப்படும்எனக்கூறினார்.

    பள்ளிக்கு என்னென்ன வசதி வேண்டுமென மாணவர்கள் மற்றும் தலைமை ஆசிரியர்களிடம் கேட்கையில் 9,10-ம் வகுப்பு மாணவர்கள் சீருடை வேண்டுமென கூறினர். ஏழை எளிய மாணவர்களுக்கு தலைமை ஆசிரியரின் பரிந்துரையின்படி சீரூடை வழங்கப்படும் என்று எம்.எல்.ஏ. தெரிவித்தார்.

    மேலும் தலைமை ஆசிரியர் பள்ளிக்கு குடிநீர் சுத்திகரிப்பு கருவியும், மாணவர்கள் இருக்கை வசதியும் வேண்டுமென கோரிக்கை விடுத்தார். சட்ட மன்ற தொகுதி மேம்பாட்டு நிதியில் இருந்து கோரிக்கைகள் நிறைவேற்றப்படும் எனக்கூறினார்.

    அதனைத்தொடர்ந்து பேசிய அவர் , மாணவர்களின் இடைநிற்றலை தவிர்க்க எந்தெந்த மாணவர்கள் பள்ளிக்கு வரவில்லை என கண்டறிந்து அவர்களது வீட்டிற்கே சென்று படிப்பின் முக்கியத்துவத்தை எடுத்துச்சொல்லி அவர்களை பள்ளிக்கு அழைத்து வர வேண்டுமென தலைமை ஆசிரியரிடம் கேட்டுக் கொண்டார். இந்தியாவிலேயே கல்விக்கு அதிக முக்கியத்துவம் கொடுக்கும் முதல்வர் தமிழக முதல்வர் தான் எனக்கூறினார்.

    மேலும் திருவள்ளுவர் நகர் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் 5-ம் வகுப்பில் ராக்கேஷ் என்ற மாணவரை தமிழின் இனிமைப் பாடலை வாசிக்கச் சொல்லி வாசிப்பு திறனை கேட்டறிந்தார். குழந்தைகளுக்கு புதிய புத்தகங்களை வழங்கினார்.

    இந்த நிகழ்வில் தலைமை ஆசிரியர்கள் குணசீலன்,ஜெயலட்சுமி தி.மு.க. நகர செயலாளர் (வடக்கு) மணிகண்டராஜா, ஒன்றிய துணை சேர்மன் துரைகற்பகராஜ், கிளை செயலாளர் அங்குராஜ் மற்றும் நிர்வாகிகள், ஆசிரியர்கள் கலந்து கொண்டனர்.

    ×