search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    நுகர்வோர் பொருட்களின் தரம் அறிந்து வாங்க வேண்டும்
    X

    நுகர்வோர் பொருட்களின் தரம் அறிந்து வாங்க வேண்டும்

    • நுகர்வோர் பொருட்களின் தரம் அறிந்து வாங்க வேண்டும் என்று மாவட்ட வருவாய் அலுவலர் அறிவுரை வழங்கினார்.
    • தவறுகள் இருந்தால் அதே இடத்தில் சம்பந்தப் பட்ட நிறுவனத்திடம் விளக்கம் கேட்க வேண்டும்.

    ராமநாதபுரம்

    ராமநாதபுரம் கலெக்டர் அலுவலக கூட்டரங்கில் தேசிய நுகர்வோர் தினம் மற்றும் உலக நுகர்வோர் தின விழா நடைபெற்றது. விழாவில் மாவட்ட வருவாய் அலுவலர் (பொறுப்பு) ராஜ சேகரன் தலைமை தாங்கி கூறியதாவது:-

    குழந்தைகள் முதல் பெரியவர் வரை அனை வருமே நுகர்வோர்தான். இத்தகைய நுகர்வோர் எந்த வகையிலும் அவர்கள் வாங்கும் பொருள்களினால் எவ்வகையிலும் பாதிப்புகள் ஏற்பட்டு விடக்கூடாது. அத னடிப்படையில் ஒவ்வொரு வரும் தங்களுக்கு தேவை யான பொருட்களை வாங் கும்போது பொருட்களின் தரம் குறித்த விவரம், அனுமதிக்கப்பட்ட காலம் ஆகியவற்றை சரிபார்த்து வாங்க வேண்டும்.

    தவறுகள் இருந்தால் அதே இடத்தில் சம்பந்தப் பட்ட நிறுவனத்திடம் விளக்கம் கேட்க வேண்டும்.தவறுகளை சுட்டிக்காட்டா மல் இருந்தால் மேலும் மேலும் தவறுகள் செய்வார் கள். பொதுமக்களுக்கு ஏற்படும் குறைகளை கேட்டறிந்து உரிய நியாயம் கிடைக்கும் வகையில் தன்னார்வ நுகர்வோர் அமைப்புகள் செயல்பட்டு வருகின்றன.

    அதுமட்டுமின்றி உணவு பாதுகாப்பு மற்றும் மருந்து நிர்வாகத்துறையின் மூலம் நுகர்வோர் தெரிவிக்கும் புகார்களுக்கு உடனுக்குடன் நடவடிக்கை எடுத்து வருகிறார்கள். சிறிய கடையானாலும் சரி பெரிய நிறுவனமானாலும் சரி, நுகர்வோருக்கு தவறுகள் ஏற்படும் வகையில் நடந்து கொண்டால் உடனடியாக புகார் தெரிவிக்கும் பட்சத் தல் அந்த நிறுவனம் மீது நடவடிக்கை எடுக்கப்படும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    இதைத்தொடர்ந்து பள்ளி மற்றும் கல்லூரிகளில் நுகர்வோர் பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வு தொடர்பான பேச்சுப் போட்டி, ஓவியப்போட்டி, கட்டுரை போட்டிகளில் வெற்றிபெற்ற மாணவ-மாணவிகளுக்கு நினைவு பரிசு மற்றும் பாராட்டு சான்றினை மாவட்ட வரு வாய் அலுவலர் (பொறுப்பு) ராஜசேகரன் வழங்கினார்.

    இந்த நிகழ்ச்சியில் மாவட்ட வழங்கல் அலுவலர் மரகதநாதன், மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் பாலு முத்து உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    Next Story
    ×