search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    தமிழக அரசை எதிர்ப்பதையே கமல்ஹாசன் கொள்கையாக வைத்துள்ளார் - அர்ஜூன்சம்பத்
    X

    தமிழக அரசை எதிர்ப்பதையே கமல்ஹாசன் கொள்கையாக வைத்துள்ளார் - அர்ஜூன்சம்பத்

    தமிழக அரசை எதிர்ப்பதையே கமல்ஹாசன் கொள்கையாக வைத்துள்ளார் என்று இந்து மக்கள் கட்சியின் மாநில தலைவர் அர்ஜூன்சம்பத் விமர்சித்துள்ளார். #ArjunSampath #KamalHaasan
    ஈரோடு:

    இந்து மக்கள் கட்சி சார்பில் இன்று ஈரோடு பெரிய மாரியம்மன் கோவிலில் இருந்து 108 நாட்கள் ஆன்மீக பிரச்சாரத்தின் தொடக்க நிகழ்ச்சி நடந்தது.

    பிரச்சார வாகனத்தை இந்து மக்கள் கட்சியின் மாநில தலைவர் அர்ஜூன்சம்பத் தொடங்கி வைத்தார்.

    பின்னர் அர்ஜூன்சம்பத் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார்.

    அவர் கூறியதாவது:-

    தமிழகம் முழுவதும் இந்து மக்கள் சட்சி சார்பில் 108 நாட்கள் ஆன்மீக அரசியல் பிரச்சாரங்கள் நடந்து கொண்டிருக்கிறது.

    தமிழகத்தில் அ,தி.மு.க, தி.மு.க.வுக்கு மாற்றாக ஆன்மீக அரசியல் கொள்கையில் நம்பிக்கை இருக்கக்கூடிய அனைத்து தலைவர்களை ஒன்று திரட்ட வேண்டும். ஒரு மாற்று அரசியல் சக்தி, தேசிய அரசியல், ஆன்மீக அரசியல் தமிழகத்தில் காலுன்ற வேண்டும்.

    மத்தியில் மீண்டும் பிரதமராக நரேந்திர மோடி பதவியேற்க வேண்டும். இந்த இரண்டு கருத்துகளை மையமாக வைத்து தமிழகம் முழுவதும் 108 நாட்கள் இந்த பிரச்சாரம் நடைபெறும்.

    கஜா புயலால் தற்போது டெல்டா மாவட்டங்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன. இந்த பாதிப்புகளில் இருந்து மக்களை மீட்க மறுசீரமைப்பு பணிகளை மேற்கொள்ள வேண்டும்.

    கடந்த காலங்களில் நிஷாபுயல், தானே புயல் ஏற்பட்டபோது நரேந்திரமோடி நேரடியாக வந்து வெள்ள சேத பகுதிகளை பார்வையிட்டார். இடைகால நிவாரணமாக சில நூறு கோடி ரூபாய் ஒதுக்கினார். அதேபோல் இப்போதும் மோடி வந்து பார்வையிட வேண்டும்.

    கஜா புயலால் சேதமடைந்த வீடுகளை மத்திய அரசின் அனைவருக்கும் வீடுகட்டும் திட்டம் மூலம் மறுசீரமைப்பு செய்து கொடுக்க வேண்டும் இப்படி புயல் பாதித்த அனைத்து பகுதிகளில் மத்திய அரசு திட்டங்களை செயல்படுத்த வேண்டும். அதற்குரிய நடவடிக்கைகளை மாநில அரசு செய்ய வேண்டும். தமிழக அரசு முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுத்தது பாராட்டுக்குரியது.

    மக்கள் எளிதில் அணுகும் முதல்வராக எடப்பாடி பழனிசாமியும், துணை முதல்வராக ஓ.பன்னீர்செல்வமும் உள்ளனர்.



    கமல்ஹாசன் தமிழக அரசை எதிர்ப்பதையே தனது கொள்கையாக வைத்துள்ளார். அதன் மூலம் விளம்பரம் தேடி கொள்கிறார். தமிழகத்தில் எந்த நன்மையும் கிடைக்க கூடாது என்பதில் அவர் தெளிவாக இருக்கிறார். தி.மு.க. மற்றும் கம்யூனிஸ்டு கட்சிகளின் ஊதுகோலாக கமல்ஹாசன் உள்ளார்.

    சபரிமலை ஐயப்பன் கோவில் விவகாரத்தை பொறுத்தவரை சபரிமலை ஐயப்பன் கோவிலை அழித்துவிட்டு அதை சுற்றுலா தலமாக்க மாற்ற முயற்சி செய்து வருகிறார் கேரள முதல்வர். ஒரு மத்திய அமைச்சரையே கேரள போலீசார் தடுத்து உள்ளார்கள் என்றால் சாதாரண பக்தர் நிலை என்னவாகும்?

    உடனடியாக மத்திய அரசு சபரிமலை ஐயப்பன் கோவிலை தனது கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வர வேண்டும்.

    இவ்வாறு அவர் கூறினார். #ArjunSampath #KamalHaasan

    Next Story
    ×