என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "நல்லகண்ணு"

    • முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், உதயநிதி ஸ்டாலின் அஞ்சலி செலுத்தினர்
    • பிரதமர் மோடி, ராகுல் காந்தி இரங்கல் தெரிவித்துள்ளனர்.

    இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் ஆர். நல்லகண்ணு வயது மூப்பின் காரணமாக உடல்நலம் பாதிக்கப்பட்டு சென்னை ராஜீவ் காந்தி அரசு பொது மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில், இன்று பிற்பகல் சிகிச்சைப் பலனின்றி உயிரிழந்தார்.

    இவரது மறைவு தமிழ்நாடு முழுவதும் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. தொடர்ந்து மருத்துவமனையில் இருந்து அவரது உடல் சென்னை தியாகராயர் நகரில் உள்ள கட்சி அலுவலகத்திற்கு இறுதி மரியாதைக்காக கொண்டு செல்லப்பட்டுள்ளது.

    கட்சியினர், பொதுமக்கள் என அனைவரும் அஞ்சலி செலுத்த பொதுப்பார்வையில் வைக்கப்பட்டுள்ளது. தொடர்ந்து அரசியல் தலைவர்கள் பலரும் அஞ்சலி செலுத்தி வருகின்றனர். முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், உதயநிதி ஸ்டாலின், அமைச்சர், நடிகர்கள் என பலரும் அஞ்சலி செலுத்தினர். இந்நிலையில் தவெக தலைவர் விஜய் நேரில் சென்று அய்யா நல்லக்கண்ணு உடலுக்கு அஞ்சலி செலுத்தினார்.

    • சென்னையில் உள்ள கட்சி அலுவலகத்திற்கு இறுதி மரியாதைக்காக கொண்டு செல்லப்பட்டுள்ளது.
    • அனைவரும் அஞ்சலி செலுத்த பொதுப்பார்வையில் வைக்கவும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

    இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் ஆர். நல்லகண்ணு வயது மூப்பின் காரணமாக உடல்நலம் பாதிக்கப்பட்டு சென்னை ராஜீவ் காந்தி அரசு பொது மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில், இன்று பிற்பகல் சிகிச்சைப் பலனின்றி உயிரிழந்தார்.

    இவரது மறைவு தமிழ்நாடு முழுவதும் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. தொடர்ந்து மருத்துவமனையில் இருந்து அவரது உடல் சென்னை தியாகராயர் நகரில் உள்ள கட்சி அலுவலகத்திற்கு இறுதி மரியாதைக்காக கொண்டு செல்லப்பட்டுள்ளது.

    கட்சியினர், பொதுமக்கள் என அனைவரும் அஞ்சலி செலுத்த பொதுப்பார்வையில் வைக்கவும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

    இந்நிலையில், சென்னை தி.நகரில் உள்ள சிபிஐ அலுவலகமான பாலன் இல்லத்தில் வைக்கப்பட்டுள்ள நல்லகண்ணு உடலுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நேரில் சென்று மலர்வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினார்.

    மேலும், நல்லக்கண்ணு உடலுக்கு துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் நேரில் அஞ்சலி செலுத்தினார்.

    • நல்லகண்ணு மறைவிற்கு அரசியல் தலைவர்கள் பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.
    • நல்லகண்ணு இன்று பிற்பகல் 1.55 மணி அளவில் காலமானார் என அரசு மருத்துவமனை அதிகாரப்பூர்வமாக அறிவித்தது.

    இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் நல்லகண்ணு. அவருக்கு வயது 101. வயதுமூப்பு காரணமாக ஏற்பட்ட உடல்நலக்குறைவால் சென்னை ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனையில் கடந்த சில தினங்களாக சிகிச்சை பெற்று வந்தார். நேற்று முன்தினம் அவரது உடல் நிலையில் பின்னடைவு ஏற்பட்டது.

    இதைத்தொடர்ந்து தீவிர சிகிச்சை பிரிவிற்கு நல்லகண்ணு மாற்றப்பட்டு அங்கு மருத்துவர்கள் கண்காணிப்பில் சிகிச்சை அளிக்கப்பட்டது. அவரது உடல் நலம் குறித்து முதலமைச்சர் உள்ளிட்ட அரசியல் கட்சி தலைவர்கள் நேரில் சென்று விசாரித்தனர்.

    இதனை தொடர்ந்து, சிகிச்சை பலனின்றி நல்லகண்ணு இன்று பிற்பகல் 1.55 மணி அளவில் காலமானார் என அரசு மருத்துவமனை அதிகாரப்பூர்வமாக அறிவித்தது. இதையடுத்து நல்லகண்ணு மறைவிற்கு அரசியல் தலைவர்கள் பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

    இந்த நிலையில், நல்லகண்ணு மறைவிற்கு நடிகர் ரஜினிகாந் இரங்கல் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக அவர் எக்ஸ் தள பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில்,

    மாறாத கொள்கைப் பிடிப்புடன் வாழ்ந்து மறைந்த தோழர் திரு. நல்லகண்ணு அவர்களின் இழப்பு தமிழக மக்களுக்கு ஈடு செய்ய முடியாதது.

    அவரது ஆத்மா சாந்தியடையட்டும். ஆழ்ந்த அனுதாபங்கள் என்று கூறியுள்ளார். 

    • அன்னாரின் குடும்பத்தாருக்கும் சுற்றத்தாருக்கும் எனது ஆழ்ந்த இரங்கல்களைக் கனத்த இதயத்துடன் தெரிவித்துக் கொள்கிறேன்.
    • அன்னாரின் பொதுச்சேவையும் அர்ப்பணிப்பும் மக்கள் மனதிலும் அரசியல் வரலாற்றிலும் என்றும் நீங்கா இடம்பிடித்திருக்கும்!

    சென்னை:

    பா.ஜ.க. மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் எக்ஸ் தள பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில்,

    இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர்களுள் ஒருவரான ஐயா திரு. நல்லகண்ணு அவர்கள், உடல்நலக்குறைவு காரணமாக தமது 101-வது வயதில் இயற்கை எய்தினார் என்ற தகவல் மிகுந்த மன வேதனையளிக்கிறது. அன்னாரின் குடும்பத்தாருக்கும் சுற்றத்தாருக்கும் எனது ஆழ்ந்த இரங்கல்களைக் கனத்த இதயத்துடன் தெரிவித்துக் கொள்கிறேன்.

    மிக இளம் வயதிலேயே அரசியலில் அடியெடுத்து வைத்து, நாட்டின் சுதந்திரத்திற்காகவும், அனைத்துத் தரப்பு மக்களின் உரிமைகளுக்காகவும் நூற்றுக்கணக்கான போராட்டங்களை முன்னெடுத்ததோடு, வாழும் வரை எளிமையின் அடையாளமாகவே அறியப்பட்டவர் ஐயா திரு. நல்லகண்ணு அவர்கள். அன்னாரின் பொதுச்சேவையும் அர்ப்பணிப்பும் மக்கள் மனதிலும் அரசியல் வரலாற்றிலும் என்றும் நீங்கா இடம்பிடித்திருக்கும்!

    ஓம் சாந்தி! என கூறியுள்ளார். 

    • முத்தமிழறிஞர் கலைஞருடன் என்றென்றும் இனிய நட்பைப் பூண்டிருந்தவர்.
    • எப்போதும் என்மேல் அன்பும் பாசமும் கொண்டவராக இருந்தார்.

    சென்னை:

    இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் நல்லகண்ணு (101) வயது மூப்பின் காரணமாக ஏற்பட்ட உடல்நலக்குறைவு காரணமாக சிகிச்சை பெற்று வந்த நிலையில் இன்று பிற்பகல் 1.55 மணிக்கு காலமானார். அவரது மறைவுக்கு அரசியல் தலைவர்கள் பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

    அந்த வகையில், தி.மு.க. தலைவரும், முதலமைச்சருமான மு.க.ஸ்டாலின் இரங்கல் தெரிவித்து எக்ஸ் தள பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில்,

    "எனக்கு ஒரு கண்ணில் சரிவரப் பார்வை இல்லை என்றாலும், அகத்தில் மற்றொரு கண் இருக்கிறது. அதுதான் நல்லகண்ணு" என்று முத்தமிழறிஞர் கலைஞர் அவர்களால் கண்ணாகப் போற்றப்பட்ட முதுபெரும் தலைவர் - தோழர் திரு.நல்லகண்ணு அய்யா அவர்கள் மறைவுற்றார் என்ற செய்தி நம்மையெல்லாம் கடும் துயரத்திற்கு ஆளாக்கியுள்ளது.

    நம் சமகாலத்தில் வாழ்ந்த சமரசமற்ற போராளி; நாட்டின் விடுதலைக்காக, பாட்டாளி வர்க்கத்தின் நலனுக்காக தம் இனிய வாழ்வின் பெரும்பகுதியை ஈகம் செய்த தியாகப் பெருஞ்சீலர்!

    சிறை, சித்திரவதை, வலிகள் நிறைந்த வாழ்க்கை என்று எத்தனை இடர்கள் வந்தாலும் -

    "சுட்டுப் பொசுக்கினாலும் – தோழர்களைத்

    தூக்கினில் ஏற்றினாலும்

    விட்டுப்பிரியாது – செங்கொடி

    வீரம் குறையாது"

    என்று தோழர் ஜீவா முழங்கியதைப் போல கொள்கை உறுதி குலையாமல் குன்றமென நிமிர்ந்து நின்ற பண்புக்குரியவர் தீரமிகு தோழர் நல்லகண்ணு.

    கொள்கைக் கனல் அகத்துளே தீயாய் மூண்டு தகிக்க, முகத்திலே புன்னகையுடன் அமைதியாக வலம் வந்த அரசியல் எரிமலை அவர்!

    முத்தமிழறிஞர் கலைஞருடன் என்றென்றும் இனிய நட்பைப் பூண்டிருந்தவர். பொடா, எஸ்மா, டெஸ்மா போன்ற அடக்குமுறைச் சட்டங்களுக்கு எதிரான போராட்டக் களங்களில், தலைவர் கலைஞருடன் தோளோடு தோள் நின்று களமாடியவர்.

    பொதுவுடைமைக் கருத்தியலும், திராவிட இயக்கக் கருத்தியலும் சமூக மாற்றத்துக்கான இரட்டைக்குழல் துப்பாக்கியாகச் செயல்பட வேண்டிய கோட்பாட்டுத் தோழமைகள் என்பதில் எப்போதுமே உறுதியாக இருந்தவர்.

    முத்தமிழறிஞர் கலைஞர் தமது ஆட்சிக் காலத்தில் தோழர் திரு. நல்லகண்ணு அவர்களுக்கு அம்பேத்கர் விருதை வழங்கிச் சிறப்பித்தார். நமது திராவிட மாடல் அரசின் சார்பில் தோழர் அவர்களுக்குத் தகைசால் தமிழர் விருதை வழங்கும் வாய்ப்பைப் பெற்றது எனது பெரும் பேறு!

    எப்போதும் என்மேல் அன்பும் பாசமும் கொண்டவராக இருந்தார். திராவிட மாடல் ஆட்சி அமைந்த பிறகு உருவாக்கிய திட்டங்களை மனப்பூர்வமாக வரவேற்றார். அய்யாவை அவரது ஒவ்வொரு பிறந்தநாளிலும் சந்தித்து வாழ்த்து பெறுவதை நான் வழக்கமாக வைத்திருந்தேன்.

    தோழர் திரு. நல்லகண்ணு அய்யா அவர்கள் வாழ்ந்த காலத்தில் நாம் வாழ்ந்தோம் என்பது நமக்குப் பெருமை. அவர் பெற்ற விருதுகள், பரிசுகள் எவையானாலும், அவற்றோடு தொகை அனைத்தையும் கட்சிக்காகவும், மக்கள் நலனுக்காக அரசிடம் ஒப்படைத்த அப்பழுக்கற்ற தலைவர் அவர்!

    "தான் வேறு, இயக்கம் வேறு என்று பிரித்துப் பார்க்காமல், இயக்கத்திற்காக இயக்கமாகவே வாழ்ந்தவர்" என்று அவரது நூற்றாண்டு விழாவில் நான் குறிப்பிட்டது இன்றும் நினைவலைகளாக வந்து என் நெஞ்சில் மோதுகிறது.

    தோழரின் மறைவால் வாடும் அவரது குடும்பத்தினர், உறவினர்கள் மற்றும் இந்திய கம்யூனிஸ்ட் இயக்கத் தோழர்கள் அனைவருக்கும் எனது ஆழ்ந்த இரங்கலும், ஆறுதலும்!

    மறக்க முடியாத அந்த மாமனிதரின் வாழ்வே நமக்காக அவர் விட்டுச் சென்றிருக்கும் மகத்தான செய்தி. அதுவே நமக்கு வழிகாட்டும் ஒளியாகட்டும்! பாட்டாளி மக்களுக்காகவே வாழ்ந்து நிறைந்த பகட்டில்லாத் தோழர் திரு. நல்லகண்ணு அவர்களின் நினைவும், புகழும் என்றென்றும் காலத்தால் அழியாத கல்வெட்டாக மக்கள் மனதில் நிலைத்திருக்கும்! தமிழ்நாட்டின் உயரிய விருது பெற்ற நம் தகைசால் தமிழரை - இனிய தோழரை முழு அரசு மரியாதையுடன் செவ்வணக்கம் செலுத்தி வழியனுப்பி வைப்போம்! எனக்கூறியுள்ளார். 

    • வெள்ளையர்களிடமிருந்து இந்தியாவை மீட்கும் விடுதலைப் போராட்டத்தில் தீவிரமாக ஈடுபட்ட சுதந்திரப் போராட்ட வீரர்.
    • நல்லகண்ணு அவர்களின் மறைவு எனக்கு தனிப்பட்ட முறையில் மிகப்பெரிய இழப்பாகும்.

    சுதந்திர போராட்ட வீரரும், இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் மூத்த தலைவருமான நல்லகண்ணு (101) வயது மூப்பு காரணமாக இன்று காலமானார். அவரது மறைவிற்கு தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை இரங்கல் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவில்,

    சுதந்திரப் போராட்டத் தியாகி, இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர், தகைசால் தமிழர் தோழர் இரா. நல்லக்கண்ணு அவர்கள் மறைந்த செய்தி மிகுந்த துயரத்தையும், வேதனையையும் அளிக்கிறது. தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி சார்பில் ஆழ்ந்த இரங்கலையும், அனுதாபத்தையும் தெரிவித்துக் கொள்கிறேன்.

    தனது 101 வயது வரை பொதுவாழ்வில் எளிமையாகவும், நேர்மையாகவும் வாழ்ந்து நாட்டு மக்களுக்கு முன்னுதாரணமாக வாழ்ந்து காட்டியவர். தான் கொண்ட கொள்கையிலும், நடைமுறை வாழ்விலும் தன் இறுதி மூச்சு வரை சமரசம் இன்றி வாழ்ந்தவர். தமிழகத்தில் மட்டுமல்லாது, அகில இந்திய அளவில் மிக மூத்த பொதுவுடைமைத் தலைவர்.

    தனது 15 வயது தொடங்கி வாழ்நாள் முழுவதும் ஏழை, எளிய மக்கள், உழைக்கும் தொழிலாளர்கள், விவசாயக் கூலித் தொழிலாளர்கள், விளிம்புநிலை மக்கள் என அனைவரது உரிமைக்காகவும், உயர்வுக்காகவும் அயராது போராடி வெற்றி கண்டவர். அரசியல் கட்சிகளை தாண்டி அனைவரும் அவர் மீது மதிப்பும் மரியாதையும் வைத்திருந்தனர்.

    வெள்ளையர்களிடமிருந்து இந்தியாவை மீட்கும் விடுதலைப் போராட்டத்தில் தீவிரமாக ஈடுபட்ட சுதந்திரப் போராட்ட வீரர். நெல்லை சதி வழக்கு உள்ளிட்ட ஏராளமான வழக்குகளை எதிர்கொண்டு, 7 ஆண்டுகள் சிறை, 4 ஆண்டுகள் தலைமறைவு என நாட்டுக்காக பல இன்னல்களை தீரத்துடன் எதிர்கொண்டவர்.

    சுற்றுச்சூழலை மாசுபடுத்திய ஸ்டெர்லைட் ஆலையை மூடுவதற்காகவும், தாமிரபரணி ஆற்றில் மணல் கொள்ளையை தடுப்பதற்காகவும் களப் போராட்டத்தில் மட்டுமின்றி, நீதிமன்றத்திலும் போராடி வெற்றி கண்டவர். சுதந்திர இந்தியாவில் நிலவும் சாதிய பாகுபாடுகள், வன்கொடுமைகள், ஆணவக் கொலைகள் ஆகியவற்றை எதிர்த்து தனது இறுதி மூச்சுவரை போராடிய தோழர் இரா. நல்லகண்ணு அவர்களின் மறைவு எனக்கு தனிப்பட்ட முறையில் மிகப்பெரிய இழப்பாகும்.

    அவரது அர்ப்பணிப்பை போற்றும் வகையில் அப்போதைய தமிழ்நாடு முதலமைச்சர் முத்தமிழறிஞர் கலைஞர் அவர்கள், தோழர் நல்லகண்ணு அவர்களுக்கு அண்ணல் அம்பேத்கர் விருது வழங்கி கௌரவித்தார். மாண்புமிகு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அவர்கள் தோழருக்கு தகைசால் தமிழர் விருது வழங்கி அவரது பெருமைக்கு மேலும் புகழ் சேர்த்தார்.

    தமிழ்நாட்டின் அரசியல் மற்றும் சமூக இயக்கங்களுக்கு அவரது மறைவு ஈடு செய்ய முடியாத பேரிழப்பாகும். தோழர் இரா. நல்லகண்ணு அவர்களின் நினைவு எப்போதும் சமூகநீதிக்கான போராட்டங்களில் வழிகாட்டியாக இருக்கும்.

    அன்னாரை இழந்து வாடும் அவரது குடும்பத்தினருக்கும், பொதுவுடமை இயக்க தலைவர்கள் மற்றும் நண்பர்களுக்கும் தமிழ்நாடு காங்கிரஸ் சார்பில் ஆழ்ந்த இரங்கலையும், அனுதாபத்தையும் தெரிவித்துக் கொள்கிறேன்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    • நேற்று முன்தினம் அவரது உடல் நிலையில் பின்னடைவு ஏற்பட்டது.
    • மருத்துவர்கள் கண்காணிப்பில் இருந்து வந்தார்.

    சென்னை:

    இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் ஆர்.நல்லகண்ணு உடல்நலம் பாதிக்கப்பட்டு சென்னை ராஜீவ் காந்தி அரசு பொது மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

    வயது மூப்பின் காரணமாக அவரது உடல் உறுப்புகள் பாதிக்கப்பட்டது. அதற்கு மருத்துவர்கள் தீவிர சிகிச்சை அளித்து வந்த நிலையில் நேற்று முன்தினம் அவரது உடல் நிலையில் பின்னடைவு ஏற்பட்டது.

    இதைத்தொடர்ந்து தீவிர சிகிச்சை பிரிவிற்கு நல்ல கண்ணு மாற்றப்பட்டு அங்கு மருத்துவர்கள் கண்காணிப்பில் சிகிச்சை அளிக்கப்பட்டது. நல்லகண்ணு உடல் நலம் குறித்து முதலமைச்சர் உள்ளிட்ட அரசியல் கட்சி தலைவர்கள் நேரில் சென்று விசாரித்து வந்தனர்.

    இந்த நிலையில், நல்லகண்ணு சிகிச்சை பலனின்றி காலமானார். முக்கிய உடல் உறுப்புகள் அனைத்தும் செயலிழந்ததால் பிற்பகல் 1.55 மணிக்கு காலமானதாக ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனை அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. 

    • செயற்கை சுவாச கருவியின் உதவியுடன் அவருக்கு சிகிச்சை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
    • நல்லகண்ணுவின் உடல்நிலை குறித்து ரஜினிகாந்த் அவரது மகள் ஆண்டாளிடம் கேட்டறிந்தார்.

    இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் ஆர்.நல்லகண்ணு உடல்நலம் பாதிக்கப்பட்டு சென்னை ராஜீவ் காந்தி அரசு பொது மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

    வயது மூப்பின் காரணமாக அவரது உடல் உறுப்புகள் பாதிக்கப்பட்டது. அதற்கு மருத்துவர்கள் தீவிர சிகிச்சை அளித்து வந்த நிலையில் நேற்று முன்தினம் அவரது உடல் நிலையில் பின்னடைவு ஏற்பட்டது.

    இதைத்தொடர்ந்து தீவிர சிகிச்சை பிரிவிற்கு நல்ல கண்ணு மாற்றப்பட்டு அங்கு மருத்துவர்கள் கண்காணிப்பில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. அவர்கள் உடல் நலம் குறித்து முதலமைச்சர் உள்ளிட்ட அரசியல் கட்சி தலைவர்கள் நேரில் சென்று விசாரித்தனர்.

    செயற்கை சுவாச கருவியின் உதவியுடன் அவருக்கு சிகிச்சை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. 24 மணி நேரமும் மருத்துவர்கள் கண்காணிப்பில் இருந்து வரும் நிலையில் சற்று முன்னேற்றம் ஏற்பட்டு கண்விழித்து பார்ப்பதாக மருத்துவர்கள் தெரிவித்தனர்.

    இன்று காலையிலும் அதே நிலை நீடித்து வருகிறது.

    நல்லகண்ணுவின் உடல்நிலை குறித்து நடிகர் ரஜினிகாந்த் அவரது மகள் ஆண்டாளை தொலைபேசியில் தொடர்பு கொண்டு கேட்டறிந்தார்.

    இந்நிலையில் நல்லகண்ணு உடல்நிலை குறித்து த.வெ.க. தலைவர் விஜய் நலம் விசாரித்தாக தகவல் வெளியாகி உள்ளது. நல்லகண்ணுவின் மகள் ஆண்டாளை தொலைபேசி மூலம் தொடர்பு கொண்டு அவரது உடல்நிலை குறித்து விஜய் கேட்டறிந்தார்.

    • வயது மூப்பின் காரணமாக நல்லகண்ணு உடல் உறுப்புகள் பாதிக்கப்பட்டது.
    • நல்ல கண்ணுவின் உடல் நலம் குறித்து சமூக வலைதளங்களில் தவறான தகவல்கள் பரப்பப்படுகிறது.

    சென்னை:

    இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் ஆர்.நல்லகண்ணு உடல்நலம் பாதிக்கப்பட்டு சென்னை ராஜீவ் காந்தி அரசு பொது மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

    வயது மூப்பின் காரணமாக அவரது உடல் உறுப்புகள் பாதிக்கப்பட்டது. அதற்கு மருத்துவர்கள் தீவிர சிகிச்சை அளித்து வந்த நிலையில் நேற்று முன்தினம் அவரது உடல் நிலையில் பின்னடைவு ஏற்பட்டது.

    இதைத்தொடர்ந்து தீவிர சிகிச்சை பிரிவிற்கு நல்ல கண்ணு மாற்றப்பட்டு அங்கு மருத்துவர்கள் கண்காணிப்பில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. அவர்கள் உடல் நலம் குறித்து முதலமைச்சர் உள்ளிட்ட அரசியல் கட்சி தலைவர்கள் நேரில் சென்று விசாரித்தனர்.

    செயற்கை சுவாச கருவியின் உதவியுடன் அவருக்கு சிகிச்சை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. 24 மணி நேரமும் மருத்துவர்கள் கண்காணிப்பில் இருந்து வரும் நிலையில் சற்று முன்னேற்றம் ஏற்பட்டு கண்விழித்து பார்ப்பதாக மருத்துவர்கள் தெரிவித்தனர்.

    இன்று காலையிலும் அதே நிலை நீடித்து வருகிறது. அவரது உயிரை காப்பாற்ற மருத்துவர்கள் போராடி வருகிறார்கள். ஆனாலும் வயது மூப்பு என்பது தவிர்க்க முடியாத இயற்கையான செயலாகும். அதன் காரணமாக எப்போது வேண்டுமானாலும் அவருடைய உடல் நிலையில் பின்னடைவு ஏற்படலாம் என்று மருத்துவர்கள் தெரிவித்தனர்.

    நல்ல கண்ணுவின் உடல் நலம் குறித்து சமூக வலைதளங்களில் தவறான தகவல்கள் பரப்பப்படுகிறது. அதனை யாரும் நம்ப வேண்டாம். இதுபோன்ற வதந்தி பரப்புவதை தவிர்க்க வேண்டும் என்று இந்திய கம்யூனிஸ்ட் கட்சி அறிவித்துள்ளது.

    இதற்கிடையில் நல்ல கண்ணுவை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் மாநில செயலாளர் சண்முகம் மற்றும் முக்கிய பிரமுகர்கள் இன்று சந்தித்து நலம் விசாரித்தனர்.

    இந்த நிலையில் நல்லகண்ணுவின் உடல்நிலை குறித்து நடிகர் ரஜினிகாந்த் நலம் விசாரித்தார். நல்லகண்ணுவின் மகள் ஆண்டாளை தொலைபேசி மூலம் தொடர்பு கொண்டு அவரது உடல்நிலை குறித்து ரஜினிகாந்த் கேட்டறிந்தார்.

    • நல்லகண்ணு சிகிச்சைக்காக சென்னை ராஜீவ் காந்தி அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார்.
    • யே முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ராஜீவ் காந்தி ஆஸ்பத்திரிக்கு நேரில் சென்று, நல்லகண்ணு உடல்நலம் குறித்து விசாரித்தார்.

    சுதந்திர போராட்ட வீரரும், இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் மூத்த தலைவருமான நல்லகண்ணு (வயது 101) சென்னையில் தனது குடும்பத்துடன் வசித்து வருகிறார்.

    கடந்த 1-ந் தேதி அவருக்கு திடீரென உடல்நலக்குறைவு ஏற்பட்டது. இதைத்தொடர்ந்து அவர் சிகிச்சைக்காக சென்னை ராஜீவ் காந்தி அரசு ஆஸ்பத்திரியில் மீண்டும் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு டாக்டர்கள் குழுவினர் தீவிர சிகிச்சை அளித்து வருகிறார்கள்.

    மேலும், மூச்சுத்திணறல், நுரையீரல் தொற்று உள்ளிட்ட பாதிப்பு ஏற்பட்டதால் நல்லகண்ணுவுக்கு தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை அளிப்பட்டு வருகிறது.

    இதற்கிடையே முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நேற்று முன்தினம் ராஜீவ் காந்தி ஆஸ்பத்திரிக்கு நேரில் சென்று, அவரின் உடல்நலம் குறித்து விசாரித்தார்.

    இந்நிலையில் நல்லகண்ணு உடல்நிலையில் தொடர்ந்து பின்னடைவு ஏற்பட்டுள்ளதாக மருத்துவர்கள் தகவல் தெரிவித்து உள்ளனர். நல்லகண்ணுவை மருத்துவர்கள் தொடர்ந்து கண்காணித்து வருகின்றனர். வெண்டிலேட்டர் உதவியுடன் நல்லகண்ணுவிற்கு தொடர்ந்து தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

    இதனுடையே நல்லகண்ணு காலமானார் என்று இணையத்தில் நேற்று இரவு தகவல் பரவின. அந்த தகவலை இந்திய கம்யூனிஸ்ட் கட்சி திட்டவட்டமாக மறுத்துள்ளது.

    இதுகுறித்து இந்திய கம்யூனிஸ்ட் கட்சி வெளியிட்டுள்ள செய்தியில், "நல்லகண்ணுவின் உடல்நிலை குறித்து சிலர் சமூக ஊடகங்களில் தவறான தகவலை பரப்பி வருவது வேதனை அளிக்கிறது. அவரது உடல்நிலை சில நேரங்களில் பின்னடைவு கண்ட போதிலும், தற்போது சீராக இருந்து வருகிறது. மருத்துவர்கள் குழு அவரது உடல் நிலையை தீவிரமாக கண்காணித்து வருகிறது. கட்சியின் அதிகாரப்பூர்வ செய்தி வெளியாகும் வரை யாரும் எதையும் நம்ப வேண்டாம்" என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

    • நல்லகண்ணுவுக்கு பல்துறை மருத்துவ நிபுணர்களால் அதிதீவிர சிகிச்சை அளிக்கப்படுகிறது.
    • செயற்கை சுவாசக் கருவி உதவியுடன் அவருக்கு மருத்துவர்கள் தீவிர சிகிச்சை அளித்து வருகிறார்கள்.

    சென்னை:

    இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் நல்லகண்ணு (101). வயது மூப்பின் காரணமாக கடந்த சில மாதங்களாக உடல் நலம் பாதிக்கப்பட்டு சென்னை ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.

    இதனிடையே, நல்லகண்ணுவின் உடல்நிலையில் நேற்று பின்னடைவு ஏற்பட்டது. இதையடுத்து தீவிர சிகிச்சை பிரிவுக்கு மாற்றப்பட்டார். செயற்கை சுவாசக் கருவி உதவியுடன் அவருக்கு மருத்துவர்கள் தீவிர சிகிச்சை அளித்து வருகிறார்கள்.

    நல்லகண்ணுவின் உடல்நிலை குறித்து அறிந்தவுடன் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், கம்யூனிஸ்ட் தலைவர்கள், நிர்வாகிகளும் மருத்துவமனைக்குச் சென்று அவரது உடல் நலம் குறித்து கேட்டறிந்தனர்.

    இந்த நிலையில், நல்லக்கண்ணுவின் உடல்நிலை குறித்து மருத்துவமனை நிர்வாகம் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. அந்த அறிக்கையில், நல்லகண்ணுவுக்கு பல்துறை மருத்துவ நிபுணர்களால் அதிதீவிர சிகிச்சை அளிக்கப்படுகிறது. அவரது உடல்நிலையில் நேற்று மிகப்பெரிய பின்னடைவு ஏற்பட்டது. நல்லகண்ணுவுக்கு அளிக்கப்படும் செயற்கை சுவாசக்கருவி சிகிச்சை, மருந்துகள், மருத்துவ நிபுணர்கள் பரிந்துரைப்படி அதிகரிக்கப்பட்டுள்ளது. அவரது உடல்நிலையை பல்வேறு சிகிச்சைகளின் மூலம் சீராக்க தொடர் கண்காணிப்பில் வைக்கப்பட்டுள்ளார். 

    • முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் நேற்று இரவு மருத்துவமனைக்கு சென்று நல்ல கண்ணுவின் உடல் நலம் குறித்து விசாரித்தார்.
    • தொடர்ந்து முக்கிய பிரமுகர்கள் அரசு மருத்துவமனைக்கு வந்ததால் வளாகத்தில் போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.

    சென்னை:

    இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் நல்லகண்ணு. வயது மூப்பின் காரணமாக கடந்த சில மாதங்களாக உடல் நலம் பாதிக்கப்பட்டார்.

    வீட்டில் தவறி விழுந்ததில் அவர் தலையில் காயம் ஏற்பட்டு தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு பின்னர் மேல் சிகிச்சைக்காக ராஜீவ்காந்தி அரசு பொது மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

    நுரையீரல் பிரச்சனை, சுவாசிப்பதில் சிரமம் ஏற்பட்டதால் கருவிப் பொருத்தப்பட்டு அவரது உடல் நிலையில் முன்னேற்றம் ஏற்பட்டது. அதனைத் தொடர்ந்து வீடு திரும்பினார்.

    இந்த நிலையில் கடந்த டிசம்பர் மாதம் 26-ந்தேதி 101-வது பிறந்த நாளை கொண்டாடிய நல்ல கண்ணுவிற்கு மீண்டும் உடல் நலம் பாதிக்கப்பட்டது.

    இதையடுத்து ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். 2 மாதமாக மருத்துவர்கள் அவருக்கு சிகிச்சை அளித்து வருகிறார்கள்.

    இந்த நிலையில் நல்ல கண்ணுவின் உடல்நிலையில் நேற்று பின்னடைவு ஏற்பட்டது. இதையடுத்து தீவிர சிகிச்சை பிரிவுக்கு மாற்றப்பட்டார். செயற்கை சுவாசக் கருவி உதவியுடன் அவருக்கு மருத்துவர்கள் தீவிர சிகிச்சை அளித்து வருகிறார்கள்.

    முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் நேற்று இரவு மருத்துவமனைக்கு சென்று நல்ல கண்ணுவின் உடல் நலம் குறித்து விசாரித்தார். கம்யூனிஸ்ட் தலைவர்களும், நிர்வாகிகளும் மருத்துவமனைக்குச் சென்று அவரது உடல்நலம் குறித்து கேட்டறிந்தனர். செயற்கை சுவாச கருவி உதவியுடன் அவர் தற்போது சிகிச்சை பெற்று வருகிறார்.

    நல்லகண்ணுவின் உடல் நலம் குறித்து ராஜீவ் காந்தி அரசு ஆஸ்பத்திரி மருத்துவர்கள் கூறும் போது, வயது மூப்பின் காரணமாக ஏற்பட்டுள்ள உடல் பாதிப்புகளுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. அவரது உடல்நிலை கவலைக்கிடமான நிலையில் மருத்துவர்கள் தீவிரமாக கண்காணித்து வருகிறார்கள். வெண்டிலேட்டர் உதவியுடன் அவரது உடல்நிலை கண்காணிக்கப்படுகிறது என்றனர்.

    நல்லகண்ணுவின் உடல் நலம் பற்றிய தகவல் அறிந்தவுடன் அரசியல் கட்சித் தலைவர்கள், முக்கிய பிரமுகர்கள் அரசு மருத்துவமனைக்கு சென்று விசாரித்து வருகிறார்கள்.

    இந்திய கம்யூனிஸ்ட் தலைவர்கள் முத்தரசன், வீரபாண்டியன் மற்றும் விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன் ஆகியோர் நேரில் சென்று விசாரித்தனர்.

    தொடர்ந்து முக்கிய பிரமுகர்கள் அரசு மருத்துவமனைக்கு வந்ததால் வளாகத்தில் போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர். மருத்துவமனை வளாகம் பரபரப்பாக காணப்பட்டது.

    இந்திய கம்யூனிஸ்ட் மாநில செயலாளர் வீர பாண்டியன் கூறும்போது, தீவிர சிகிச்சை பிரிவில் வெண்டிலேட்டர் உதவியுடன் சிகிச்சை பெற்று வரும் நல்ல கண்ணுவின் உடல் நலத்தில் முன்னேற்றம் இல்லை. தொடர்ந்து மருத்துவக் கண்காணிப்பில் உள்ளார். ஆஸ்பத்திரியின் மருத்துவ அறிக்கையை எதிர்நோக்கி இருக்கிறோம் என்றார்.

    ×