search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "பராமரிப்பு"

    • பராமரிப்பு பணிகள் நடைெபறுவதால் நாளை மறுநாள் மின் விநியோகம் இருக்காது.
    • காலை 9 மணி முதல் 5 மணி வரை மின் நிறுத்தம் செய்யப்படுகிறது.

    திருவாரூர்:-

    திருவாரூர் மின்வாரிய இயக்குதல், பராமரித்தல் உதவி செயற்பொறியாளர் ராஜேந்திரன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

    திருவாரூர் துணை மின் நிலையத்தில் வருகிற 18-ந் தேதி (சனிக்கிழமை) மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறுகிறது. எனவே இந்த துணை மின்நிலையம் மற்றும் கப்பல் நகர் துணை மின் நிலையத்தில் இருந்து மின்விநியோகம் பெறும் திருவாரூர் நகர், தெற்குவீதி, பனகல் சாலை, விஜயபுரம்,

    தஞ்சை சாலை, விளமல், கொடிக்கால்பாளையம், மாங்குடி, கூடூர், முகந்தனூர், திருப்பயந்தாங்குடி, மாவூர் மற்றும் அடியக்கமங்கலம், துணை மின்நிலையத்தில் இருந்து மின் வினியோகம் பெறும் அடியக்கமங்கலம் , இ.பி.காலனி, சிதம்பரம் நகர், பிலாவடி மூலை, ஆந்தக்குடி, அலிவலம், புலிவலம், தப்பாம்புலியூர், புதுப்பத்தூர், நீலப்பாடி, கீழ்வேளூர், கொரடாச்சேரி மற்றும் அதனைச் சுற்றியுள்ள பகுதிகளில் 18-ந் தேதி காலை 9.00 மணி முதல் மாலை 5.00 மணி வரை மின்விநியோகம் இருக்காது.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    • துணை மின் நிலையத்தில் நாளை (6-ந்தேதி) பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளன.
    • தகவலை இருளி பட்டு மின்நிலைய உதவி பொறியாளர் தெரிவித்து உள்ளார்.

    பொன்னேரி:

    பொன்னேரியை அடுத்த இருளிப்பட்டு துணை மின் நிலையத்தில் நாளை (6-ந்தேதி) பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளன. இதைத்தொடர்ந்து நாளை காலை 9 மணி முதல் மாலை 5 மணிவரை அழிஞ்சி வாக்கம், எம்ஜிஆர் நகர், சித்தி விநாயகர் பண்ணை, சாய் கிருபா நகர், கணேஷ் நகர், ஸ்ரீ நகர், விருந்தாவன நகர், இருளி பட்டு, சத்திரம், பாதி பகுதி அத்திப்பேடு, எம்கே கார்டன், ஜனப்பன்சத்திரம் கூட்டுச்சாலை, சத்திரம், ஜெகநாதபுரம், அகரம், குதிரை பள்ளம், ஆமூர் காலனி, கங்கையாடி குப்பம், நெடுவரம் பாக்கம் காலனி, மாலிவாக்கம் போன்ற பகுதிகளுக்கு மின் நிறுத்தம் செய்யப்படுகிறது. இந்த தகவலை இருளி பட்டு மின்நிலைய உதவி பொறியாளர் தெரிவித்து உள்ளார்.

    • மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெற இருக்கிறது.
    • காலை 9 மணிமுதல் மதியம் 2 மணிவரை மின்சாரம் இருக்காது.

    விழுப்புரம்:

    திருவெண்ணைநல்லூர் 110/22 கி.வோ. துணைமின் நிலையத்தில் நாளை 16-ந் தேதி (சனிக்கிழமை) காலை 9 மணிமுதல் மதியம் 2 மணிவரை மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெற இருப்பதால் கீழ்கண்ட பகுதிகளுக்கு மின் தடை ஏற்படும் என தமிழ்நாடு மின்சார வாரிய விழுப்புரம் செயற்பொறியாளர் செந்தில்நாதன் தனது செய்தி குறிப்பில் தெரிவித்துள்ளார். தவிர்க்க முடியாத காரணம் ஏற்படின் மின்தடை தேதி மாற்றியமைக்கப்படலாம் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. சர்க்கரைஆலை பகுதி, பெரியசெவலை, துலங்கம்பட்டு, கூவாகம், வேலூர், ஆமூர், பெரும்பாக்கம், பரிக்கல், மாரனோடை, துலக்கப்பாளையம், மணக்குப்பம், பாவந்தூர், பெண்ணைவலம்,டி.எடையார், கீரிமேடு, தடுத்தாட்கொண்டூர், கிராமம், மேலமங்கலம், கண்ணாரம்பட்டு, ஏமப்பூர், சிறுவானூர், மாரங்கியூர், ஏனாதிமங்கலம், எரஞர், கரடிப்பாக்கம், செம்மார், வலையாம்பட்டு, பையூர், கொங்கராயனூர், திருவெண்ணணைநல்லூர், சேத்தூர், அமாவாசைபாளையம், தி.கொளத்தூர், சிறுமதுரை, பூசாரிபாளையம், ஓட்டனந்தல், அண்டராயநல்லூர், கொண்டசமுத்திரம் ஆகிய பகுதிகளில் மின் நிறுத்தம் செய்யப்படும் என தெரிவித்துள்ளார்.

    • செயற்பொறியாளர் எம்.சிவகுரு செய்திக்குறிப்பு வெளியிட்டுள்ளார்
    • பராமரிப்பு பணிகள் மேற்கொள்ள இருக்கிறது.

    விழுப்புரம்:

    தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழக கண்டமங்கலம் கோட்ட செயற்பொறியாளர் எம்.சிவகுரு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:

    தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகத்தின் விழுப்புரம் மாவட்டம் கண்டமங்கலம் கோட்டத்தை சேர்ந்த கண்டமங்கலம் துணை மின் நிலையத்தில் இருந்து செல்லும் பாக்கம் பீடர் உயரழுத்த மின்பாதையில் பராமரிப்பு பணிகள் மேற்கொள்ள இருப்பதால், நாளை சனிக்கிழமை காலை 10 மணி முதல் பிற்பகல் 2 மணி வரை கண்டமங்கலம், நவமால்மருதூர், கோண்டூர், பள்ளிப்புதுப்பட்டு, ராமரெட்டிக்குளம், வெள்ளாழங்குப்பம், மிட்டாமண்டகப்பட்டு, ஆலமரத்துக்குப்பம், வடுக்குப்பம், பாக்கம் உள்ளிட்ட 10 கிராமங்களுக்கு மின் வினியோகம் இருக்காது. இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டிருந்தது.

    • பாதம் மிகவும் வறண்டதாகவும், வெடித்தும் காணப்படலாம்.
    • நம் உடலின் மற்ற பாகங்களை போல் பாதங்களில் எண்ணெய் சுரப்பிகள் இல்லை.

    பொதுவாக கால் பாதங்கள் பற்றி நாம் பெரிதாக கவனத்தில் எடுத்துக்கொள்வது இல்லை. இதனால், பாத சருமம் மிகவும் வறண்டதாகவும், வெடித்தும் காணப்படலாம். இது பதங்களின் அழகை மட்டுமல்லாமல், அவற்றின் ஆரோக்கியத்திற்கும் பாதிப்பை ஏற்படுத்தலாம்.

    உங்கள் பாதங்களில் வறண்ட சருமம் இருப்பது வருத்தமாகவும் சில சமயங்களில் அறுவருப்பாகவும் இருக்கும். நம் உடலின் மற்ற பாகங்களை போல் பாதங்களில் எண்ணெய் சுரப்பிகள் இல்லை. அதனால், விரைவில் வறண்டு, அரிப்பு ஏற்படுகிறது.

    இந்த பாதிப்பில் இருந்து விடுபடுவதற்கான முதல் படி, உங்கள் பாதங்களை சுத்தமாகவும், உலர்ந்ததாகவும் வைத்திருப்பதுதான். வறண்ட பாதங்களில் இருந்து விடுபட உதவும் பாதத்தை பராமரிக்கும் பேக்குகள்.

    தேன் மற்றும் தேங்காய் எண்ணெய் பேக்

    தேன் மற்றும் தேங்காய் எண்ணெய் பேக் உங்கள் கால்களின் வறண்ட, கடினமான சருமத்திற்கு ஆழமான நீரேற்றத்தை வழங்குகிறது. வெதுவெதுப்பான நீரில் உங்களது பாதத்தினை அரை மணிநேரம் ஊற வைக்க வேண்டும். பின்னர் பாதங்களை துடைத்து விட்டு ஒரு சிறிய கிண்ணத்தில், ஒரு ஸ்பூன் தேன் மற்றும் ஒரு ஸ்பூன் தேங்காய் எண்ணெய் சேர்த்து கலக்கவும். இந்த கலவையை உங்கள் கால்களில் தடவி, வறண்ட சருமத்தில் நன்கு தேய்த்து, 5 நிமிடங்கள் மசாஜ் செய்யவும்.

    அந்த பேக் சற்று உலர்ந்ததும், இரண்டு கால்களிலும் தடிமனான காலுறைகளை அணிந்து, ஒரு இரவு முழுவதும் பேக்கை அப்படியே விட்டு விட வேண்டும். மறுநாள் காலையில், உங்கள் கால்களை வெதுவெதுப்பான நீரில் கழுவ வேண்டும். அதன்பிறகு ஒரு துணியால் துடைத்து காலில் தேங்காய் எண்ணெய் அல்லது கற்றாலை ஜெல்லை தடவலாம்.

    • மேலத்திருப்புந்துருத்தி துணை மின்நிலையங்களில் நாளை பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளது.
    • காலை 9 மணி முதல் மாலை 5மணி வரை மின் வினியோகம் இருக்காது.

    பேராவூரணி:

    பேராவூரணி, சேதுபாவாசத்திரம் சுற்றுவட்டார பகுதிகளில் நாளை 19ம் தேதி (சனிக்கிழமை)மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறுவதால் பேராவூரணி நகர், சேதுபாவாசத்திரம், பெருமகளூர், குருவிக்கரம்பை, ஒட்டங்காடு, திருச்சிற்றம்பலம், வாட்டாத்திக்கொல்லைக்காடு, திருவத்தேவன், ஆவணம், சித்துக்காடு, புனல்வாசல், துறவிக்காடு, கட்டயங்காடு, மதன்பட்டவூர், செருவாவிடுதி, ரெட்டவயல், நாட்டாணிக்கோட்டை, கள்ளம்பட்டி, கழனிவாசல், பள்ளத்தூர், நாடியம், மல்லிப்பட்டினம், மருங்கப்பள்ளம், செருபாலக்காடு அதன் சுற்றியுள்ள பகுதிகளில் மின்தடை காலை 9 மணி முதல் மாலை 5மணி வரை மின் வினியோகம் இருக்காது.

    இத்தகவலை உதவி செயற்பொறியாளர் கமலக்கண்ணன் தெரிவித்துள்ளார்.

    திருவைாறு:

    திருவைாறு மற்றும் மேலதிருப்புந்துருத்தி துணைமின் நிலையங்களில் நாளை 19ம் தேதி சனிக்கிழமை மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறுகிறது.

    எனவே இந்த துணை மின்நிலையங்களில் இருந்து மின் விநியோகம் பெறும் நடுக்காவேரி, திருப்பூந்துருத்தி, கண்டியூர், ஆவிக்கரை, தில்லைஸ்தானம், பனையூர், வைத்தியநாதன்பேட்டை, ஆச்சனூர், ராயம்பேட்டை, திங்களூர், திருப்பழமை, அணைக்குடி, விளாங்குடி, திருவையாறு, புனவாசல், மற்றும் உள்ளடக்கிய பகுதிகளில் காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின்வினியோகம் இருக்காது.

    இத்தகவலை திருவையாறு மின்வாரிய உதவி செயற் பொறியாளர் தெரிவித்துள்ளார்.

    • பராமரிப்பு பணிகள் நடைபெறுவதால் காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின் விநியோகம் இருக்காது.
    • கும்பகோணம் அர்பன் துணை மின்நிலையத்தில் மாதாந்திர பாராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளது.

    தஞ்சாவூர்:

    தஞ்சை மின்வாரிய உதவி செயற்பொறியாளர் அண்ணாசாமி வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

    பராமரிப்பு பணிகள் காரணமாக வரும் 19ம் தேதி காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை பள்ளியக்ராஹரம், பள்ளியேரி, திட்டை, பாலோபநந்தவனம், கங்கான்திடல், நாலுகால் மண்டபம், அரண்மனை பகுதிகள், திருவையாறு, கண்டியூர், நடுக்கடை, மேலதிருப்பூந்துருத்தி, நடுக்காவேரி, திருவாலம்பொழில், விளார், மறியல், போஸ்டல் காலனி, ஆர்.எம்.எஸ் காலனி, நாஞ்சிக்கோட்டை, காவேரி நகர், வங்கி ஊழியர் காலனி, இ.பி.காலனி, மற்றும் இதனை சுற்றியுள்ள பகுதிகளில் மின் வினியோகம் இருக்காது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    கும்பகோணம் அர்பன் துணை மின்நிலையத்தில் மாதாந்திர பாராமரிப்பு பணிகள் வரும் 19ம் தேதி நடப்பதால் காலை 9 மணி முதல் 5 மணி வரை குடந்தை நகர் முழுவதும், கொர நாட்டுக்கருப்பூர், செட்டிமண்டபம், மேலக்காவேரி பகுதிகளில் மின்சாரம் இருக்காது. இத்தகவலை குடந்தை நகர் இயக்கமும், பராமரிப்பு உதவி செயற்பொறியாளர் பிரகாஷ் தெரிவித்துள்ளார்.

    தஞ்சை மின்வாரிய உதவி செயற்பொறியளார் இளஞ்செழியன் வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

    மாதாந்திர பராமாரிப்பு பணிகள் காரணமாக வரும் 19ம் தேதி காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை வல்லம், வல்லம்புதூர், மொன்மையம்பட்டி, குருவாடிப்பட்டி, நாட்டாணி, திருமலைசமுத்திரம், செங்கிப்பட்டி, புதுக்குடி, வெண்டையம்பட்டி, வள ம்பகுடி, ராயமுண்டான்பட்டி, ஆச்சாம்பட்டி, பாளையப்பட்டி, அள்ளூர், அம்மையகரம், தென்னங்குடி, பிள்ளையார் நத்தம், சக்கரைநத்தம், களிமேடு, பனவெளி, கரம்பை, கள்ளப்பெரம்பூர் மற்றும் இதனை சுற்றியுள்ள பகுதிகளில் மின் வினியோகம் இருக்காது.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    • உள்ளிக்கோட்டை துணை மின் நிலையத்தில் நாளை பராமரிப்பு பணிகள் நடைபெறுகிறது.
    • காலை 9 மணி முதல் மாலை 5 மணிவரை மின் வினியோகம் இருக்காது.

    மன்னார்குடி:

    மன்னார்குடி மின்வாரிய உதவி செயற்பொறியாளர் மதியழகன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

    உள்ளிக்கோட்டை துணை மின் நிலையத்தில் நாளை (செவ்வாய்க்கிழமை) பராமரிப்பு பணிகள் நடைபெறுகிறது. இதை முன்னிட்டு இந்த துணை மின்நிலையத்தில் இருந்து மின்வினியோகம் பெறும் பகுதிகளான உள்ளிக்கோட்டை, கண்டிதம்பேட்டை, வல்லான்குடிகாடு, கீழ திருப்பாலக்குடி, மேலதிருப்பாலக்குடி, மகாதேவபட்டினம், தளிக்கோட்டை, கண்ணாரப்பேட்டை, இடையர்நத்தம், ஆலங்கோட்டை, பரவாக்கோட்டை, துளசேந்திரபுரம், பைங்காநாடு ஆகிய பகுதிகளுக்கு நாளை காலை 9 மணி முதல் மாலை 5 மணிவரை மின் வினியோகம் இருக்காது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    • மீனாட்சி அம்மன் கோவில் யானை நன்றாக பராமரிக்கப்பட்டு வருகிறது.
    • ரங்கராமன் நரசிம்மனுக்கு அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் பதிலடி கொடுத்தார்.

    மதுரை

    மதுரை மீனாட்சி அம்மன் கோவிலுக்கு சொந்தமான யானை பார்வதி கோவில் வளாகத்தில் வைத்து பரா–மரிக்கப்பட்டு வருகிறது. கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு அந்த யானைக்கு பார்வை குறைபாடு இருப் பது கண்டுபிடிக்கப்பட் டது. அதற்கு உரிய பல்வேறு சிகிச்சைகளும் கால்நடைத் துறை சார்பில் தொடர்ந்து அளிக்கப்பட்டு வருகிறது.

    இதற்கிடையே யானை–யின் ஆரோக்கியம் மற்றும் பராமரிப்பு குறித்து நமது கோவில், நமது பெருமை, நமது உரிமைகள் அறக்கட்ட–ளையின் நிறுவனர் ரங்கரா–ஜன் நரசிம்மன் டுவிட் ஒன்று வெளியிட்டுள்ளார். அதில் யானைக்கு அளிக்கப் படும் சிகிச்சை மற்றும் பராமரிப்பு முறைகள் குறித் தும், குறைகள் இருப்பதா–கவும் குறிப்பிட்டு இருந்தார்.

    இதற்கு பதில் அளித் துள்ள தகவல் தொழில் நுட்பத்துறை அமைச்சரும், மதுரை மத்திய தொகுதி எம்.எல்.ஏ.வுமான பி.டி.ஆர்.பழனிவேல் தியாகராஜன் கூறியிருப்பதாவது:-

    யானை பார்வதிக்கு ஏற்பட்டுள்ள கண் நிலை குணப்படுத்த முடியாதது என்ற நிலை இருந்தபோ–திலும், அந்த குறைபாடு தெரியாத அளவுக்கு உரிய சிகிச்சைகள் அளிக்கப்பட்டு வருகிறது. இதற்காக வெளி–நாட்டில் இருந்து கால்நடை டாக்டர்களை அழைத்து வந்து சிகிச்சை அளிக்கப்படு–கிறது.

    பார்வதியை கவனிக்க கூடுதலாக நிரந்தர உதவியா–ளர் ஒருவர் நியமிக்கப்பட்டு உள்ளார். அன்னை மீனாட்சி அம்மன் மீது உண்மையான அன்பையும், நம்பிக்கையை–யும் வெளிப்படுத்த யானை பார்வதிக்கு கண்புரை நோய் சிகிச்சை உரிய முறை–யில் வழங்கப்படுகிறது. இதற்காக கடந்த 5 ஆண்டுகளுக்கும் மேலாக பார்வதியின் கண் பிரச்சி–னைக்கு சிகிச்சை அளித்து வருவதாக அமைச்சர் தெரி–வித்துள்ளார்.

    இதற்கெல்லாம் மேலாக கடந்த ஆண்டு, தாய்லாந்தில் இருந்து கால்நடை மருத்து–வர்கள் குழு ஒன்று தாய் லாந்து தூதரக துணையுடன் சென்னைக்கு அழைத்து வரப்பட்டனர். அவர்கள் யானையின் கண்களை சோதனை செய்தனர். யானையின் கண் நிலை குணப்படுத்த முடியாதது என்றும், ஆனால் மோசம–டைவதற்கான சாத்தியக்கூ–றுகளைக் குறைக்க தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாகவும் டாக்டர்கள் குழுவினர் தெரிவித்ததாக அமைச்சர் கூறியுள்ளார்.

    அதேபோல் ரூ.23.5 லட்சம் செலவில் யானை குளித்து மகி ழ குளம் கட்டப்பட்டது. 2021-ம் ஆண்டு தி.மு.க. ஆட்சிக்கு வந்த பிறகு யானையின் வாழ்வாதாரத்தை மேம்ப–டுத்தும் முயற்சியின் ஒரு பகுதி இது என்றார்.

    நான் யானை பார்வதிக்கு உணவளிக்கிறேன் (எனது நலனுக்காக, விளம்பரத்திற்கு மாறாக) மற்றும் நான் வழக்கமாக கோவிலுக்குச் செல்லும் போது அவளு–டைய நிலையை பார்த்தும், கேட்டும் தெரிந்துகொள் கிறேன். அவளது பொது உடல்நலம் குறித்த வழக்க–மான அறிவிப்புகளையும் நான் அறிகிறேன்.

    எனவே ரங்கராஜன் நரசிம்மன் உண்மைகளை சரிபார்த்து, யானையின் மீது கவனம் அல்லது கவ–னிப்பு இல்லை என்று குற்றம் சாட்டுவதற்கு முன்பு கடந்த கால முயற்சிகளைப் படிக்கும்படி தெரிவித்துள் ளார்.

    • ஈச்சங்கோட்டை துணை மின்நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளது.
    • நாளை காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின் வினியோகம் இருக்காது.

    தஞ்சாவூர்:

    தஞ்சை ஈச்சங்கோட்டை துணை மின்நிலையத்தில் நாளை (வியாழக்கிழமை) மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளது.

    எனவே மருங்குளம், ஈச்சங்கோட்டை, நடுவூர், சூரியம்பட்டி, கொ.வல்லுண்டாம்பட்டு, கொல்லங்கரை, வேங்கை ராயன்குடிகாடு, கோவிலூர், வடக்கூர், பொய்யுண்டார்கோட்டை, பாச்சூர், செல்லம்பட்டி, துறையூர், சூரக்கோட்டை, வாண்டையார் இருப்பு, மடிகை, காட்டூர், மேல உளுர், கீழ உளுர், பொன்னாப்பூர் கிழக்கு, பொன்னாப்பூர் மேற்கு, ஆழிவாய்க்கால், பஞ்சநதிகோட்டை, மற்றும் அதனை சுற்றியுள்ள கிராமங்களுக்கு நாளை காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின் வினியோகம் இருக்காது என்று மின்வாரியம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    ஒரத்தநாடு துணை மின் நிலையத்தில் நாளை (வியாழக்கிழமை) மாதாந்திர மின் பராமரிப்பு பணிகள் நடக்கிறது.

    இதனால் இந்த துணை மின் நிலையத்திலிருந்து மின்வினியோகம் பெறக்கூடிய கண்ண ந்தங்குடி, ஆழிவாய்க்கால், சேதுராயன் குடிக்காடு, தென்னமநாடு, பருத்திக்கோட்டை, பொய்யுண்டார் குடிக்காடு, கோவிலூர், ஆயங்குடி மற்றும் அதை சார்ந்த பகுதிகளில் நாளை காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின் வினியோகம் இருக்காது.

    இந்த தகவலை ஒரத்தநாடு நகர் மின்வாரிய உதவி செயற்பொறியாளர் சுரேஷ் தெரிவித்துள்ளார்.

    • தஞ்சை மணிமண்டபம் துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளது.
    • நாளை காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின்விநியோகம் இருக்காது.

    தஞ்சாவூர்:

    தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான தஞ்சை நகர உதவி செயற்பொறியாளர் கருப்பையா வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறியிருப்ப தாவது:- தஞ்சை மணிமண்டபம் துணை மின் நிலையத்தில் நாளை (செவ்வாய்க்கிழமை) மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளது.

    எனவே நாளை காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை அண்ணாநகர், அருளானந்தநகர், பிலோ மினா நகர், காத்தூண்நகர், சிட்கோ, காமராஜர் நகர், பாத்திமா நகர், அன்பு நகர், திருச்சி ரோடு, வி.ஓ.சி.நகர், பூக்காரத்தெரு, 20-கண் பாலம், கோரிக்குளம், மேரீஸ்கார்னர், மங்களபுரம், கணபதி நகர், ராஜப்பாநகர், மகேஸ்வரி நகர், திருப்பதிநகர், செல்வம்நகர், அண்ணாம லைநகர், ஜெ.ஜெ.நகர், டி.பி.எஸ்.நகர், சுந்தரம்நகர், பாண்டி யன்நகர், வீட்டுவசதி வாரிய குடியிருப்பு பகுதி, எஸ்.இ.அலுவலகம், கலெக்டர் பங்களா ரோடு, டேனியல் தாமஸ் நகர், ராஜராஜேஸ்வரி நகர், காவேரிநகர், நிர்மலாநகர், என்.எஸ்.நகர், போஸ்நகர், தென்றல்நகர், துளசியாபுரம், தேவன்நகர், பெரியார்நகர், இந்திராநகர், புதிய வீட்டுவசதிவாரிய குடியிருப்பு, நட்சத்திராநகர், வி.பி.கார்டன், ஆர்.ஆர்.நகர், சேரன் நகர், யாகப்பாநகர், அருளானந்த அம்மாள் நகர், குழந்தைஏசு ஆலயம் மற்றும் அதனை சுற்றியுள்ள இடங்களில் மின்வினியோகம் இருக்காது.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    • மாதாந்திர பராமரிப்பு பணிகள் நாளை நடைபெற உள்ளது.
    • காலை 10 மணி முதல் மாலை 4 மணி வரை மின் விநியோகம் இருக்காது.

    வேதாராண்யம்:

    வேதாராண்யம் உபகோட்டத்திற்க்கு உட்பட்ட வேதாரண்யம் 110 கே.வி துணை மின் நிலையம், வாய்மேடு 110 கே.வி துணை மின் நிலையம், ஆயக்காரன்புலம் 33 கே.வி துணை மின் நிலையம், வேட்டைகாரன் இருப்பு 33 கே.வி. துணை மின் நிலையம் ஆகிய நிலையங்களில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நாளை (செவ்வாய்க்கிழமை) நடைபெற உள்ளது. இதனால், மேற்கண்ட துணை மின் நிலையங்களில் இருந்து மின் விநியோகம் பெறும் வேதாராண்யம் நகரம், கோடியக்காடு, கோடியக்கரை, அகஸ்தியம்பள்ளி, தோப்பு த்துறை, பெரியகுத்தகை, தேத்தாக்குடி, புஷ்பவனம், கள்ளிமேடு, அவரிக்காடு, மறைஞாயநல்லூர், அண்டர்காடு, நெய்விளக்கு, ஆலங்காடு, துளசியாப்பட்டினம், கற்பகநாதர்குளம், இடும்பாவனம் தொண்டியக்காடு, தாணி க்கோட்டகம், வாய்மேடு, தகட்டூர் பஞ்சநதிக்குளம், மருதூர், தென்னடார், பன்னாள், ஆயக்காரன்புலம், கருப்பம்புலம், கடி நெல்வயல், கத்தரிப்புலம், செட்டிபுலம், நாகக்கு டையான், குரவப்புலம், தென்னம்புலம், கரியா ப்பட்டினம், நாலுவேதபதி, வெள்ள ப்பள்ளம், விழுந்தமாவடி, கோவில்பத்து, கன்னி தோப்பு ஆகிய பகுதிகளுக்கு காலை 10 மணி முதல் மாலை 4 மணி வரை மின் விநியோகம் இருக்காது.

    மேற்கண்ட தகவலை உதவி கோட்ட பொறியாளர் ரவிக்குமார் தெரிவித்துள்ளார்.

    ×