என் மலர்
உள்ளூர் செய்திகள்

வேதாரண்யம் பகுதியில் நாளை மின் நிறுத்தம்
- ஆயக்காரன்புலம் துணை மின் நிலையங்களில் நாளை 17-ந் தேதி மாதாந்திர பராமரிப்பு பணிகள்.
- தென்னம்புலம், கரியாப்பட்டினம் உள்பட பல்வேறு பகுதிகளுக்கு காலை 9 மணி முதல் 5 மணி வரை மின் விநியோகம் இருக்காது.
வேதாரண்யம்:
வேதாரண்யம் மின்வாரிய உதவி செயற்பொறியாளர் ரவிக்குமார் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்ப தாவது:-
வேதாரண்யம் துணை மின் நிலையம், வாய்மேடு துணை மின் நிலையம்,ஆயக்காரன்புலம் துணை மின் நிலையம் ஆகிய துணை மின் நிலையங்களில் நாளை 17- ந் தேதி மாதாந்திர பராமரிப்பு பணிகள் மேற்கொள்ள இருப்பதால் இங்கிருந்து மின்சாரம் பெறும் பகுதிகளான வேதாராண்யம் நகரம், கோடியக்காடு, கோடியக்கரை, அகஸ்தியம்ப்பள்ளி, தோப்புதுறை, பெரியக்குத்தகை, தேத்தாக்குடி, புஷ்பவனம், கள்ளிமேடு, அவரிக்காடு, மறைஞாயநல்லூர், அண்டர்காடு, நெய்விளக்கு, ஆலங்காடு, துளசியாப்பட்டினம், கற்பக நாதர் குளம்,இடும்பவனம் தொண்டியக்காடு,
தாணிக்கோட்டகம், வாய்மேடு, தகட்டூர் பஞ்நதிக்குளம், மருதூர், தென்னடார், பன்னாள், ஆயக்கா ரன்புலம், கருப்பம்புலம, கடிநெல்வயல், கத்தரிபுலம், செட்டிபுலம் ,நாகக்குடை யான், குரவ ப்புலம் ,தென்ன ம்புலம், கரியாப்ப ட்டினம், ஆகிய பகுதிகளுக்கு காலை 9.00 மணி முதல் 5.00மணி வரை மின் விநியோகம் இருக்காது.இவ்வாறு அதில் கூறப்பட்டு ள்ளது.