search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "premises"

    • மதுரை காமராஜர் பல்கலைக்கழக வளாகத்தில் தீ விபத்து ஏற்பட்டது.
    • வளாகம் முழுவதும் பரபரப்பான சூழல் காணப்பட்டது.

    மதுரை

    தமிழகம் மற்றும் பல்வேறு மாநிலங்களில் இருந்து மதுரை காமராஜர் பல்கலைக்கழகத்தில் ஏராள மான மாணவ- மாணவிகள் படித்து வருகின்றனர். பல்கலைக்கழக வளாகத்தி லேயே இரு பாலருக்கும் தனித்தனியே தங்கும் விடுதிகள் உள்ளன.

    இந்த நிலையில் நேற்று இரவு பெய்த மழையின் போது பல்கலைக்கழக பெண்கள் விடுதி அருகே இருந்த மின் கம்பத்தில் திடீரென தீ பற்றி எரிய தொடங்கியது. இதனால் செய்வதறியாது திணறிய மாணவிகள் விடுதியில் இருந்து அலறியடித்து ஓட்டம் பிடித்தனர்.

    இதுகுறித்து மாணவிகள் பல்கலைகழக நிர்வாகத்தி னருக்கு தகவல் தெரிவித்தனர். சில விடுதி மாணவி களுக்கு மூச்சுத்திணறல் ஏற்படவே தீயணைப்பு துறையினருக்கும், 108 ஆம்புலன்சுக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டது.

    தகவல் அறிந்து பெரியார் மற்றும் திருப்பரங்குன்றம் தீயணைப்பு நிலையங்களில் இருந்து 2 வாகனங்கள் மூலம் தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்திற்குச் விரைந்து வந்தனர்.

    மின்சார வாரியத்திற்கும் உடனடியாக தகவல் தெரி விப்பட்டது. மின்வாரி யத்தினர் உடனடியாக மின்சாரத்தை துண்டி த்ததால் பெரும் அசம்பா விதம் நடப்பது தவிர்க்கப் பட்டது. இதனால் மின் கம்பத்தில் இருந்து புகை வந்ததால் பல்கலைக்கழக மாணவிகள் விடுதி வளாகம் முழுவதும் புகை மூட்டமாக காணப்பட்டது.

    இதில் 4 மாணவிகளுக்கு மூச்சுத்திணறல் ஏற்பட்டது. உடனே அவர்களை அருகில் உள்ள பல்கலைக்கழக மருத்துவமனையில் முதலு தவி சிகிச்சைக்காக சேர்க்கப் பட்டனர்.

    மழையினால் மதுரை காமராஜர் பல்கலைக்கழக மாணவிகள் விடுதி அருகே இருந்த மின் கம்பத்தில் ஏற்பட்ட தீ விபத்தில் மாணவி விடுதி வளாகம் முழுவதும் பரபரப்பான சூழல் காணப்பட்டது.

    தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த நாகமலை புதுக்கோட்டை இன்ஸ் பெக்டர் சிவகுமார் மற்றும் தீயணைப்புத்துறையினர் விபத்து குறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

    • கொத்தமங்கலம் கிராமத்தில் சுமார்-5௦௦க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றனர்.
    • மின்துறை ஊழியர்கள் அதைசரிசெய்வதற்கு அரசு பள்ளிக்கு வந்தனர்.

    விழுப்புரம்:

    விழுப்புரம் மாவட்டம் திண்டிவனம் அடுத்த கொந்த மங்கலம் கிராமத்தில் சுமார் 500-க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றனர். இந்த பகுதியில் பல்வேறு சாலைகளில் உள்ள மின்கம்பங்களின் வயர்கள் தாழ்வாக செல்கின           இது குறித்து கிராம மக்கள் பலமுறை புகார் தெரிவித்தும் எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்கவில்லை என கூறப்படுகிறது. அதே போலஅரசு பள்ளி வளாகத்தில் தாழ்வான மின்கம்பிகள் செல்வதாகவும் பலமுறை புகார் கூறப்பட்டுள்ளது. இந்நிலையில் அரசு பள்ளி வளாகத்தில் உள்ள மின் வயர் அருந்து விழுந்தது. இதில் அதிர்ஷ்டவசமாக மாணவ மாணவிகள் உயிர்த்தப்பினர். இதுகுறித்து மின்துறைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. மின் துறை ஊழியர்கள் அதை சரி செய்வதற்காக அரசு பள்ளிக்கு வந்தனர்.  மின் உயர் கீழே அறுந்து விழுந்ததை கேள்விப்பட்ட பள்ளி மாணவ மாணவிகளின் பெற்றோர்கள் மற்றும் ஊர் பொதுமக்கள் ஒன்று கூடி மின் ஊழியர்களை முற்றுகையிட்டு கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.

    பள்ளி வளாகத்தில் உள்ள மின்கம்பத்தை வேறு இடத்திற்கு மாற்ற வேண்டும். கொத்தமங்கலத்தில் பல்வேறு தெருகளில் உள்ள மின்கம்பங்களில் வயர்கள் தாழ்வாக உள்ளதை அதை சரி செய்ய வேண்டும் இல்லை என்றால் சாலை மறியலில் ஈடுபடுவோம் என பொதுமக்கள் தெரிவித்தனர்  .மேலும் பள்ளி மாணவர்கள் கூறுகையில், இந்த பள்ளியில் படிப்பதற்கே எங்களுக்கு பயமாக உள்ளது மின் வயர்கள் தாழ்வாக செல்வதால் விபத்து நடக்கும் அபாயம் உள்ளது எனவும், பள்ளி வளாகத்தில் உள்ள மின்கம்பத்தை மாற்ற பலமுறை நாங்களும் எங்கள் பெற்றோரும் பள்ளி தலைமை ஆசிரியரிடமும், மின்துறை ஊழியர்களிடமும் கூறி இருந்தும் எந்த ஒரு நடவடிக்கை எடுக்கவில்லை எனவும் கூறினா ர்கள். எனவே, இதனை உடனடியாக மின்க ம்ப ங்களை மா ற்ற தேவை யான நடவ டிக்கை களை எடுக்க வே ண்டு மென கோரிக்கை விடுத்தனர்.

    • அடித்தளம், தரைத்தளம், முதல் தளம் என மூன்று பிரிவுகள் உள்ளது.
    • 4 சக்கர வாகனங்கள் 30 எண்ணிக்கையில் நிறுத்தும் அளவுக்கு இட வசதி உள்ளது.

    தஞ்சாவூர்:

    தஞ்சை மாநகராட்சியில் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் பல்வேறு பணிகள் நடந்து வருகிறது. அதன்படி தஞ்சாவூர் காந்திஜி சாலையில் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் ரூ.15 கோடி மதிப்பில் காந்திஜி வணிக வளாகம் கட்டப்பட்டு வருகிறது.

    இந்த நிலையில் இன்று வணிக வளாக கட்டுமான பணிகளை மாநகராட்சி மேயர் சண். ராமநாதன் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

    பணிகள் முடிந்த விவரங்களை கேட்டு அறிந்தார்.

    அப்போது அவர் கூறியதாவது:-

    காந்திஜி வணிக வளாகம் மேம்படுத்துதல் கட்டுமான பணி பெருமளவில் முடிந்து விட்டது. விரைவில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைப்பார்.இதில் அடித்தளம், தரைத்தளம், முதல் தளம் என மூன்று பிரிவுகள் உள்ளது.

    மொத்த பரப்பளவு 51992 சதுர அடி ஆகும். அடித்தளத்தில் 4 சக்கர வாகனங்கள் 30 எண்ணிக்கையில் நிறுத்தும் அளவுக்கு இட வசதி உள்ளது.

    தரை மற்றும் முதல் தளங்களில் கடைகள் வரவுள்ளன. நிர்ணயிக்கப்பட்ட காலத்தை விட விரைவிலே இந்த கட்டுமான பணிகள் முடிந்து விட்டது.

    இவ்வாறு அவர் கூறினார்.

    இந்த ஆய்வின் போது துணை மேயர் டாக்டர் அஞ்சுகம் பூபதி, கவுன்சிலர் மேத்தா, செயற்பொறியாளர் ஜெகதீசன், உதவி பொறியாளர் கார்த்திகேயன் மற்றும் பலர் உடன் இருந்தனர்.

    • இதன் அடிதளத்தில் 4 சக்கர வாகனங்கள் 130 நிறுத்தலாம்.
    • 22 ஆயிரத்து 249 சதுர அடியில் 45 கடைகள் உள்ளன.

    தஞ்சாவூர்:

    தஞ்சை பழைய பஸ் நிலையம் அருகே திருவள்ளுவர் தியேட்டர் மற்றும் அதனை சுற்றியுள்ள கடைகள் இடிக்கப்பட்டு, ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் ரூ.48 கோடியே 5 லட்சம் மதிப்பில் அடுக்குமாடிகளுடன் வணிக வளாகம் கட்டப்பட்டு வருகிறது. அதன்படி அடித்தளம், தரைதளம், முதல்தளம், 2-வது தளம் ஆகியவற்றுடன் கட்டப்பட்டுள்ளது.

    இந்த பணிகளை மேயர் சண்.ராமநாதன் பார்வையிட்டார். அப்போது மாநகராட்சி செயற்பொறியாளர் ஜெகதீசன், உதவி பொறியாளர் கார்த்திகேயன், மண்டலக்குழு தலைவர் மேத்தா மற்றும் மாநகராட்சி அதிகாரிகள் உடன் இருந்தனர்.

    பின்னர் மேயர் சண்.ராமநாதன் நிருபர்களிடம் கூறியதாவது:-

    வணிக வளாகம் கட்டும் பணி கடந்த 2020-ம் ஆண்டு தொடங்கப்பட்டது. 18 மாதங்களில் முடிக்கும் வகையில் பணிகள் தொடங்கப்பட்டது. தொல்லியல் துறை ஆட்சேபனை காரணமாக தாமதம் ஆனது. தற்போது மாநகராட்சி சார்பில் பணிகள் நிறைவடைந்து விட்டது. கடைகள் ஏலம் எடுத்துள்ளவர்கள் அந்தந்த கடைகளில் டைல்ஸ் உள்ளிட்ட இதர பணிகள் மேற்கொள்வதாக தெரிவித்துள்ளனர். இந்த பணிகள் மே மாதத்துக்குள் முடிந்து பயன்பாட்டுக்கு வரும்.

    இதன் அடிதளத்தில் 4 சக்கர வாகனங்கள் 130 நிறுத்தலாம். தரைதளம் 22 ஆயிரத்து 249 சதுர அடியில் 45 கடைகள் உள்ளன. இதில் நகைக்கடைகள், ஜவுளி கடைகள் இடம்பெறுகின்றன இதே போல் முதல்தளம், 2-வது தளத்திலும் ஜவுளிகடைகள், நகைகடைகள் இடம் பெறுகின்றன. இதில் ஒவ்வொரு தளத்திலும் ஆண், பெண்களுக்கு தனித்தனி கழிவறைகள் கட்டப்பட்டுள்ளன. லிப்ட் வசதி, எஸ்கலேட்டர் வசதி, குளிர்சாதன வசதியும் அமைக்கப்படுகின்றன.

    இதே போல் தஞ்சாவூர் காந்திஜி சாலையில் உள்ள வணிக வளாகம், புதிய பஸ் நிலையத்தில் உள்ள பன்னோக்கு வணிக வளாகம் ஆகியவற்றின் பணிகள் விரைந்து முடிக்கப்படும். தஞ்சை மேலவீதி மூலஅனுமார் கோவில் அருகே கட்டப்பட்டு பயன்படுத்தப்படாமல் உள்ள பாலத்தின் முன் பகுதியில் உள்ள வீடுகளை அகற்றி பாலம் விரைவில் பயன்பாட்டுக்கு கொண்டுவரப்படும் என்றார்.

    • தஞ்சை நகர துணை மின்நிலையத்தில் நாளை மாதாந்திர பராமரிப்பு பணிகள்.
    • வணிக வளாகம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் மின்வினியோகம் இருக்காது.

    தஞ்சாவூர்:

    தஞ்சை மின்வாரிய உதவி செயற்பொறியாளர் கருப்பையா வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

    தஞ்சை நகர துணை மின்நிலையத்தில் நாளை (செவ்வாய்க்கிழமை) மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடை பெற உள்ளது. எனவே அண்ணாநகர் மின்பாதையில் இருந்து மின் வினியோகம் பெறும், அருளானந்த நகர், பிலோமினா நகர், காத்தூண் நகர், சிட்கோ, அண்ணாநகர், காமராஜர் நகர், பாத்திமா நகர், அன்பு நகர் ஆகிய பகுதிகளிலும், மேரீஸ் கார்னர் மின்பாதையில் இருந்து மின்வினியோகம் பெறும் திருச்சி சாலை, வ.உ.சி. நகர், பூக்கார தெரு, இருபது கண் பாலம், கோரிக்குளம் ஆகிய இடங்களிலும், மங்களபுரம் மின்பாதையில் இருந்து மின்வினியோகம் பெறும் ராஜப்பா நகர், மகேஸ்வரி நகர், திருப்பதி நகர், செல்வம் நகர், அண்ணாமலை நகர், ஜெ.ஜெ. நகர், டி.பி.எஸ். நகர், சுந்தரம் நகர், பாண்டியன் நகர் ஆகிய இடங்களிலும், வீட்டு வசதி வாரிய குடியிருப்பு பகுதியில் இருந்து மின்வினியோகம் பெறும் எஸ்.இ. ஆபீஸ், கலெக்டர் பங்களா சாலை, டேனியல் தாமஸ் நகர், ராஜ ராஜேஸ்வரி நகர், காவேரி நகர், நிர்மலா நகர், என்.எஸ் போஸ் நகர், தென்றல் நகர், துளசியாபுரம், தேவன் நகர், பெரியார் நகர், இந்திரா நகர், கூட்டுறவு காலனி ஆகிய பகுதிகளிலும் நாளை காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின்வினியோகம் இருக்காது.

    இதேபோல் நிர்மலா நகர் மின்பாதையில் இருந்து மின்வினியோகம் பெறும் புதிய வீட்டு வசதி வாரிய குடியிருப்பு, நட்சத்திரா நகர், வி.பி. கார்டன், ஆர்.ஆர்.நகர், சேரன் நகர் ஆகிய பகுதிகளிலும், யாகப்பாநகர் மின்பாதையில் இருந்து மின்வினியோகம் பெறும் யாகப்பா நகர், அருளானந்த அம்மாள் நகர், குழந்தை ஏசு கோவில் மற்றும் அதன் அருகில் உள்ள வணிக வளாகம் ஆகிய பகுதிகளிலும் நாளை காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின்வினியோகம் இருக்காது.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    • ரூ. 5.20 கோடி மதிப்பீட்டில் தென்னை வணிக வளாக கட்டிட கட்டுமான பணிகள் ஆய்வு.
    • வணிக வளாகத்தின் மூலம் தினமும் 100 பேருக்கு வேலை.

    தஞ்சாவூர்:

    தஞ்சாவூர் மாவட்டம், பட்டுக்கோட்டை வட்ட த்திற்கு உட்பட்ட பகுதிகளில் பல்வேறு வளர்ச்சி திட்ட பணிகளை மாவட்ட கலெக்டர் தினேஷ் பொ ன்ராஜ் ஆலிவர் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

    அப்போது அவர் கூறியதாவது:-

    தஞ்சாவூர் மாவட்டம்

    பட்டுக்கோட்டை தம்பி க்கோட்டை வடகாடு இறால் பண்ணைசெயல்பாடுகள் குறித்து ஆய்வு செய்யப்ப ட்டது. பட்டுக்கோட்டையில் அமைந்துள்ள மாற்று த்திறனாளிகள் முகாமில் சமையலறை, கழிவறை போன்ற பல்வேறு அடிப்படை வசதிகள் சுகாதாரமாக உள்ளதா என்றும், மாற்று த்திறனா ளிகளின் கோரிக்கைகளை கேட்டறிய ப்பட்டது, மேலும் தம்பிக்கோட்டை வடகாடு நியாய விலை கடையில்

    உணவுப் பொருட்கள் தரம் மற்றும் இருப்பு குறித்தும், பொன்னவராயன் கோட்டையில் ரூ. 5.20 கோடி மதிப்பீட்டில் தென்னை வணிக வளாகம் கட்டிடத்தின் கட்டுமான பணிகள் நடைபெற்று வருவதையும் ஆய்வு செய்து மேற்கண்ட பணிகளை விரைவாகவும் தரமாகவும் முடித்து பொதுமக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வர வேண்டுமென சம்பந்த ப்பட்ட அலுவலர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

    இந்த வணிக வளாகத்தின் மூலம் தினமும் 100 பேருக்கு வேலை கிடைக்கும் வகையில் உரிய

    நடவடிக்கை எடுக்கப்ப டும் . இந்த வளாகத்தில் தேங்காய் பால் எண்ணெய் , தேங்காய் துருவல் பவுடர், குழந்தைகளுக்கான எண்ணெய், நார்ச்சத்து மாத்திரைகள் என தேங்காயில் இருந்து மதிப்பு கூட்டப்பட்ட ஐந்து பொருட்கள் இங்கு உற்பத்தி செய்யப்படவுள்ளன.

    மேலும் ரூ.2.40 கோடியில் 500 டன் கொள்ளளவு கொண்ட சேமிப்பு கிடங்கு , தேங்காய்களை இறக்க பிளாட்பார்ம் ஆகியவை அமைப்பதற்கு அனுமதி கிடைத்தவுடன் பணிகள் முடிக்கப்பட்டு தென்னை வணிக வளாகம் விரைவில் முழு செயல்பாட்டுக்கு கொண்டுவரப்படும் .

    இவ்வாறு அவர் கூறினார்.

    இவ்வாய்வின் போது பட்டுக்கோட்டை வருவாய் கோட்டாட்சியர் பிரபாகரன், தாசில்தார் ராமச்சந்திரன், வட்டார வளர்ச்சி அலுவலர்கள் கோவிந்தராஜன் , சாமிநாதன் மற்றும் அரசு அலுவலர்கள் பலர் கலந்து கொண்டனர்.

    • நீதிமன்ற வளாகத்தில் உள்ள மகிளா நீதிமன்றம் பகுதியில் இன்று ஒரு நபர் சந்தேகப்படும்படியாக உள்ளே நுழைந்தார்.
    • பாதுகாப்பு பணியில் நின்ற போலீசார் அவரை தடுத்து நிறுத்தி சோதனை செய்தனர்.

    நெல்லை:

    நெல்லை மாவட்ட ஒருங்கிணைந்த நீதிமன்றம் பாளை-திருச்செந்தூர் சாலையில் உள்ளது. இங்கு உரிமையியல், குற்றவியல், நிரந்தர மக்கள் நீதிமன்றம், மகிளா நீதிமன்றம் உள்ளிட்ட பல்வேறு நீதிமன்றங்கள் உள்ளன.

    முக்கியமான கொலை உள்ளிட்ட வழக்குகளின் போது இங்கு அதிக அளவில் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு இருப்பார்கள். மற்ற நேரங்களில் குறைந்த அளவு போலீசார் பாதுகாப்பில் இருப்பார்கள்.

    அரிவாளுடன் நுழைந்த நபர்

    இந்நிலையில் இன்று நீதிமன்ற வளாகத்தில் உள்ள மகிளா நீதிமன்றம் பகுதியில் ஒரு நபர் சந்தேகப்படும்படியாக உள்ளே நுழைந்தார். உடனே அங்கு பாதுகாப்பு பணியில் நின்ற போலீசார் அவரை தடுத்து நிறுத்தி சோதனை செய்தனர்.

    அப்போது அவரிடம் அரிவாள் ஒன்று பறிமுதல் செய்யப்பட்டது. உடனே பாதுகாப்பு பணியில் இருந்த போலீசார் அவரிடம் விசாரித்ததில் அவர் நெல்லையை அடுத்த தாழையூத்தை சேர்ந்தவர் என்பது தெரியவந்தது.

    அவர் எதற்காக நீதிமன்றத்திற்குள் அரிவாள் கொண்டு வந்தார்? ஏதேனும் சதி திட்டத்துடன் கொண்டு வந்தாரா? அல்லது வேறு ஏதேனும் காரணமா?என்பது குறித்து தொடர்ந்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    ×